Adultery ஆசை மயக்கத்தில் அடிமை ஆனாள்
#40
அந்த இரவு முழுவதும் நப்பேசா தன் குழந்தையை இறுக்கமாக அணைத்தபடி உட்கார்ந்திருந்தாள்.
இம்ரானின் தந்தை அறைக்குள் நுழைந்தார். அவரது முகம் களைப்பாகவும், பதற்றமாகவும் இருந்தது.

“இங்க பாரு மா ... இம்ரான் மட்டும்தான் கொல்லப்பட்டான். அவன் சகோதரன்னால் நீ இன்னும் உயிரோடு இருக்க . அவன்தான் இப்போது மிகவும் ஆபத்தானவன்,” என்றார் அவர் குரல் தாழ்ந்து.நப்பேசாவின் கண்கள் பயத்தில் விரிந்தன.“அவன் சகோதரனும், அந்த பேராசைக்கார உறவினர்களும் சொத்து முழுவதையும் வேண்டும்னு பார்த்தாங்க. இம்ரான் தடையா இருந்தான். அதனால அவனை முடிச்சிட்டாங்க. இப்போ அவன் சகோதரன் எல்லாத்தையும் கைப்பற்ற வருவான்.

நீயும் இந்த குழந்தையும் சாட்சியா இருக்கிறீங்க. உன்னை இங்கே பார்த்தா, இரண்டு பேரையும் சும்மா விடமாட்டான். கொன்னு போட்டுடுவான்.”நப்பேசா நடுங்கினாள். குழந்தையை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.

நான்... என்ன செய்யட்டும்?” என்று குரல் தழுதழுத்தது.இம்ரானின் தந்தை தலையை ஆட்டினார்.“நீ எங்கே போறேன்னு என் கிட்ட சொல்லாதே. எனக்கு தெரியவே கூடாது. நான் கேட்டா, ‘தெரியாது’ன்னு உண்மையா சொல்ல முடியும். இன்று இரவே உன் பொருட்களை எடுத்துக்கோ. கொஞ்சம் பணமும் நான் ஏற்பாடு பண்றேன்.

ஆனா ஒரு விஷயம்... இந்த வீட்டை விட்டு நீ வெளியே போன பிறகு, முழுக்க மறைஞ்சு போயிடணும். எனக்கு போன் பண்ணாதே, மெசேஜ் பண்ணாதே, எதுவும் பண்ணாதே.”நப்பேசா மெதுவாக தலையசைத்தாள்.

கண்ணீர் முகத்தில் வழிந்தது.“நான் தமிழ்நாட்டுக்கு போறேன்,” என்றாள் மனத்தரிக்குள் அமைதியாக.
கண்டிப்பா விஷால் கிட்ட திரும்ப போக முடியாது ,எங்க அம்மா அப்பா கிட்டயும் போக முடியாது அழுதாள் ....


சேலம் அருகில் ஒரு சின்ன ஊர்ல சென்று விடலாம் . அங்கே யாருக்கும் நான் திவ்யான்னு தெரியாது. . டெல்லிக்கு ஒருபோதும் திரும்பி வரமாட்டேன். ஒருபோதும் இல்லை.”இம்ரானின் தந்தை அவளை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தார்.

இன்று இரவே போ. சூரியன் உதிக்கும் முன்னாடி. அவங்க உன்னை தேடி வராம இருக்கணும்னு பிரார்த்தனை பண்ணு.”நள்ளிரவில், இருள் மறைவில் நப்பேசா தன் குழந்தையுடனும் ஒரு சின்ன பையுடனும் வீட்டை விட்டு வெளியேறினாள்.

ஆட்டோவில் ரயில் நிலையத்துக்கு சென்று, டெல்லியில் இருந்து சென்னைக்கு செல்லும் முதல் ரயிலில் ஏறினாள். ரயில் இருளில் பயணிக்கும் போது, தூங்கிக்கொண்டிருக்கும் தன் குழந்தையைப் பார்த்து மெதுவாக முணுமுணுத்தாள்

“இனிமேல்... அமைதியா வாழ்வோம். நீயும் நானும் மட்டும்.

[Image: unnamed.jpg]
Like Reply


Messages In This Thread
RE: ஆசை மயக்கத்தில் அடிமை ஆனாள் - by sreejachandranhot - 24-03-2026, 11:16 AM



Users browsing this thread: 1 Guest(s)