24-04-2026, 02:57 AM
சிவா மற்றும் ராகினி கிளம்பிய பிறகு விஜய் சூர்யாவிற்கு ஒரு தங்க செயின் பரிசளித்தான். பின்னர் அவளின் உடைகளை களைந்தவன் அவன் உடைகளையும் கழற்றி இருவரும் கூடலில் திளைத்து முடித்து இருவரும் அருகருகே படுத்து இருந்த நேரம் சூர்யா மீண்டும் அவனிடம் வேலையை விடுவதை பற்றி பேசினாள். ஆனால் இந்த முறை அவன் உடனே சரி என்று சொல்ல, அவள் சந்தோஷத்தில் அவனை கட்டிக்கொண்டாள்.
ஆனால் அவன் கேக் வாங்க வெளியே சென்ற நேரம் பர்ஸை எடுக்க மறந்து திரும்ப வீட்டிற்கு வரும் நேரம் அவன் வீட்டு கதவின் உள்ளே எதோ சத்தம் கேட்க, அப்போது அங்கே சூர்யா சிவாவை கன்னத்தில் அறைந்ததை கதவின் இடுக்கு வழியே பார்த்தான். பின்னர் அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளிலும் அவர்களுக்குள் என்ன நடந்தது என்றும் அவன் அறிந்துகொண்டான். சிறிதாக அவனுக்குள் மனைவி அவனுக்கு இப்படி ஒரு துரோகம் செய்துவிட்டாள் என்று இருந்தாலும், இடத்திற்கு எல்லாம் தானும் ஒரு கரணம் என்பதை நினைத்து வருந்தினான். ஆனால் இன்னமும் தன்னுடைய மனைவி சிவாவிற்கு புத்தி சொல்லி அவனை வெளியே அனுபின்னதை ஒளிந்து இருந்து பார்த்தான்.
அவன் மனம் காயப்பட்டு இருந்தாலும் அவனின் மனைவி இன்னமும் அவனை விரும்புகிறாள். அவளிடம் ஏதும் கேட்க வேண்டாம் என்று நினைத்து இருந்தான். அப்போது அருகே படுத்து இருந்த அவனின் மனைவி மெதுவாக அவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள்.
சூர்யா: என்னங்க
விஜய்: சொல்லுமா.
சூர்யா: நான் தப்பு பண்ணுனா என்னை மன்னிப்பீங்களா.
விஜய்: என்னமா சொல்லுற, அப்படி என்ன தப்பு பண்ணின.
விஜய் மனதிற்குள் அவளுக்கும் சிவாவிற்கு இடையே இருந்த உறவை பற்றி தான் சொல்ல வருகிறாள் என்று நினைத்தான். அப்போது மீண்டும் சூர்யா பேச ஆரம்பித்தாள்.
சூர்யா: நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன்.
என்று கூறியவள் அவன் உடனே எழுந்து அவனின் காலில் விழுந்தாள். அவன் அவளை தூக்கி அவனின் அருகில் அமர வைத்து.
விஜய்: முதலில் அலுவதை நிறுத்திவிட்டு சொல்லு. நான் உன்னை தப்பாக எல்லாம் எடுத்து கொள்ள மாட்டேன்.
சூர்யா: நான்....... நான்......
விஜய்: நீ....
சூர்யா: நான் பக்கத்து வீட்டு சிவாவுடன் தப்பு பன்னிட்டேங்க.
விஜய்: அவளோ தானா
சூர்யா அழுது கொண்டே அவர்களுக்குள் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான். அதற்கு சூர்யா அவளை அவனுடன் கட்டி அணைத்துக்கொண்டான், ஆனால் சூர்யா அவன் மார்பில் முகம் புதைத்து அழுதுகொண்டே அவளை மன்னிக்க வேண்டிக்கொண்டிருந்தாள். விஜய் அவளின் முகத்தை தன்னுடைய கைகளில் ஏந்தி அவளின் கண்களை பார்த்தவன் அவளின் உதட்டில் முத்தமிட்டான்.
பின்னர் அன்று கேக் வாங்க சென்ற போது பார்த்த விஷயங்களையும், அவள் அவனின் அடித்து வீட்டை விட்டு விட்டு வெளியே அனுப்பியதையும் பார்த்ததை பற்றியும் கூறினான். அப்போது அவளோ தெரிந்த பிறகும் ஏன் கேட்கவில்லை என்று கேட்க.
விஜய்: சூர்யா, நீ மனம் திருந்தி அவனை வெளியே போக சொல்லிவிட்டாய். ஒருவேளை நான் இல்லாத அந்த நேரத்தை நீ பயன்படுத்தி இருந்தால் நானும் கோப பட்டிருப்பேன். ஆனாலும் இதை நீ என்னிடம் சொல்லி மன்னிப்பு கேட்பாய் என்று என் மனம் சொல்லியது. நான் இப்ப சந்தோசமாக உணர்கிறேன். நான் உன்மேல் வைத்துள்ள காதலுக்கு ஈடாக நீயும் என்மேல் காதல் கொண்டுள்ளாய், ஆனால் சந்தர்ப்பம் உன்னை தப்பு செய்ய வைத்துவிட்டது, அதற்கு நானும் ஒரு விதத்தில் காரணம் ஆகி விட்டேன்.
சூர்யா மீண்டும் அவன் மார்பில் முகத்தை புதைத்து அழுக, அவனோ அவளை பிடித்து அவளின் கண்ணீரை துடைத்து விட்டு, நாளை நாம இருவரும் உன் ஆபிஸ் சென்று வேலை வேண்டா என்று சொல்லிவிட்டு வரலாம் சரியா என்று கேட்க, அவளும் தலை அசைத்தாள். அப்படியே இருவரும் உறங்கினர்.
அடுத்தநாள் காலை எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, வீட்டு ஓனர் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு இனிமேல் வீடு தேவை இல்லை என்றும் 3 மாதத்தில் வீட்டை காலி செய்வதாகவும் கூறினர். அவரும் சரி என்று சொல்லிவிட்டு மூன்று மாதத்தில் அட்வான்ஸ் ரூபாயை திரும்ப தருவதாக கூறினார். பின்னர் அருகே இருந்த ஒரு ஓட்டலில் சாப்பிட்டனர்.
காலை 10 மணி ஆக அருகே இருந்த ஒரு மாலில் சென்று சிறிது நேரத்தை செலவழித்து விட்டு படம் பார்க்க சென்றனர். பின்னர் படம் முடிந்து சாப்பிட்டுவிட்டு மதியம் 2.30 மணிக்கு வீடு வந்து சேர்ந்தனர்.
அப்போது அவர்களின் அபார்ட்மெண்ட் வாசலில் சிறிய கூட்டம் இருந்தது. சூர்யா அங்கே சென்று என்ன என்று விசாரிக்க, அப்போது அவர்கள் சிவாவிற்கு விபத்து ஏற்பட்டு விட்டது என்று கூற, உடனே சூர்யா மற்றும் விஜய் இருவரும் அவர்கள் சொன்ன மருத்துவமனைக்கு சென்றனர். அங்கே அழுதுகொண்டிருந்த ராகினி அருகில் சென்று அமர்ந்து அவளுக்கு ஆறுதல் கூறினாள் சூர்யா.
பிளாஷ்பேக்
காலை கண்விழித்த சிவா அருகில் மனைவி இல்லாமல் இருப்பதை பார்த்ததும் மெதுவாக எழுந்து வெளியே வந்தான். அவள் சமயலறையில் இருந்தாள். அவனை பார்த்ததும் இன்று ஞாயிறு, தனக்கு சிக்கன் வேண்டும் என்றும் அவள் கூற, அவன் சிக்கன் வாங்கி வருவதாக கூறிக்கொண்டு கீழே வந்து அவனின் பைக் எடுத்துக்கொண்டு சென்றான். அப்போது எதிரில் சூர்யா மற்றும் அவள் கணவன் நடந்து போவதை பார்த்தவன், எதிரே வந்த லாரியை பார்க்க தவறி விட்டான்.
பதட்டத்தில் அவன் வண்டியில் இருந்து கீழே விழ, லாரி அவனின் ஒரு கால் மீது மட்டும் ஏறி சென்று விட்டது, ஆனால் அந்த விபத்து நடந்த நேரம் சூர்யா மற்றும் விஜய் கேப் ஏறி சென்று இருந்தார்கள், எனவே அவர்களுக்கு அது தெரிந்து இருக்கவில்லை. பின்னர் அருகில் இருந்த சிலர், அவன் தூக்கி மருத்துவமனை கூடி சென்றனர், அவன் மனைவி ராகினிக்கு தகவல் சொல்லப்பட்டது.
அவள் அங்கே வந்து பார்த்த நேரம் அவன் கால் முழுவதும் நசுங்கிய நிலையில் அவனின் ஒரு காலை எடுத்து விட வேண்டும் என்று டாக்டர் சொல்ல, இருவரும் அதிர்ந்து விட்டனர். ஆனால் வேறு வழி இல்லாத காரணத்தால் அவனை ஆப்பரேஷன் தியேட்டர் உள்ளே கொண்டு சென்றனர். அவனுக்கு ஆப்பரேஷன் நடந்து கொண்டிருந்த நேரம் சூர்யா அங்கே வந்து சேர்ந்தாள். மேலும் அவர்களின் அப்பார்ட்மென்டில் குடி இருந்த சிலரும் அங்கே நின்று இருந்தனர்.
பலர் கூறிய சமாதானத்திற்கு பிறகு தன்னை தேற்றி கொண்டாள் ராகினி. சூர்யா தைரியமாக இருக்கும்படி அவளிடம் கூறிவிட்டு அன்று இரவு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அன்றைய தினம் நடந்த விஷயத்தில் அப்படியே கட்டிலில் படுத்து உடனே உறங்கியும் போயினர். அடுத்தநாள் காலை எழுந்து கிளம்பி சாப்பாடு வாங்கிக்கொண்டு மருத்துவமனை சென்று ராகினிக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு இருவரும் சூர்யா அலுவலகம் நோக்கி சென்றனர்.
அவள் வேலையை விடுவதை பற்றி அவளின் மேனேஜர் இடம் சொல்ல, அவரோ நேராக HR டிபார்ட்மென்ட் இடம் சொல்ல, அவளின் அந்த முடிவை அவளின் கம்பெனி ஏற்கவில்லை. பதிலுக்கு அவளுக்கு அவர்கள் ஒரு மாற்று யோசனை கூறினார்கள். அவளை திருவனந்தபுரம் கிளைக்கு மாற்றுதல் கொடுப்பதாகவும், அதுவும் வாரம் ஒரு நாள் மட்டுமே அவள் அங்கு சென்று வேலை செய்யவேண்டும் எனவும் மீதி நாட்கள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என்றும் கூற, அவளும் அவள் கணவனும் சந்தோசமாக அதனை ஏற்று கொண்டனர்.
15 நாட்களில் இடது அனைத்தும் நடந்து முடியும் எனவும், அதுவரை இங்கு வேலை பார்க்க வேண்டும் என்றும் கூறினார்கள். அவளும் சரி என்று சொல்லிவிட்டு விஜையை வீட்டிற்கு அனுப்பினாள். அன்று இரவு விஜய் நாகர்கோவில் புறப்பட்டான், அவளின் வேலையின் கடைசி நாள் வருவதாக கூறி அன்று இரவு புறப்பட்டான். அதற்கு முன்பு இருவரும் ஒரு சிறிய கூடலை முடித்தனர்.
3 நாட்கள் ICU-ல் இருந்துவிட்டு ரூம் வந்தான் சிவா, அதே நேரம் அவன் மாமியார், மகள் என அவனின் சொந்தங்கள் அனைவரும் அவனை பார்க்க வந்தனர். அன்று மாலை வேலை முடித்து செல்லும் வழியில் அவனை பார்க்க சென்றாள் சூர்யா. அவளை பார்த்ததும் அவன் முகத்தை தாழ்த்தி கொண்டான், அவன் மனதில் தெரிந்தது சூர்யாவின் தனிமையை பயன்படுத்தியத்திற்கு ஆண்டவன் கொடுத்த தண்டனையாக பார்த்தான் சிவா.
நாட்கள் கடந்தது. 14 நாட்கள் கடந்து சிவா வீட்டிற்கு வந்தான். அதே நாள் சூர்யா வேலை மாற்றல் ஆகி போகும் நாள், எனவே அவளை அழைத்து செல்ல அங்கு வந்திருந்தான் விஜய். சூர்யா வேலை முடித்து வந்த நேரம் விஜய் மற்றும் சூர்யா இருவரும் அவனை சென்று பார்த்து நலம் விசாரித்தனர், பின்னர் அவனுக்கு தைரிய வார்த்தைகள் கூறிவிட்டு கிளம்பும் நேரம்.
சிவா: சூர்யா என்னை மன்னித்து விடு (என்று விஜய்க்கு தெரியாமல் சொன்னான், ஆனால் அதனை பார்த்த விஜய்)
விஜய்: சிவா, சூர்யா என்னிடம் சொல்லிவிட்டாள், நானும் மன்னித்து ஏற்றுக்கொண்டேன். காரணம் எங்களுக்கு இடையில் உள்ள காதல்.
சிவா: மன்னிச்சிருங்க விஜய், ஆண்டவன் எனக்கு தண்டனை கொடுத்து விட்டான்.
விஜய்: எனக்கும் உன்மேல கோபம் இருந்திச்சு. இதை நான் கண்டுபிடிச்ச அன்னைக்கே என் மனைவி என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா, ஆனாலும் உன்னை எதாவது செய்யணும் அப்படினு நினைச்சேன்.
சிவா: ஏதாவது செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்.
விஜய்: ஆனா உன் மனைவியை ஏமாத்திருக்க, உனக்கு கொஞ்சமும் உறுத்தலையா.
சிவா: .........
விஜய்: இதை உன் மனைவிகிட்ட சொல்ல எங்களுக்கு நேரம் ஆகாது, ஆனாலும் உனக்கு ஏற்பட்ட இந்த நிலையே போதும்னு நினைச்சேன்.
சிவா: எதோ ஒரு வேகத்துல பண்ணிட்டேன் விஜய். என்னை மன்னிச்சிருங்க.
விஜய்: சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது ஒன்றும் அவளோ சாதாரணமான விஷயம் இல்லை சிவா. ஆனா உன்னை நம்பி இருந்த உன் மனைவிக்கும், அன்னைக்கு உன்னை நம்பி வந்த என் மனைவிக்கும் துரோகம் பண்ணிருக்க. என் மனைவி மீதும் தப்பு இருந்திச்சு, ஆனா அதை மன்னிக்கிற மனசும் காதலும் என்கிட்ட இருந்திச்சு.
சிவா:...................
விஜய்: நீ எதையும் சொல்ல வேண்டாம் சிவா. ஆனா எனக்கு ஒரு உதவி மட்டும் பண்ணு. இனிமேல் என் கண்ணுல என்னைக்குமே பட்டிராத.
என்று சொல்லிக்கொண்டு அவன் மனைவி சூர்யாவை கூட்டிக்கொண்டு சென்றான்.
அன்று இரவே வீட்டை காலி செய்துகொண்டு விஜய் மற்றும் சூர்யா கிளம்பி சென்றனர். சூர்யா புதிய வேலையில் சேர்த்தாள். அடுத்த 3 மாதத்தில் கர்ப்பம் தரித்தாள். அதே நேரம் சிவா செயற்கை கால் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சம் நடக்க ஆரம்பித்தான்.
அடுத்த 10 மாதத்தில் சூர்யா ஒரு அழகான பையனை பெற்று எடுத்தாள். ஒரு நாள் கோவிலில் வைத்து சூர்யா ரஜினியை பார்த்தாள். அவளிடம் சூர்யா மற்றும் விஜய் இருவரும் நலம் விசாரித்தனர். விஜய்யை பார்த்த சிவா ஒளிந்து கொண்டான். விஜய்க்கும் அது புரிய அவன் அந்த இடத்தை விட்டு சீக்கிரமே கிளம்பி சென்றான். இப்படியே அவரவர் வாழக்கை அழகா பயணிக்க ஆரம்பித்தது.
முற்றும்.
கதையின் முடிவு ஏமாற்றமாக நினைப்பவர்கள் என்னை மன்னிக்கவும். இதனை நான் பழிவாங்கும் கதையாக கொண்டு செல்ல நினைக்கவில்லை. அடுத்து என்னுடைய பழைய கதையான காசேதான் கடவுளடா. அதை திரும்ப எழுத உள்ளேன். ஆனால் கொஞ்சம் நேரம் எடுக்கும்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)