31-05-2026, 08:53 AM
நினைவு நாளை அனுசரிப்பதற்காக உறவுக்கார பெரியவர்களின் அறிவுரையின்படி வேண்டிய ஏற்பாட்டை செய்து கொண்டிருந்தேன்.
என் மனைவி இறந்த வருஷ நினைவு நாளை அனுசரிப்பதற்காக உறவினர்கள் அனைவரையும் நான் நான்கு நாட்களுக்கு முன்பே புரோகிதரை ஆலோசித்து, அழைத்திருந்ததால், சொந்தக் காரர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கி இருந்தனர்.
வீட்டில் அனைவரும் இருந்த போது, எங்கள் வீட்டு பெரியவரான சித்தப்பாவிடம் நான், “சித்தப்பா, இந்த வருஷ சடங்கை எப்படி செய்யறதுன்னு எனக்கு ஓரளவுக்கு தெரியும். புரோகிதரை வச்சிருக்கேன். இருந்தாலும், பெரியவங்க நீங்களும் கொஞ்சம் வழிகாட்டுங்க.” என்று கேட்டுக்கொண்டேன்.
“சரிப்பா,…முதல்ல மனைவி இறந்த வருஷ சடங்கை அனுசரிக்கிறதுன்னா என்னன்னு சொல்லிடறேன்.”
“சொல்லுங்க சித்தப்பா.”
“வருஷ சடங்கை அனுசரிகிறதுன்னா, இறந்தவருக்கான ஆண்டு நினைவு நாளாகும். இதைக் கர்மா அல்லது ஷ்ராத்ன்னும் சொல்வாங்க. இதில், இறந்தவரின் ஆத்மா சாந்தி அடையவும், பித்ருக்களுக்கு (முன்னோருக்கு) மரியாதை செலுத்தவும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கூடி சில சடங்குகளைச் செய்வாங்க. இந்த சடங்குகளில், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தல், படையல் செய்தல், புரோகிதரை வைத்து பூஜைகள் செய்தல் போன்றவை அடங்கும். மேலும், இந்த நாளில் அன்னதானம் செஞ்சா ரொம்ப புண்ணியம்ப்பா. அதனால, அதுக்கு ஏற்பாடு பண்ணிடு.”
“நான் எல்லா ஏற்பாட்டையும் பண்ணி வச்சிருக்கேன் சித்தப்பா.”
சித்தப்பா, ஆண்டு நினைவு நாலை எப்படி அனுசரிக்க வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்க, அதன்படி காலையிலேயே முக்கிய உறவுக்காரங்களும், நானும் புரோகிதரோட பக்கத்திலே உள்ள ஆத்துக்கு போய், ஆத்தங்கரையில் உக்காந்து எள்ளும் தண்ணீரும் கொண்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தேன்.
அதுக்கப்புறமா, என் மனைவி விரும்பி சாப்பிட்ட உணவுகளை படையலாக ஒரு சுத்தமான வாழை இலையிலே வைத்து, அதை முன்னோர்களுக்கு படைச்சேன்.
படையல் படைச்சதும், புரோகிதர் மூலம், ஹோமம் சடங்குகள் செய்து, என் மனைவியின் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்தனை செய்தேன்.
அப்புறமா வீட்டுக்கு வந்தோம்.
வீட்டுக்கு வந்து ஹோமச் சடங்கு செஞ்சதுக்கப்புறம், ஊரில் இருக்கிற ஏழை எளியவர்களுக்கு கூப்பிட்டு அன்னதானம் செய்தேன்.
அப்புறமா ஒரு பசு மாட்டை வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்து அதுக்கு உணவளிச்சேன்.
அதுக்கப்புறமா, எங்க குடும்பத்தினர், சொந்தக்காரர்கள், உற்றார் உறவினர்கள் இப்படி அனைவரும் கூடி, இறந்தவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு, அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தோம்.
அதுக்கப்புறமா என் மனைவியோட படத்துக்கு சந்தனம் குங்குமம் இட்டு, பூமாலை அணிவித்து, ஊதுபத்தி மற்றும் விளக்கு ஏற்றி, வாழை இலையில் சமைத்த உணவை பரிமாறி, குடிக்க நீர் வைத்து, எல்லாவற்றிக்கும் சேர்த்து சாம்பிராணி புகை காட்டி வணங்கினோம்.
ஊரிலிருந்து வந்திருந்த உறவுக்காரங்க, சொந்தக் காரங்க எல்லோரும் என் மனைவியோட இறந்த வருட தினத்தை அனுசரிச்சிட்டு, சாயந்திரமா அவங்க அவங்க ஊருக்கு கிளம்பிப் போனாங்க.
சொந்தக் காரங்க எல்லோரும் போனதும், அம்மாவும், ரம்யாவும் ஒரு ரெண்டு நாள் கழிச்சு வந்துடறோம்ன்னு சித்தி, சித்தப்பா குடும்பத்தோட அவங்க ஊருக்கு கிளம்பிப் போனாங்க.
வீட்ல நான், அமுதா அப்புறமா அவ குழந்தை மட்டும் இருந்தோம்.
நான் வெளியே போய் சொந்தக் காரங்களை வழி அனுப்பி வச்சிட்டு வீட்டுக்கு வந்தப்ப, அமுதா சமைச்ச பாத்திரங்களை கழுவி வச்சிட்டு, சொந்த பந்தங்கள் அவர்கள் குழந்தைகளோடு வந்திருந்ததாலே அங்கே இங்கேன்னு சிதறிக்கிடந்த பொருட்களை ஒழுங்கா அடுக்கி வச்சிட்டு, வீட்டை கூட்டி பெருக்கிகிட்டு இருந்தா.
தரையிலே ஒரு பலகை போட்டு, அதன் மேலே என் மனைவியோட போட்டோ வைக்கப்பட்டு அதற்கு மாலை அணிவிக்கப்பட்டு அதன் முன்னால் விளக்கு ஏற்றப்பட்டிருந்தது.
நான் அந்த போட்டோவுக்கு பக்கத்துல சுவத்துல சாஞ்சு, கண்ணீரோட அவளோட நினைவுகள்ல மூழ்கிப், போய் விசும்பி அழுதுகிட்டு இருந்தேன்.
நான் அழுதுகிட்டு இருந்ததைப் பாத்தவ, கையில் இருந்த துடப்பத்தை ஒரு ஓரமா போட்டுட்டு முந்தானையை எடுத்து இடுப்புல சொறுகிட்டு, என் பக்கமா உக்காந்து,
“என்னண்ணா, ஏன் அழுதுகிட்டு இருக்கீங்க? அண்ணியோட நினைப்பு வந்துடுச்சா?” என்று அன்பாகக் கேட்டாள்.
“ஆமாம் அமுதா? அவ கொஞ்ச நாள் என் கூட வாழ்ந்திருந்தாலும் அவளை மறக்க முடியல..”
“சரிண்ணா. என்ன பண்றது? நீங்களும்தான் அக்கறையா அவங்களை கவனிச்சுகிட்டீங்க. அவங்களுக்கு நோய் முத்திப் போச்சு. விதி அவ்வளவுதான். நாம என்ன செய்ய முடியும்? அழாம வந்து சாப்பிடுங்கண்ணா. காலையிலேயே கொஞ்சமா, பேருக்குதான் சாப்பிட்டீங்க. இப்படியே சாப்பிடாம இருந்தீங்கன்னா உடம்புக்கு ஆகாது. இப்ப கொஞ்சம் சாப்பிடுங்க.”
“எனக்கு சாப்பிடவே பிடிக்கலை அமுதா. நீ போய் சாப்பிடு.”
“நீங்க சாப்பிடாம நான் மட்டும் எப்படி சாப்பிட முடியும்.?”
“எனக்கு பரவாயில்ல. இப்ப பசிக்கல. நீ பசி தாங்க மாட்டே. அதுவுமில்லாம நீ குழந்தைக்கு பால் கொடுக்கணும் அதுக்காகவாவது நீ போய் சாப்பிடு.”
“இல்லண்ணா. நீ சாப்பிட்டாதான் நானும் சாப்பிடுவேன்.” என்று அழுது கொண்டே சொல்ல, “சொன்னா கேளும்மா. நீ போய் சாப்பிடு.”
“ஹூஹும்,… ஒரே தட்டுல சோறு போட்டு கொஞ்சம் கொழம்பு ஊத்தி பிசைஞ்சு எடுத்துகிட்டு வர்றேன். உங்களுக்கு ஊட்டி விட்டுகிட்டே ரெண்டு பேரும் சாப்பிடுவோம்.”
“ கணவனை இழந்த மனைவியை விடவும், மனைவியை இழந்த கணவன் தான் அதிகம் நொடிந்து போகிறான். காரணம் கணவனை இழந்த மனைவி அவளது கணவனை மட்டுமே இழக்கிறாள்.”
“…………………………!!”
“ஆனால், மனைவியை இழந்த கணவன்... தனக்கு எல்லாமாக இருந்த மனைவியை, இழக்கும் போது, தானும் எல்லாத்தையும் இழந்து விட்டது போல உணர்கிறான். இல்ல”
“ஆமாண்ணா. உங்களோட சேந்து கொஞ்ச நாள் மட்டுமே அண்ணி வாழ்ந்திருந்தாலும் அவங்க நினைப்பை உங்களால மறக்க முடியாததுதான். என்ன செய்யிறது? அவங்களுக்கு அவ்வளவுதான் ஆய்சு”
“நீயே நினைச்சுப் பாரு! ஒரு மனைவி என்பவள் எத்தனை உருவம் எடுக்கிறாள்?
“……………………………!!”
“கல்யாணம் ஆனதுக்கப்புறம், கணவனுக்காக தன் பிறந்த வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
அவனுடைய சொந்தங்களை தன்னுடையதாக்கிக் கொள்கிறாள்.
ஊர் , பெயர் , முகவரி , வீடு முதற்கொண்டு தன் தாயிடம் குடித்த பால் மற்றும் தந்தை தந்த கல்வி தவிர அனைத்தையும் மாற்றிக்கொள்ள முன் வருகிறாள்.
தான் கண்ட கனவுகள் அனைத்தையும் கொண்டவனுக்காக மறைக்கிறாள். மறக்கிறாள்.
வீட்டின் வேலைக்காரியாக ,சலவைக்காரியாக,சமையல் செய்பவளாக, கணக்குப்பிள்ளையாக, வீட்டை பராமரிப்பவளாக,….. இப்படி பல வேலைகளை எதிர்பார்ப்பின்றி செய்கிறாள்...
அவள் இருக்கும் வரை இத்தனை வேலைகள் யார் செய்தார்கள் என்று குடும்பத்தில் யாரும் உணர்ந்ததேயில்லை.
பொன்னின் அருமை அதை தொலைத்த பின் தான் தெரியும் என்பதைப் போல, பெண்ணின் அருமை அவள் மறைந்த பின் தான் தெரியும் . இல்லையா?!”
“ஆமாண்ணா. உண்மைதான். ஆம்.. மனைவியின் அருமையை அவளது மறைவில் தான் ஒரு ஆம்பள உணர்கிறான்.
நம்ம வாழ்க்கையில மனைவியை இழந்து தவிக்கும் கணவர்களையும்...
கணவர்களை இழந்து வாடும் மனைவிகளையும் தினந்தோறும் சந்திக்கிறோம்.
கணவனை இழந்த மனைவியர் நினைவுகளை அசை போடுவார்கள். நல்ல நினைவுகளை கூறுவார்கள்.
மனைவியை இழந்த கணவர்கள் தங்கள் மனைவிகளின் தியாகங்களை எடுத்துக்கூறி புலம்புவார்கள். "இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்து நல்லா கவனிச்சி இருக்கலாம் சார் அவள,….. இப்டி சரியா பாக்காம கவனிக்காம விட்டுட்டேனே சார்". என்று அழுது புலம்புவார்கள். அப்படிதான் நீயும் புலம்பி கிட்டு இருக்கேண்ணா. என்ன செய்யறது அவங்களுக்கு விதிக்கப்பட்டது அவ்வளவுதான்.”
“கணவனை இழந்த மனைவிகளுக்கு பிள்ளைகள் மூலம் நிவாரணமும் மன வலிமையும் கிடைத்து விடுகிறது.
ஆனால், மனைவியை இழந்த கணவர்களுக்கு அனைத்தும் இருந்தும் அனாதை ஆனது போல தான் இருக்கிறார்கள்.
என் மனைவி இறந்த வருஷ நினைவு நாளை அனுசரிப்பதற்காக உறவினர்கள் அனைவரையும் நான் நான்கு நாட்களுக்கு முன்பே புரோகிதரை ஆலோசித்து, அழைத்திருந்ததால், சொந்தக் காரர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கி இருந்தனர்.
வீட்டில் அனைவரும் இருந்த போது, எங்கள் வீட்டு பெரியவரான சித்தப்பாவிடம் நான், “சித்தப்பா, இந்த வருஷ சடங்கை எப்படி செய்யறதுன்னு எனக்கு ஓரளவுக்கு தெரியும். புரோகிதரை வச்சிருக்கேன். இருந்தாலும், பெரியவங்க நீங்களும் கொஞ்சம் வழிகாட்டுங்க.” என்று கேட்டுக்கொண்டேன்.
“சரிப்பா,…முதல்ல மனைவி இறந்த வருஷ சடங்கை அனுசரிக்கிறதுன்னா என்னன்னு சொல்லிடறேன்.”
“சொல்லுங்க சித்தப்பா.”
“வருஷ சடங்கை அனுசரிகிறதுன்னா, இறந்தவருக்கான ஆண்டு நினைவு நாளாகும். இதைக் கர்மா அல்லது ஷ்ராத்ன்னும் சொல்வாங்க. இதில், இறந்தவரின் ஆத்மா சாந்தி அடையவும், பித்ருக்களுக்கு (முன்னோருக்கு) மரியாதை செலுத்தவும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கூடி சில சடங்குகளைச் செய்வாங்க. இந்த சடங்குகளில், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தல், படையல் செய்தல், புரோகிதரை வைத்து பூஜைகள் செய்தல் போன்றவை அடங்கும். மேலும், இந்த நாளில் அன்னதானம் செஞ்சா ரொம்ப புண்ணியம்ப்பா. அதனால, அதுக்கு ஏற்பாடு பண்ணிடு.”
“நான் எல்லா ஏற்பாட்டையும் பண்ணி வச்சிருக்கேன் சித்தப்பா.”
சித்தப்பா, ஆண்டு நினைவு நாலை எப்படி அனுசரிக்க வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்க, அதன்படி காலையிலேயே முக்கிய உறவுக்காரங்களும், நானும் புரோகிதரோட பக்கத்திலே உள்ள ஆத்துக்கு போய், ஆத்தங்கரையில் உக்காந்து எள்ளும் தண்ணீரும் கொண்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தேன்.
அதுக்கப்புறமா, என் மனைவி விரும்பி சாப்பிட்ட உணவுகளை படையலாக ஒரு சுத்தமான வாழை இலையிலே வைத்து, அதை முன்னோர்களுக்கு படைச்சேன்.
படையல் படைச்சதும், புரோகிதர் மூலம், ஹோமம் சடங்குகள் செய்து, என் மனைவியின் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்தனை செய்தேன்.
அப்புறமா வீட்டுக்கு வந்தோம்.
வீட்டுக்கு வந்து ஹோமச் சடங்கு செஞ்சதுக்கப்புறம், ஊரில் இருக்கிற ஏழை எளியவர்களுக்கு கூப்பிட்டு அன்னதானம் செய்தேன்.
அப்புறமா ஒரு பசு மாட்டை வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்து அதுக்கு உணவளிச்சேன்.
அதுக்கப்புறமா, எங்க குடும்பத்தினர், சொந்தக்காரர்கள், உற்றார் உறவினர்கள் இப்படி அனைவரும் கூடி, இறந்தவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு, அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தோம்.
அதுக்கப்புறமா என் மனைவியோட படத்துக்கு சந்தனம் குங்குமம் இட்டு, பூமாலை அணிவித்து, ஊதுபத்தி மற்றும் விளக்கு ஏற்றி, வாழை இலையில் சமைத்த உணவை பரிமாறி, குடிக்க நீர் வைத்து, எல்லாவற்றிக்கும் சேர்த்து சாம்பிராணி புகை காட்டி வணங்கினோம்.
ஊரிலிருந்து வந்திருந்த உறவுக்காரங்க, சொந்தக் காரங்க எல்லோரும் என் மனைவியோட இறந்த வருட தினத்தை அனுசரிச்சிட்டு, சாயந்திரமா அவங்க அவங்க ஊருக்கு கிளம்பிப் போனாங்க.
சொந்தக் காரங்க எல்லோரும் போனதும், அம்மாவும், ரம்யாவும் ஒரு ரெண்டு நாள் கழிச்சு வந்துடறோம்ன்னு சித்தி, சித்தப்பா குடும்பத்தோட அவங்க ஊருக்கு கிளம்பிப் போனாங்க.
வீட்ல நான், அமுதா அப்புறமா அவ குழந்தை மட்டும் இருந்தோம்.
நான் வெளியே போய் சொந்தக் காரங்களை வழி அனுப்பி வச்சிட்டு வீட்டுக்கு வந்தப்ப, அமுதா சமைச்ச பாத்திரங்களை கழுவி வச்சிட்டு, சொந்த பந்தங்கள் அவர்கள் குழந்தைகளோடு வந்திருந்ததாலே அங்கே இங்கேன்னு சிதறிக்கிடந்த பொருட்களை ஒழுங்கா அடுக்கி வச்சிட்டு, வீட்டை கூட்டி பெருக்கிகிட்டு இருந்தா.
தரையிலே ஒரு பலகை போட்டு, அதன் மேலே என் மனைவியோட போட்டோ வைக்கப்பட்டு அதற்கு மாலை அணிவிக்கப்பட்டு அதன் முன்னால் விளக்கு ஏற்றப்பட்டிருந்தது.
நான் அந்த போட்டோவுக்கு பக்கத்துல சுவத்துல சாஞ்சு, கண்ணீரோட அவளோட நினைவுகள்ல மூழ்கிப், போய் விசும்பி அழுதுகிட்டு இருந்தேன்.
நான் அழுதுகிட்டு இருந்ததைப் பாத்தவ, கையில் இருந்த துடப்பத்தை ஒரு ஓரமா போட்டுட்டு முந்தானையை எடுத்து இடுப்புல சொறுகிட்டு, என் பக்கமா உக்காந்து,
“என்னண்ணா, ஏன் அழுதுகிட்டு இருக்கீங்க? அண்ணியோட நினைப்பு வந்துடுச்சா?” என்று அன்பாகக் கேட்டாள்.
“ஆமாம் அமுதா? அவ கொஞ்ச நாள் என் கூட வாழ்ந்திருந்தாலும் அவளை மறக்க முடியல..”
“சரிண்ணா. என்ன பண்றது? நீங்களும்தான் அக்கறையா அவங்களை கவனிச்சுகிட்டீங்க. அவங்களுக்கு நோய் முத்திப் போச்சு. விதி அவ்வளவுதான். நாம என்ன செய்ய முடியும்? அழாம வந்து சாப்பிடுங்கண்ணா. காலையிலேயே கொஞ்சமா, பேருக்குதான் சாப்பிட்டீங்க. இப்படியே சாப்பிடாம இருந்தீங்கன்னா உடம்புக்கு ஆகாது. இப்ப கொஞ்சம் சாப்பிடுங்க.”
“எனக்கு சாப்பிடவே பிடிக்கலை அமுதா. நீ போய் சாப்பிடு.”
“நீங்க சாப்பிடாம நான் மட்டும் எப்படி சாப்பிட முடியும்.?”
“எனக்கு பரவாயில்ல. இப்ப பசிக்கல. நீ பசி தாங்க மாட்டே. அதுவுமில்லாம நீ குழந்தைக்கு பால் கொடுக்கணும் அதுக்காகவாவது நீ போய் சாப்பிடு.”
“இல்லண்ணா. நீ சாப்பிட்டாதான் நானும் சாப்பிடுவேன்.” என்று அழுது கொண்டே சொல்ல, “சொன்னா கேளும்மா. நீ போய் சாப்பிடு.”
“ஹூஹும்,… ஒரே தட்டுல சோறு போட்டு கொஞ்சம் கொழம்பு ஊத்தி பிசைஞ்சு எடுத்துகிட்டு வர்றேன். உங்களுக்கு ஊட்டி விட்டுகிட்டே ரெண்டு பேரும் சாப்பிடுவோம்.”
“ கணவனை இழந்த மனைவியை விடவும், மனைவியை இழந்த கணவன் தான் அதிகம் நொடிந்து போகிறான். காரணம் கணவனை இழந்த மனைவி அவளது கணவனை மட்டுமே இழக்கிறாள்.”
“…………………………!!”
“ஆனால், மனைவியை இழந்த கணவன்... தனக்கு எல்லாமாக இருந்த மனைவியை, இழக்கும் போது, தானும் எல்லாத்தையும் இழந்து விட்டது போல உணர்கிறான். இல்ல”
“ஆமாண்ணா. உங்களோட சேந்து கொஞ்ச நாள் மட்டுமே அண்ணி வாழ்ந்திருந்தாலும் அவங்க நினைப்பை உங்களால மறக்க முடியாததுதான். என்ன செய்யிறது? அவங்களுக்கு அவ்வளவுதான் ஆய்சு”
“நீயே நினைச்சுப் பாரு! ஒரு மனைவி என்பவள் எத்தனை உருவம் எடுக்கிறாள்?
“……………………………!!”
“கல்யாணம் ஆனதுக்கப்புறம், கணவனுக்காக தன் பிறந்த வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
அவனுடைய சொந்தங்களை தன்னுடையதாக்கிக் கொள்கிறாள்.
ஊர் , பெயர் , முகவரி , வீடு முதற்கொண்டு தன் தாயிடம் குடித்த பால் மற்றும் தந்தை தந்த கல்வி தவிர அனைத்தையும் மாற்றிக்கொள்ள முன் வருகிறாள்.
தான் கண்ட கனவுகள் அனைத்தையும் கொண்டவனுக்காக மறைக்கிறாள். மறக்கிறாள்.
வீட்டின் வேலைக்காரியாக ,சலவைக்காரியாக,சமையல் செய்பவளாக, கணக்குப்பிள்ளையாக, வீட்டை பராமரிப்பவளாக,….. இப்படி பல வேலைகளை எதிர்பார்ப்பின்றி செய்கிறாள்...
அவள் இருக்கும் வரை இத்தனை வேலைகள் யார் செய்தார்கள் என்று குடும்பத்தில் யாரும் உணர்ந்ததேயில்லை.
பொன்னின் அருமை அதை தொலைத்த பின் தான் தெரியும் என்பதைப் போல, பெண்ணின் அருமை அவள் மறைந்த பின் தான் தெரியும் . இல்லையா?!”
“ஆமாண்ணா. உண்மைதான். ஆம்.. மனைவியின் அருமையை அவளது மறைவில் தான் ஒரு ஆம்பள உணர்கிறான்.
நம்ம வாழ்க்கையில மனைவியை இழந்து தவிக்கும் கணவர்களையும்...
கணவர்களை இழந்து வாடும் மனைவிகளையும் தினந்தோறும் சந்திக்கிறோம்.
கணவனை இழந்த மனைவியர் நினைவுகளை அசை போடுவார்கள். நல்ல நினைவுகளை கூறுவார்கள்.
மனைவியை இழந்த கணவர்கள் தங்கள் மனைவிகளின் தியாகங்களை எடுத்துக்கூறி புலம்புவார்கள். "இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்து நல்லா கவனிச்சி இருக்கலாம் சார் அவள,….. இப்டி சரியா பாக்காம கவனிக்காம விட்டுட்டேனே சார்". என்று அழுது புலம்புவார்கள். அப்படிதான் நீயும் புலம்பி கிட்டு இருக்கேண்ணா. என்ன செய்யறது அவங்களுக்கு விதிக்கப்பட்டது அவ்வளவுதான்.”
“கணவனை இழந்த மனைவிகளுக்கு பிள்ளைகள் மூலம் நிவாரணமும் மன வலிமையும் கிடைத்து விடுகிறது.
ஆனால், மனைவியை இழந்த கணவர்களுக்கு அனைத்தும் இருந்தும் அனாதை ஆனது போல தான் இருக்கிறார்கள்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)