02-03-2026, 12:36 PM
8
வித்யாவுக்கு இனிமேல் இந்த இரவு தூங்கா இரவாக போகின்றது என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. நேரத்தை பார்க்க அது இரவு ஒரு மணி என்று கூறியது. தனது செல்போனை எடுத்தவள் தான் மன அமைதி தேடும் ஒரே ஜீவனான சாரதாவுக்கு கால் செய்ய அது முதல் ரிங்கிலேயே ஏற்கப்பட்டது.
" என்ன சாரதா தூங்கல்லயா?" என்̀று கேட்க மறுமுனையில் சாரதா அமைதியாக இருந்தால். " ஏய் உன்னத்தான்" என்று சற்று சத்தமாக கூற சாரதா, " நீ தூங்கல்லயா வித்யா?" என்று கேட்டதும்தான் தாமதம் வித்யா அழத் துவங்கினால்.
" நான் யாருக்கு என்ன பாவம்டி பண்ணேன். எனக்கு தெரிஞ்சி நான் இதுவரைக்கும் யாரு வாழ்க்கையயும் கெடுத்ததில்ல. ஆனால் எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடந்துச்சி. பேசாம சாகலாமான்னு பார்த்தா அதுக்கும் தைரியம் இல்ல எனக்கு" என்று அவள் மனதில் இருக்கு ஆதங்கத்தை கூறினால்.
" வித்யா நல்லா யோசி. யார் வாழ்க்கையையும் நீ கெடுத்ததில்லயா? அப்போ ரவீந்தர் வாழ்க்கைய யாரு கெடுத்தா. உன் வாழ்க்கை ரவீந்தர் கூட நல்லா தானே போயிட்டு இருந்திச்சி. அப்புறமா எதுக்கு நீ சித்தார்த் கூட காண்டாக்ட் வெச்சிக்கிட்ட"
" என்ன சாரதா குத்தி காட்டுறியா. என்ன குத்திக்காட்டுறியான்னு கேட்கிறேன். ஆமா நான் காண்டாக்ட் வெச்சிக்கிட்டேன். எப்போ? கல்யாணம் ஆனதுமா? இல்லையே. ரவீந்தர் என்ன சந்தேகப்பட ஆரம்பிச்சதும்தானே. எதுக்கு எடுத்தாலும் சந்தேகம். ஸ்கூலுக்கு போகும் போது அழகா சாரி கட்டினா தப்பு. வரும் போது சாரி கசங்கி இருந்தாலும் தப்பு. ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் கூட சிரிச்சு பேசினாலும் தப்பு. அதுவும் பசங்ககிட்ட பேசினா சொல்லவே வேணாம். வெளியில சொல்லவே வாய் கூசுது. உனக்கே தெரியும்ல தினேஷ், அவன் அப்போ பத்தாவது படிச்சிக்கிட்டு இருந்தான். அவன் அப்பா போன்ல இருந்து ஏதோ சந்தேகம் கேட்க நைட்டு கால் பண்ணான். அத ரவீந்தர் எப்படி எல்லாம் சொல்லி திட்டினான் தெரியுமா. உனக்கு சொன்னா புரியாது சாரதா, அந்த இடத்துல நீ இருந்திருக்கனும். நல்ல வேலை அவரு தினேஷ்கிட்ட எதுவும் சொல்லல. ஆனா எனக்குத்தான் அடுத்த நாள் தினேஷ் முகத்த பார்க்க முடியாம போயிடிச்சி. நின்னா குத்தனம், இருந்தா குத்தம், நடந்தா குத்தம், படுத்தா...... ஹ்ம்ம் சொல்ல வேணாம். எவன நினைச்சிக்கிட்டு படுக்குறன்னு ஒரு கேள்வி" என்று அழுதபடியே பேசினால்.
" வித்யா, அதுக்காக நீ சித்தார்த்த கூப்பிடுவியா. அதனால உன் வாழ்க்கை என்னாச்சி பார்த்தியா?" என்று சாரதா கேட்க வித்யா, " சரி சாரதா அது நான் பண்ண பெரிய முட்டாள்தனம்தான். எதேர்ச்சையா ஒரு நாள் அவன கடைவீதியில பார்த்தேன். சும்மாதான் பேசிக்கிட்டோம். ஆரம்பத்துல அவன் எங்க பழைய ரிலேசன்ஷிப் பத்தி எல்லாம் எதுவுமே பேசல்ல. ஒரு நாள் போன்ல அவன் அவசரமா ஏதோன்னு கூப்பிட்டான். அன்னைக்கு அவன் கூட பேசும் போது ரவீந்தர் கத்த ஆரம்பிச்சிட்டாரு. அது சித்தார்த்துக்கு கேட்டுடிச்சி. அடுத்த நாள் அவன் என்கிட்ட என்ன நடத்திச்சின்னு கேட்க, நான் என் மனசுல இருந்த எல்லாத்தையும் அவன் கிட்ட கொட்டிட்டேன். ஆரம்பத்துல அவனும் அன்பாத்தான் இருந்தான். வெறும் பேச்சு மட்டும்தான் எங்களுக்குள்ள இருந்திச்சி. போகப்போக வெறும் பேச்சா இருந்த எங்க அன்பு தொட்டு பேசுற அளவுக்கு முன்னேறி எல்லாம் கை மீறி போயிடிச்சி. சித்தார்த் என்ன கல்யாணம் பண்ணிக்குவான்னு நினைச்சேன். ஆனா அவன் கடைசியா என்ன கேட்ட வார்த்தை இன்னும் கொல்லுது. 'ஆறுதல் தேட எங்கிட்ட மட்டும்தான் வந்தியா இல்லை இன்னும் வேற ஆளுங்களும் இருக்காங்களா'ன்னு கேட்டான். அப்போதான் புரிஞ்சது எல்லா ஆம்பளைங்களும் ஒன்னுதான்னு. அவனுங்களுக்கு தேவை இந்த உடம்பு. அது கிடைக்கிற வரைக்கும் தான் மானே, தேனே, பொன்மானே. கிடைச்சிடிச்சின்னா ஸ்லட், ஹோர், பிட்ச்" என்றவள் சத்தமாக சிரித்தாள்.
" நீ தூங்கு சாரதா. இப்போதான் எனக்கு மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனா மாதிரி இருக்கு. நான் ஒரு பெக் போட்டுட்டு தூங்க போறேன்" என்றவள் காலை கட் செய்தால்.
இரவு நேரங்களில் வித்யா சாரதாவை கால் செய்து கூப்பிடுவது வழமையான ஒன்று. அந்த இரவுகளில் இரவர்களுக்குள் சம்பாஷனை இது போலவே இருக்கும். கொஞ்சம் கூட மாறாது. காரணம், மனதில் இருக்கு ரணத்தை வெளியில் கொட்ட ஒரு ஜீவன் வேண்டும். வித்யாவின் மனதில் இருக்கும் ரணங்களை வாங்கிக்கொள்ளும் ஜீவன் தான் சாரதா. வித்யா 'நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்' என்று ஆரம்பித்தால், சாரதா ' நீ ரவீந்தரை ஏமாற்றவில்லையா' என கேட்பால். ஆனால் சாரதாவுக்கு தெரியும் ரவீந்தர் அவளுக்கு செய்த கொடுமைகள். இருந்தாலும் அந்த சம்பாசனை தொடர சாரதாவுக்கு ஒரு பிடிமானம் தேவை. வித்யாவுக்கு தன்னுடன் சேர்ந்து ஒத்து ஊதும் நபர் தேவை இல்லை. அவளுக்கு சரி சமமாக எதிர்த்து பேசுபவர்களைதான் ரொம்பவும் பிடிக்கும். சாரதாவுக்கு அது தெரிந்ததால் வித்யா எப்போதெல்லாம் மன ஆறுதலுக்காக அவளை கூப்பிட்டாலும் இவள் அவளுடன் சரி சமமாக மல்லுக்கு நிற்பால். இதனாலேயே இவர்களின் நட்பு மிகவும் உறுதியாகவும் ஒருவருக்கு ஒருவர் உறுதுனையாகவும் இருந்தது.
————————————————————————————-
சங்கவியுடனான உரையாடலின் பின் ஜீவாவின் மனதில் ஒரு சலனம் ஏற்பட ஆரம்பித்திருந்தது. சாரதாவை பற்றிய அவனின் எண்ணங்கள் மாற்றம் பெற தொடங்கியது. காதலிக்க ஆரம்பித்துவிட்டானா? என்று கேட்டால் பதில் இல்லை. ஆரம்பத்தில் சங்கவி சாரதாவையும் அவனையும் இணைத்து பேசியதின் பின், எப்போது அவள் கால் செய்தாலும் சாரதாவை பற்றி கேட்காமல் இருக்க மாட்டாள். அவள் கேட்கும் முதல் கேள்வியே " உன் ஆளு எப்படி இருக்கா" என்பதுதான். ஆனந்தி அவனுடன் பேசும் போது அவனுக்கு மரியாதை கொடுத்து பெசினாலும் சங்கவி அவனை நீ, வா, போ என்று கூறும் டிபிக்கல் தங்கையாக மாறி இருந்தால். அது அவனுக்கும் பிடித்திருந்தது. ஒரு நாள் அவள் " உன் ஆளு எப்படி இருக்கா" என்று கேட்க,
" என்ன எப்படி இருக்கான்னு ஒருமையில கேட்குற. எப்படி இருக்காங்கன்னு கேட்கனும். என்ன இருந்தாலும் நாளைக்கு உனக்கு அண்ணியா வரப்போறவங்க" என்று அவன் விளையாட்டாக கூற அவள் அதை ஆனந்தியிடம் கூறி இருவரும் சேர்ந்து ஜீவாவை ஒரு வழி பண்ணிவிட்டனர். அருகில் இருக்கும் போது கிடைக்காத தன் தங்கைகளின் அன்பை அவன் தூர இருந்து தேவைக்கு அதிகமாகவே எடுத்துக்கொண்டான்.
தன் தங்கைகள் தன்னையும் சாரதாவையும் சேர்த்து கேலி பேசுவது அவனுக்கு இப்போதெல்லாம் மிகவும் பிடித்திருந்தது. எந்த ஆணுக்குத்தான் தன்னை இன்னொரு பெண்ணுடன் சேர்த்து கேலி பேசுவது பிடிக்காது. அப்படியான கேலிகள் சுகமான அவஸ்த்தைகள். அந்த அவஸ்த்தைகளை ஜீவா அனுபவிக்க தொடங்கியதுதான் அவன் செய்த தவறு.
இப்போதெல்லாம் சாரதாவுடன் அவன் பேசும் போது அவள் முகத்தை மட்டும் பார்ப்பதில்லை. அவள் கண்கள் செய்யும் சேட்டைகள், அவள் காதில் ஆடும் ஜிமிக்கியின் நடனம், அவள் அலைபாயும் கூந்தலின் அழகு என அவன் அவளை அணு அணுவாக ரசிக்க ஆரம்பித்திருந்தான். இருந்தாலும் மனதின் ஓரத்தில் பார்த்து நான்கு நாட்களிலேயே காதலா? என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்வான். ஆனால் பதில்தான் அவனுக்கு கிடைக்காது.
" என்ன ஜீவா சார். எப்படி இருக்கீங்க. நம்ம ஸ்கூலோட லிட்டில் ப்ரின்ஸஸ் ரெண்டு பேரு இன்னைக்கு கிக்பாக்சிங்க் டூர்னமனண்ட் போயிட்டு வர்றாங்க. அத்தோட கிக்பாக்சிங்க் கோச்சிற்கும் இன்னையோட பெயார்வெல். இனிமே அந்த ரெண்டு ப்ரின்சஸ்கும் நீங்கதான் பொறுப்பு. பார்த்து சூதானமா நடந்துக்குங்க. ரெண்டுமே அறுந்த வாலுங்க" என்று சக ஆசிரியை ஒருவர் கூற அவன் அவரைப் பார்த்து புன்னகைத்தான்.
" சாரதா மிஸ் எங்க. ஆளவே கானோம்" என்று கேட்க அவர், " அவங்க இன்னைக்கு ரொம்ப பிசி. ஆள பிடிக்கவே முடியாது" என்று கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
ஏற்கனவே ஜீவா, ஜனனி மற்றும் சனா பற்றி சக ஆசிரியர்கள் கூற பல விடயங்கள் அறிந்திருந்தான். இருந்தாலும் அவனுக்கு அவர்களை காண வேண்டும் என்ற ஆவல் மிகவும் அதிகமாக இருந்தது. போட்டியில் ஜனனி முதலாம் இடமும், சனா மூண்றாம் இடமும் ஜெயித்திருக்க அந்த ஸ்கூல் முழுவதும் அவர்களை வரவேற்க திரண்டிருந்தது. ஜனனியும் சனாவும் மேடை ஏற ஜனனியை கண்ட ஜீவா ஒரு கணம் அப்படியே ஸ்தம்பித்து நின்றான். அவன் மனது இது உண்மையாக இருக்க கூடாது என்று பிரார்த்தனையும் செயதது.
----------------------
வித்யாவுக்கு இனிமேல் இந்த இரவு தூங்கா இரவாக போகின்றது என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. நேரத்தை பார்க்க அது இரவு ஒரு மணி என்று கூறியது. தனது செல்போனை எடுத்தவள் தான் மன அமைதி தேடும் ஒரே ஜீவனான சாரதாவுக்கு கால் செய்ய அது முதல் ரிங்கிலேயே ஏற்கப்பட்டது.
" என்ன சாரதா தூங்கல்லயா?" என்̀று கேட்க மறுமுனையில் சாரதா அமைதியாக இருந்தால். " ஏய் உன்னத்தான்" என்று சற்று சத்தமாக கூற சாரதா, " நீ தூங்கல்லயா வித்யா?" என்று கேட்டதும்தான் தாமதம் வித்யா அழத் துவங்கினால்.
" நான் யாருக்கு என்ன பாவம்டி பண்ணேன். எனக்கு தெரிஞ்சி நான் இதுவரைக்கும் யாரு வாழ்க்கையயும் கெடுத்ததில்ல. ஆனால் எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடந்துச்சி. பேசாம சாகலாமான்னு பார்த்தா அதுக்கும் தைரியம் இல்ல எனக்கு" என்று அவள் மனதில் இருக்கு ஆதங்கத்தை கூறினால்.
" வித்யா நல்லா யோசி. யார் வாழ்க்கையையும் நீ கெடுத்ததில்லயா? அப்போ ரவீந்தர் வாழ்க்கைய யாரு கெடுத்தா. உன் வாழ்க்கை ரவீந்தர் கூட நல்லா தானே போயிட்டு இருந்திச்சி. அப்புறமா எதுக்கு நீ சித்தார்த் கூட காண்டாக்ட் வெச்சிக்கிட்ட"
" என்ன சாரதா குத்தி காட்டுறியா. என்ன குத்திக்காட்டுறியான்னு கேட்கிறேன். ஆமா நான் காண்டாக்ட் வெச்சிக்கிட்டேன். எப்போ? கல்யாணம் ஆனதுமா? இல்லையே. ரவீந்தர் என்ன சந்தேகப்பட ஆரம்பிச்சதும்தானே. எதுக்கு எடுத்தாலும் சந்தேகம். ஸ்கூலுக்கு போகும் போது அழகா சாரி கட்டினா தப்பு. வரும் போது சாரி கசங்கி இருந்தாலும் தப்பு. ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் கூட சிரிச்சு பேசினாலும் தப்பு. அதுவும் பசங்ககிட்ட பேசினா சொல்லவே வேணாம். வெளியில சொல்லவே வாய் கூசுது. உனக்கே தெரியும்ல தினேஷ், அவன் அப்போ பத்தாவது படிச்சிக்கிட்டு இருந்தான். அவன் அப்பா போன்ல இருந்து ஏதோ சந்தேகம் கேட்க நைட்டு கால் பண்ணான். அத ரவீந்தர் எப்படி எல்லாம் சொல்லி திட்டினான் தெரியுமா. உனக்கு சொன்னா புரியாது சாரதா, அந்த இடத்துல நீ இருந்திருக்கனும். நல்ல வேலை அவரு தினேஷ்கிட்ட எதுவும் சொல்லல. ஆனா எனக்குத்தான் அடுத்த நாள் தினேஷ் முகத்த பார்க்க முடியாம போயிடிச்சி. நின்னா குத்தனம், இருந்தா குத்தம், நடந்தா குத்தம், படுத்தா...... ஹ்ம்ம் சொல்ல வேணாம். எவன நினைச்சிக்கிட்டு படுக்குறன்னு ஒரு கேள்வி" என்று அழுதபடியே பேசினால்.
" வித்யா, அதுக்காக நீ சித்தார்த்த கூப்பிடுவியா. அதனால உன் வாழ்க்கை என்னாச்சி பார்த்தியா?" என்று சாரதா கேட்க வித்யா, " சரி சாரதா அது நான் பண்ண பெரிய முட்டாள்தனம்தான். எதேர்ச்சையா ஒரு நாள் அவன கடைவீதியில பார்த்தேன். சும்மாதான் பேசிக்கிட்டோம். ஆரம்பத்துல அவன் எங்க பழைய ரிலேசன்ஷிப் பத்தி எல்லாம் எதுவுமே பேசல்ல. ஒரு நாள் போன்ல அவன் அவசரமா ஏதோன்னு கூப்பிட்டான். அன்னைக்கு அவன் கூட பேசும் போது ரவீந்தர் கத்த ஆரம்பிச்சிட்டாரு. அது சித்தார்த்துக்கு கேட்டுடிச்சி. அடுத்த நாள் அவன் என்கிட்ட என்ன நடத்திச்சின்னு கேட்க, நான் என் மனசுல இருந்த எல்லாத்தையும் அவன் கிட்ட கொட்டிட்டேன். ஆரம்பத்துல அவனும் அன்பாத்தான் இருந்தான். வெறும் பேச்சு மட்டும்தான் எங்களுக்குள்ள இருந்திச்சி. போகப்போக வெறும் பேச்சா இருந்த எங்க அன்பு தொட்டு பேசுற அளவுக்கு முன்னேறி எல்லாம் கை மீறி போயிடிச்சி. சித்தார்த் என்ன கல்யாணம் பண்ணிக்குவான்னு நினைச்சேன். ஆனா அவன் கடைசியா என்ன கேட்ட வார்த்தை இன்னும் கொல்லுது. 'ஆறுதல் தேட எங்கிட்ட மட்டும்தான் வந்தியா இல்லை இன்னும் வேற ஆளுங்களும் இருக்காங்களா'ன்னு கேட்டான். அப்போதான் புரிஞ்சது எல்லா ஆம்பளைங்களும் ஒன்னுதான்னு. அவனுங்களுக்கு தேவை இந்த உடம்பு. அது கிடைக்கிற வரைக்கும் தான் மானே, தேனே, பொன்மானே. கிடைச்சிடிச்சின்னா ஸ்லட், ஹோர், பிட்ச்" என்றவள் சத்தமாக சிரித்தாள்.
" நீ தூங்கு சாரதா. இப்போதான் எனக்கு மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனா மாதிரி இருக்கு. நான் ஒரு பெக் போட்டுட்டு தூங்க போறேன்" என்றவள் காலை கட் செய்தால்.
இரவு நேரங்களில் வித்யா சாரதாவை கால் செய்து கூப்பிடுவது வழமையான ஒன்று. அந்த இரவுகளில் இரவர்களுக்குள் சம்பாஷனை இது போலவே இருக்கும். கொஞ்சம் கூட மாறாது. காரணம், மனதில் இருக்கு ரணத்தை வெளியில் கொட்ட ஒரு ஜீவன் வேண்டும். வித்யாவின் மனதில் இருக்கும் ரணங்களை வாங்கிக்கொள்ளும் ஜீவன் தான் சாரதா. வித்யா 'நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்' என்று ஆரம்பித்தால், சாரதா ' நீ ரவீந்தரை ஏமாற்றவில்லையா' என கேட்பால். ஆனால் சாரதாவுக்கு தெரியும் ரவீந்தர் அவளுக்கு செய்த கொடுமைகள். இருந்தாலும் அந்த சம்பாசனை தொடர சாரதாவுக்கு ஒரு பிடிமானம் தேவை. வித்யாவுக்கு தன்னுடன் சேர்ந்து ஒத்து ஊதும் நபர் தேவை இல்லை. அவளுக்கு சரி சமமாக எதிர்த்து பேசுபவர்களைதான் ரொம்பவும் பிடிக்கும். சாரதாவுக்கு அது தெரிந்ததால் வித்யா எப்போதெல்லாம் மன ஆறுதலுக்காக அவளை கூப்பிட்டாலும் இவள் அவளுடன் சரி சமமாக மல்லுக்கு நிற்பால். இதனாலேயே இவர்களின் நட்பு மிகவும் உறுதியாகவும் ஒருவருக்கு ஒருவர் உறுதுனையாகவும் இருந்தது.
————————————————————————————-
சங்கவியுடனான உரையாடலின் பின் ஜீவாவின் மனதில் ஒரு சலனம் ஏற்பட ஆரம்பித்திருந்தது. சாரதாவை பற்றிய அவனின் எண்ணங்கள் மாற்றம் பெற தொடங்கியது. காதலிக்க ஆரம்பித்துவிட்டானா? என்று கேட்டால் பதில் இல்லை. ஆரம்பத்தில் சங்கவி சாரதாவையும் அவனையும் இணைத்து பேசியதின் பின், எப்போது அவள் கால் செய்தாலும் சாரதாவை பற்றி கேட்காமல் இருக்க மாட்டாள். அவள் கேட்கும் முதல் கேள்வியே " உன் ஆளு எப்படி இருக்கா" என்பதுதான். ஆனந்தி அவனுடன் பேசும் போது அவனுக்கு மரியாதை கொடுத்து பெசினாலும் சங்கவி அவனை நீ, வா, போ என்று கூறும் டிபிக்கல் தங்கையாக மாறி இருந்தால். அது அவனுக்கும் பிடித்திருந்தது. ஒரு நாள் அவள் " உன் ஆளு எப்படி இருக்கா" என்று கேட்க,
" என்ன எப்படி இருக்கான்னு ஒருமையில கேட்குற. எப்படி இருக்காங்கன்னு கேட்கனும். என்ன இருந்தாலும் நாளைக்கு உனக்கு அண்ணியா வரப்போறவங்க" என்று அவன் விளையாட்டாக கூற அவள் அதை ஆனந்தியிடம் கூறி இருவரும் சேர்ந்து ஜீவாவை ஒரு வழி பண்ணிவிட்டனர். அருகில் இருக்கும் போது கிடைக்காத தன் தங்கைகளின் அன்பை அவன் தூர இருந்து தேவைக்கு அதிகமாகவே எடுத்துக்கொண்டான்.
தன் தங்கைகள் தன்னையும் சாரதாவையும் சேர்த்து கேலி பேசுவது அவனுக்கு இப்போதெல்லாம் மிகவும் பிடித்திருந்தது. எந்த ஆணுக்குத்தான் தன்னை இன்னொரு பெண்ணுடன் சேர்த்து கேலி பேசுவது பிடிக்காது. அப்படியான கேலிகள் சுகமான அவஸ்த்தைகள். அந்த அவஸ்த்தைகளை ஜீவா அனுபவிக்க தொடங்கியதுதான் அவன் செய்த தவறு.
இப்போதெல்லாம் சாரதாவுடன் அவன் பேசும் போது அவள் முகத்தை மட்டும் பார்ப்பதில்லை. அவள் கண்கள் செய்யும் சேட்டைகள், அவள் காதில் ஆடும் ஜிமிக்கியின் நடனம், அவள் அலைபாயும் கூந்தலின் அழகு என அவன் அவளை அணு அணுவாக ரசிக்க ஆரம்பித்திருந்தான். இருந்தாலும் மனதின் ஓரத்தில் பார்த்து நான்கு நாட்களிலேயே காதலா? என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்வான். ஆனால் பதில்தான் அவனுக்கு கிடைக்காது.
" என்ன ஜீவா சார். எப்படி இருக்கீங்க. நம்ம ஸ்கூலோட லிட்டில் ப்ரின்ஸஸ் ரெண்டு பேரு இன்னைக்கு கிக்பாக்சிங்க் டூர்னமனண்ட் போயிட்டு வர்றாங்க. அத்தோட கிக்பாக்சிங்க் கோச்சிற்கும் இன்னையோட பெயார்வெல். இனிமே அந்த ரெண்டு ப்ரின்சஸ்கும் நீங்கதான் பொறுப்பு. பார்த்து சூதானமா நடந்துக்குங்க. ரெண்டுமே அறுந்த வாலுங்க" என்று சக ஆசிரியை ஒருவர் கூற அவன் அவரைப் பார்த்து புன்னகைத்தான்.
" சாரதா மிஸ் எங்க. ஆளவே கானோம்" என்று கேட்க அவர், " அவங்க இன்னைக்கு ரொம்ப பிசி. ஆள பிடிக்கவே முடியாது" என்று கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
ஏற்கனவே ஜீவா, ஜனனி மற்றும் சனா பற்றி சக ஆசிரியர்கள் கூற பல விடயங்கள் அறிந்திருந்தான். இருந்தாலும் அவனுக்கு அவர்களை காண வேண்டும் என்ற ஆவல் மிகவும் அதிகமாக இருந்தது. போட்டியில் ஜனனி முதலாம் இடமும், சனா மூண்றாம் இடமும் ஜெயித்திருக்க அந்த ஸ்கூல் முழுவதும் அவர்களை வரவேற்க திரண்டிருந்தது. ஜனனியும் சனாவும் மேடை ஏற ஜனனியை கண்ட ஜீவா ஒரு கணம் அப்படியே ஸ்தம்பித்து நின்றான். அவன் மனது இது உண்மையாக இருக்க கூடாது என்று பிரார்த்தனையும் செயதது.
----------------------


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)