21-02-2026, 10:44 AM
Part -- 16
வீனா -- "அப்பாவி முகம்... அசுர குணம்! ரத்தம் குடிக்கும் ரோஜா இவள்!"
ஆந்திர மாநிலம், குண்டூர். ஒரு நாகரீகமான, கௌரவமான நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவள்தான் இந்த வீணா. இல்லை, இவளை மீனா எனலாம்... அல்லது வர்ஷா எனலாம்... அவளுக்குத்தான் எத்தனையோ முகங்கள் இருக்கிறதே! இப்போதைக்கு ரங்காவின் 'வீணா' என்றே வைத்துக் கொள்வோம்.
வீட்டில் ஓரளவுக்கு வசதிகள் இருந்தாலும், வீணாவின் கண்கள் எப்போதும் உயரத்தில் இருந்தன. தன்னுடன் படிக்கும் பெரிய பணக்கார வீட்டுத் தோழிகளைப் பார்க்கும்போது, அவளுக்குள் ஒரு இனம் புரியாத பொறாமைத் தீ எரியும். அவர்கள் கட்டி வரும் விலை உயர்ந்த வைரக் கடிகாரங்கள், மின்னும் வைர நெக்லஸ்கள்... அதையெல்லாம் பார்க்கும்போதே, "இது நமக்கும் வேண்டும்" என்கிற அந்த ஆசை முதன்முதலாக அவளுக்குள் ஒரு விதையாக விழுந்தது.
ஆசைப்படுவது தப்பில்லை. உழைத்து அதை வாங்க வேண்டும் என்று நினைத்தால் அது நியாயம். ஆனால், "இப்போதே... இந்த நொடியே அது எனக்கு வேண்டும்" என்று அவள் நினைத்தபோதுதான், அந்த ஆசை ஒரு கொடூரமான பேராசையாக மாறியது.
![[Image: 3831c3f6-a934-4907-9778-1a228c6c3a08.png]](https://i.ibb.co/W4Z5n1vV/3831c3f6-a934-4907-9778-1a228c6c3a08.png)
அந்தப் பேராசை குணம் மிகக் கொடூரமானது. நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்கிற அந்த வெறி வந்துவிட்டால், அதற்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்கிற துணிவு தானாகவே பிறக்கும்.
பேராசை கண்ணை மறைக்க, முதன்முதலாகத் தன் சக தோழியின் விலை உயர்ந்த வைர நெக்லஸைத் திருடினாள் வீணா. ஒரு தேவதையைப் போலப் பழகிக்கொண்டே, யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்த நகையை அள்ளிக்கொண்டு மறைந்தாள்.
விஷயம் வெளியே தெரிந்தது. தோழியின் பெற்றோர்கள் துப்பறிந்து வந்தபோது, நகையைத் திருடியது வீணாதான் என்பது ஆதாரத்துடன் பிடிபட்டது. வினாவின் பெற்றோர்கள் கௌரவமானவர்கள் என்பதால், "உன் அப்பா அம்மா முகத்துக்காக உன்னை விட்டுடுறோம். இனிமே இப்படி ஒரு காரியம் பண்ணாதே!" என்று சொல்லி நகையை வாங்கிக்கொண்டு அவளை எச்சரித்து அனுப்பினார்கள்.
தனது வைர நகைக் கனவுகளுக்கும், ஆடம்பர ஆசைகளுக்கும் தனது நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் தடையாக இருப்பதை வீணாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. "உழைச்சு வாழு... கௌரவமா இரு..." என்கிற அவர்களின் அறிவுரைகள் அவளுக்கு வெறும் குப்பையாகத் தெரிந்தன.
தன்னால் ஆசைப்பட்டபடி அந்த ஊரில் இருக்க முடியாது என்று தெரிந்ததும், ஒரு நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறினாள். உறவுகள், பாசம், பெற்றவர்களின் கௌரவம் என எதையுமே அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அப்போது அவளுக்கு வயது வெறும் இருபதுதான்!
வீட்டை விட்டு ஓடிய வீணா, தன் அடுத்த வேட்டையைத் தொடங்கியது இந்தியாவின் கனவு நகரமான மும்பையில்! அங்கே ஒரு பெரும் கோடீஸ்வரக் குடும்பத்தில் வேலைக்காரியாகச் சேர்ந்தாள். ஆனால், அவள் அங்கே துடைப்பம் பிடிக்க வரவில்லை, அந்தச் சாம்ராஜ்யத்தையே துடைக்க வந்தவள்!
கடவுள் அவளுக்குக் கொடுத்த அந்த முகம், அவளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. எப்போதுமே நெற்றியில் ஒரு மெல்லிய சந்தனக் கீற்று, சின்னதாக ஒரு பொட்டு, முகத்தில் எப்போதும் ஒரு சோகம் கலந்த பாவம்... அவளைப் பார்த்தால் கொடூரமான எமனே தன் பாசக் கயிற்றைக் கீழே போட்டுவிட்டுப் பரிதாபப்படுவான்! அந்த அளவுக்குத் தன் முக பாவனைகளால் யாரையும் வீழ்த்தும் வித்தை அவளுக்குக் கைவந்த கலை.
![[Image: unnamed-2.jpg]](https://i.ibb.co/8gHV5qtg/unnamed-2.jpg)
அந்த வீட்டின் எஜமானர், வைரம் மற்றும் தங்கத் தொழிலில் கொடிகட்டிப் பறப்பவர். அவர் எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருப்பார், ஆனால் வீணாவின் இந்த 'பக்தி' மற்றும் 'அப்பாவித்தனமான' நடிப்பில் அப்படியே கரைந்து போனார். "இவ்வளவு நல்ல பொண்ணா இருக்காளே, இவளுக்கு எதுக்கு இந்த வேலைக்கார நிலைமை?" என்று அவர் யோசிக்கத் தொடங்கிய போதே, வீணா பாதி கிணற்றைத் தாண்டிவிட்டாள்.
மும்பையின் அந்தப் பிரம்மாண்ட மாளிகையில் வீணா மட்டும் வேட்டையாடவில்லை; அவளுக்குத் துணையாக, அந்த வீட்டின் டிரைவராக வேலைக்குச் சேர்ந்தவன்தான் இந்தச் சுந்தர்!
முதலில் இருவரும் தனித்தனியாகத் தான் அந்த வீட்டுக்குள் நுழைந்தார்கள். ஆனால், ஒரே மாதிரியான பேராசை குணம் கொண்ட இவர்களுக்குள் சீக்கிரமே ஒரு 'கெமிஸ்ட்ரி' ஒட்டிக்கொண்டது. ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகமான வேகத்தில், இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள். ஆனால், அது வெறும் உடல் சார்ந்த காதல் மட்டுமல்ல; அது பணத்தின் மீதான வெறி கலந்த ஒரு 'கிரிமினல் காதல்'!
வீட்டுக்குள் வீணா தன் அப்பாவி முகத்தால் எஜமானரின் நம்பிக்கையைச் சம்பாதிக்க, வெளியே சுந்தர் தன் சாதுவான பேச்சால் அந்த வீட்டின் வரவு செலவு ரகசியங்களைத் தெரிந்துகொண்டான்.
அந்த முதிய கோடீஸ்வரன் வீணாவின் அப்பாவித்தனத்தில் ஏற்கனவே விழுந்திருந்தான். அதைச் சாதகமாக்கிக் கொண்ட வீணா, ஒரு இரவு தன் மேலாடையைச் சரித்து, அவனது கட்டிலில் முந்தானை விரித்தாள். காமம் கண்ணை மறைக்க, அந்த முதலாளி அவளது வலையில் முழுமையாகச் சிக்கினான்.
விளைவு? சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளைத் தன் வசமாக்கிக் கொண்டு, சுந்தருடன் சேர்ந்து மாயமானாள் வீணா.
அந்தக் கோடீஸ்வரனால் எதவும் செய்ய முடியவில்லை. சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர், ஒரு வேலைக்காரப் பெண்ணிடம் ஏமாந்து போனது வெளியே தெரிந்தால் தன் கௌரவம் என்னவாகும் என்கிற பயம் அவரை முடக்கியது. தன் 'இமேஜ்' கருதி அவர் போலீசில் புகார் கொடுக்காமல் மௌனமாக அழுதார்.
கிடைத்த அந்த இரண்டு கோடியையும் வைத்து வீணாவும் சுந்தரும் சில காலம் ராஜாங்கமே நடத்தினார்கள். விலை உயர்ந்த உடைகள், சொகுசு கார்கள் என ஆடம்பரமாக வாழ்ந்து தீர்த்தார்கள். ஆனால், பேராசை என்பது உப்புத் தண்ணீரைக் குடிப்பது போன்றது... குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகுமே தவிர அடங்காது!
பணம் கரையக் கரைய, அடுத்த வேட்டைக்கான தேடல் தொடங்கியது. ஒவ்வொரு முறையும் புதுப்புது வேஷங்கள், புதுப்புது ஊர்கள் என வேட்டை தொடர்ந்தது
![[Image: unnamed-3.jpg]](https://i.ibb.co/Xk2Pvbzv/unnamed-3.jpg)
இதுவரை ஊர் ஊராகச் சென்று, வேஷம் மாற்றி, சின்னச் சின்னக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த அந்த ஜோடிக்கு ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டியது. "இனிமேல் இப்படிச் சில்லறை வேட்டைகள் வேண்டாம் மாமா... அடிக்கிற கை ஒரே அடியா இருக்கணும்! நம்ம வாழ்க்கை முழுவதும், ஏன் நம்ம தலைமுறைக்கே செட்டில் ஆகுற மாதிரி ஒரு பெரிய இடமாப் பார்க்கணும்!" - வீணாவின் இந்தப் பேராசைத் தான் அவர்களைத் தமிழகத்தின் பக்கம் திருப்பியது.
அப்போதுதான் அவர்களின் கண்களில் பட்டான்... ரங்கா!
அரசியல் செல்வாக்கு, ஆள் பலம், எல்லாவற்றையும் விடப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரகசியக் கஜானா இருக்கிறதை ரகசியமா தெரிந்துகொண்டார்கள்
ரங்காவைப் பற்றிய தகவல்கள் அவர்கள் காதுக்கு வந்ததும், சுந்தர் அவசர அவசரமாக ரங்காவின் ஏரியாவுக்கு நோட்டமிடச் சென்றான். ஒரு மாதம் அங்க தங்கியிருந்து ரங்காவின் அசைவுகளைக் கவனித்தான். ரங்காவின் அந்தத் தங்கப் புதையல் ரகசியமாக ஒளித்து வைக்கப்பட்டிருப்பதை அவன் ஓரளவுக்கு உறுதிப்படுத்திக் கொண்டாலும், ரங்காவின் பின்புலத்தைப் பார்த்தபோது சுந்தரின் நெஞ்சு ஒரு நிமிடம் படபடவெனத் துடித்தது.
இதுவரை எத்தனையோ பணக்காரர்களைப் பார்த்திருக்கிறான், ஆனால் ரங்கா... அவன் ஒரு கட்டுக்கடங்காத காளை போலக் கம்பீரமாக இருந்தான்! அவனைச் சுற்றி எப்போதும் அந்த ஐந்து 'நம்பிக்கைக்குரிய தம்பிகள்' கவசம் போல நின்று கொண்டிருந்தார்கள். அதையும் மீறி எவனாவது உள்ளே நுழைந்தால், கொன்று புதைக்கவும் தயங்காத ஒரு கொடூர முகம் ரங்காவிடம் இருந்தது.
எல்லாவற்றையும் விடப் பெரிய சவால்... ரங்காவுக்குக் குடும்பம் என்று யாரும் இல்லை! எங்கே பாசம் இருக்கிறதோ அங்கேதான் இவர்களது வேலை சுலபமாக நடக்கும். ஆனால் ரங்கா ஒரு பாறாங்கல் போலத் தனித்து நின்றான்.
சுந்தர் தப்பித்து வந்து வினாவிடம் விஷயத்தைச் சொன்னான். "வினா... இது நம்ம வழக்கமான வேட்டை மாதிரி இல்ல. அந்த ரங்கா ரொம்பப் பெரிய ஆளு. , ஒரு தப்பு நடந்தா நம்ம பிணத்தைக் கூட எடுக்க முடியாது. இது ரொம்பப் பெரிய ரிஸ்க் வினா... நமக்கு இது வேண்டாம், வேற யாரையாவது பார்க்கலாம்!" என்று நடுக்கத்தோடு சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்ட வினா, ஒரு நிமிடம் அமைதியாக இருந்தாள். ஆனால் அவளது கண்களில் பயம் இல்லை, மாறாக ஒரு தீர்க்கமான வெறி பிறந்தது. சுந்தரின் நடுக்கத்தைப் பார்த்தவள் ஏளனமாகச் சிரித்தாள்.
வேண்டாம்னு சொல்றதுக்கு இது ஒன்னும் சாதாரணத் திருட்டு இல்ல மாமா... இது நம்ம வாழ்க்கைக்கான செட்டில்மென்ட்! ன்னு நம்பிக்கையோடு சொல்ல
"வினா... நான் விசாரிச்ச வரைக்கும் ரங்கா ஒரு முரடன்தான், அதுல சந்தேகமே இல்லை. ஆனா பொம்பளைங்க விஷயத்துல ஆள் கொஞ்சம் வீக்! அந்த ஏரியாவுல இருக்கிற குடும்பப் பொண்ணுங்க மேல அவனுக்கு ஒரு தனி ஈர்ப்பு இருக்குன்னு பேச்சு அடிபடுது..."
அவன் சொல்லி முடிப்பதற்குள்ளேயே, வினாவின் மூளை மின்னல் வேகத்தில் வேலை செய்யத் தொடங்கியது. அவளது இதழ்களில் ஒரு வக்கிரமான சிரிப்பு விரிந்தது.
"அட... இது போதும் மாமா! ஒரு ஆணை வீழ்த்த அவனோட பலத்தைப் பார்க்கக் கூடாது, அவனோட பலவீனத்தைப் பார்க்கணும்
வினா தன் அடுத்த கட்டத் திட்டத்தைத் தீட்டினாள். சுந்தர் அவளது அந்தப் பிளானைக் கேட்டு மிரண்டு போனான். ஒரு கிரிமினல் வேட்டையாடிக்குத் தேவையான அத்தனை தந்திரங்களும் அவளிடம் இருப்பதைப் பார்த்து அவனுக்குப் பெருமையாக இருந்தது.
அப்போ நான் கண் தெரியாத உன் புருஷனா?" என்று சுந்தர் கேட்க,
"ஆமா மாமா... நீதான் என் 'அப்பாவி' புருஷன்! ஆனா ஒன்னு, நடிப்புல கொஞ்சம்கூட பிசுறு தட்டக்கூடாது. ஏன்னா நாம இப்போ வேட்டையாடப் போறது மானை இல்ல... ரத்தம் குடிச்ச ஒரு காட்டுச் சிங்கத்தை!" - வினாவின் அந்தக் குரலில் ஒரு தீர்க்கமான எச்சரிக்கை இருந்தது.
ரங்காவின் கோட்டையைச் சிதைக்கத் தங்களை முழுமையாக மாற்றிக்கொண்டார்கள் அந்த இரண்டு நரிகளும். சுந்தர் தன் பார்வையற்ற நடிப்பைப் பயிற்சி செய்துகொள்ள, வீணா ஒரு அடக்கமான, கஷ்டப்படும் குடும்பத் தலைவியாகத் தன்னைச் செதுக்கிக் கொண்டாள்.
தங்களுடைய இரண்டு பிஞ்சு குழந்தைகளையும் இந்தச் சதிக்கு ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த வக்கிரமான தம்பதி, ரங்காவின் ஏரியாவுக்குள் முதன்முதலாகத் தடம் பதித்தார்கள்.
அந்த ஏரியாவுக்கு வந்து இரண்டாவது நாளே, ஒரு வேட்டை நாய் இரையை மோப்பம் பிடிப்பதைப் போல வினா தன் ஆட்டத்தைத் தொடங்கினாள்.
அன்று ரங்கா தன் மல்லிகைக் கடையின் வாசலில் அமர்ந்து ஏதோ கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது முரட்டுப் பார்வையில் எப்போதும் ஒரு எச்சரிக்கை இருக்கும். ஆனால், அன்று அவன் கண்களுக்கு ஒரு விசித்திரமான காட்சி தெரிந்தது.
வீணா... தலையில் மெல்லிய முக்காடு, நெற்றியில் சிறு குங்குமம் எனப் பார்க்க அப்படியே ஒரு மகாலட்சுமி போலத் தெருவில் நடந்து வந்தாள். ஆனால், அந்தப் பாவமான முகபாவனைக்குக் கீழே, அவளது கட்டுக்கோப்பான உடம்பு அசைவுகள் ஒரு விதமான போதையை ரங்காவுக்குள் ஊற்றியது. அவள் மெல்லத் தன் சேலையைச் சரி செய்தபடி, யாருக்கோ வழிவிடுவது போல ஒதுங்கி நின்றாள்.
அந்தச் சின்ன அசைவில் தெரிந்த அவளது உடலின் வளைவுகள், ரங்காவின் கவனத்தைச் சிதறடித்தன. இத்தனை காலம் எத்தனையோ பெண்களைப் பார்த்த ரங்கா, இமைக்காமல் இவளையே பார்த்து ஜொள்ளு விடுவதை வினா தன் ஓரக்கண்ணால் கவனித்தாள்.
அவனது அந்தப் பார்வைதான் அவளுக்குத் தேவைப்பட்ட 'பச்சைக்கொடி'!
அவன் தன்னை ரசிப்பதை உள்ளுக்குள் கொண்டாடியவள், வெளியே எதுவும் தெரியாதது போலத் தன் குழந்தையை இறுகக் கட்டிக்கொண்டு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். "சிக்கிட்டான்!" - அவளது கிரிமினல் மூளை உள்ளுக்குள் முழங்கியது.
ரங்கா ஒரு முரட்டுச் சிங்கம் என்று எல்லோரும் பயந்தார்கள். ஆனால் வினாவுக்குத் தெரியும், அவன் ஒரு அழகான பெண்புலிக்கு முன்னால் வெறும் பலியாடுதான் என்று. ரங்கா ஜொள்ளு வடித்துக் கொண்டிருக்க, வினா அவனுக்காக ஒரு மிகப்பெரிய ஆழமான புதைகுழியைத் தோண்ட ஆரம்பித்தாள்.
. இதற்கிடையில் சுந்தர் தன் பங்கைச் சரியாகச் செய்தான். "ஒரு அப்பாவி" என்கிற வேஷத்தில், அந்த ஏரியா மக்களிடம் தன் இனிமையான பேச்சால் அன்பைச் சம்பாதித்தான். "ஐயோ பாவம்...ரொம்ப வெகுளியா இருக்காங்களே " என்று ஊரே பேசும் அளவுக்கு இரண்டே மாதத்தில் ஒரு 'நல்ல குடும்பம்' என்கிற போலி பிம்பத்தைக் கட்டி எழுப்பினான்.
அந்த ஊரே இவர்களைக் கண்மூடித்தனமாக நம்பியது. ஆனால், அங்கே ரங்காவோ வேறொரு போதையில் மூழ்கிக்கொண்டிருந்தான்.
வினா ஒரு நிழலைப் போல அவனைச் சுற்றி வலம் வந்தாள். ரங்கா எங்கே இருந்தாலும் அங்கே வினாவின் அந்த மெல்லிய நடையும், வசீகரமான பார்வையும் தற்செயலாகப் படுவது போல அமைத்துக் கொண்டாள். ரங்காவுக்குத் . தன்னைச் சுற்றி வருவது ஒரு அழகான மான் என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தான்.
பாவம் ரங்கா! அது மானின் தோலைப் போர்த்திய ஒரு பசியுள்ள ஓநாய் என்பது அவனுக்குத் தெரியவில்லை.
வினாவின் அந்த இடை வளைவுகளும், அவள் நடக்கும்போது காட்டும் அந்த நளினமான நெளிவுகளும் ரங்காவின் மூளையைச் செயலிழக்கச் செய்தன. அவன் எத்தனையோ ரவுடித்தனம் செய்திருக்கலாம், எத்தனையோ கிரிமினல் வழக்குகளைத் தாண்டி வந்திருக்கலாம்... ஆனால் வினாவின் அந்த "அப்பாவித்தனமான கவர்ச்சி" அவனது யோசிக்கும் திறனையே கட்டிப்போட்டது.
அவள் குனிந்து தன் குழந்தையின் சட்டையைச் சரி செய்யும்போதும், தன் முந்தானையை லேசாக இழுத்துவிட்டு அவனைத் திருட்டுத்தனமாகப் பார்க்கும்போதும், ரங்காவுக்குள் ஒரு மின்சாரம் பாய்ந்தது.
![[Image: 16cd30ddb11c2d679a1325358e9df7e5.jpg]](https://i.ibb.co/dJMsmtfV/16cd30ddb11c2d679a1325358e9df7e5.jpg)
"இவள் எனக்கு வேணும்... இவளை அடைய எதையும் செய்யலாம்" என்கிற அந்த ஒரு ஒற்றை எண்ணம் ரங்காவைப் பித்துப்பிடிக்க வைத்தது. ரங்கா ஒரு புதைகுழியில் இறங்குகிறான் என்பது தெரிந்தும், அதன் ஆழத்தைப் பற்றி யோசிக்க விடாமல் வினாவின் அந்த அழகு அவனைக் கட்டிப்போட்டு இழுத்தது!
சதுரங்க ஆட்டத்தில் காய்கள் ஒவ்வொன்றாக நகர்த்தப்பட்டன. ரங்கா சில மாதங்கள் சென்னைக்கு ஒரு முக்கிய வேலையாகச் சென்றிருந்தான். அதுதான் இவர்களுக்குச் சரியான சமயம்! சுந்தர் தான் வேலை பார்க்கும் தொழிற்சாலையில் ஒரு விபத்து நடந்ததாகவும், அதில் அவனது பார்வை பறிபோய்விட்டதாகவும் ஊர் மக்களை நம்ப வைத்தார்கள்.
அவர்கள் ஆடிய நாடகத்தில் அந்த ஊரே கரைந்து போனது. "அந்தப் பாவப்பட்ட வினா இனிமே என்ன பண்ணுவா? ரெண்டு குழந்தையையும், பார்வை இல்லாத புருஷனையும் வச்சுக்கிட்டு எப்படிச் சமாளிப்பா?" என்று அந்த ஏரியாவே பரிதாபத்தில் மூழ்கியது.
சென்னையிலிருந்து திரும்பிய ரங்காவின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டியது. வினாவின் அந்தப் பாவமான முகம் அவன் நினைவுக்கு வந்து அவனைத் துடிக்க வைத்தது. உதவி செய்கிறேன் என்கிற பெயரில் அவளை இன்னும் நெருங்க இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று அவன் முட்டாள்தனமாக நினைத்தான்.
ரங்கா தன் அதிகார பலத்தாலும், பண திமிராலும் வினாவைத் தன் வழிக்குக் கொண்டு வந்துவிட்டதாக மார்தட்டிக் கொண்டான். "எந்த ஒரு பெண்ணும் என் மிரட்டலுக்கு முன்னாடி பணியாம இருக்க முடியாது" என்கிற அவனது ஆணவத்தை வினா மிகக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டாள். அவன் தன்னை ஜெயித்ததாக அவன் நினைக்க வேண்டும் என்பதே அவளது திட்டம்!
ஆரம்பத்தில் ரங்கா அவளை நெருங்கும் போதெல்லாம், வினா ஒரு சராசரி குடும்பப் பெண் எப்படித் துடிதுடிப்பாளோ, அப்படி ஒரு நடிப்பை அரங்கேற்றினாள்.
![[Image: 2-Anushka-Shetty-looks-the-sexiest-in-a-saree.jpg]](https://i.ibb.co/QFzgxqXM/2-Anushka-Shetty-looks-the-sexiest-in-a-saree.jpg)
அவனது ஒவ்வொரு தொடுதலுக்கும் அவள் காட்டிய அந்தப் போராட்டமும், கண்களில் இருந்து வழிந்த அந்த நீலக் கண்ணீரும் ரங்காவுக்கு ஒரு விசித்திரமான வெற்றிக் களிப்பைத் தந்தது. "இந்த முரட்டுச் சிங்கத்துக்கு முன்னாடி ஒரு அழகான ரோஜா கதறுது" என்கிற அந்த வக்கிரமான திருப்தியில் அவன் திளைத்தான். ஆனால், அந்தக் கண்ணீர் அவனது அழிவிற்கான அஸ்திவாரம் என்பது அவனுக்குத் தெரியவில்லை.
வேண்டாம் ரங்கா... என் புருஷன் உள்ள இருக்காரு, இது தப்பு!" என்று அவள் அழுவது போல நடித்தது, ரங்காவை இன்னும் வெறி கொள்ளச் செய்தது. அவளது அந்தப் போராட்டமே அவனுக்கு ஒரு பெரிய தூண்டிலாக மாறியது.
அதுமட்டும் இல்லாமல் , ரங்கா செய்த மிகப்பெரிய தவறு, வினாவை ஒரு பலவீனமான பெண்ணாக நினைத்ததுதான். அவளது வறுமையைக் கண்டு பரிதாபப்பட்டு, அவளைத் தன் குடோனிலேயே வேலைக்குச் சேர்த்துக் கொண்டான். "இதுதான் நமக்குக் கிடைச்ச முதல் வெற்றி மாமா!" என்று வினா சுந்தரிடம் சொல்லிச் சிரித்தாள்.
குடோனுக்குள் நுழைந்த வினா, அங்கே நடக்கும் நிழல் உலகத் தொழில்களை அக்குவேர் ஆணிவேராக ஆராயத் தொடங்கினாள். ரங்கா வெறும் அரிசி வியாபாரி அல்ல; ஒவ்வொரு அரிசி மூட்டைக்குள்ளும் கடத்தல் பொருட்கள் ஒளித்து வைக்கப்பட்டிருப்பதை அவள் கண்டுபிடித்தாள். அந்தச் சாம்ராஜ்யத்தின் ஒவ்வொரு ரகசியமும் அவளுக்கு அத்தப்படியானது.
ஆனால், அவளது ஒரே குறிக்கோள் அந்தப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கப் பொக்கிஷம் மட்டும்தான்! அதை எங்கே மறைத்து வைத்திருக்கிறான் என்று தெரியாமல் அவள் திணறிக்கொண்டிருந்த போது, ரங்கா அவனாகவே வந்து வலையில் விழுந்தான்.
வினாவின் மீது கொண்ட அதீத நம்பிக்கையாலும், காதலால் மழுங்கிப் போன புத்தியாலும், ரங்கா அந்த உலகமே அறியாத ரகசிய அறையை அவளுக்குக் காட்டினான். அதுமட்டுமல்ல, தன் உயிராகக் கருதும் தன் தாய் மற்றும் தங்கையையும் அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
"வினா... இவங்கதான் என் உலகம். இப்போ நீயும் என் உலகத்துல ஒருத்தி ஆயிட்ட!" என்று ரங்கா உணர்ச்சிவசப்பட்டுக் கூற, வினா அந்தத் தங்க நகைகளைப் பார்த்துப் பேராசையில் கண்கள் மின்ன நின்றாள்.
அவன் தன் இதயத்தைத் திறந்து காட்டுகிறான் என்று நினைத்தான்... ஆனால் அவள் அவன் கழுத்தை அறுக்கப்போகும் கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தாள்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)