27-03-2026, 03:10 PM
(25-03-2026, 05:30 AM)Dheena2003 Wrote: நிச்சயமாக நண்பா! ஆனால் அந்த 90% விடுபட்ட கதைகளுக்கு எழுத்தாளர்கள் மட்டுமே பொறுப்பல்ல, வாசகர்களுக்கும் அதில் சமமான பங்கு உண்டு என்றுதான் நான் சொல்வேன். ஒரு கதையைப் படித்துவிட்டு வாசகர்கள் தரும் ஊக்கமான கருத்துகள்தான் (Comments) எழுத்தாளரை அடுத்த அத்தியாயத்தை நோக்கி ஓடவைக்கும்.
உதாரணத்திற்கு, என்னுடைய இரண்டாம் அத்தியாயத்தைப் பதிவிட்டு 12 மணிநேரம் ஆகியும் ஒரு சிறு கருத்து கூட வரவில்லை. விவேக் ஒரு படத்தில் சொல்வாரே, 'ஆளே இல்லாத கடைக்கு யாருக்குடா டீ ஆத்துற?' என்று, அந்த நிலைமைதான் இங்கேயும். யாரும் கருத்து சொல்லாத இடத்தில் யாருக்காக எழுத வேண்டும் என்ற சலிப்பு ஏற்படுவது இயல்புதான். அதுமட்டுமில்லாமல், கதையோடு சேர்த்து AI உதவியுடன் பிரத்யேகமான படங்களையும் இணைத்து வழங்குகிறேன். இவ்வளவு முயற்சி செய்தும் வரவேற்பு இல்லை என்றால் என்ன பயன்?
தொடர்ந்து 10 அத்தியாயங்கள் வரை எழுதலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அப்போதும் இதே நிலை நீடித்தால், நீங்கள் சொன்ன அந்த 90 சதவீதத்தோடு இதையும் 91-ஆகச் சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றி
உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். வாசகர்களின் பின்னூட்டங்கள் தான் கதாசிரியர்களுக்கு கதையை சிறப்பாக எழுத ஊக்கத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யா சொல்வது போல 'ஒரே நாள்ல டாப்புக்கு போகனும்' என்று நினைக்காதீர்கள். வாசகர்கள் ரசிக்கும்படி கதையை எழுதினால் கண்டிப்பாக உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். அவசரப்படவே கூடாது. எந்தக் கதையாக இருந்தாலும் ஆரம்பத்தில் வரவேற்பு குறைவாகத்தான் இருக்கும். நல்ல கதையாக இருந்தால் போகப்போக அமோகமான வரவேற்பு கிடைக்கும். வாழ்த்துகள்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)