22-05-2026, 05:13 PM
அத்தியாயம் - 14
வீடு வரும்வரை கணவன் மனைவி இருவரும் பேசவேயில்லை...அவள் கோபமாக இருக்கிறாள் என்பது மட்டும் குமாருக்கு புரிந்தது...வீட்டில் கார் வந்து நின்றவுடன் சந்தியா இறங்கி உள்ளே சென்றுவிட்டாள்...
குமார் வண்டியை விட்டுவிட்டு வீட்டிற்குள் வர...சந்தியா பாத்ரூமுக்குள் குளித்து கொண்டிருக்கும் சத்தம் கேட்டது...குமாரும் மற்றொரு பாத்ரூமுக்குள் சென்று குளித்து விட்டு வந்தான்...
பெட்ரூமுக்குள் நுழைந்த குமார், அங்கே சந்தியா பெட்டின் ஒரு முனையில் முதுகைக் காட்டியபடி திரும்பி படுத்திருந்தாள்...குமார் அவளை ஏதும் தொந்தரவு செய்யாமல் இந்த முனையில் படுத்து உறங்க ஆரம்பித்தான்....
பொழுதும் விடிந்தது...
குமார் எழுந்து தன் அருகில் மனைவி இருக்கிறாளா என்று சந்தியாவை தேடினான்...ஆனால் சந்தியா பெட்டில் இல்லை...எழுந்து வெளியே வந்தான் அங்கே ஆவி பறக்க சூடாக டீ டேபிள் மேலே இருந்தது...அது தனக்காகத் தான் என்பதை உணர்ந்த குமார் அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்...சமையலறையில் சந்தியா இருப்பது அங்கு வரும் சப்தத்தில் அவனுக்கு புரிந்தது...
காலைக் கடன்களை முடித்துவிட்டு குளித்துவிட்டு வந்தவன் மீண்டும் டைனிங் டேபிளில் டிபன் இருப்பதையும் கவனித்தான்...அவனுக்கு புரிந்தது சந்தியா எப்படியும் இப்போது தன்னிடம் பேசப்போவதில்லை என்று...சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து ஆபிசுக்கு காரை எடுக்காமல் பைக்கில் கிளம்பி சென்றான்.
மாலைவரை அவனுக்கு வேலை சரியாக ஓடவில்லை...அங்கு சந்தியாவும் இப்போது வரை இவனுக்கு கால் எதுவும் செய்யவில்லை...
மாலையில் குமார் வீட்டுக்குள் நுழைந்தான்...அவன் நெற்றியில் சிறிய இரத்த காயம் இருப்பதை சந்தியா கண்டாள்...உடனே பதறி எழுந்து வந்து....
சந்தியா : என்னங்க...என்ன ஆச்சு....????
குமார் : ஒன்னும் இல்ல...ஒரு சின்ன ஆக்சிடென்ட்...
சந்தியா : எப்படியாச்சு...???
குமார் : பைக் ஸ்கிட் ஆகிடிச்சு....சின்ன காயம் தான்....
சந்தியா : சின்ன காயம்னு சொல்றீங்க...நெத்தில ரத்தம் வருது...
குமார் : பலமான அடி இல்ல...சிராய்ப்பு காயம்தான்...
சந்தியா : இருங்க...நான் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்துட்டு வரேன்...
குமார் : வேணாம்...நீதான் எங்கூட பேசமாட்டல்ல...நானே பாத்துக்கறேன்...
சந்தியா : லூசு மாதிரி பண்ணாதீங்க...அதெல்லாம் அப்றம் பாத்துக்கலாம்...இங்கயே இருங்க...
குமாரை சோபாவில் அமரத்திவிட்டு உள்ளே சென்று அந்த பாக்ஸை எடுத்து வந்து...டிஞ்சர் பஞ்சை வைத்து குமாரின் காயத்தை சுத்தம் செய்தாள்...
சந்தியா : சின்ன சிராய்ப்பு தான் ஆனா இரத்தம் வந்துடுச்சு....உங்கள யாரு இன்னிக்கு பைக் எடுத்துட்டு போக சொன்னா....????
குமார் : ஏதோ நியாபகத்துல எடுத்துட்டு போய்ட்டேன்...
சந்தியாவுக்கு சற்றே உரைத்தது...அதற்கு தானும் ஒரு காரணம் என்று...
சந்தியா : ஸாரிங்க...நான் அப்டி இருந்ததால தான் நீங்க ஏதோ நியாபகத்துல பைக் எடுத்துட்டு போயிருக்கீங்க...ஏதாவது ஆகிருந்தா என்ன ஆகுறது....!!! மன்னிச்சுடுங்க...
குமார் : ஏய்ய்....இல்ல சந்தியா நான்தான் உங்கிட்ட மன்னிப்பு கேக்கணும்...உனக்கு பிடிக்காத ஒன்ன நான் செஞ்சிட்டேன்னு நெனைக்கறேன்....
சந்தியா : அதெல்லாம் அப்றம் பேசலாம்...முதல்ல போய் குளிங்க...இந்த டிரஸ் கழட்டி நனச்சு போடுங்க....பாத்ரூம்ல போய் இருங்க நான் வரேன்....
குமார் பாத்ரூம் போய் அவள் சொன்னபடி போட்டிருந்த துணிகளை கழட்டி நனைத்துப் போட்டான். அப்போது உள்ளே வந்த சந்தியா...
சந்தியா : அந்த சின்ன டேபிள்ள உட்காருங்க....
குமாரும் உட்கார...தன் கையில் கொண்டு வந்திருந்த எண்ணெய் மற்றும் மஞ்சளை அவன் தலையில் பரவ நன்றாக தேய்த்து விட்டாள்.
சந்தியா : ம்ம்....இப்போ குளிங்க...
என்று சொல்லிவிட்டு சந்தியா வெளியே போனாள்....
அடுத்த பத்து நிமிடத்தில் குமார் குளித்துவிட்டு உடைகளை மாற்றி வெளியே வர....
சந்தியா அவனுக்காக சூடாக டீ போட்டு வந்து கொடுத்தாள்...
அவளின் கோபம் மறைந்திருந்தை குமார் கவனித்தான்...ஆனால் அவளிடம் அவன் மேற்கொண்டு என்ன..எப்படி பேசுவது என்று புரியாமல் தவித்தான்...வழக்கம்போல இரவு உணவு முடிந்ததும் ஒருவர் பின் ஒருவராக படுக்கைக்கு சென்றனர்...
குமார் படுக்கையில் மொபைலை நோண்டிக் கொண்டிருக்க...சந்தியா மெல்ல திரும்பி பார்த்தாள்....அவன் அவனது போக்கிலேயே இருந்தான்...மெல்ல அவன் பக்கம் நகர்ந்து அவன் கையிலிருந்த மொபைலை பிடுங்கி ஓரம் வைத்தாள்...அவனை சற்றே அணைத்து கொண்டாள்....
![[Image: 4VPuOIFp_o.jpeg]](https://images2.imgbox.com/60/df/4VPuOIFp_o.jpeg)
சந்தியா : ஸாரிங்க...என்னால தான் உங்களுக்கு இன்னிக்கு இப்படி ஆச்சுன்னு நெனைக்கறேன்....
குமார் : ஏதோ நடந்துடுச்சு...விடு...நீ கோபமா இருந்ததுக்கு நானும் ஒரு காரணம் தானே....என்னை மன்னிச்சிடு....நானும் அப்டி பண்ணிருக்க கூடாது....எனக்கு ஒரு மாதிரி கில்ட்டியா இருக்கு....
சந்தியா : போதும்....
குமார் : இல்ல சந்தியா....நாம ஏதேதோ பேண்டஸி பத்தி பேசிருக்கோம்...நான் உனக்கு பிடிக்கும்னு நெனச்சு செஞ்ச விசயம் இப்படி ஆகிடுச்சு....நான் எது செஞ்சாலும் உனக்குப் பிடிக்கும்னு தப்பா நெனச்சுட்டேன்னு நெனைக்குறேன்...இனி இப்படி நடக்காது...
சந்தியா : இப்ப எதுக்கு இவ்ளோ ஆழமா போறீங்க....நீங்க எது செஞ்சாலும் எனக்கு பிடிக்கும்தான்...நான் உங்கள எப்பவும் நம்புறேன்...ஆனா நேத்து ஏதோ ஒரு அதிர்ச்சி எனக்கு அங்க நடந்ததுல...என்கிட்ட எதுமே சொல்லாம நீங்க என்னை அங்க கூட்டிட்டு போய்ட்டீங்க...அதுதான் எனக்கு உங்க மேல கோபம்....
குமார் : புரியுது...நான் உனக்கு சர்ப்ரைஸா இருக்கும்னு நெனச்சேன்...ஆனா அது வேறமாதிரி ஆகிடுச்சுன்னு நெனைக்கறேன்...
சந்தியா சற்று அமைதிக்குப்பின்...
சந்தியா : சர்ப்ரைஸா இல்லனு யாரு சொன்னா....?
குமார் சற்று மனமாற்றத்துடன் ஆர்வமானான்...
தர்மம் தொடரும்....
வீடு வரும்வரை கணவன் மனைவி இருவரும் பேசவேயில்லை...அவள் கோபமாக இருக்கிறாள் என்பது மட்டும் குமாருக்கு புரிந்தது...வீட்டில் கார் வந்து நின்றவுடன் சந்தியா இறங்கி உள்ளே சென்றுவிட்டாள்...
குமார் வண்டியை விட்டுவிட்டு வீட்டிற்குள் வர...சந்தியா பாத்ரூமுக்குள் குளித்து கொண்டிருக்கும் சத்தம் கேட்டது...குமாரும் மற்றொரு பாத்ரூமுக்குள் சென்று குளித்து விட்டு வந்தான்...
பெட்ரூமுக்குள் நுழைந்த குமார், அங்கே சந்தியா பெட்டின் ஒரு முனையில் முதுகைக் காட்டியபடி திரும்பி படுத்திருந்தாள்...குமார் அவளை ஏதும் தொந்தரவு செய்யாமல் இந்த முனையில் படுத்து உறங்க ஆரம்பித்தான்....
பொழுதும் விடிந்தது...
குமார் எழுந்து தன் அருகில் மனைவி இருக்கிறாளா என்று சந்தியாவை தேடினான்...ஆனால் சந்தியா பெட்டில் இல்லை...எழுந்து வெளியே வந்தான் அங்கே ஆவி பறக்க சூடாக டீ டேபிள் மேலே இருந்தது...அது தனக்காகத் தான் என்பதை உணர்ந்த குமார் அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்...சமையலறையில் சந்தியா இருப்பது அங்கு வரும் சப்தத்தில் அவனுக்கு புரிந்தது...
காலைக் கடன்களை முடித்துவிட்டு குளித்துவிட்டு வந்தவன் மீண்டும் டைனிங் டேபிளில் டிபன் இருப்பதையும் கவனித்தான்...அவனுக்கு புரிந்தது சந்தியா எப்படியும் இப்போது தன்னிடம் பேசப்போவதில்லை என்று...சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து ஆபிசுக்கு காரை எடுக்காமல் பைக்கில் கிளம்பி சென்றான்.
மாலைவரை அவனுக்கு வேலை சரியாக ஓடவில்லை...அங்கு சந்தியாவும் இப்போது வரை இவனுக்கு கால் எதுவும் செய்யவில்லை...
மாலையில் குமார் வீட்டுக்குள் நுழைந்தான்...அவன் நெற்றியில் சிறிய இரத்த காயம் இருப்பதை சந்தியா கண்டாள்...உடனே பதறி எழுந்து வந்து....
சந்தியா : என்னங்க...என்ன ஆச்சு....????
குமார் : ஒன்னும் இல்ல...ஒரு சின்ன ஆக்சிடென்ட்...
சந்தியா : எப்படியாச்சு...???
குமார் : பைக் ஸ்கிட் ஆகிடிச்சு....சின்ன காயம் தான்....
சந்தியா : சின்ன காயம்னு சொல்றீங்க...நெத்தில ரத்தம் வருது...
குமார் : பலமான அடி இல்ல...சிராய்ப்பு காயம்தான்...
சந்தியா : இருங்க...நான் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்துட்டு வரேன்...
குமார் : வேணாம்...நீதான் எங்கூட பேசமாட்டல்ல...நானே பாத்துக்கறேன்...
சந்தியா : லூசு மாதிரி பண்ணாதீங்க...அதெல்லாம் அப்றம் பாத்துக்கலாம்...இங்கயே இருங்க...
குமாரை சோபாவில் அமரத்திவிட்டு உள்ளே சென்று அந்த பாக்ஸை எடுத்து வந்து...டிஞ்சர் பஞ்சை வைத்து குமாரின் காயத்தை சுத்தம் செய்தாள்...
சந்தியா : சின்ன சிராய்ப்பு தான் ஆனா இரத்தம் வந்துடுச்சு....உங்கள யாரு இன்னிக்கு பைக் எடுத்துட்டு போக சொன்னா....????
குமார் : ஏதோ நியாபகத்துல எடுத்துட்டு போய்ட்டேன்...
சந்தியாவுக்கு சற்றே உரைத்தது...அதற்கு தானும் ஒரு காரணம் என்று...
சந்தியா : ஸாரிங்க...நான் அப்டி இருந்ததால தான் நீங்க ஏதோ நியாபகத்துல பைக் எடுத்துட்டு போயிருக்கீங்க...ஏதாவது ஆகிருந்தா என்ன ஆகுறது....!!! மன்னிச்சுடுங்க...
குமார் : ஏய்ய்....இல்ல சந்தியா நான்தான் உங்கிட்ட மன்னிப்பு கேக்கணும்...உனக்கு பிடிக்காத ஒன்ன நான் செஞ்சிட்டேன்னு நெனைக்கறேன்....
சந்தியா : அதெல்லாம் அப்றம் பேசலாம்...முதல்ல போய் குளிங்க...இந்த டிரஸ் கழட்டி நனச்சு போடுங்க....பாத்ரூம்ல போய் இருங்க நான் வரேன்....
குமார் பாத்ரூம் போய் அவள் சொன்னபடி போட்டிருந்த துணிகளை கழட்டி நனைத்துப் போட்டான். அப்போது உள்ளே வந்த சந்தியா...
சந்தியா : அந்த சின்ன டேபிள்ள உட்காருங்க....
குமாரும் உட்கார...தன் கையில் கொண்டு வந்திருந்த எண்ணெய் மற்றும் மஞ்சளை அவன் தலையில் பரவ நன்றாக தேய்த்து விட்டாள்.
சந்தியா : ம்ம்....இப்போ குளிங்க...
என்று சொல்லிவிட்டு சந்தியா வெளியே போனாள்....
அடுத்த பத்து நிமிடத்தில் குமார் குளித்துவிட்டு உடைகளை மாற்றி வெளியே வர....
சந்தியா அவனுக்காக சூடாக டீ போட்டு வந்து கொடுத்தாள்...
அவளின் கோபம் மறைந்திருந்தை குமார் கவனித்தான்...ஆனால் அவளிடம் அவன் மேற்கொண்டு என்ன..எப்படி பேசுவது என்று புரியாமல் தவித்தான்...வழக்கம்போல இரவு உணவு முடிந்ததும் ஒருவர் பின் ஒருவராக படுக்கைக்கு சென்றனர்...
குமார் படுக்கையில் மொபைலை நோண்டிக் கொண்டிருக்க...சந்தியா மெல்ல திரும்பி பார்த்தாள்....அவன் அவனது போக்கிலேயே இருந்தான்...மெல்ல அவன் பக்கம் நகர்ந்து அவன் கையிலிருந்த மொபைலை பிடுங்கி ஓரம் வைத்தாள்...அவனை சற்றே அணைத்து கொண்டாள்....
![[Image: 4VPuOIFp_o.jpeg]](https://images2.imgbox.com/60/df/4VPuOIFp_o.jpeg)
சந்தியா : ஸாரிங்க...என்னால தான் உங்களுக்கு இன்னிக்கு இப்படி ஆச்சுன்னு நெனைக்கறேன்....
குமார் : ஏதோ நடந்துடுச்சு...விடு...நீ கோபமா இருந்ததுக்கு நானும் ஒரு காரணம் தானே....என்னை மன்னிச்சிடு....நானும் அப்டி பண்ணிருக்க கூடாது....எனக்கு ஒரு மாதிரி கில்ட்டியா இருக்கு....
சந்தியா : போதும்....
குமார் : இல்ல சந்தியா....நாம ஏதேதோ பேண்டஸி பத்தி பேசிருக்கோம்...நான் உனக்கு பிடிக்கும்னு நெனச்சு செஞ்ச விசயம் இப்படி ஆகிடுச்சு....நான் எது செஞ்சாலும் உனக்குப் பிடிக்கும்னு தப்பா நெனச்சுட்டேன்னு நெனைக்குறேன்...இனி இப்படி நடக்காது...
சந்தியா : இப்ப எதுக்கு இவ்ளோ ஆழமா போறீங்க....நீங்க எது செஞ்சாலும் எனக்கு பிடிக்கும்தான்...நான் உங்கள எப்பவும் நம்புறேன்...ஆனா நேத்து ஏதோ ஒரு அதிர்ச்சி எனக்கு அங்க நடந்ததுல...என்கிட்ட எதுமே சொல்லாம நீங்க என்னை அங்க கூட்டிட்டு போய்ட்டீங்க...அதுதான் எனக்கு உங்க மேல கோபம்....
குமார் : புரியுது...நான் உனக்கு சர்ப்ரைஸா இருக்கும்னு நெனச்சேன்...ஆனா அது வேறமாதிரி ஆகிடுச்சுன்னு நெனைக்கறேன்...
சந்தியா சற்று அமைதிக்குப்பின்...
சந்தியா : சர்ப்ரைஸா இல்லனு யாரு சொன்னா....?
குமார் சற்று மனமாற்றத்துடன் ஆர்வமானான்...
தர்மம் தொடரும்....


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)