14-05-2026, 04:16 PM
(13-05-2026, 02:00 PM)Geneliarasigan Wrote: Episode - 164
ரியான் 'டார்லிங்' என்று அழைத்த அந்த நொடி, அந்தத் அமைதியான சூழலில் ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது. அவள் நின்ற விதம், அவளது பார்வையின் வீரியம், அந்த இடத்தில் புயலை கிளப்பியது.
அவள் நின்றாள். மெதுவாகத் திரும்பி அவனைப் பார்த்தாள். அந்தத் தீவின் அலைகள் கரையில் மோதும் சத்தத்தை விட, அவளது மௌனம் அவனுக்குப் பயத்தைக் கொடுத்தது. அவள் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, அவனை நெருங்கினாள்.
அவள்: "டார்லிங்... இந்த வார்த்தையைச் சொல்ல உனக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கணும் MR.ரியான்? இந்தத் தீவுல நீ பார்க்கிற ஒவ்வொரு மணல் துகளுக்கும் ஒரு வரலாறு உண்டு. அதுல என் பெயரும் ஒண்ணு. ஆனா, அது உன் வாயால வர்ற அளவுக்கு மலிவானது இல்லை."
ரியான்: (ஒரு மெல்லிய சிரிப்புடன் அவளை நெருங்கி) "ஏன் இப்படி முறைக்கிறே? நான் ஒன்னும் உன்னைத் தப்பா சொல்லலையே. ஒரு அழகான பொண்ணைப் பார்த்தா அன்பா கூப்பிடுறது தப்பா? உன் பேரு என்னன்னு சொன்னா, நான் ஏன் இப்படி பொதுவான பேரைச் சொல்லப் போறேன்?"
அவள்: "அன்பா? நீ காட்டுறது அன்பு இல்லை, அது உன் அகங்காரம். இதுவரை எந்தப் பொண்ணுகிட்டயும் இப்படித் தன்மையா பேசினது இல்லைன்னு சொன்னியே... அது உன் பெருமை கிடையாது, உன்னோட பலவீனம். ஏன்னா, ஒரு பெண்ணோட சம்மதம் இல்லாம அவளை நெருங்குற உரிமை யாருக்கும் இல்லை."
ரியான்: "சம்மதம்... அது காலப்போக்குல வரும். ஆனா இப்போ, இந்தத் தனிமை, அந்தத் தீவு, அப்புறம் நீ... இது எல்லாமே ஒரு கவிதை மாதிரி இருக்கு. அந்த கவிதைக்கு ஒரு தலைப்பு வேணும்ல? அதுக்குத்தான் உன் பேரைக் கேட்கிறேன்."
அவள்அவன் முகத்திற்கு மிக அருகில் வந்து, தீர்க்கமாகப் பார்த்து) "என் பேரு... ஒண்ணும் ரகசியம் இல்லை. ஆனால் அதை நீ தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. . நான் வந்த வேலை முடிஞ்சது. இனியும் என்னை 'டார்லிங்'னு கூப்பிட்டு உன் நேரத்தை வீணாக்காதே."
ரியான் தன் கர்வத்தைத் தட்டிவிட, அவளது பதில் ஒரு சாட்டையடியாக விழுந்தது.
ரியான் தன் சட்டையைச் சற்றே சரிசெய்து கொண்டு, ஒரு ஆணவச் சிரிப்புடன் அவளைப் பார்த்தான்.
ரியான்: "உனக்குத் தெரியுமா பெண்ணே? என் அழகைப் பார்த்து மயங்கி, என்கிட்ட இருக்கிற பணத்தைப் பார்த்து எனக்காக ஒரு பட்டாளமே காத்துக்கிட்டு இருக்கு. நான் ஒரு விரலை நீட்டினா போதும், ஆயிரம் பெண்கள் ஓடி வருவாங்க. ஆனா, நான் உன்கிட்ட இவ்வளவு இறங்கி வந்து பேசுறதே உனக்குக் கிடைச்ச பெரிய கௌரவம்!"
அவள் நடக்கத் தொடங்கியவள் மீண்டும் நின்றாள். இம்முறை அவளது முகத்தில் கோபத்திற்குப் பதில் ஒரு எள்ளல் கலந்த ஏளனச் சிரிப்பு மலர்ந்தது. மெதுவாகத் திரும்பி அவனை ஏறிட்டாள்.
அவள்: "உங்ககிட்ட இருக்கிற பணத்தைப் பார்த்து வர்ற பெண்கள், உங்ககிட்ட இருக்கிற காகிதத்தை நேசிக்கிறாங்க... உங்களை இல்லை! அதே மாதிரி உங்க அழகைப் பார்த்து வர்றவங்க, சீக்கிரம் வாடிப் போற ஒரு பூவைத் தேடி வர்ற வண்டுகள் மாதிரி. வசந்தம் முடிஞ்சதும் அவங்க வேற ஒரு தோட்டத்துக்குப் போய்டுவாங்க."
அவள் ஓரடி முன்னே எடுத்து வைத்து அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள்.
அவள்: "காத்துக்கிட்டு இருக்கிற அந்த ஆயிரம் பேருக்கும், எனக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு ரியான். அவங்களுக்கு நீங்க 'தேவை'... ஆனா எனக்கு நீங்க 'தேவையற்றவர்'. மலிவான பொருள்களுக்குத் தான் கூட்டம் அதிகமா இருக்கும்... வைரம் எப்பவும் தனிமையில தான் ஜொலிக்கும். என் பெயர் வேணும்னு கேட்டீங்களே... விலையே இல்லாத ஒரு பொருளுக்கு நீங்க எதை வச்சு விலை பேசப் போறீங்க?"
அவளது அந்தப் பேச்சு ரியானின் கர்வத்தை அப்படியே சுக்குநூறாக உடைத்தது. அவனது பணம், அழகு என எதற்கும் அவள் மசியவில்லை என்பது அவனுக்கு ஒரு கசப்பான உண்மையாக உறைத்தது.
அவள்:"இன்னொரு விஷயம்... தன்மையா' பேசுறதுன்றது ஒரு குணம், அது மத்தவங்களுக்குச் செய்யுற உபகாரம் இல்லை. அதை முதல்ல கத்துக்கோங்க. நான் கிளம்புறேன்!"
அவள் மணலில் தன் பாதங்கள் பதிய, அந்தத் தீவின் அழகோடு கலந்து கம்பீரமாக நடந்து சென்றாள்.
ரியான்: சரி, பேரைச் சொல்ல வேண்டாம். அட்லீஸ்ட், உன்னைத் திரும்ப எப்போ பார்ப்பேன்னு சொல்லிட்டுப் போ."
அவள்: "காத்து வீசும் திசையை யாராலயும் சொல்ல முடியாது. அது மாதிரிதான் நானும். இனி உன் வழியில நான் வரமாட்டேன்... நீயும் என் வழியில வராம இருக்கிறது உனக்கு நல்லது."
அவள் அப்படிச் சொல்லிவிட்டுத் திரும்பியபோது, அவளது அந்த நீண்ட நளினமான கழுத்தில் இருந்த வியர்வை ஈரப்பதம் மின்னல் ஒளியில் மின்னியது. ரியான் அவளது அந்த மிடுக்கான நடையையும், குறையாத கர்வத்தையும் பார்த்துக்கொண்டே நின்றான்.
தூரத்தில் பயத்துடனும் குழப்பத்துடனும் நின்று கொண்டிருந்த தன் ஐடி மேலாளரை (IT Manager) சைகை காட்டி அருகே ரியான் அழைத்தான். நடந்தவற்றைத் தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த அவன், தன் எஜமானின் முகத்தில் இருந்த தகிப்பை உணர்ந்து நடுங்கியபடி ரியான் முன்னால் வந்து நின்றான்.
ரியான்கண்களில் ஒருவித வெறியுடன்) "இங்க பாரு... இப்போ இங்கே வந்தாளே ஒரு பெண், அவ பேர் என்ன? அவளைப் பத்தின முழு விபரமும் இப்போ எனக்கு வேணும்!"
ஐடி மேலாளர் தன் தலைகுனிந்தபடி, கைகளை பிசைந்தவாறு தயங்கினான்.
ஐடி மேலாளர்: "சார்... அது... அவங்க பேர் என்னன்னு எனக்குத் தெரியாது சார்."
ரியான்: (ஆக்ரோஷமாக அவன் சட்டையைப் பற்றி இழுத்து) "ஹே ஃபூல் (FOOL)! அவ நம்பர் உன்கிட்ட இருக்கு... அவளை இங்கே வரவழைச்சதே நீதான். ஆனா, அவ பேர் தெரியாதுன்னு என்கிட்டயே கதை விடுறியா? என்னை பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது?"
ஐடி மேலாளர்:"சாரி சார்... தயவுசெஞ்சு என்னைத் தப்பா நினைக்காதீங்க. நான் சொல்றதுதான் உண்மை. அவங்க நம்பர் என்கிட்ட இருந்தது உண்மைதான்,நிஜமாவே அவங்க பேரை என்கிட்ட சொல்லல சார். 'அந்தமான் ஐடி அனலிஸ்ட்' (Andaman IT Analyst) அப்படின்னு மட்டும்தான் தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டாங்க. ஆனா... அவங்க ஒருமுறை பேசும்போது ஹேடோ (Haddo) ஏரியாவில தான் குடி இருக்கிறதா சொன்னது எனக்கு லேசா ஞாபகம் இருக்கு சார்."
ரியானின் கண்கள் இப்போது நம்பிக்கையில் ஜொலித்தன. ஐடி மேலாளர் சொன்ன அந்தத் தகவல் அவனுக்குப் புதுத் தெம்பைக் கொடுத்தது.
ஐடி மேலாளர்: "சார், இந்த ஸ்ரீவிஜயபுரம் (Srivijayapuram) ஒன்றும் சென்னை மாதிரி பெரிய ஊர் கிடையாது. இங்கே மக்கள் ஒரு சமூகம் மாதிரி ஒண்ணா வாழ்றதால, ஒருத்தரை ஒருத்தர் நல்லாத் தெரிஞ்சு வைச்சிருப்பாங்க. அதனால இந்தப் பெண்ணோட விவரத்தைக் கண்டுபிடிக்கிறது அவ்வளவு கஷ்டம் இல்லை. அதுவும் நீங்க சொன்ன அந்த ஹேடோ (Haddo) ஏரியாவிலேயே நேரடியா விசாரிச்சா, நாளைக்குள்ள எல்லா விவரமும் கிடைச்சிடும்."
ரியான் ஒரு நிமிடம் மௌனமாக யோசித்தான். ஆனால் ஐடி மேலாளரின் அடுத்த சந்தேகம் அவனை மீண்டும் சிந்திக்க வைத்தது.
ஐடி மேலாளர்: "ஆனா சார்... ஒரே ஒரு விஷயம்தான் எனக்குப் புரியாத புதிரா இருக்கு. நீங்க அவளை சென்டினல் (Sentinel) தீவு பக்கத்துல பார்த்ததா சொல்றீங்க. அங்கே சாதாரண மனுஷங்க யாருமே போக முடியாதே! பழங்குடியினர் மட்டுமே இருக்கிற அந்த இடத்துக்கு இந்தப் பெண் எப்படிப் போனா? இதுதான் எனக்குப் பெரிய சந்தேகமா இருக்கு சார்."
"அவ அந்தத் தீவுக்கு எப்படிப் போனா? அவளுக்குப் பின்னால என்ன மர்மம் இருக்கு? இதெல்லாம் இப்போ எனக்குத் தேவையில்லை. ஆனா ஒண்ணு மட்டும் நிஜம்... அவளைப் பார்த்த அந்த நிமிஷத்துல இருந்து நான் நானாகவே இல்லை. முதல்ல அவளோட அந்தத் திகைக்க வைக்கிற அழகைப் பார்த்து, அவளைக் குறுகிய காலத்துக்கு அனுபவிச்சா போதும்னு தான் நினைச்சேன். ஆனா, நான் யாரு... என்கிட்ட எவ்வளவு பணம் இருக்குன்னு தெரிஞ்சும் அவ கொஞ்சம் கூட மசியலையே, அங்கதான் அவ என் கர்வத்தை மொத்தமா உடைச்சுட்டா!"
ரியான்: "இதுவரைக்கும் கல்யாணமே வேணாம், சுதந்திரமா இருக்கணும்னு நினைச்சவன் நான். ஆனா இப்போ... அந்தப் பெண் என் 'லைப் பார்ட்னரா' (Life Partner) வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு என் மனசு ஆசைப்படுது. அவளோட அந்த நிமிர்ந்த பார்வை, அந்த அசுரத்தனமான கர்வம்... இது எல்லாமே எனக்குள்ள ஒரு புது மனுஷனை உருவாக்கியிருக்கு. அவளை வெறும் அழகா மட்டும் பார்க்காம, என் வாழ்க்கையா மாத்திக்கணும்னு தோணுது!"
ரியானின் வாழ்க்கையில் அதுவரை இருந்த அத்தனைப் பெண்களும் அவனது பணத்திற்காகவும், அந்தஸ்திற்காகவும் அவனைத் தேடி வந்தவர்கள். ஆனால், இந்தப் பெண் அவனை ஒரு சாதாரண மனிதனாகக்கூட மதிக்காமல், அவனது கர்வத்தைச் சிதைத்தது அவனுக்குள் ஒரு புதிய ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஐடி மேலாளர்: "சார், விடியட்டும்... நான் காலையிலேயே ஹேடோ (Haddo) பகுதிக்குப் போய் எல்லாத்தையும் விசாரிச்சுட்டு வர்றேன். நீங்க இப்போ ஓய்வு எடுங்க."
ரியான்உறுதியான குரலில்) "இல்ல வேண்டாம்! என் வாழ்க்கைத் துணையைத் (Life Partner) தேடி நான்தான் போகணும். அவளைப் பார்த்த அந்த நிமிஷமே என் பழைய வாழ்க்கை முடிஞ்சு போச்சு. அவ ஒரு சாதாரணப் பெண்ணா இல்ல ஒரு மாயையான்னு தெரியல, ஆனா அவ இல்லாம என் எதிர்காலம் இல்லைன்றது மட்டும் எனக்கு உறுதியாத் தெரியுது."
ரியான் சொன்ன அந்த வார்த்தைகள் ஐடி மேலாளரை வியப்பில் ஆழ்த்தின. காதலே வேண்டாம் என்று சுற்றிய ஒருவன், ஒரு பெண்ணின் கர்வத்திற்கு அடிமையாகி நிற்பது அவனுக்குப் புதுமையாக இருந்தது.
ரியான் தன் அறைக்குச் சென்றான். ஆனால், அந்த மெத்தை அவனுக்கு முள் படுக்கையாக இருந்தது. அவனது கண்களை மூடினால், அவளது அந்தத் தீர்க்கமான பார்வையும், கழுத்தில் அவன் இதழ்களால் ஒதுக்கிய அந்தச் செயினின் ஸ்பரிசமும் மீண்டும் மீண்டும் வந்து போனது.
கடிகாரத்தின் ஒவ்வொரு முள்ளும் நகர்வது அவனுக்கு ஒரு யுகமாகத் தெரிந்தது. அந்தச் சிறிய அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.
ஜன்னல் வழியே தெரிந்த அந்தமான் வானத்தைப் பார்த்தபடி, "ஹேடோவில் நீ எங்கே இருக்கிறாய்?" என்று மனதிற்குள் பலமுறை கேட்டுக்கொண்டான்.
விடிந்ததும் அவன் செய்ய வேண்டிய முதல் வேலை, அந்த 'அந்தமான் ஐடி அனலிஸ்ட்' என்ற முகமூடிக்கு பின்னால் இருக்கும் அவளது நிஜமான முகத்தைக் காண்பதுதான்.
அன்று இரவு ரியான் தூங்கவில்லை. அவனது இதயம் "எப்படா விடியும்?" என்று ஏங்கிக் கொண்டிருந்தது. சூரியனின் முதல் கதிர் ஹேடோவின் தெருக்களில் விழுவதற்கு முன்பே, அவன் அவளைத் தேடிப் புறப்படத் தயாராகிவிட்டான்.
அதிகாலை பனிமூட்டம் ஹேடோவின் சாலைகளை மறைத்திருக்க, ரியான் மெதுவாகத் தன் காரை ஓட்டிச் சென்றான்.
அந்தப் பெண் சொன்ன 'ஐடி அனலிஸ்ட்' என்ற அடையாளத்தை வைத்து, அந்தப் பகுதியில் இருந்த சிறிய ஐடி அலுவலகங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளைத் தீவிரமாகப் பார்த்தான்.
ஆனால், எங்கும் அவளது உருவம் தென்படவில்லை. தெருக்களில் பால் போடுபவர்களும், அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களும் மட்டுமே தெரிந்தனர்.
ஒவ்வொரு திருப்பத்திலும் அவள் எதிரே வருவாள் என்று ரியானின் இதயம் அடித்துக் கொண்டது.
"ஹேடோ ஏரியாவில் தான் இருக்கிறேன் என்று சொன்னாளே... ஒருவேளை அதுவும் பொய்யாக இருக்குமோ?" என்ற சந்தேகம் ஒரு நிமிடம் அவனுள் எழுந்தது.
ரியான் அந்த அதிகாலை நேரத்தின் அமைதியையும், தன் மனதின் படபடப்பையும் சமன் செய்ய முயன்றான். ஹேடோவின் (Haddo) அந்த நிசப்தமான தெருக்களில் யாரும் இல்லாததைக் கண்டு, "இன்னும் சிறிது நேரம் கழித்து வந்திருக்கலாமோ?" என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது
கடற்கரையோரம் வீசிய அந்த அதிகாலைக் காற்று, சென்டினல் தீவின் (Sentinel Island) நினைவுகளை மீண்டும் அவன் மனதிற்குள் கொண்டு வந்தது. கடல் அலைகள் கரையில் மோதும் சத்தம், அந்தப் பெண்ணின் கம்பீரமான குரலைப் போலவே அவனுக்குத் தோன்றியது. அவன் காரிலிருந்து இறங்கி, கடற்கரை ஓரமாய் இருந்த அந்தச் சிறிய டீக்கடையை நோக்கி நடந்தான்.
டீக்கடையில் பால் புகையும் வாசனை ஒருபுறம் இருந்தாலும், ரியானின் கவனம் முழுவதும் அந்தச் சாலையின் இருபுறமும் இருந்த வீடுகளின் மீதே இருந்தது.
"ஒருவேளை அவள் நடைப்பயிற்சிக்கு (Morning Walk) இங்கே வரக்கூடும்" என்று அவன் உள்மனம் கணக்குப் போட்டது.
ரியான் கையில் இருந்த சூடான தேநீரின் ஆவி அவன் முகத்தில் படர, கண்கள் மட்டும் ஹேடோவின் (Haddo) ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக அளவெடுத்தன. அவனது மனதிற்குள் ஒரு தவிப்பு - அவளைப் பற்றிய விவரத்தைக் கேட்டால், அது எங்கே அவளது ரகசியத்திற்கு ஊறு விளைவிக்குமோ என்ற பயம் ஒருபுறம், தேடலின் வேகம் மறுபுறம்.
அந்த டீக்கடைக்காரர் ரியானின் முகத்தில் இருந்த தவிப்பைக் கண்டு, "தம்பி, விடியுறதுக்கு முன்னாடியே வந்து நின்னு எதையோ தேடுறீங்களே... எதாவது தொலைஞ்சு போச்சா?" என்று இயல்பாகக் கேட்டார்.
ரியான் பதில் சொல்ல வார்த்தைகளைத் தேடித் தடுமாறிக் கொண்டிருந்த அந்தப் புனிதமான நொடியில், அந்தமான் கடலின் அடிவானத்திலிருந்து சூரியன் மெல்லத் தன் பொற்கதிர்களை நீட்டியது. வானம் ஆரஞ்சு மற்றும் ஊதா நிறத்தில் ஜொலிக்கத் தொடங்கியது.
அந்தமான் கடலின் அடிவானத்தில் சூரியன் ஒரு தங்கத் தட்டாக மெல்ல மேலெழ, வானம் முழுவதும் இளஞ்சிவப்பு மற்றும் பொன்னிற வர்ணங்கள் பூசப்பட்டன. அந்தக் கதிர்கள் கடல் அலையின் நுரை மீது பட்டுத் தெறிக்க, ஒவ்வொரு அலையும் வைரக் கற்களைச் சுமந்து வருவது போல ஜொலித்தது.
வானத்துச் சூரியன் கடலுக்கு அடியில் இருந்து மெல்ல எட்டிப் பார்க்க, இந்த பூமிக்குரிய சூரியனோ (அந்தக் கன்னிகை) பனிமூட்டத்தைக் கிழித்துக் கொண்டு உதயமானாள்.
அதிகாலைப் பனிமூட்டம் ஒரு மெல்லிய திரை போல கடற்கரையை மூடியிருந்தது. அந்த வெண்மையான திரையை மெல்லக் கிழித்துக் கொண்டு, மேகக் கூட்டங்களுக்கு நடுவே இருந்து வெளிவரும் முழு நிலவைப் போல அந்த தீவுப்பெண் தோன்றினாள். வானத்தில் சூரியன் உதயமான அதே விநாடியில், இங்கே பூமியில் அவள் உதயமானாள். சூரியனின் பொன்னிறக் கதிர்கள் கடலில் பட்டுத் தெறிக்க, அவளின் வருகையோ ரியானின் விழிகளில் ஒளியேற்றியது.
நேற்று இரவு பார்த்த அந்த மர்மமான போர்க்கால தேவதை அல்ல இவள்! இன்று, ஒரு மென்மையான பருத்தி உடையில், காற்றில் அலைபாயும் கூந்தலுடன், ஒரு அமைதியான நதியாக அவள் நடந்து வந்தாள்.
அந்தமான் கடலின் அலைகளில் விழுந்த சூரியக் கதிர்கள் நீரைத் தங்கமாக மாற்றியது என்றால், அவளது வருகை அந்தச் சாதாரணக் கடற்கரைச் சாலையையே ஒரு சொர்க்கமாக மாற்றியது.
சூரியன் கண்டு தாமரை மலர்வதைப் போல, அவளது காலடிச் சத்தம் கேட்டதும் ரியானின் முகம் மலர்ந்தது.
பிரபஞ்சத்தின் இருளை வானத்துச் சூரியன் விரட்டியது; ஆனால், ரியானின் மனதில் இருந்த கர்வத்தையும், குழப்பத்தையும் இந்தக் கன்னிகையின் ஒரு முகம் காட்டிய அமைதி விரட்டியடித்தது.
அவளது பாதங்கள் அந்த ஈரமான மணலில் பதியும் போது, அந்தச் சின்னஞ்சிறு தடம் கூட ஒரு கவிதை போலத் தெரிந்தது.
சூரியனின் முதல் ஒளி அவளது முகத்தில் விழுந்தபோது, அவளது கண்கள் அந்த அதிகாலைக் கடலை விட ஆழமாகவும், தீர்க்கமாகவும் இருந்தன.
அவளது புருவங்கள் இயற்கையிலேயே செதுக்கப்பட்டது போல ஒரு வில்லின் நாணாய் வளைந்திருந்தன. அந்தப் புருவங்களின் அசைவில் ஒருவிதமான அதிகாரமும், அதே சமயம் ஒரு பெண்ணிற்கே உரிய நளினமும் குடி கொண்டிருந்தன.
அதிகாலைப் பனித்துளிகள் அவளது கன்னங்களில் பட்டுத் தெறிக்க, அவை முத்துக்களைப் போல ஜொலித்தன. சூரியனின் இளஞ்சிவப்பு நிறம் அவளது இதழ்களில் ஒட்டிக்கொண்டது போல ஒரு மென்மையான நிறம்.
விடியற்காலத்து ஆகாயம் எவ்வளவு தெளிவா இருக்குமோ, அவ்வளவு தெளிவாக இருந்தன அவளது கண்கள். அதில் நேற்று பார்த்த அந்த அசுரத்தனமான மிடுக்கு மறைந்து, ஒரு அமைதியான கடலின் ஆழம் தெரிந்திருந்தது.
மெல்லிய கடற்கரைக் காற்றில் அவளது கூந்தல் அலைபாயும் போது, அது கரையைத் தழுவும் அலைகளுக்குப் போட்டி போடுவது போல இருந்தது.
அவள் அணிந்திருந்த அந்த வெள்ளை நிற 'ஒயிட் டாப்' (White Top), வாக்கிங் சென்ற வேகத்தில் மேலெழும்ப, அவளது இடையின் வளைவுகள் மின்னல் கீற்றாய் வெளிப்பட்டன. அந்த வெண்மை நிறத்திற்கும், அவளது மேனி நிறத்திற்கும் இடைப்பட்ட அந்த இடுப்புப் பகுதி, அதிகாலைச் சூரியனின் ஒளியில் ஒரு சந்தனச் சிலையைப் போலத் தெரிந்தது
வாக்கிங் சென்ற வேகத்தில், அவளது நெற்றியில் அரும்பிய வியர்வை முத்துக்கள் மெல்ல வழிந்து, கன்னங்களின் வழியே இறங்கி அவளது அந்த நீண்ட நளினமான கழுத்தில் சங்கமித்தன. சூரிய ஒளி அந்த வியர்வைத் துளிகளில் பட்டுத் தெறிக்கும்போது, அவள் உடலே வைரங்களால் இழைக்கப்பட்டது போல மின்னியது.
நடைப்பயிற்சியின் களைப்பால் அவளது மார்புக்கூடு சீராக ஏறி இறங்கியது. அந்த வேகமான சுவாசமும், அதனுடன் கலந்த அவளது மேனி வாசனையும் காற்றில் கலந்து ரியானின் நாசிகளைத் துளைத்தன. அவள் சுவாசிக்கும் ஒவ்வொரு முறையும், அவளது கழுத்து நரம்புகள் மெலிதாகத் துடிப்பது ரியானுக்குள் ஒருவிதக் காமத் தகிப்பை உண்டாக்கியது.
வியர்வையினால் அவளது மெல்லிய பருத்தி உடை அங்கங்கே மேனியோடு ஒட்டிக் கொண்டு, அவளது உடல்வாகை மறைக்காமல் அப்படியே பிரதிபலித்தது. நனைந்த அந்தத் துணியின் வழியே தெரிந்த அவளது மேனி நிறம், விடியற்காலத்துச் சூரியனின் பொன்னிறத்திற்குப் போட்டி போட்டது.
காற்றில் அலைபாய்ந்த அவளது கூந்தல் இழைகள் வியர்வையோடு கலந்து அவளது கன்னங்களில் ஒட்டியிருந்தன. அந்த ஈரமான தோற்றமும், களைப்பினால் சிவந்திருந்த அவளது முகமும் அவளுக்கு ஒரு அமானுஷ்யமான கவர்ச்சியைக் கொடுத்தது.
ரியான் கையில் இருந்த தேநீர் கோப்பை நழுவும் நிலைக்குச் சென்றான். நேற்று அவளை வெறும் அழகாகப் பார்த்தவன், இன்று அந்த வியர்வை வழியும் மேனியின் தகிப்பில் தன்னை மொத்தமாக இழந்து நின்றான். அவளது ஒவ்வொரு அசைவும் அவனுக்குள் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தியது. அந்த அதிகாலைக் குளிரிலும், அவளைப் பார்த்த ரியானுக்கு மட்டும் வியர்க்கத் தொடங்கியது.
கடற்கரையின் ஈரக் காற்று அவள் மேனியில் பட்ட வியர்வையை உலர்த்த முயல, அது அவளது மேனி வாசனையை இன்னும் வீரியமாக ரியானின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது. டீக்கடையில் கொதிக்கும் பாலின் வாசமும், கடலின் உப்புக் காற்றும், அவளது வியர்வை மணமும் கலந்து ஒரு விசித்திரமான போதையை ரியானுக்குள் ஏற்றியது.
அவள் ரியானுக்கு மிக அருகில் வந்து நின்றாள். அவளது அந்த நீண்ட நளினமான கழுத்தில் இன்னும் சில வியர்வைத் துளிகள் சூரிய ஒளியில் வைரங்களாக மின்னிக் கொண்டிருந்தன. நடைப்பயிற்சியின் களைப்பால் சீராக ஏறி இறங்கும் அவளது மார்புக்கூடும், நனைந்து மேனியோடு ஒட்டியிருந்த அந்த உடையும் ரியானின் பார்வையைச் சிதறச் செய்தன. ரியான் அங்கே இருப்பதை அவள் நன்றாக அறிந்திருந்தாள்; ஆனால், அந்த அலட்சியமே அவளுக்கு ஒரு தனி அழகைக் கொடுத்தது.
"ஒரு குளுக்கோஸ் பாக்கெட் கொடுங்க..." என்று அவள் டீக்கடைக்காரரிடம் கேட்டபோது, அந்தக்குரல் ரியானின் காதுகளில் தேனாகப் பாய்ந்தது.
ரியான் தன் கையில் இருந்த தேநீர் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு, அவளது கண்களைத் தீர்க்கமாகப் பார்த்தான்.
ரியான்: "என்னைப் பார்த்ததும் அதிர்ச்சியா இருக்கா? நான் இவ்வளவு சீக்கிரம் உன்னைத் தேடி வருவேன்னு எதிர்பார்த்திருக்க மாட்டேன்னு நினைக்கிறேன்."
அவள் மெல்லத் தன் தலையைச் சரித்து, அந்த நீண்ட நளினமான கழுத்து இன்னும் எடுப்பாகத் தெரியும்படி ஒரு மாயப் புன்னகையைப் பூத்தாள். அந்தப் புன்னகையில் காமம் கலந்த கேலியும், ஒரு பேரரசிக்கே உரிய நிதானமும் இருந்தது.
அவள்: "நிச்சயமா இல்லை ரியான்... ஒரு சின்ன மாற்றம் அவ்வளவுதான். உங்க பணத்திமிரில ஆட்களை ஏவி என்னை விபரங்களைத் தெரிஞ்சுக்க முயற்சிப்பீங்கன்னு நினைச்சேன். ஆனா, நீங்களே நேர்ல வந்து நிக்கிறீங்க... உங்க ஈகோ (Ego) உங்களை இவ்வளவு தூரம் துரத்திட்டு வரும்னு நான் எதிர்பார்க்கல."
அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவளது நெற்றிப் பொட்டில் இருந்து வழிந்த ஒரு வியர்வைத் துளி, அவளது புருவத்தின் ஓரமாக ஊர்ந்து, கன்னத்தின் மேடுகளைக் கடந்து, அந்த நீண்ட நளினமான கழுத்தில் வந்து நின்றது. ரியான் அந்தத் துளியையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் மெல்லத் தன் தலையைச் சாய்த்து, தன் கைகளால் கூந்தலைத் தூக்கி முடிக்கும்போது, அவளது அக்குள் மடிப்புகளின் வழியாகப் படர்ந்திருந்த அந்த இளஞ்சூட்டு வியர்வை மணம் காற்றில் கலந்து ரியானின் உணர்ச்சிகளைச் சுண்டி இழுத்தது.
வாக்கிங் சென்ற வேகத்தில் அவளது மெல்லிய பருத்தி உடை வியர்வையால் நனைந்து, அவளது மேனியோடு ஒன்றிப்போயிருந்தது. சூரிய ஒளி அவளது முதுகின் வழியாகப் பாயும்போது, அந்த ஈரமான துணியின் ஊடே அவளது தோலின் மென்மையும், முதுகுத்தண்டின் நேர்த்தியான வளைவும் ரியானின் கண்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது. அவள் மூச்சு வாங்கும் ஒவ்வொரு முறையும், அவளது மார்புக்கூடு சீராக உயர்ந்து தாழ்ந்தது; அது அவளது ஆடையின் எல்லைகளைத் தாண்டி ஒரு தகிக்கும் அதிர்வை அவனுக்குள் ஏற்படுத்தியது.
அவள் குளுக்கோஸ் பாக்கெட்டைப் பிரிக்கும்போது, அவளது விரல்களின் அசைவில் ஒரு விசித்திரமான நளினம் இருந்தது. வாயோரம் ஒட்டியிருந்த அந்த இனிப்புத் துகள்களை அவள் தன் நுனி நாவால் மெல்லத் துழாவியபோது, ரியானின் இதயம் ஒரு நிமிடம் துடிக்க மறந்தது. அவள் அவனைத் திரும்பிப் பார்த்த அந்தப் பார்வையில், "என்னை நெருங்க உனக்குத் தகுதி இருக்கிறதா?" என்ற சவாலும், அதே சமயம் ஒரு பெண்ணிற்கே உரிய காந்த ஈர்ப்பும் கலந்திருந்தது.
அவள்: "மீண்டும் சொல்றேன்... என்னைப்பத்தின விபரங்கள் ஒண்ணும் பெரிய ரகசியம் இல்லை. ஆனா அதை உங்களுக்குச் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. விருப்பம் இல்லாத ஒரு விஷயத்தை பலவந்தமா வாங்க முடியுமான்னு பாருங்க ரியான்!"
அவள் அப்படிச் சொல்லிவிட்டுத் திரும்பியபோது, அவளது கூந்தலிலிருந்து தெறித்த ஒரு சிறு வியர்வைத் துளி ரியானின் கையில் பட்டது. அந்தச் சிறு துளி நெருப்பாக மாறி அவனது நரம்புகளைச் சூடாக்கியது. ஒரு 'ஐடி அனலிஸ்ட்' (IT Analyst) ஆக அவள் காட்டிய அந்தத் தெளிவும், ஒரு பெண்ணாக அவள் வெளிப்படுத்திய அந்தத் தகிக்கும் அழகும் ரியானை முழுமையாக அவளிடம் மண்டியிடச் செய்தன.
அப்போது, காற்றின் திசையிலிருந்து வந்த அந்த ஒரு சொல், அந்த இடத்தின் வெப்பத்தையே சட்டெனக் குறைத்து ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
"சிற்பிகா!"
அவள் பெயர் 'சிற்பிகா' என்று தெரிந்த அந்த நொடி, ரியானின் இதயத்தில் ஒரு மின்னல் வெட்டியது. அவன் தேடிய மர்மத்தின் முதல் முடிச்சு அவிழ்ந்த மகிழ்ச்சியில், அந்தப் பெயரை உச்சரித்த திசையை நோக்கித் திரும்பினான். ஆனால், அங்கே அவன் கண்ட காட்சி அவனது ரத்தத்தையே உறைய வைத்தது.
அதிகாலைச் சூரியனின் வெளிச்சம் அங்கே படர்ந்திருந்தாலும், அந்த உருவம் நின்றிருந்த இடம் மட்டும் ஒரு அடர்ந்த நிழலுக்குள் இருப்பது போலத் தோன்றியது. ரியான் திகைத்துப் போனான். அங்கே நின்று கொண்டிருந்தவன் இந்த நாகரிக உலகிற்கும், அந்தமானின் ஸ்ரீவிஜயபுரத்திற்கும் (Srivijayapuram) துளியும் சம்பந்தம் இல்லாதவன் போலத் தெரிந்தான்.
அவனது மேனி நிலக்கரியை விடக் கறுப்பாக, சென்டினல் (Sentinel) தீவின் அடர்ந்த காடுகளைப் பிரதிபலித்தது. அவன் அணிந்திருந்த விசித்திரமான ஆபரணங்களும், கையில் இருந்த அந்த மரத்தாலான ஆயுதமும் அவனை ஒரு வேட்டைக்காரனாகக் காட்டின.
"இவன்... இவன் அப்படியே சென்டினல் தீவு ஆதிவாசிகளைப் (Sentinelese) போலவே இருக்கிறானே!" என்று ரியானின் உள்மனம் அலறியது. யாராலும் நெருங்க முடியாத, வெளி உலகத்தையே உள்ளே அனுமதிக்காத அந்தத் தீவின் மனிதன், ஹேடோவின் இந்தப் பகல் வெளிச்சத்தில் எப்படி நிற்கிறான்?
சிற்பிகா அந்த உருவத்தைப் பார்த்ததும், அவளது முகத்தில் இருந்த அந்த மெல்லிய கேலி மறைந்து, ஒரு ஆழ்ந்த விசுவாசமும் ரகசியமும் குடியேறியது. அவளது நீண்ட நளினமான கழுத்தில் வழிந்த அந்த வியர்வைத் துளிகள் இப்போது பயத்தினால் அல்ல, ஏதோ ஒரு பெரிய கடமைக்காகத் துடிப்பது போலத் தெரிந்தது.
அவள் மெல்ல அந்த உருவத்தை நோக்கி நகரத் தொடங்கினாள். ரியான் அந்தத் திகைப்பிலிருந்து மீள முடியாமல் சிலையாக நின்றான்.
ரியான்தனக்குள்) "சிற்பிகா... இவள் ஒரு ஐடி அனலிஸ்ட் (IT Analyst) என்று சொன்னது வெறும் வேஷமா? இந்த ஆதிவாசி உருவத்திற்கும் இவளுக்கும் என்ன தொடர்பு? ஒரு நாகரிகப் பெண்ணுக்காகவா சென்டினல் தீவின் மர்மங்கள் இங்கே கரை ஒதுங்கி இருக்கின்றன?"
கடற்கரைக் காற்று இப்போது பலமாக வீசியது. அந்த ஆதிவாசி உருவத்திடம் இருந்து ஏதோ ஒரு விசித்திரமான ஒலி கேட்க, சிற்பிகா அந்தத் திசையை நோக்கிப் பாய்ந்தாள். ரியான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த இரண்டு உருவங்களும் அதிகாலைப் பனிமூட்டத்திற்குள் மாயமாய் மறைந்தன.
கையில் ஆறிய தேநீர் கோப்பையுடன் ரியான் மட்டும் நின்றிருந்தான். அவனது காதுகளில் இன்னும் அந்தப் பெயர் ஒலித்துக் கொண்டே இருந்தது... "சிற்பிகா!" ..
ஹாய் நண்பர்களே..!ஒரு வருஷத்துக்கு மேலாக நான் இந்த கதைக்கு update எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் பொறுமையாக என் மேல் நம்பிக்கை வைத்து காத்திருந்த அனைவருக்கும் நன்றி .மேலும் தொடர்ந்து ஆதரவும் கொடுத்து வரீங்க. நான் திரும்ப எழுத வந்த பொழுது என் மனசில் இருந்த ஒரே எண்ணம்,வாரம் ஒருமுறையாவது update கொடுக்க வேண்டும் என்பதே. அதை இதுவரை சரியாக செய்து வருகிறேன்..கதை எழுதுவதால் எனக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு.படிக்கும் உங்களுக்கும் அதே தான்..நான் எழுதும் கதை உங்களை திருப்திபடுத்த வேண்டும் என்பதே என் எண்ணம். என் கதைகள் மென் காமம் மட்டுமே,வன்புணர்வு வராது. கெட்ட வார்த்தை வராது.. 200 update வரை கொண்டு செல்ல வேண்டும் என ஆசை இருக்கு..ஆனா அளவு கதையை நீட்டிக்க முடியுமா என தெரியல
அடுத்து பிரியங்கா update
lovely update
munnadi ezutheenathkum gap vitu ipo ezuthee irukaa updatekum neraya difference teridhu bro..romba detailed ah porumai padikravangalkum salipu illama...antha character azagu pathee varnichu mella mella izukarthum
anga kavithai maari varigal vachu padika padika muzu novel padikraa feel tha ovoru ovoru episodeum...time kedacha motha story padikalam iruken...rukimini azagu varnanai semma...riyaan pithu pidithu suthuraan pavam enna marmamoh inee lot of twist unfold agee
track orey neru kodu epo varumaa..name also apt for rukmini sirpika nice...
200 update vazuttukal bro keep entertain and rocking


அவன் முகத்திற்கு மிக அருகில் வந்து, தீர்க்கமாகப் பார்த்து) "என் பேரு... ஒண்ணும் ரகசியம் இல்லை. ஆனால் அதை நீ தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. . நான் வந்த வேலை முடிஞ்சது. இனியும் என்னை 'டார்லிங்'னு கூப்பிட்டு உன் நேரத்தை வீணாக்காதே."![[Image: file-000000001a3471fb838a13d0f38c5722.png]](https://i.ibb.co/7x4cTX4z/file-000000001a3471fb838a13d0f38c5722.png)
![[Image: images.jpg]](https://i.ibb.co/ynnmZJSn/images.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)