15-02-2026, 05:15 PM
(15-02-2026, 02:02 PM)raasug Wrote: அருமையான கதை ! தெளிவான நடை ! மனதில் தோன்றும் எண்ணங்களை வார்த்தைகளில் அழகாக கொண்டு வந்திருக்கிறார் கதாசிரியர் "காமக்காதலன்"
பதின்ம வயதில் இனக்கவர்ச்சி, காமம், காதல், வேறு ஒருவருடன் கல்யாணம், அமைதியான மனதில் கடந்த கால நிகழ்வுகளை நினைத்து ஒரு குற்ற உணர்ச்சி எண்ணம், திருமணத்துக்கு பிறகு கணவனுடன் உறவு, பிறகு பழைய காதலனுடனும் கள்ள உறவு, அதை தெரிந்து கொண்ட கணவனுக்கு மனதில் பற்பல எண்ணங்கள், இருந்தாலும் மனைவியை வெறுக்கவில்லை, அதேபோல் கணவணை வெறுக்காத மனைவி ... என்று கதை சீராக செல்கிறது !
ஒருவனுக்கு ஒருத்தி, கற்பு, கலாச்சாரம் என்று வாழ்க்கை நடத்துவது ஒரு ரகம். நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் ! அதாவது மனதளவில் கூட ஆண்களை பற்றி நினைக்காத ஒரு கன்னி பெண்ணை திருமணம் செய்து, ஒரிரு லுழந்தைகள் பெற்று பிறகு ஒவ்வொருவரும் தான் உண்டு தன் வேலை உண்டு இருக்கும் கணவன் மனைவி குழந்தை என்ற குடும்பம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. சினிமாக்களுக்கு இந்த கதை பொருந்தும். ஆனால் நிஜ வாழ்க்கையில் இப்படித்தான் நடக்கிறதா ?
கண்களுக்கு குளிர்ச்சியான அழகான மனைவி வேண்டும், கை நிறைய சம்பளம் வாங்கும் கணவன் வேண்டும், சொந்த வீடு கார் வேண்டும் என்ற ஆசை மனதில் வருமே !
கூடவே கணவன், மனைவி மனதில் ஒரு சந்தேகம் உதிக்குமே ! அண்டை வீட்டுகாரர்கள் மனைவிக்கும், ஆபீஸ் சக அலுவர்கள் கணவன்ய்க்கும் தூபம் போடுவார்களே !
கனவன்மனைவி க்குள் ஒருவருக்கொருவர் சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்ப்பார்களே ! இது இல்லாத நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் நிஜத்தில் உண்டா ?
அதே சமயம் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டு, காமம் வேறு காதல் வேறு கல்யாணம் வேறு என்றும் அடுத்தவர் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி என்றும் ஒரு கொள்கையுடன் வாழும் தம்பதிக்ள் இருக்கலாமே !
ஒரு மாறு பட்ட சிந்தனையுடன் கதை வந்திருக்கிறது !
தொடர்ந்து கதையை எழுதுங்க !
என் எண்ண ஓட்டத்தை புரிந்து ஆதரவளித்ததற்கு நன்றி


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)