18-05-2026, 12:18 PM
Episode -166 தொடர்ச்சி
ரியான்: (திகைப்புடன்) "அருள்மொழி நாச்சியாரா? சோழ நாட்டு இளவரசியா? அண்ணே... இவளுடைய முகம்... இவளுடைய அந்த நீண்ட கழுத்து... இதெல்லாம் அப்படியே..."
டீக்கடைக்காரர்: "ஆமாம் தம்பி! நீ நினைக்கிறது நிஜம் தான். நீ கடற்கரையில் பார்த்த அந்தச் சிற்பிகா... இந்த அருள்மொழி நாச்சியாரின் நேரடி வம்சாவளி! ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி சோழப் பேரரசு இந்த அந்தமான் கடலில் மறைத்து வைத்த ரகசியப் பொக்கிஷத்தின் நேரடி வாரிசு அவள்தான். அந்தச் சென்டினல் தீவுவாசிகள் காத்து நிற்குறது இந்த அருள்மொழி நாச்சியாரின் ரத்தத்துக்காக மட்டும்தான்!"
டீக்கடைக்காரர்: "சரித்திரம் எப்போதுமே வீரத்தைப் பற்றி மட்டும்தான் தம்பி பேசும், ஆனா அதுக்கு பின்னாடி மறைஞ்சிருக்குற கண்ணீரையும் காதலையும் பேச மறந்துடும். மாவீரன் இளங்கோவின் கருத்தைக் கவர்ந்தவள் இந்த அருள்மொழி நாச்சியார்னு சொன்னேனே... அந்த இளங்கோ, சோழ தேசத்துக்காக ஒரு பெரும் போரில் வீர மரணமடைஞ்சான்... இல்லை, சதிகாரர்களால் கொல்லப்பட்டான்!"
ரியான் அதிர்ச்சியோடு கேட்க, டீக்கடைக்காரர் தொடர்ந்தார்.
டீக்கடைக்காரர்: "தன் காதலன் இளங்கோ கொல்லப்பட்ட பிறகு, சோழ தேசத்தின் அரண்மனைச் சுகபோகங்களும், அதிகாரப் போட்டிகளும் அருள்மொழிக்கு ஒரு நரகமாகத் தெரிந்தது. அவளுக்குத் தேவைப்பட்டதெல்லாம் ஆள் அரவமற்ற, தன் காதலனின் நினைவுகளோடு மட்டுமே வாழக்கூடிய ஒரு தனிமையான இடம். அதற்காகத்தான் தன் தந்தையின் கடற்படைக் கப்பல் ஒன்றில் ஏறி, இந்த எல்லையற்ற கடல் கடந்து, யாருமே இல்லாத இந்த அந்தமான் தீவுகளுக்கு அவள் வந்தாள்..."
டீக்கடைக்காரர் அந்த ஓவியத்தின் கீழ் பகுதிக்குத் தன் கைகளைக் கொண்டு சென்றார். அங்கே அருள்மொழி நாச்சியார் தன் ஒரு கையைத் தன் வயிற்றின் மீது வைத்திருப்பது போல அந்த ஓவியம் நுணுக்கமாக வரையப்பட்டிருந்தது.
டீக்கடைக்காரர்: "அவள் வெறும் கண்ணீரை மட்டும் சுமந்துகொண்டு இந்தத் தீவுக்கு வரவில்லை தம்பி... அவள் சோழ தேசத்தை விட்டுப் புறப்பட்ட பொழுது, அவளது காதலன் இளங்கோவின் உன்னதமான காதல் நினைவு... அவளது வயிற்றில் ஒரு கருவாக வளர்ந்து கொண்டிருந்தது! சோழ வம்சத்தின், மாவீரன் இளங்கோவின் அந்த நேரடி வாரிசைத் தன் வயிற்றில் சுமந்துதான் அவள் இந்த மண்ணில் கால் வைத்தாள்."
ரியானின் கண்கள் பனித்தன. ஒரு இளவரசி, தன் காதலனை இழந்து, வயிற்றில் ஒரு குழந்தையோடு, இந்த அறியப்படாத தீவுக்குள் அடைக்கலம் புகுந்த அந்தத் துயரத்தை அவனால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.
டீக்கடைக்காரர்: "ஆள் அரவமற்ற இந்தத் தீவுகளில், அவளுக்கு ஆதரவாக நின்றது அந்தச் சென்டினல் தீவுவாசிகள் மட்டும்தான். அருள்மொழி நாச்சியாரின் அந்தத் துயரத்தையும், அவளது கர்பத்தையும் பார்த்த அந்த ஆதிவாசிகள், அவளைத் தங்கள் குலத் தெய்வமாக ஏற்றுக்கொண்டார்கள். அவளையும், அவளது வயிற்றில் வளர்ந்த குழந்தையையும் தங்களின் உயிரைக் கொடுத்துப் பாதுகாப்பதாகச் சூளுரைத்தார்கள். அன்று முதல் இன்று வரை, அந்தச் சென்டினல் பழங்குடியினர் சோழர்களின் இந்த ரத்த வாரிசை மட்டுமே தங்களின் தலைவர்களாக ஏற்றுக்கொண்டு வருகிறார்கள்!"
சிற்பிகாவின் பின்னணியில் இருக்கும் அந்த ஆயிரம் ஆண்டுகாலச் சோழப் பேரரசின் ரத்த ரகசியத்தைக் கேட்ட மாத்திரத்தில், ரியானின் அகந்தையும் தலைக்கனமும் சுக்குநூறாக உடைந்து சிதறியது. ஒரு சாதாரண ஐடி அனலிஸ்ட் என்று தான் நினைத்த பெண், ஒரு கடற்படைப் பேரரசின் வாழும் பொக்கிஷம் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. இத்தனை காலம் தன்னுள் இருந்த 'நான்' என்ற மேட்டிமைத்தனம் முற்றிலும் ஒழிந்து, அந்தப் பழைய சோழர் மண்டபத்தின் கருங்கல் தரையில் ஒரு சாதாரண மனிதனாக அவன் நின்றிருந்தான்.
இருந்தாலும், ஒரு துப்பறியும் ஆவலாக அவனது மூளையின் ஒரு மூலையில் இன்னும் ஒரே ஒரு சந்தேகம் மட்டும் மிச்சமிருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் டீக்கடைக்காரரை நோக்கினான்.
ரியான்: (குரலில் இருந்த மிடுக்கு முற்றிலும் குறைந்து, பணிவோடு) "அண்ணே... சிற்பிகாவோட உண்மையைச் சொன்னீங்க, என் தலைக்கனம் எல்லாம் அடங்கிடுச்சு. ஆனா, எனக்கு இன்னும் ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை அண்ணே... இந்த உலகமே அறிஞ்ச வரைக்கும், 'சென்டினல்' தீவுவாசிகள் வெளியுலகத் தொடர்பு இல்லாம, யாராவது உள்ள வந்தா அம்பு விட்டு விரட்டுறவங்க. அப்படிப்பட்டவங்க எப்படித் தங்களோட தீவை விட்டு வெளிய வருவாங்க? அதிலும் இந்த ஒரு தீவுவாசி மட்டும் எப்படி எந்த ஒரு பயமும் இல்லாம, நவீன ஸ்ரீவிஜயபுரத்தின் (Srivijayapuram) ஹேடோ கடற்கரை வரைக்கும் வந்தான்? இதோட ரகசியம் என்ன அண்ணே?"
டீக்கடைக்காரர் அந்த ஓவியத்தின் மீதிருந்த சென்டினல் அம்பை மெதுவாகத் தொட்டார். அவரது முகத்தில் ஒரு விசித்திரமான தீர்க்கம் தெரிந்தது.
டீக்கடைக்காரர்: "தம்பி, வெளியுலக மனிதர்களுக்குத்தான் சென்டினல் தீவு ஒரு தடைசெய்யப்பட்ட பகுதி. ஆனா, அந்தத் தீவுவாசிகளுக்கு இந்த அந்தமான் கடலும், இதன் அலைகளும் அவங்க கைரேகை மாதிரி அத்தபடி. அவங்க நினைச்சா எந்தக் கடலையும் கடப்பாங்க.
ஆனால் அவங்க வம்சத்துல இதுவரைக்கும் யாருமே, எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்களோட தீவின் எல்லையைத் தாண்டி வெளியுலக மனிதர்கள் வாழும் இந்தத் தரை மண்ணில் கால் வச்சதே கிடையாது. ஆனா... இந்த ஒரு சென்டினல் பையன் மட்டும் விதிவிலக்கா மாறிட்டான். அவனுக்கு இந்த நவீன உலகியல் வாழ்வின் மீது ஒரு விசித்திரமான வசியம் உண்டாகிடுச்சு. குறிப்பா... வானத்துல சத்தத்தோட பறக்குற அந்த விமானங்களைப் பார்க்கும்போதெல்லாம், தானும் அந்தப் பறவைக்குள்ள உட்கார்ந்து மேகங்களுக்கு நடுவே பறக்கணும்னு ஆசைப்பட்டுட்டான்!"
ரியான் ஆச்சரியத்துடன், "ஒரு பழங்குடிப் பையனுக்கு விமானத்தில் பறக்க ஆசையா?" என்றான்.
டீக்கடைக்காரர்: "ஆமாம் தம்பி. ஆனா, அந்தச் சென்டினல் தீவின் மூத்த தலைவருக்கு இது துளியும் பிடிக்கல. 'வெளியுலகம் ஒரு நரகம், அங்கே போனா நம்ம இனம் அழிஞ்சுடும்'னு அவர் அவனைத் தீவை விட்டே துரத்தப் பார்த்தார். அந்த நேரத்துலதான் சிற்பிகா நடுவுல புகுந்தா. அவ அந்தத் தீவுத் தலைவர்கிட்ட ஒரு உறுதிமொழி கொடுத்திருக்கா..."
ரியான்: "என்ன உறுதி அண்ணே?"
டீக்கடைக்காரர்: "இந்த நவீன உலகத்துல எத்தனை ஏமாற்றுப் பேர்வழிகள் இருக்காங்க, எத்தனை கெட்டவர்கள் இருக்காங்க, இதையெல்லாம் விட அவங்க வாழும் அந்தத் தனிமைத் தீவே எவ்வளவோ மேலானதுங்கிற கசப்பான உண்மையை அந்தப் பையனுக்கு நானே புரிய வைக்கிறேன். இந்த உலகத்தோட சுயரூபத்தை அவன் கண்ணு முன்னாடி காட்டி, அவனோட ஆசையைத் தீர்த்து, மறுபடியும் அவனை நம்ம தீவுக்கே பத்திரமா கூட்டிட்டு வந்து உங்க முன்னாடி நிறுத்துறேன்னு சிற்பிகா சபதம் செஞ்சுதான் அவனை இங்க கூட்டிட்டு வந்திருக்கா!"
டீக்கடைக்காரர் பேச்சை நிறுத்திவிட்டு, ரியானின் முகத்தை மிக உற்றுப் பார்த்தார். சுற்றியிருந்த காற்றில் ஒரு மர்மமான நிசப்தம் நிலவியது.
டீக்கடைக்காரர்: "ஆனா தம்பி... எனக்கு என்னவோ தோணுது. அந்தப் பையனுக்கு இந்த உலக வாழ்வியல் மீது இருக்கிற ஆசை மட்டும் காரணமில்லை. அவன் ஸ்ரீ விஜயபுரம் வந்ததற்கு இது மட்டும் ஒரு காரணமாக இருக்கும் என எனக்கு தோன்றவில்லை .
ரியான்: (இதயம் படபடக்க, குரலில் லேசான நடுக்கத்துடன்) "அப்படி இன்னொரு ரகசியம் என்னவாக இருக்கும் அண்ணே? அவனுக்குள் மறைஞ்சிருக்குன்னு சொல்ற அந்தப் புதிரான உண்மை என்ன?"
டீக்கடைக்காரர் அந்த ஓவியத்தின் அருகே இருந்த தூணில் சாய்ந்து கொண்டு, தன் தாடியை மெல்ல வருடினார். அவரது கண்கள் ஏதோ ஒரு கசப்பான உண்மையை யோசிப்பது போல சுருங்கின.
டீக்கடைக்காரர்: "தம்பி... என்னால் இதை ஒரு ஊகமாகத்தான் சொல்ல முடியும். ஆனா, மனிதனோட அடிமனசு இருக்குதே... அது உலகத்துல இருக்குற எல்லா ரகசியங்களை விடவும் ரொம்ப ஆபத்தானது. அவனுக்கு இந்த நவீன உலகத்தின் மீதும், அந்த விமானத்தின் மீதும் மட்டும் ஆசை இல்லை தம்பி... அவனோட ஆசைக்கு பின்னாடி ஒரு ஆதி மிருகம் ஒளிஞ்சிருக்கு!"
ரியான் புரியாமல் பார்க்க, டீக்கடைக்காரர் மேலும் விவரித்தார்.
டீக்கடைக்காரர்: "நான் இந்தக் கடற்கரையில எத்தனையோ மனுஷங்களை பார்த்தவன். அந்தச் சென்டினல் பையன் இங்க இருக்குற பெண்களைப் பார்க்கும் போதெல்லாம்... அவனோட பார்வையே மிகக் காமப் பார்வையா இருக்கு! அவனோட தீவுக் கூட்டத்துல, தலைமுறை தலைமுறையா கறுத்த பெண்களை மட்டுமே பார்த்து, அவங்களுக்குள்ளேயே வாழ்ந்து வளர்ந்தவன் அவன்.அப்படிப்பட்டவனுக்கு, இந்த நவீன உலகத்துல இருக்குற பெண்களோட நிறத்தையும், அவங்களோட உடலமைப்பையும் பார்த்தவுடனே ஒருவித மயக்கம் வந்திருக்கலாம் தம்பி!"
டீக்கடைக்காரரின் வார்த்தைகள் ரியானுக்குள் ஒரு பெரும் தீயை மூட்டியது. கடற்கரையில் சிற்பிகாவுக்கு மிக அருகில் அவன் நின்றிருந்த தோரணையும், அவளது கையைப் பற்றிக் கூட்டிச் சென்ற விதமும் இப்போது ரியானின் நினைவுக்கு வந்து அவனைக் குடைந்தது.
டீக்கடைக்காரர்: "நிறங்களின் வசியம் ஒரு ஆதிமனிதனை எந்த எல்லைக்கும் கொண்டு போகும். சிற்பிகா அவனுக்குப் புரிய வைக்கணும்னு நினைக்குறா... ஆனா, அவனோட அடிமனசுல இருக்குற அந்தக் காம வெறி, சிற்பிகாவோட அந்தப் பேரழகையும், அவளோட தந்த நிற மேனியையும் பார்த்து வசியப்பட்டிருந்தா... அது சிற்பிகாவுக்கே ஆபத்தா முடியலாம். அவளைக் காப்பாற்றப் போறேன்னு சொல்ற அந்தப் பையனே, அவளுக்கு ஒரு ஆபத்தா மாறினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.
டீக்கடைக்காரரின் அந்த வார்த்தைகள் ரியானின் புத்தியை முற்றிலுமாக உலுக்கியிருந்த வேளையில், அவனுக்குள் அடுத்த பிரம்மாண்டமான கேள்வி எழுந்தது. இந்தத் தீவில் ஒரு சாதாரண டீக்கடை நடத்தும் மனிதருக்கு, ஆயிரம் வருடச் சோழர் வரலாறும், அந்தச் சென்டினல் பையனின் அடிமனத்துக் காமப் புதிரும் எப்படி இவ்வளவு துல்லியமாகத் தெரிந்திருக்கிறது?
அவன் தன் குழப்பம் தாளாமல் அவரிடமே நேரடியாகக் கேட்டுவிட்டான்.
அவன் தன் குழப்பம் தாளாமல் அவரிடமே நேரடியாகக் கேட்டுவிட்டான்.
ரியான்: "அண்ணே... உங்களுக்கு எப்படி இவ்வளவு ரகசியங்கள் தெரியும்? இதை ஏன் இவ்வளவு விபரமா என்கிட்ட சொல்றீங்க? நீங்க உண்மையிலேயே யாரு அண்ணே?"
டீக்கடைக்காரர் அதற்குப் பதில் சொல்லாமல் மெல்லச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் விவரிக்க முடியாத ஒரு பழமையும் பேரமைதியும் இருந்தது. அவர் அந்த அருள்மொழி நாச்சியாரின் ஓவியத்தின் கீழ் இருந்த ஒரு ரகசியக் கருங்கல் பெட்டியை நோக்கி நகர்ந்தார். அதன் மூடியைத் திறந்து, அதற்குள் பட்டுத் துணியால் சுற்றப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு பழங்காலத்து ஓலைச்சுவடியை வெளியில் எடுத்தார்.
அதை ரியானின் கைகளில் கொடுத்தார். ரியான் அதை வாங்கிப் பார்த்தான். அதில் செதுக்கப்பட்டிருந்த அந்த ஆதி தமிழ் எழுத்துக்களும், வட்டெழுத்துக்களும் நவீன காலத்து ஐடி உலகத்தில் வாழும் அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அது ஏதோ ஒரு ரகசியக் குறியீடு போல அவனுக்குத் தோன்றியது.
அது நவீனக் காகிதங்களைப் போன்றது அல்ல. பனை ஓலைகளை முறைப்படி அவித்து, பதப்படுத்திச் செய்யப்பட்ட அந்தச் சுவடி, பத்து நூற்றாண்டுகளின் பழமையைத் தன் மேல் சுமந்து கொண்டு, ஒருவித முதிர்ந்த பொன்னிறமும் பழுப்பு நிறமும் கலந்த மாநிறத்தில் காட்சியளித்தது.
ரியான் அதை நெருங்கும்போது, அதன் ஓலைகளில் இருந்து ஒரு விசித்திரமான வாசனை வீசியது. பல நூற்றாண்டுகளாக அதைச் பூச்சிகள் அரிக்காமல் இருப்பதற்காகப் பூசப்பட்டிருந்த மூலிகைத் தைலங்கள், வசம்பு மற்றும் காய்ந்த பனை ஓலையின் கசப்பு கலந்த ஒரு பழங்காலத்து மர்ம வாசனை அந்த மண்டபத்தின் காற்றில் பரவியது
அந்த ஓலைகளின் இருபுறமும் கூர்மையான எழுத்தாணியால் செதுக்கப்பட்டிருந்த ஆதி தமிழின் வட்டெழுத்துக்கள், வெறும் எழுத்துக்களாகத் தெரியவில்லை. அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு ரகசியக் குறியீட்டைப் போல வளைந்து நெளிந்து, காலத்தின் சுவடுகளாக ஆழப் பதிந்திருந்தன. எழுத்தாணி பாய்ந்த அந்த வரிகளில், காலத்தின் சாட்சியாகக் கறுத்த மை நிரப்பப்பட்டிருந்தது.
அந்த நீண்ட ஓலைகளின் இடது மற்றும் வலது ஓரங்களில், நூலைக்கோர்ப்பதற்காகச் துல்லியமாக இடப்பட்ட இரு துளைகள் இருந்தன. அந்தத் துளைகளின் வழியே ஒரு கறுத்த, பழமையான பட்டு நூல் கோர்க்கப்பட்டு, சுவடி கலைந்துவிடாமல் இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தது. அந்த நூலின் முனையில் சோழப் பேரரசின் முத்திரையான 'புலிச் சின்னம்' பொறிக்கப்பட்ட ஒரு சிறிய சுடுமண் வில்லை (Terracotta Seal) தொங்கிக் கொண்டிருந்தது.
![[Image: 1779076652158.png]](https://i.ibb.co/CK7FSxfZ/1779076652158.png)
அவன் தன் கைகளில் இருந்த அந்தப் பழங்கால ஓலைச்சுவடியையே வெறித்துப் பார்த்தான். ஜாவா (Java), பைத்தான் (Python) என உலகமே வியக்கும் நவீன கணினி மொழிகளின் 'கோடிங்' (Coding) ரகசியங்களை நொடியில் உடைக்கும் அவனது புத்தி, தன் தாய்மொழியின் ஆதி வடிவத்திற்கு முன்னால் முற்றிலும் செயலிழந்து நின்றது. அந்தச் சுருள்களில் செதுக்கப்பட்டிருந்த வட்டெழுத்துக்கள் அவனுக்கு ஏதோ ஒரு புரியாத ரகசியக் குறியீடு (Cipher Text) போலக் காட்சியளித்தன.
அவனது நெற்றிப்பொட்டில் வியர்வை அரும்பியது. காதுகளில் ரத்தம் சுடேறிப் பாய்வது போன்ற ஒரு விசித்திரமான சூட்டை உணர்ந்தான். "என்ன மொழி இது? தமிழ் என்றுதான் சொல்கிறார், ஆனால் ஒரு வார்த்தை கூட என் புத்திக்கு எட்டவில்லையே!" என்ற ஏமாற்றமும், அதன் பின்னால் இருந்த மர்மமும் அவனைப் பயமுறுத்தியது.
டீக்கடைக்காரர்: "உனக்கு இது புரியாது தம்பி... இது வெறும் எழுத்துக்கள் இல்லை, காலத்தோட கட்டளை!" என்று கூறி, அந்த ஓலைச்சுவடியை வாங்கி, அதில் அருள்மொழி நாச்சியாரால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைக்கப்பட்டிருந்த வரிகளை அவனுக்கு படிக்கத் தொடங்கினார்.
"ஈரைந்தினோடு ஐந்தாம் முறைவந்திடு மென்குலத் தோகைமேல்
பேரன்பு கொண்டுயிர்த் தாய்நிலத் தேயிருந்து மன்மதன் வந்திடுவான்!
காரிரும் பௌவக் கடல் கடந்துவந்த என் காரிகை யவளோடு
சேரரங்கத் தாய்நாடு மீள்வதே காலத்தின் கட்டாய மாமன்றோ!
தேடிவரு மவ்வீரன் கண்ணெதிரே தோன்றிடு வோய்நீயிவ் வோலைதந்து
வாடிநின்ற வெங்குல விளக்கின் மாமர்மச் சுவடிதனை உரைப்பாயே!"
ரியான் அவர் படித்த கவிதை அர்த்தம் புரியாமல், அந்த ஓலைச்சுவடியையும் அருள்மொழி நாச்சியாரின் ஓவியத்தையும் மாறி மாறிப் பார்த்துத் திகைத்து நின்ற அந்த நொடியில், அவனது தோளில் டீக்கடைக்காரரின் கரடுமுரடான கை அழுத்தமாகப் பதிந்தது.
அவனது தவிப்பைக் கண்டு டீக்கடைக்காரரின் உதடுகளில் ஒரு மெல்லிய, ஆழமான புன்னகை அரும்பியது.
டீக்கடைக்காரர்: "பதறாதே தம்பி... கம்ப்யூட்டர்ல இருக்குற ஆயிரம் கோட்டிங்குகளை (Coding) உன் மூளை நொடியில படிச்சிடும், ஆனா உன் சொந்த மண்ணோட ஆதி ரத்தக் குறிப்பை உன்னால படிக்க முடியல, இல்லையா? உனக்கு இது புரியாது தம்பி. ஆனா, இந்தச் சுவடியில அருள்மொழி நாச்சியார் எழுதி வச்சிருக்கிற ஒவ்வொரு வார்த்தையும் உன்னைப்பத்தித்தான் பேசுது!"
ரியான் தன் வறண்ட தொண்டையை நனைத்துக்கொண்டு, "என்னைப்பத்தியா? அந்த ஆயிரம் வருஷத்துத் தமிழ்ல என் பேரை எழுதியிருக்கா அண்ணே?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.
டீக்கடைக்காரர்: "உன் பேரை எழுதல தம்பி, உன்னோட விதியை எழுதியிருக்கா! இதோ, இந்த முதல் வரியைக் கவனி..." என்று அந்தச் சுவடியின் முதல் வரியைத் தன் விரலால் தொட்டுக் காட்டினார்.
டீக்கடைக்காரர்: "இந்தச் சுவடியில அருள்மொழி நாச்சியார் என்ன சொல்லியிருக்காங்கன்னா...நான் இந்த அந்தமான் கடலைக் கடந்து வந்து, இந்தத் தீவுகள்ல அடைக்கலமாகி வாழ்றேன். எனக்கு அப்புறம், என் வம்சாவளியில வரப்போற இருபத்தைந்தாவது தலைமுறைப் பெண் (அதாவது சிற்பிகா) இந்த மண்ணுல வாழும்போது... அவமேல தீவிரமான மோகமும் காதலும் கொண்டு, என்னோட சொந்தத் தாய் தேசத்துல (தமிழகத்துல) இருந்து ஒரு வீரன் அவளைத் தேடி வருவான்!னு எழுதியிருக்காங்க தம்பி."
ரியானின் இதயம் ஒரு கணம் நின்று நிதானித்தது. அவன் டீக்கடைக்காரரையே வெறித்துப் பார்த்தான்.
டீக்கடைக்காரர்: "அடுத்த வரியைக் கேள்... அப்படி அவளைத் தேடி வர்ற அந்த மனிதன் முன்னாடி, இந்த ஓலைச்சுவடியைக் காட்டி, எங்கள் குலத்தோட அத்தனை மர்மங்களையும் அவன்கிட்ட நீங்க ஒப்படைக்கணும். அதுமட்டுமில்ல... அன்று நான் என் தாய்நாட்டை விட்டு இந்தக் கடல் கடந்து வந்தேன். ஆனா, என் வம்சத்து இருபத்தைந்தாவது மகளான அவளோ, தன்னைத் தேடி வரும் அந்த வீரனோட கைகளைப் பிடிச்சு, மீண்டும் என் சொந்தச் சோழ தேசத்துக்கே திரும்பிப் போகணும். இது காலத்தோட கட்டாயம்!'னு எழுதி வச்சிருக்காங்க."
மாமன்னன் ராஜேந்திர சோழனின் காலம் என்றால், அது பதிினொன்றாம் நூற்றாண்டு. அதாவது, சரியாக பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு (ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்) அருள்மொழி நாச்சியார் தன் சொந்தக் கரங்களால் செதுக்கி வைத்த அந்த ஓலைச்சுவடி, இன்று இருபத்தியோராம் நூற்றாண்டின் நவீன மனிதனான ரியானின் கர்வத்தை மொத்தமாகச் சுட்டுப் பொசுக்கிச் சாம்பலாக்கியிருந்தது!
கணினியின் விசைப்பலகையில் (Keyboard) உலகத்தையே ஆட்டிப்படைக்கும் குறியீடுகளை (Coding) உருவாக்கும் அறிவு தனக்கு இருக்கிறது என்ற அகந்தை, வங்கிக் கணக்கில் வந்து குவியும் ஆடம்பர வசதிகள் எனத் தன்னுள் இருந்த அத்தனை மேட்டிமைத்தனமும் அந்தப் பழைய சோழர் மண்டபத்தின் கருங்கல் தரையில் மண்டியிட்டு நின்றன. எவ்வளவு வசதி இருந்தும், என்னதான் உலகமகா அறிவு இருந்தும், காலமும் விதியும் நடத்தும் ஒரு பிரம்மாண்ட நாடகத்தில் நாம் அனைவரும் வெறும் அசைக்கப்படும் பகடைக்காய்கள், வெறும் கருவிகள் மட்டுமே என்பதை ரியான் தன் அடிமனதிலிருந்து உணர்ந்து கொண்டான்.
ஆனால், இந்த வரலாற்றுப் பேழையின் ரகசியங்கள் அவிழ்ந்து கொண்டிருந்த அந்த அமானுஷ்ய நள்ளிரவில், விதியின் நாடகம் அவர்கள் இருவரைத் தாண்டி வேறு ஒரு திசையிலும் தன் வலையைப் பின்னியிருந்தது!
அவர்கள் இருவரும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக்கொண்டிருந்த அந்தச் சோழர் மண்டபத்திலிருந்து கொஞ்ச தூரத்தில், அடர்ந்த காட்டுப் பகுதியின் இருளுக்குள் மறைந்திருந்த இன்னொரு ஜீவன் அவர்கள் பேசுவதை ஒவ்வொன்றாக ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.
மண்டபத்தின் குளிர்காற்றிலும், அந்த ஜீவனின் சிவந்த உதடுகளில் ஒரு வஞ்சகமான புன்னகை அரும்பியது.
டீக்கடைக்காரர் உடைத்த ஒவ்வொரு ரகசியமும், அருள்மொழி நாச்சியாரின் கவிதை வரிகளும், சிற்பிகாவின் இருபத்தைந்தாவது வம்சாவளி உண்மையும் அந்த ஜீவனுக்கு உடனுக்குடன் துல்லியமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. அதற்குக் காரணம் ரியான் அல்ல; அவனது சட்டைப் பையில் இருந்த ஒரு சாதாரணப் பேனா!
ஆம்... ரியானின் சட்டைப் பைக்குள் சொருகப்பட்டிருந்த அந்த நவீனப் பேனாவிற்குள் ஒரு நுணுக்கமான, அதிநவீன டிரான்ஸ்மிட்டர் (Transmitter) ஒளித்து வைக்கப்பட்டிருந்தது.
ரியானுக்கே தெரியாமல் யாரோ அவனது பையில் திணித்த அந்தப் பேனா, அந்த மண்டபத்தில் ஒலித்த ஒவ்வொரு குரலையும், காற்றின் அசைவையும் சிக்னல்களாக (Signals) மாற்றி, காற்றில் மிதக்கவிட்டு அந்த மூன்றாவது ஜீவனுக்குச் சேர்த்துக் கொண்டே இருந்தது.
காட்டுக்குள் நின்றிருந்த அந்த ஜீவன், தன் காதில் இருந்த மைக்ரோ-இயர்போனை (Micro-earphone) மெல்லத் தொட்டுச் சரிசெய்துகொண்டது.
டிரான்ஸ்மிட்டரில் இருந்து வந்த டீக்கடைக்காரரின் கடைசி வார்த்தைகளைக் கேட்டு முடித்ததும், அந்த ஜீவன் உள்ளுக்குள் இதை விட மகிழ்ச்சியான சேதி வேற எதுவும் இல்ல என சொல்லி கொண்டது.
ரியான்: (திகைப்புடன்) "அருள்மொழி நாச்சியாரா? சோழ நாட்டு இளவரசியா? அண்ணே... இவளுடைய முகம்... இவளுடைய அந்த நீண்ட கழுத்து... இதெல்லாம் அப்படியே..."
டீக்கடைக்காரர்: "ஆமாம் தம்பி! நீ நினைக்கிறது நிஜம் தான். நீ கடற்கரையில் பார்த்த அந்தச் சிற்பிகா... இந்த அருள்மொழி நாச்சியாரின் நேரடி வம்சாவளி! ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி சோழப் பேரரசு இந்த அந்தமான் கடலில் மறைத்து வைத்த ரகசியப் பொக்கிஷத்தின் நேரடி வாரிசு அவள்தான். அந்தச் சென்டினல் தீவுவாசிகள் காத்து நிற்குறது இந்த அருள்மொழி நாச்சியாரின் ரத்தத்துக்காக மட்டும்தான்!"
டீக்கடைக்காரர்: "சரித்திரம் எப்போதுமே வீரத்தைப் பற்றி மட்டும்தான் தம்பி பேசும், ஆனா அதுக்கு பின்னாடி மறைஞ்சிருக்குற கண்ணீரையும் காதலையும் பேச மறந்துடும். மாவீரன் இளங்கோவின் கருத்தைக் கவர்ந்தவள் இந்த அருள்மொழி நாச்சியார்னு சொன்னேனே... அந்த இளங்கோ, சோழ தேசத்துக்காக ஒரு பெரும் போரில் வீர மரணமடைஞ்சான்... இல்லை, சதிகாரர்களால் கொல்லப்பட்டான்!"
ரியான் அதிர்ச்சியோடு கேட்க, டீக்கடைக்காரர் தொடர்ந்தார்.
டீக்கடைக்காரர்: "தன் காதலன் இளங்கோ கொல்லப்பட்ட பிறகு, சோழ தேசத்தின் அரண்மனைச் சுகபோகங்களும், அதிகாரப் போட்டிகளும் அருள்மொழிக்கு ஒரு நரகமாகத் தெரிந்தது. அவளுக்குத் தேவைப்பட்டதெல்லாம் ஆள் அரவமற்ற, தன் காதலனின் நினைவுகளோடு மட்டுமே வாழக்கூடிய ஒரு தனிமையான இடம். அதற்காகத்தான் தன் தந்தையின் கடற்படைக் கப்பல் ஒன்றில் ஏறி, இந்த எல்லையற்ற கடல் கடந்து, யாருமே இல்லாத இந்த அந்தமான் தீவுகளுக்கு அவள் வந்தாள்..."
டீக்கடைக்காரர் அந்த ஓவியத்தின் கீழ் பகுதிக்குத் தன் கைகளைக் கொண்டு சென்றார். அங்கே அருள்மொழி நாச்சியார் தன் ஒரு கையைத் தன் வயிற்றின் மீது வைத்திருப்பது போல அந்த ஓவியம் நுணுக்கமாக வரையப்பட்டிருந்தது.
டீக்கடைக்காரர்: "அவள் வெறும் கண்ணீரை மட்டும் சுமந்துகொண்டு இந்தத் தீவுக்கு வரவில்லை தம்பி... அவள் சோழ தேசத்தை விட்டுப் புறப்பட்ட பொழுது, அவளது காதலன் இளங்கோவின் உன்னதமான காதல் நினைவு... அவளது வயிற்றில் ஒரு கருவாக வளர்ந்து கொண்டிருந்தது! சோழ வம்சத்தின், மாவீரன் இளங்கோவின் அந்த நேரடி வாரிசைத் தன் வயிற்றில் சுமந்துதான் அவள் இந்த மண்ணில் கால் வைத்தாள்."
ரியானின் கண்கள் பனித்தன. ஒரு இளவரசி, தன் காதலனை இழந்து, வயிற்றில் ஒரு குழந்தையோடு, இந்த அறியப்படாத தீவுக்குள் அடைக்கலம் புகுந்த அந்தத் துயரத்தை அவனால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.
டீக்கடைக்காரர்: "ஆள் அரவமற்ற இந்தத் தீவுகளில், அவளுக்கு ஆதரவாக நின்றது அந்தச் சென்டினல் தீவுவாசிகள் மட்டும்தான். அருள்மொழி நாச்சியாரின் அந்தத் துயரத்தையும், அவளது கர்பத்தையும் பார்த்த அந்த ஆதிவாசிகள், அவளைத் தங்கள் குலத் தெய்வமாக ஏற்றுக்கொண்டார்கள். அவளையும், அவளது வயிற்றில் வளர்ந்த குழந்தையையும் தங்களின் உயிரைக் கொடுத்துப் பாதுகாப்பதாகச் சூளுரைத்தார்கள். அன்று முதல் இன்று வரை, அந்தச் சென்டினல் பழங்குடியினர் சோழர்களின் இந்த ரத்த வாரிசை மட்டுமே தங்களின் தலைவர்களாக ஏற்றுக்கொண்டு வருகிறார்கள்!"
சிற்பிகாவின் பின்னணியில் இருக்கும் அந்த ஆயிரம் ஆண்டுகாலச் சோழப் பேரரசின் ரத்த ரகசியத்தைக் கேட்ட மாத்திரத்தில், ரியானின் அகந்தையும் தலைக்கனமும் சுக்குநூறாக உடைந்து சிதறியது. ஒரு சாதாரண ஐடி அனலிஸ்ட் என்று தான் நினைத்த பெண், ஒரு கடற்படைப் பேரரசின் வாழும் பொக்கிஷம் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. இத்தனை காலம் தன்னுள் இருந்த 'நான்' என்ற மேட்டிமைத்தனம் முற்றிலும் ஒழிந்து, அந்தப் பழைய சோழர் மண்டபத்தின் கருங்கல் தரையில் ஒரு சாதாரண மனிதனாக அவன் நின்றிருந்தான்.
இருந்தாலும், ஒரு துப்பறியும் ஆவலாக அவனது மூளையின் ஒரு மூலையில் இன்னும் ஒரே ஒரு சந்தேகம் மட்டும் மிச்சமிருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் டீக்கடைக்காரரை நோக்கினான்.
ரியான்: (குரலில் இருந்த மிடுக்கு முற்றிலும் குறைந்து, பணிவோடு) "அண்ணே... சிற்பிகாவோட உண்மையைச் சொன்னீங்க, என் தலைக்கனம் எல்லாம் அடங்கிடுச்சு. ஆனா, எனக்கு இன்னும் ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை அண்ணே... இந்த உலகமே அறிஞ்ச வரைக்கும், 'சென்டினல்' தீவுவாசிகள் வெளியுலகத் தொடர்பு இல்லாம, யாராவது உள்ள வந்தா அம்பு விட்டு விரட்டுறவங்க. அப்படிப்பட்டவங்க எப்படித் தங்களோட தீவை விட்டு வெளிய வருவாங்க? அதிலும் இந்த ஒரு தீவுவாசி மட்டும் எப்படி எந்த ஒரு பயமும் இல்லாம, நவீன ஸ்ரீவிஜயபுரத்தின் (Srivijayapuram) ஹேடோ கடற்கரை வரைக்கும் வந்தான்? இதோட ரகசியம் என்ன அண்ணே?"
டீக்கடைக்காரர் அந்த ஓவியத்தின் மீதிருந்த சென்டினல் அம்பை மெதுவாகத் தொட்டார். அவரது முகத்தில் ஒரு விசித்திரமான தீர்க்கம் தெரிந்தது.
டீக்கடைக்காரர்: "தம்பி, வெளியுலக மனிதர்களுக்குத்தான் சென்டினல் தீவு ஒரு தடைசெய்யப்பட்ட பகுதி. ஆனா, அந்தத் தீவுவாசிகளுக்கு இந்த அந்தமான் கடலும், இதன் அலைகளும் அவங்க கைரேகை மாதிரி அத்தபடி. அவங்க நினைச்சா எந்தக் கடலையும் கடப்பாங்க.
ஆனால் அவங்க வம்சத்துல இதுவரைக்கும் யாருமே, எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்களோட தீவின் எல்லையைத் தாண்டி வெளியுலக மனிதர்கள் வாழும் இந்தத் தரை மண்ணில் கால் வச்சதே கிடையாது. ஆனா... இந்த ஒரு சென்டினல் பையன் மட்டும் விதிவிலக்கா மாறிட்டான். அவனுக்கு இந்த நவீன உலகியல் வாழ்வின் மீது ஒரு விசித்திரமான வசியம் உண்டாகிடுச்சு. குறிப்பா... வானத்துல சத்தத்தோட பறக்குற அந்த விமானங்களைப் பார்க்கும்போதெல்லாம், தானும் அந்தப் பறவைக்குள்ள உட்கார்ந்து மேகங்களுக்கு நடுவே பறக்கணும்னு ஆசைப்பட்டுட்டான்!"
ரியான் ஆச்சரியத்துடன், "ஒரு பழங்குடிப் பையனுக்கு விமானத்தில் பறக்க ஆசையா?" என்றான்.
டீக்கடைக்காரர்: "ஆமாம் தம்பி. ஆனா, அந்தச் சென்டினல் தீவின் மூத்த தலைவருக்கு இது துளியும் பிடிக்கல. 'வெளியுலகம் ஒரு நரகம், அங்கே போனா நம்ம இனம் அழிஞ்சுடும்'னு அவர் அவனைத் தீவை விட்டே துரத்தப் பார்த்தார். அந்த நேரத்துலதான் சிற்பிகா நடுவுல புகுந்தா. அவ அந்தத் தீவுத் தலைவர்கிட்ட ஒரு உறுதிமொழி கொடுத்திருக்கா..."
ரியான்: "என்ன உறுதி அண்ணே?"
டீக்கடைக்காரர்: "இந்த நவீன உலகத்துல எத்தனை ஏமாற்றுப் பேர்வழிகள் இருக்காங்க, எத்தனை கெட்டவர்கள் இருக்காங்க, இதையெல்லாம் விட அவங்க வாழும் அந்தத் தனிமைத் தீவே எவ்வளவோ மேலானதுங்கிற கசப்பான உண்மையை அந்தப் பையனுக்கு நானே புரிய வைக்கிறேன். இந்த உலகத்தோட சுயரூபத்தை அவன் கண்ணு முன்னாடி காட்டி, அவனோட ஆசையைத் தீர்த்து, மறுபடியும் அவனை நம்ம தீவுக்கே பத்திரமா கூட்டிட்டு வந்து உங்க முன்னாடி நிறுத்துறேன்னு சிற்பிகா சபதம் செஞ்சுதான் அவனை இங்க கூட்டிட்டு வந்திருக்கா!"
டீக்கடைக்காரர் பேச்சை நிறுத்திவிட்டு, ரியானின் முகத்தை மிக உற்றுப் பார்த்தார். சுற்றியிருந்த காற்றில் ஒரு மர்மமான நிசப்தம் நிலவியது.
டீக்கடைக்காரர்: "ஆனா தம்பி... எனக்கு என்னவோ தோணுது. அந்தப் பையனுக்கு இந்த உலக வாழ்வியல் மீது இருக்கிற ஆசை மட்டும் காரணமில்லை. அவன் ஸ்ரீ விஜயபுரம் வந்ததற்கு இது மட்டும் ஒரு காரணமாக இருக்கும் என எனக்கு தோன்றவில்லை .
ரியான்: (இதயம் படபடக்க, குரலில் லேசான நடுக்கத்துடன்) "அப்படி இன்னொரு ரகசியம் என்னவாக இருக்கும் அண்ணே? அவனுக்குள் மறைஞ்சிருக்குன்னு சொல்ற அந்தப் புதிரான உண்மை என்ன?"
டீக்கடைக்காரர் அந்த ஓவியத்தின் அருகே இருந்த தூணில் சாய்ந்து கொண்டு, தன் தாடியை மெல்ல வருடினார். அவரது கண்கள் ஏதோ ஒரு கசப்பான உண்மையை யோசிப்பது போல சுருங்கின.
டீக்கடைக்காரர்: "தம்பி... என்னால் இதை ஒரு ஊகமாகத்தான் சொல்ல முடியும். ஆனா, மனிதனோட அடிமனசு இருக்குதே... அது உலகத்துல இருக்குற எல்லா ரகசியங்களை விடவும் ரொம்ப ஆபத்தானது. அவனுக்கு இந்த நவீன உலகத்தின் மீதும், அந்த விமானத்தின் மீதும் மட்டும் ஆசை இல்லை தம்பி... அவனோட ஆசைக்கு பின்னாடி ஒரு ஆதி மிருகம் ஒளிஞ்சிருக்கு!"
ரியான் புரியாமல் பார்க்க, டீக்கடைக்காரர் மேலும் விவரித்தார்.
டீக்கடைக்காரர்: "நான் இந்தக் கடற்கரையில எத்தனையோ மனுஷங்களை பார்த்தவன். அந்தச் சென்டினல் பையன் இங்க இருக்குற பெண்களைப் பார்க்கும் போதெல்லாம்... அவனோட பார்வையே மிகக் காமப் பார்வையா இருக்கு! அவனோட தீவுக் கூட்டத்துல, தலைமுறை தலைமுறையா கறுத்த பெண்களை மட்டுமே பார்த்து, அவங்களுக்குள்ளேயே வாழ்ந்து வளர்ந்தவன் அவன்.அப்படிப்பட்டவனுக்கு, இந்த நவீன உலகத்துல இருக்குற பெண்களோட நிறத்தையும், அவங்களோட உடலமைப்பையும் பார்த்தவுடனே ஒருவித மயக்கம் வந்திருக்கலாம் தம்பி!"
டீக்கடைக்காரரின் வார்த்தைகள் ரியானுக்குள் ஒரு பெரும் தீயை மூட்டியது. கடற்கரையில் சிற்பிகாவுக்கு மிக அருகில் அவன் நின்றிருந்த தோரணையும், அவளது கையைப் பற்றிக் கூட்டிச் சென்ற விதமும் இப்போது ரியானின் நினைவுக்கு வந்து அவனைக் குடைந்தது.
டீக்கடைக்காரர்: "நிறங்களின் வசியம் ஒரு ஆதிமனிதனை எந்த எல்லைக்கும் கொண்டு போகும். சிற்பிகா அவனுக்குப் புரிய வைக்கணும்னு நினைக்குறா... ஆனா, அவனோட அடிமனசுல இருக்குற அந்தக் காம வெறி, சிற்பிகாவோட அந்தப் பேரழகையும், அவளோட தந்த நிற மேனியையும் பார்த்து வசியப்பட்டிருந்தா... அது சிற்பிகாவுக்கே ஆபத்தா முடியலாம். அவளைக் காப்பாற்றப் போறேன்னு சொல்ற அந்தப் பையனே, அவளுக்கு ஒரு ஆபத்தா மாறினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.
டீக்கடைக்காரரின் அந்த வார்த்தைகள் ரியானின் புத்தியை முற்றிலுமாக உலுக்கியிருந்த வேளையில், அவனுக்குள் அடுத்த பிரம்மாண்டமான கேள்வி எழுந்தது. இந்தத் தீவில் ஒரு சாதாரண டீக்கடை நடத்தும் மனிதருக்கு, ஆயிரம் வருடச் சோழர் வரலாறும், அந்தச் சென்டினல் பையனின் அடிமனத்துக் காமப் புதிரும் எப்படி இவ்வளவு துல்லியமாகத் தெரிந்திருக்கிறது?
அவன் தன் குழப்பம் தாளாமல் அவரிடமே நேரடியாகக் கேட்டுவிட்டான்.
அவன் தன் குழப்பம் தாளாமல் அவரிடமே நேரடியாகக் கேட்டுவிட்டான்.
ரியான்: "அண்ணே... உங்களுக்கு எப்படி இவ்வளவு ரகசியங்கள் தெரியும்? இதை ஏன் இவ்வளவு விபரமா என்கிட்ட சொல்றீங்க? நீங்க உண்மையிலேயே யாரு அண்ணே?"
டீக்கடைக்காரர் அதற்குப் பதில் சொல்லாமல் மெல்லச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் விவரிக்க முடியாத ஒரு பழமையும் பேரமைதியும் இருந்தது. அவர் அந்த அருள்மொழி நாச்சியாரின் ஓவியத்தின் கீழ் இருந்த ஒரு ரகசியக் கருங்கல் பெட்டியை நோக்கி நகர்ந்தார். அதன் மூடியைத் திறந்து, அதற்குள் பட்டுத் துணியால் சுற்றப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு பழங்காலத்து ஓலைச்சுவடியை வெளியில் எடுத்தார்.
அதை ரியானின் கைகளில் கொடுத்தார். ரியான் அதை வாங்கிப் பார்த்தான். அதில் செதுக்கப்பட்டிருந்த அந்த ஆதி தமிழ் எழுத்துக்களும், வட்டெழுத்துக்களும் நவீன காலத்து ஐடி உலகத்தில் வாழும் அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அது ஏதோ ஒரு ரகசியக் குறியீடு போல அவனுக்குத் தோன்றியது.
அது நவீனக் காகிதங்களைப் போன்றது அல்ல. பனை ஓலைகளை முறைப்படி அவித்து, பதப்படுத்திச் செய்யப்பட்ட அந்தச் சுவடி, பத்து நூற்றாண்டுகளின் பழமையைத் தன் மேல் சுமந்து கொண்டு, ஒருவித முதிர்ந்த பொன்னிறமும் பழுப்பு நிறமும் கலந்த மாநிறத்தில் காட்சியளித்தது.
ரியான் அதை நெருங்கும்போது, அதன் ஓலைகளில் இருந்து ஒரு விசித்திரமான வாசனை வீசியது. பல நூற்றாண்டுகளாக அதைச் பூச்சிகள் அரிக்காமல் இருப்பதற்காகப் பூசப்பட்டிருந்த மூலிகைத் தைலங்கள், வசம்பு மற்றும் காய்ந்த பனை ஓலையின் கசப்பு கலந்த ஒரு பழங்காலத்து மர்ம வாசனை அந்த மண்டபத்தின் காற்றில் பரவியது
அந்த ஓலைகளின் இருபுறமும் கூர்மையான எழுத்தாணியால் செதுக்கப்பட்டிருந்த ஆதி தமிழின் வட்டெழுத்துக்கள், வெறும் எழுத்துக்களாகத் தெரியவில்லை. அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு ரகசியக் குறியீட்டைப் போல வளைந்து நெளிந்து, காலத்தின் சுவடுகளாக ஆழப் பதிந்திருந்தன. எழுத்தாணி பாய்ந்த அந்த வரிகளில், காலத்தின் சாட்சியாகக் கறுத்த மை நிரப்பப்பட்டிருந்தது.
அந்த நீண்ட ஓலைகளின் இடது மற்றும் வலது ஓரங்களில், நூலைக்கோர்ப்பதற்காகச் துல்லியமாக இடப்பட்ட இரு துளைகள் இருந்தன. அந்தத் துளைகளின் வழியே ஒரு கறுத்த, பழமையான பட்டு நூல் கோர்க்கப்பட்டு, சுவடி கலைந்துவிடாமல் இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தது. அந்த நூலின் முனையில் சோழப் பேரரசின் முத்திரையான 'புலிச் சின்னம்' பொறிக்கப்பட்ட ஒரு சிறிய சுடுமண் வில்லை (Terracotta Seal) தொங்கிக் கொண்டிருந்தது.
![[Image: 1779076652158.png]](https://i.ibb.co/CK7FSxfZ/1779076652158.png)
அவன் தன் கைகளில் இருந்த அந்தப் பழங்கால ஓலைச்சுவடியையே வெறித்துப் பார்த்தான். ஜாவா (Java), பைத்தான் (Python) என உலகமே வியக்கும் நவீன கணினி மொழிகளின் 'கோடிங்' (Coding) ரகசியங்களை நொடியில் உடைக்கும் அவனது புத்தி, தன் தாய்மொழியின் ஆதி வடிவத்திற்கு முன்னால் முற்றிலும் செயலிழந்து நின்றது. அந்தச் சுருள்களில் செதுக்கப்பட்டிருந்த வட்டெழுத்துக்கள் அவனுக்கு ஏதோ ஒரு புரியாத ரகசியக் குறியீடு (Cipher Text) போலக் காட்சியளித்தன.
அவனது நெற்றிப்பொட்டில் வியர்வை அரும்பியது. காதுகளில் ரத்தம் சுடேறிப் பாய்வது போன்ற ஒரு விசித்திரமான சூட்டை உணர்ந்தான். "என்ன மொழி இது? தமிழ் என்றுதான் சொல்கிறார், ஆனால் ஒரு வார்த்தை கூட என் புத்திக்கு எட்டவில்லையே!" என்ற ஏமாற்றமும், அதன் பின்னால் இருந்த மர்மமும் அவனைப் பயமுறுத்தியது.
டீக்கடைக்காரர்: "உனக்கு இது புரியாது தம்பி... இது வெறும் எழுத்துக்கள் இல்லை, காலத்தோட கட்டளை!" என்று கூறி, அந்த ஓலைச்சுவடியை வாங்கி, அதில் அருள்மொழி நாச்சியாரால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைக்கப்பட்டிருந்த வரிகளை அவனுக்கு படிக்கத் தொடங்கினார்.
"ஈரைந்தினோடு ஐந்தாம் முறைவந்திடு மென்குலத் தோகைமேல்
பேரன்பு கொண்டுயிர்த் தாய்நிலத் தேயிருந்து மன்மதன் வந்திடுவான்!
காரிரும் பௌவக் கடல் கடந்துவந்த என் காரிகை யவளோடு
சேரரங்கத் தாய்நாடு மீள்வதே காலத்தின் கட்டாய மாமன்றோ!
தேடிவரு மவ்வீரன் கண்ணெதிரே தோன்றிடு வோய்நீயிவ் வோலைதந்து
வாடிநின்ற வெங்குல விளக்கின் மாமர்மச் சுவடிதனை உரைப்பாயே!"
ரியான் அவர் படித்த கவிதை அர்த்தம் புரியாமல், அந்த ஓலைச்சுவடியையும் அருள்மொழி நாச்சியாரின் ஓவியத்தையும் மாறி மாறிப் பார்த்துத் திகைத்து நின்ற அந்த நொடியில், அவனது தோளில் டீக்கடைக்காரரின் கரடுமுரடான கை அழுத்தமாகப் பதிந்தது.
அவனது தவிப்பைக் கண்டு டீக்கடைக்காரரின் உதடுகளில் ஒரு மெல்லிய, ஆழமான புன்னகை அரும்பியது.
டீக்கடைக்காரர்: "பதறாதே தம்பி... கம்ப்யூட்டர்ல இருக்குற ஆயிரம் கோட்டிங்குகளை (Coding) உன் மூளை நொடியில படிச்சிடும், ஆனா உன் சொந்த மண்ணோட ஆதி ரத்தக் குறிப்பை உன்னால படிக்க முடியல, இல்லையா? உனக்கு இது புரியாது தம்பி. ஆனா, இந்தச் சுவடியில அருள்மொழி நாச்சியார் எழுதி வச்சிருக்கிற ஒவ்வொரு வார்த்தையும் உன்னைப்பத்தித்தான் பேசுது!"
ரியான் தன் வறண்ட தொண்டையை நனைத்துக்கொண்டு, "என்னைப்பத்தியா? அந்த ஆயிரம் வருஷத்துத் தமிழ்ல என் பேரை எழுதியிருக்கா அண்ணே?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.
டீக்கடைக்காரர்: "உன் பேரை எழுதல தம்பி, உன்னோட விதியை எழுதியிருக்கா! இதோ, இந்த முதல் வரியைக் கவனி..." என்று அந்தச் சுவடியின் முதல் வரியைத் தன் விரலால் தொட்டுக் காட்டினார்.
டீக்கடைக்காரர்: "இந்தச் சுவடியில அருள்மொழி நாச்சியார் என்ன சொல்லியிருக்காங்கன்னா...நான் இந்த அந்தமான் கடலைக் கடந்து வந்து, இந்தத் தீவுகள்ல அடைக்கலமாகி வாழ்றேன். எனக்கு அப்புறம், என் வம்சாவளியில வரப்போற இருபத்தைந்தாவது தலைமுறைப் பெண் (அதாவது சிற்பிகா) இந்த மண்ணுல வாழும்போது... அவமேல தீவிரமான மோகமும் காதலும் கொண்டு, என்னோட சொந்தத் தாய் தேசத்துல (தமிழகத்துல) இருந்து ஒரு வீரன் அவளைத் தேடி வருவான்!னு எழுதியிருக்காங்க தம்பி."
ரியானின் இதயம் ஒரு கணம் நின்று நிதானித்தது. அவன் டீக்கடைக்காரரையே வெறித்துப் பார்த்தான்.
டீக்கடைக்காரர்: "அடுத்த வரியைக் கேள்... அப்படி அவளைத் தேடி வர்ற அந்த மனிதன் முன்னாடி, இந்த ஓலைச்சுவடியைக் காட்டி, எங்கள் குலத்தோட அத்தனை மர்மங்களையும் அவன்கிட்ட நீங்க ஒப்படைக்கணும். அதுமட்டுமில்ல... அன்று நான் என் தாய்நாட்டை விட்டு இந்தக் கடல் கடந்து வந்தேன். ஆனா, என் வம்சத்து இருபத்தைந்தாவது மகளான அவளோ, தன்னைத் தேடி வரும் அந்த வீரனோட கைகளைப் பிடிச்சு, மீண்டும் என் சொந்தச் சோழ தேசத்துக்கே திரும்பிப் போகணும். இது காலத்தோட கட்டாயம்!'னு எழுதி வச்சிருக்காங்க."
மாமன்னன் ராஜேந்திர சோழனின் காலம் என்றால், அது பதிினொன்றாம் நூற்றாண்டு. அதாவது, சரியாக பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு (ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்) அருள்மொழி நாச்சியார் தன் சொந்தக் கரங்களால் செதுக்கி வைத்த அந்த ஓலைச்சுவடி, இன்று இருபத்தியோராம் நூற்றாண்டின் நவீன மனிதனான ரியானின் கர்வத்தை மொத்தமாகச் சுட்டுப் பொசுக்கிச் சாம்பலாக்கியிருந்தது!
கணினியின் விசைப்பலகையில் (Keyboard) உலகத்தையே ஆட்டிப்படைக்கும் குறியீடுகளை (Coding) உருவாக்கும் அறிவு தனக்கு இருக்கிறது என்ற அகந்தை, வங்கிக் கணக்கில் வந்து குவியும் ஆடம்பர வசதிகள் எனத் தன்னுள் இருந்த அத்தனை மேட்டிமைத்தனமும் அந்தப் பழைய சோழர் மண்டபத்தின் கருங்கல் தரையில் மண்டியிட்டு நின்றன. எவ்வளவு வசதி இருந்தும், என்னதான் உலகமகா அறிவு இருந்தும், காலமும் விதியும் நடத்தும் ஒரு பிரம்மாண்ட நாடகத்தில் நாம் அனைவரும் வெறும் அசைக்கப்படும் பகடைக்காய்கள், வெறும் கருவிகள் மட்டுமே என்பதை ரியான் தன் அடிமனதிலிருந்து உணர்ந்து கொண்டான்.
ஆனால், இந்த வரலாற்றுப் பேழையின் ரகசியங்கள் அவிழ்ந்து கொண்டிருந்த அந்த அமானுஷ்ய நள்ளிரவில், விதியின் நாடகம் அவர்கள் இருவரைத் தாண்டி வேறு ஒரு திசையிலும் தன் வலையைப் பின்னியிருந்தது!
அவர்கள் இருவரும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக்கொண்டிருந்த அந்தச் சோழர் மண்டபத்திலிருந்து கொஞ்ச தூரத்தில், அடர்ந்த காட்டுப் பகுதியின் இருளுக்குள் மறைந்திருந்த இன்னொரு ஜீவன் அவர்கள் பேசுவதை ஒவ்வொன்றாக ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.
மண்டபத்தின் குளிர்காற்றிலும், அந்த ஜீவனின் சிவந்த உதடுகளில் ஒரு வஞ்சகமான புன்னகை அரும்பியது.
டீக்கடைக்காரர் உடைத்த ஒவ்வொரு ரகசியமும், அருள்மொழி நாச்சியாரின் கவிதை வரிகளும், சிற்பிகாவின் இருபத்தைந்தாவது வம்சாவளி உண்மையும் அந்த ஜீவனுக்கு உடனுக்குடன் துல்லியமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. அதற்குக் காரணம் ரியான் அல்ல; அவனது சட்டைப் பையில் இருந்த ஒரு சாதாரணப் பேனா!
ஆம்... ரியானின் சட்டைப் பைக்குள் சொருகப்பட்டிருந்த அந்த நவீனப் பேனாவிற்குள் ஒரு நுணுக்கமான, அதிநவீன டிரான்ஸ்மிட்டர் (Transmitter) ஒளித்து வைக்கப்பட்டிருந்தது.
ரியானுக்கே தெரியாமல் யாரோ அவனது பையில் திணித்த அந்தப் பேனா, அந்த மண்டபத்தில் ஒலித்த ஒவ்வொரு குரலையும், காற்றின் அசைவையும் சிக்னல்களாக (Signals) மாற்றி, காற்றில் மிதக்கவிட்டு அந்த மூன்றாவது ஜீவனுக்குச் சேர்த்துக் கொண்டே இருந்தது.
காட்டுக்குள் நின்றிருந்த அந்த ஜீவன், தன் காதில் இருந்த மைக்ரோ-இயர்போனை (Micro-earphone) மெல்லத் தொட்டுச் சரிசெய்துகொண்டது.
டிரான்ஸ்மிட்டரில் இருந்து வந்த டீக்கடைக்காரரின் கடைசி வார்த்தைகளைக் கேட்டு முடித்ததும், அந்த ஜீவன் உள்ளுக்குள் இதை விட மகிழ்ச்சியான சேதி வேற எதுவும் இல்ல என சொல்லி கொண்டது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)