10-04-2026, 07:10 AM
அத்தியாயம் 12
அடுத்த நாள் காலை, பொழுது புலர்ந்தும் புலராத அந்த அதிகாலை வேளையில், கிராமமே அதிரும்படி ஒரு பெரும் சத்தம் கேட்டது.
ராசுக்குட்டியின் வீட்டைச் சுற்றி மூன்று ராட்சத டிராக்டர்கள் வந்து நின்றன. அவற்றிலிருந்து குதித்த ஒவ்வொரு ஆளும் கருகருவெனப் பாறையைப் போன்ற உடம்போடும், கையில் வீச்சரிவாள் மற்றும் உருட்டுக் கட்டைகளோடும் இறங்கினார்கள். 50-க்கும் மேற்பட்ட அந்த முரட்டு ஆட்களின் கண்களில் ரத்த வெறி தாண்டவமாடியது. அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வேட்டையாடும் ஓநாயைப் போல வீட்டைச் சூழ்ந்து வளைத்தார்கள்.
உள்ளே, ராசுக்குட்டி இன்னும் அந்தப் பழைய நினைவுகளின் வலியிலும், வைத்தியர் கொடுத்த மருந்தின் மயக்கத்திலும் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அடுப்பங்கரையில் அம்பிகா, தன் மகனுக்காகப் பால் காய்ச்சிக் கொண்டிருந்தாள். பாலில் எழும் ஆவி போல அவளது மனதிலும் ஏதோ ஒரு இனம் புரியாத பயம் குடிகொண்டிருந்தது.
முற்றத்தில் கோலம் போட வந்த நந்தினி, கையில் கோலப்பொடி கிண்ணத்தோடு வாசலுக்கு வந்தாள். தலையை நிமிர்ந்து பார்த்தவள் அப்படியே உறைந்து போனாள். தன் வீட்டைச் சுற்றி ஒரு பெரும் படையே கையில் ஆயுதங்களோடு நிற்பதைப் பார்த்ததும், அவளது கை நடுங்கியது.
"சலசல..." அவளது கையிலிருந்த கோலப்பொடி கிண்ணம் நழுவித் தரையில் விழுந்து சிதறியது. கிண்ணம் உருளும் சத்தம் அந்த நிசப்தமான அதிகாலையில் ஒரு அபாயச் சங்காக ஒலித்தது.
"அ... அம்மா...!" என்று நந்தினியின் தொண்டையிலிருந்து ஒரு மெல்லியக் கதறல் மட்டுமே வந்தது.
வெளியே நின்றிருந்த கூட்டத்தில் ஒருவன், தன் கையில் இருந்த சிலம்பு காம்பை தரையை ஓங்கித் தேய்த்தான். அந்த கம்பு உரசும் சத்தம் நந்தினியின் நரம்புகளைச் சுண்டி இழுத்தது....
அதற்குள் அங்க அம்பிகாவும் வந்து விட , அந்த கூட்டத்தில் நின்றிருந்த அந்த ஒற்றை ஆள், மற்ற எல்லோருக்கும் ஒரு சைகை செய்தான். அவன் கையை உயர்த்தியதும், அந்த 50 முரட்டு ஆட்களும் கைகட்டி இரண்டு அடி பின்னாடி நின்றனர். அந்த ஒரு சைகையில் இருந்த அதிகாரம், அவன் அந்தக் கூட்டத்தின் தலைவன் என்பதை அப்பட்டமாகத் தெரிவித்தது.
அவன் கையில் இருந்த சிலம்பு கம்பை ஒரு சுழற்றுச் சுழற்றினான். அந்தக் கம்பு காற்றில் சுழலும் சத்தம் 'உஷ்... உஷ்...' என்று பயமுறுத்தியது. அவன் மெல்ல, அடிமேல் அடி வைத்து அவர்களை நெருங்கினான்.
பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால், அந்த அதிகாலை வெளிச்சத்தில் அவன் முகம் சரியாகத் தெரியவில்லை. ஒரு இருண்ட உருவம் போலத்தான் தெரிந்தது. ஆனால் அவன் நெருங்க நெருங்க, அவனது முகம் வெளிச்சத்துக்கு வந்தது.
ஒரு கருகருவென்ற முகம், முறுக்கிய மீசை, நெற்றியில் ஒரு பெரியத் தழும்பு. அவன் கண்களில் இருந்த அந்த ரத்த வெறி, ராசுக்குட்டியைத் தேடுவது போல இருந்தது. அம்பிகாவுக்கு அந்த முகம் பழக்கப்பட்டதாக இருந்தது.
"டேய்... நீ... நீ.."
ஆனால், அந்த இருண்ட உருவம் வெளிச்சத்திற்கு வந்ததும், திடீரென ஒரு கள்ளச் சிரிப்பை உதிர்த்தது.
"அட என்ன மாமி... என்னைய அடையாளம் தெரியலையா? நாந்தான்... உங்க ராசுக்குட்டியோட தோஸ்த்து... இந்த ஊரு வேலுவே!" என்று பல்லை இளித்துக்கொண்டே, தன் கையில் இருந்த சிலம்பு காம்பை ஸ்டைலாக ஒரு சுழற்றுச் சுழற்றித் தரையில் ஊன்றினான்.
ஆமாம், இது வேலுக்குட்டிதான்! ராசுக்குட்டியின் சிறுவயது நண்பன் அவனைக் கண்டதும் அம்பிகாவும் நந்தினியும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்று, பின் 'புளக்'கெனச் சிரித்துவிட்டார்கள். நந்தினி தன் பயத்தைத் தள்ளிவிட்டு, "அடப்பாவிகளா... விடியக்காலையிலேயே வந்து மனுசனை இப்படி பீதியாக்கிட்டீங்களே!" என்று மூச்சைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.
![[Image: 20241216-165356.jpg]](https://i.ibb.co/FLTq6VPL/20241216-165356.jpg)
அம்பிகா தன் இடுப்பில் கட்டியிருந்த சேலை முந்தானையை லேசாகத் தளர்த்திவிட்டு, "ஏலேய் வேலு, நீ இங்க என்னடா பண்ணுற? விடிய காலங்காத்தால டிராக்டரைக் கட்டிக்கிட்டு, இம்புட்டு ஆளுகளோட வந்து நிக்குற?" என்று நக்கலாகக் கேட்டாள்.
"என்ன மாமி இப்படி கேட்டுப்புட்டீங்க? என் தோஸ்து ராசுக்குட்டி அஞ்சு வருஷம் கழிச்சு ஊருக்கு வந்திருக்கான். அவனைப் பாக்கணும்னு ஆசையா ஓடி வந்தேன். ஆனா, நேத்து ராத்திரி அவனுக்கு ஏதோ அடிதடி ஆச்சுன்னு கேள்விப்பட்டேன். என் ராசுக்குட்டி மேலேயே கை வைக்க இந்த ஊர்ல எவன்டா துணிஞ்சான்? அவனைப் பார்த்துட்டு சும்மா இருக்கச் சொல்லுறீங்களா என்ன?" என்று வேலு ஆவேசமாகக் கேட்டான்.
வேலு தன் கையில் இருந்த சிலம்பு காம்பை மீண்டும் ஒருமுறை 'உஷ்... உஷ்...' என்று காற்றில் சுழற்றி, "அந்தப் பய எவன், எதுன்னு மட்டும் சொல்லுங்க மாமி... இப்பவே போயி அவன் சோலியை முடிச்சு, பார்சல்ல கட்டி எடுத்துட்டு வந்துடுறேன்!" என்று ஏதோ பார்டர்ல போர் புரியப் போற தளபதி மாதிரி கர்ஜித்தான்.
![[Image: D-2i-WFa-U0-AAZy-GD.jpg]](https://i.ibb.co/XxNz7zm6/D-2i-WFa-U0-AAZy-GD.jpg)
அம்பிகா சிரிப்பை அடக்க முடியாமல், "ஏலேய் வேலு... முதல்ல உன் ஆக்ரோஷத்தை நிறுத்துடா. அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்ல. முதல்ல உன் 'படைத் தளபதி'களையெல்லாம் போச் சொல்லு. தெருவுல போறவன் வர்றவன் எல்லாம் ஏதோ ஷூட்டிங் நடக்குதுன்னு வேடிக்கை பார்க்குறாங்க. உள்ள வா... சூடா ஒரு காப்பியைக் குடிச்சுக்கிட்டே பேசலாம்," என்று சொல்லிவிட்டு, அடுப்பில் வைத்திருந்த பால் பொங்கிவிடப் போகிறதே என அவசரமாக உள்ளே ஓடினாள்.
வேலு தன் நண்பர்களிடம், "டேய்... நீங்க கெளம்புங்கடா! நான் அப்புறமா வர்றேன்!" என்று சைகை காட்ட, அந்த மூணு டிராக்டர்களும் 'டுர்ர்ர்' எனச் சத்தம் போட்டுக்கொண்டு கிளம்பின.
[b]முற்றத்தில் நந்தினி மீண்டும் கோலப்பொடி கிண்ணத்தை எடுத்து கோலம் போட ஆரம்பித்தாள். வேலு சும்மா இருக்காமல், அவளுக்குத் தன் வீரத்தைக் காட்ட வேண்டும் என்று நினைத்தான். கையிலிருந்த சிலம்பு காம்பை விசிறிப் பறக்கவிட்டு, கையைச் சுற்றி, கழுத்தைச் சுற்றி எனப் படுவேகமாகச் சுழற்றினான். ஒரு கட்டத்தில் கம்பை மேலே தூக்கிப் போட்டு கேட்ச் பிடித்து, ஏதோ ஒலிம்பிக் தங்கம் வென்றது போல ஒரு போஸ் கொடுத்தான்.
[/b]
கோலம் போட்டு முடித்து நிமிர்ந்த நந்தினி, அவனை ஒரு இகழ்ச்சியானப் பார்வையால் அளவெடுத்தாள். "ஏலேய்... என்னடா காலங்காத்தால வாசல்ல நின்னு 'சர்க்கஸ்' காமிச்சிட்டு இருக்க? ஊருக்குள்ள வேற எங்கயும் எடம் கிடைக்கலையா உனக்கு?" என்று நக்கலாகக் கேட்டாள்.
![[Image: priyaa.gif]](https://i.ibb.co/PsVRQ5Md/priyaa.gif)
வேலு அப்படியே 'ஷாக்' ஆகிப் போனான். "என்னது... சர்க்கஸா? அடிப்பாவி மகளே! நான் உசுரக் கொடுத்து, காத்துல வித்தை காட்டி, என் வீரத்தைக் காட்டிட்டு இருக்கேன்... நீ என்னடான்னா புசுக்குன்னு சர்க்கஸ்ன்னு சொல்லி என் கௌரவத்தையே காலி பண்ணிட்டியே!" என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சோகமாக நடித்தான்.
"உன்னால பாரு... என் கோலப்பொடி எல்லாம் சிதறி கெடக்கு. மரியாதையா அதைத் துடைச்சுட்டு உள்ள வா, இல்லைன்னா அந்தப் பழைய துடைப்பத்தை எடுத்து உன் காலை ஒடிச்சுருவேன் பாத்துக்க!" என்று நந்தினி குறும்பாகச் சொல்ல,
அப்போது பின்னாடியே வந்த அம்பிகா, "ஏலேய் வேலு... அவ கெடக்கிறா விடு தம்பி, நீ பேசாம உள்ள வா. சூடா காப்பி குடிச்சிட்டுப் போலாம்," என்று அவனை அழைத்தாள்.
"பார்த்தியா நந்தினி... மாமிக்கு இருக்கிற அந்த மரியாதை கூட உனக்கு இல்ல! மாமி... உங்க மரியாதைக்காகவும், அந்தப் பாசத்துக்காகவும் (முக்கியமா அந்த காபிக்காகவும்) நான் உள்ள வரேன்," என்று வீரமாகச் சொன்னவன், தன் மானத்தை விடக் காபி முக்கியம் என்று நினைத்து, சிலம்பு காம்பை ஓரமாய் வைத்துவிட்டுத் துள்ளிக் குதித்து வீட்டுக்குள் நுழைந்தான்.
(சரி, யாருடா இந்த புது கேரக்டர்னு கேக்குறீங்களா? இவன்தான் நம்ம ஹீரோவோட ஆருயிர் நண்பன் சிங்காரவேலன். ஆனா, ஊரே இவனை 'வேலு ன்னுதான் கூப்பிடும். ஆளு பார்க்கப் பயங்கரமான டெரர் பீஸ் மாதிரி இருந்தாலும், மனசு அப்படியே ஒரு குழந்தை மனசு.
அதுலயும் தன் நண்பன் ராசுக்குட்டின்னா இவனுக்கு உசுரு. பள்ளிக்கூட காலத்துல இருந்தே ராசுக்குட்டி மேல அவ்வளவு பாசம். அதான், ராசுக்குட்டிக்கு ஏதோ அடின்னு கேள்விப்பட்டதும், ரத்தக் கொதிப்பு ஏறித் தன் கூட்டாளி, பங்காளிங்களோட டிராக்டர்ல ஏறி வந்துட்டான்.
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன் பாருங்க... 'என்னடா இவனுக்கு இவ்வளவு பில்டப் கொடுக்குறாங்களே'ன்னு நீங்க நினைக்கலாம். அதுக்கு ஒரு பலமான காரணம் இருக்கு நண்பர்களே! நம்ம வேலு கடந்த மூணு வருஷமா நம்ம நந்தினியை ஒருதலையா காதலிச்சுட்டு இருக்கான். இது அவனைத் தவிர இந்த உலகத்துல வேற யாருக்கும் தெரியாது.
சரி, அந்த லவ் மேட்டரை அப்புறமா நிதானமாப் பார்த்துக்கலாம்... இப்போ வாங்க, கதைக்குள்ள போவோம்!)
உள்ளே வந்த சிங்காரவேலன் (நம்ம வேலு ), கட்டிலில் கட்டுடன் படுத்திருந்த தன் நண்பன் ராசுக்குட்டியின் நிலமையைக் கண்டு அப்படியே உறைந்து போய் நின்றான். அந்த முரட்டு உடம்புக்குள் இருந்த மென்மையான இதயம் துடித்தது. நேற்று வரை சிங்கமாகச் சுற்றி வந்தவன், இன்று ஒரு உடைந்த சிலையாகக் கிடப்பதைக் கண்டு அவனது கண்கள் உண்மையிலேயே கலங்கின.
அதற்குள் அம்பிகா ஆவி பறக்கும் காபியுடன் வர, அதை வாங்கிக் குடித்தபடியே ராசுக்குட்டியின் அருகில் அமர்ந்தான் வேலு.
டேய் ராசு... உண்மையச் சொல்லுடா. எந்தப் பய மகன் உன் மேல கை வச்சான்?
ஆனால் ராசுக்குட்டி அமைதியாக இருந்தான். மலர் அத்தையைப் பற்றித் தெரிந்தால் தன் குடும்பத்தின் மானம் போய்விடும், அதுமட்டுமில்லாமல் தன் நண்பன் வேலு ஆவேசத்தில் எதாவது அசம்பாவிதம் செய்துவிடுவான் என்று பயந்தான். கடைசி வரை எவ்வளவோ வற்புறுத்திக் கேட்டும், ராசுக்குட்டி அந்த 'கசப்பான' உண்மையை அவனிடம் சொல்லவே இல்லை. "சும்மா ஏதோ சின்னத் தகராறுடா வேலு... விட்டுடு," என்று மழுப்பிவிட்டான்.
அதுவரை அந்த வீடே ஒரு மயான அமைதியில், சோகத்தில் மூழ்கிக் கிடந்தது. ஆனால் வேலு உள்ளே வந்த பிறகு கதையே மாறிவிட்டது. நண்பன் உண்மையைச் சொல்லவில்லை என்றாலும், அவனைச் சோகத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று முடிவு செய்தான் வேலு
அவன் பேச ஆரம்பித்தான்... தன் வளைகுடா நாட்டுப் பயணக் கனவுகள், ஊருக்குள் அவன் செய்த சின்னச் சின்ன லொள்ளுகள், அந்த மூன்று டிராக்டர் ஆட்களை அவன் எப்படி 'பில்டப்' கொடுத்துக் கூட்டி வந்தான் என்று அவன் விவரிக்க விவரிக்க... அந்த வீடே சிரிப்பொலியில் குலுங்கியது.
"மாமி... இவன் அங்க துபாய்ல ஒட்டகம் மேய்ச்சுட்டு இருந்திருப்பான் போல, இங்க வந்து பெரிய பில்டப் கொடுக்குறான் பாருங்க!"
ராசுக்குட்டியின் முகத்திலும் நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு மெல்லியப் புன்னகை அரும்பியது. தன் நண்பனின் பேச்சும், அந்த வீட்டின் கலகலப்பும் அவனது மனப் பாரத்தைச் சற்று குறைத்தது.
சோகமாக இருந்த அந்த வீடு, வேலுவின் வருகையால் மீண்டும் உயிர் பெற்றது.
![[Image: nayanthara-indian-actress.gif]](https://i.ibb.co/5gjpDjzj/nayanthara-indian-actress.gif)
சரிடா ராசு, நான் போயிட்டு வர்றேன். சாயந்திரம் வந்து பார்க்கிறேன்," என்று சொல்லிவிட்டு வேலு கிளம்ப எத்தனித்தான்.
[b]அப்போது அம்பிகா அவன் கையை வாஞ்சையோடு பற்றிக்கொண்டாள். "ஐயா ராசா... நீ வந்ததுக்கு அப்புறம் தான்யா, ரெண்டு நாளா அழுகையுமாவே இருந்த இந்த வீடு கொஞ்சம் சிரிச்சிருக்கு. நீ வந்தாத்தான் என் புள்ளைக்கும் கொஞ்சம் தெம்பு வருது," என்று நெகிழ்ச்சியோடு சொன்னவள், தன் மகன் போலவே பாவித்து வேலுவின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள்[/b]


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)