26-03-2026, 03:47 PM
ஒரு வாரம் கழிச்சு… வாழ்க்கை அப்டியே வறட்சியா போயிட்டு இருந்த நேரம் அது. அன்னைக்கு வெள்ளிக்கிழமை. வழக்கம் போல காலையில ஸ்கூலுக்கு போயிட்டு, மதியத்துக்கு மேல ஒரு கிளாஸ்ல பாடம் நடத்திட்டு இருந்தேன். எட்டாம் கிளாஸ் பசங்க, போர்டுல நான் எழுதி போட்டுட்டு திரும்பும் போது என் பேண்ட் பாக்கெட்ல இருந்த போன் வைப்ரேட் ஆச்சு.
போனை எடுத்து பாத்தா ஸ்க்ரீன்ல 'மகா'னு பேரு. பொதுவா ஸ்கூல் டைம்ல அவ கூப்பிட மாட்டா, அவளுக்கும் காலேஜ்ல கிளாஸ் இருக்கும். சரி எதாவது முக்கியமான விஷயமா இருக்கும்னு நெனச்சு, பசங்கள சத்தம் போடாம இருக்க சொல்லிட்டு கிளாஸ விட்டு வெளிய வந்து போனை அட்டென்ட் பண்ணேன்.
"ஹலோ.. சொல்லு மகா, கிளாஸ்ல இருக்கேன்"
நான் கேஷுவலா தான் கேட்டேன். ஆனா எதிர்முனையில இருந்து அவ பேசல. ஒரு விசும்பல் சத்தம் மட்டும் கேட்டுச்சு. எனக்கு தூக்கி வாரி போட்டுருச்சு.
"மகா.. என்னாச்சு? ஏன் அழுற? என்ன பிரச்சனை?" பதட்டமா கேட்டேன்.
"என்னங்க... நீங்க உடனே வீட்டுக்கு வர முடியுமா?" அவ குரல் உடைஞ்சு, தேம்பி தேம்பி அழுதுட்டே கேட்டா.
"வரேன்டி.. ஆனா என்னாச்சுனு சொல்லு முதல்ல.. நீ இப்படி அழுதா எனக்கு எப்டி இருக்கும்?"
"ஊருல பாட்டிக்கு உடம்பு ரொம்ப முடியலையாம்... இப்போ தான் மாமா கால் பண்ணி சொன்னாரு.. சீரியஸா இருக்காம்.. எனக்கு பயமா இருக்குங்க.." சொல்லி முடிக்கும் போதே அவ சத்தம் போட்டு அழ ஆரம்பிச்சுட்டா.
மகாவுக்கு அவ பாட்டியும் மாமாவும் தான் உலகம். சின்ன வயசுலயே அப்பா அம்மாவை இழந்தவ. அவளை ஒரு குறை இல்லாம வளர்த்து ஆளாக்கி, படிக்க வச்சு என் கையில புடிச்சு குடுத்தது அவ பாட்டியும், அவ மாமாவும் தான். அவங்களுக்கு ஒன்னுனா அவ தவிச்சு போயிருவா.
"நீ ஒன்னும் கவலை படாத மகா.. நான் ஹெச்.எம் கிட்ட சொல்லிட்டு உடனே கிளம்பி வரேன். நீ அழாம பேக் பண்ணி வை, நாம உடனே ஊருக்கு கிளம்புறோம்"னு சொல்லிட்டு போனை வச்சேன்.
ஸ்கூல்ல ஹெச்.எம் கிட்ட சொல்லிட்டு, பர்மிஷன் லெட்டர் குடுத்துட்டு என் பைக்கை எடுத்துட்டு வேகமா வீட்டுக்கு வந்தேன். காலேஜ்ல தகவல் தெரிஞ்சு மகாவும் முன்னாடியே வீட்டுக்கு வந்து அழுதுட்டு இருந்தா. அவளை லேசா சமாதானம் பண்ணிட்டு, அவசர அவசரமா ஒரு பேக்ல துணிகளை எடுத்து வச்சுக்கிட்டு, உடனே கார்ல ஏறி ஊருக்கு கிளம்பிட்டோம். சென்னை டிராபிக்கை தாண்டி ஹைவேஸ்ல கார் ஏறுற வரைக்கும் ரெண்டு பேருக்கும் நடுவுல பெரிய பேச்சே இல்ல.
மூணு மணி நேர பயணத்துக்கு அப்புறம் ஒரு வழியா அந்தப் பழைய ஓட்டு வீட்டு வாசல்ல போய் கார் நின்னதுமே, உள்ள இருந்து ஓடி வந்தாரு அவ மாமா மாணிக்கம்.
அவரைப் பாத்ததும் மகா கார்ல இருந்து இறங்கி, "மாமாஆஆ"னு கத்திக்கிட்டே ஓடிப்போய் அவரை அப்படியே கட்டிக்கிட்டா.
நான் கார்ல இருந்து இறங்கி அந்த சீனை அப்படியே வெறிச்சுப் பாத்துட்டு நின்னேன்.
"ஒன்னும் இல்ல மகா.. உள்ள வா"னு அவளைத் தேத்திக்கிட்டே உள்ள கூட்டிட்டு போனாரு மாமா. என்னைப் பாத்து கை கூப்பி "வாங்க மாப்பிள்ள"னு சொல்லிட்டு உள்ள போனாரு.
நானும் பின்னாடியே போனேன். ஹால்ல பாயை விரிச்சு பெட்ஷீட் போட்டு பாட்டியைப் படுக்க வச்சிருந்தாங்க. இப்போ தான் கவர்மெண்ட் ஆஸ்பத்திரில இருந்து கூட்டிட்டு வந்திருக்காங்க. இனிமே அவங்களால எந்த வேலையும் செய்ய முடியாது, வீட்லயே வச்சு பாத்துக்கோங்கனு டாக்டர் சொல்லிட்டாராம். பாட்டிக்கு சுயநினைவு லேசா தான் இருந்துச்சு.
அவங்கள சுத்தி ஊர்க்கார பொம்பளைங்க ஒரு நாலஞ்சு பேரு நின்னுகிட்டு, வாய் கூசாம மாணிக்கம் மாமாவை கண்டபடி திட்டிட்டு இருந்தாங்க. "இந்த வயசுலயும் கல்யாணம் பண்ணிக்காம, ஒரு கெழவி கிட்ட இப்படி வேல வாங்கிட்டு இருந்தா அப்புறம் எப்படி அவ நல்லா இருப்பா? சமைச்சு போடுறதுல இருந்து துணி துவைக்கிறது வரைக்கும் அவளையே பாடாப்படுத்துனா இப்படித்தான் ஆகும்"னு அவரை வறுத்தெடுத்துட்டு இருந்தாங்க. மாமா எதுவும் பேசாம அமைதியா நின்னுட்டு இருந்தாரு.
போனை எடுத்து பாத்தா ஸ்க்ரீன்ல 'மகா'னு பேரு. பொதுவா ஸ்கூல் டைம்ல அவ கூப்பிட மாட்டா, அவளுக்கும் காலேஜ்ல கிளாஸ் இருக்கும். சரி எதாவது முக்கியமான விஷயமா இருக்கும்னு நெனச்சு, பசங்கள சத்தம் போடாம இருக்க சொல்லிட்டு கிளாஸ விட்டு வெளிய வந்து போனை அட்டென்ட் பண்ணேன்.
"ஹலோ.. சொல்லு மகா, கிளாஸ்ல இருக்கேன்"
நான் கேஷுவலா தான் கேட்டேன். ஆனா எதிர்முனையில இருந்து அவ பேசல. ஒரு விசும்பல் சத்தம் மட்டும் கேட்டுச்சு. எனக்கு தூக்கி வாரி போட்டுருச்சு.
"மகா.. என்னாச்சு? ஏன் அழுற? என்ன பிரச்சனை?" பதட்டமா கேட்டேன்.
"என்னங்க... நீங்க உடனே வீட்டுக்கு வர முடியுமா?" அவ குரல் உடைஞ்சு, தேம்பி தேம்பி அழுதுட்டே கேட்டா.
"வரேன்டி.. ஆனா என்னாச்சுனு சொல்லு முதல்ல.. நீ இப்படி அழுதா எனக்கு எப்டி இருக்கும்?"
"ஊருல பாட்டிக்கு உடம்பு ரொம்ப முடியலையாம்... இப்போ தான் மாமா கால் பண்ணி சொன்னாரு.. சீரியஸா இருக்காம்.. எனக்கு பயமா இருக்குங்க.." சொல்லி முடிக்கும் போதே அவ சத்தம் போட்டு அழ ஆரம்பிச்சுட்டா.
மகாவுக்கு அவ பாட்டியும் மாமாவும் தான் உலகம். சின்ன வயசுலயே அப்பா அம்மாவை இழந்தவ. அவளை ஒரு குறை இல்லாம வளர்த்து ஆளாக்கி, படிக்க வச்சு என் கையில புடிச்சு குடுத்தது அவ பாட்டியும், அவ மாமாவும் தான். அவங்களுக்கு ஒன்னுனா அவ தவிச்சு போயிருவா.
"நீ ஒன்னும் கவலை படாத மகா.. நான் ஹெச்.எம் கிட்ட சொல்லிட்டு உடனே கிளம்பி வரேன். நீ அழாம பேக் பண்ணி வை, நாம உடனே ஊருக்கு கிளம்புறோம்"னு சொல்லிட்டு போனை வச்சேன்.
ஸ்கூல்ல ஹெச்.எம் கிட்ட சொல்லிட்டு, பர்மிஷன் லெட்டர் குடுத்துட்டு என் பைக்கை எடுத்துட்டு வேகமா வீட்டுக்கு வந்தேன். காலேஜ்ல தகவல் தெரிஞ்சு மகாவும் முன்னாடியே வீட்டுக்கு வந்து அழுதுட்டு இருந்தா. அவளை லேசா சமாதானம் பண்ணிட்டு, அவசர அவசரமா ஒரு பேக்ல துணிகளை எடுத்து வச்சுக்கிட்டு, உடனே கார்ல ஏறி ஊருக்கு கிளம்பிட்டோம். சென்னை டிராபிக்கை தாண்டி ஹைவேஸ்ல கார் ஏறுற வரைக்கும் ரெண்டு பேருக்கும் நடுவுல பெரிய பேச்சே இல்ல.
மூணு மணி நேர பயணத்துக்கு அப்புறம் ஒரு வழியா அந்தப் பழைய ஓட்டு வீட்டு வாசல்ல போய் கார் நின்னதுமே, உள்ள இருந்து ஓடி வந்தாரு அவ மாமா மாணிக்கம்.
அவரைப் பாத்ததும் மகா கார்ல இருந்து இறங்கி, "மாமாஆஆ"னு கத்திக்கிட்டே ஓடிப்போய் அவரை அப்படியே கட்டிக்கிட்டா.
நான் கார்ல இருந்து இறங்கி அந்த சீனை அப்படியே வெறிச்சுப் பாத்துட்டு நின்னேன்.
"ஒன்னும் இல்ல மகா.. உள்ள வா"னு அவளைத் தேத்திக்கிட்டே உள்ள கூட்டிட்டு போனாரு மாமா. என்னைப் பாத்து கை கூப்பி "வாங்க மாப்பிள்ள"னு சொல்லிட்டு உள்ள போனாரு.
நானும் பின்னாடியே போனேன். ஹால்ல பாயை விரிச்சு பெட்ஷீட் போட்டு பாட்டியைப் படுக்க வச்சிருந்தாங்க. இப்போ தான் கவர்மெண்ட் ஆஸ்பத்திரில இருந்து கூட்டிட்டு வந்திருக்காங்க. இனிமே அவங்களால எந்த வேலையும் செய்ய முடியாது, வீட்லயே வச்சு பாத்துக்கோங்கனு டாக்டர் சொல்லிட்டாராம். பாட்டிக்கு சுயநினைவு லேசா தான் இருந்துச்சு.
அவங்கள சுத்தி ஊர்க்கார பொம்பளைங்க ஒரு நாலஞ்சு பேரு நின்னுகிட்டு, வாய் கூசாம மாணிக்கம் மாமாவை கண்டபடி திட்டிட்டு இருந்தாங்க. "இந்த வயசுலயும் கல்யாணம் பண்ணிக்காம, ஒரு கெழவி கிட்ட இப்படி வேல வாங்கிட்டு இருந்தா அப்புறம் எப்படி அவ நல்லா இருப்பா? சமைச்சு போடுறதுல இருந்து துணி துவைக்கிறது வரைக்கும் அவளையே பாடாப்படுத்துனா இப்படித்தான் ஆகும்"னு அவரை வறுத்தெடுத்துட்டு இருந்தாங்க. மாமா எதுவும் பேசாம அமைதியா நின்னுட்டு இருந்தாரு.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)