Romance மை விழி திறந்த கண்ணம்மா
#12
6

வாழ்க்கை ஒரு விசித்திரமான கணக்கு. நாம் ஒரு கணக்கு போட, நம்மை சுற்றியுள்ள நல்லவர்கள் ஒரு கணக்கை போட, நம்மை சுற்றியுள்ள கெட்டவர்கள் ஒரு கணக்கை போட்டு ஆளாளுக்கு ஒரு கணக்கை போட்டு வைத்திருப்போம். நாம் போட்ட கணக்கு எல்லாவற்றையும் பூச்சியத்தால் பெருக்கல் செய்வதே கடவுளின் வேலை. நம் கணக்கெல்லாம் சரியாக இருக்குமேயானால் நாம் தான் கடவுள் என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்துவிடும்.

வித்யா எப்பொழுதும் தன்னை அறிவாளி என நினைத்துக் கொள்வால். அது நிஜமும் கூட. அவளின் கணக்கு எப்போழுதும் தப்பானதில்லை. அதனாலேயே அவளை மிஸ் புரபஷர்னு எல்லோரும் கூறுவார்கள். அது அவளுக்கு இன்னும் ரொம்ப பிடிக்கும். ஜீவா தன்னை முட்டாள் என மறைமுகமாக கலாய்த்ததை வித்யாவால் தாங்க முடியவில்லை. எது எப்படி எனினும் சாரதா அவனது பெயரை தெரிவு செய்து கொடுத்துவிட்டால் பள்ளி நிர்வாகம் அடுத்த கேள்வி இன்றி அவனையே தெரிவு செய்துவிடும் என்பது அவளுக்கு தெரியாமல் இல்லை. ஜீவாவின் தகமைகள் கூட எந்த விதத்திலும் குறைந்ததாக இல்லை. ஆனால் ரெஸ்யூமியை பார்த்த போது ஜீவா மேல் இருந்த க்ரஷ் இப்போது அப்படியே ஆப்போசிட்டாக வித்யாவுக்கு மாறி இருந்தது. 
' மவனே நீ எங்க கூடத்தானே வேலைக்கு செஞ்சாகனும். அப்போ உனக்கு இந்த வித்யா யாருன்னு காட்டுறேன்' என மனதுக்குள் கறுவிக்கொண்டால்.

வடிவேலு கூறுவது போல ' அடிச்சான்யா அப்பாய்ன்மண்ட் ஆடர்' என்று  ஜீவாவுக்கு அந்த நாளே அவன் இண்டர்வியூவில் தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அடுத்த வாரம் அவனை வேலையில் சேரும்படி கூறியிருந்தனர். ஊருக்கு சென்று வரலாமா? வேண்டாமா? என யோசித்தவன் இறுதியில், ஊருக்கு ஒரு தடவை போய் வரலாம் என முடிவெடுத்தான்.

வீட்டிற்கு வந்த ஜீவாவை சங்கவியும், ஆனந்தியும் மிக சந்தோசமாக வரவேற்றனர். வள்ளி வழமை போல அவரின் பாராமுகத்தையே அவனுக்கு காட்டினார். முருகன் அவனை வாழ்த்தி அவனுக்கு பணத்தை கொடுத்து தேவையானவற்றை வாங்கும் படி கூறினார். இங்குதான் ஜீவா குழம்பி போனான். பணத் தேவையை பூர்த்தி செய்ய அவன் என்றுமே கஷ்டப்பட்டதில்லை. முருகன் அவனுக்கு தேவையான பணத்தை அவன் கேட்கும் முன்பே கொடுத்துவிடுவார். வள்ளியும் அதற்கு எந்த ஒரு தடையையும் சொல்ல மாட்டார். ஆனால் தன் மீது வள்ளிக்கு ஏன் இவ்வளவு கோபம் என்று மட்டும் அவனால் கணிக்க முடியவில்லை.

" அண்ணா, புது ஊரு. புது ஆளுங்க. நீ காலேஜ்ல அந்த ப்ராப்ளம் வர முன்னடி ரொம்ப ஜாலியா, எல்லோரையும் கலாச்சிக்கிட்டு இருப்ப. ஆனா அதுக்கு அப்புறமாத்தான் நீ இப்படி கவலையா, வாடிப்போன முகத்தோட திரியிற. எது எப்படியோ, போற இடத்துல கலகலப்பா ஜாலியா இருண்ணா. எனக்கு அதுதான் முக்கியம். நீ என்ன அம்மா இடத்துல வெச்சி பார்க்குறதா சொல்லிருக்க. நம்ம அம்மா சொல்றதா நினைச்சிக்கோண்ணா. தயவு செய்து இனிமே இப்படி பஞ்ச பரதேசி மாதிரி இருக்காத. நல்லதா நாலு டிறஸ் வாங்கிக்க. உனக்கு கேர்ல் fப்ரண்ட்னு யாரும் கிடையாதே. அதனால டெய்லி என்கூட பேசு. உனக்கு சமைக்க தெரியாதுன்னு தெரியும். சமைக்க கத்துக்கோ. அது வரைக்கும் நல்ல ஹோட்டல்ல சாப்பிடு. நீ உழைச்சித்தான் என்ன கரையேத்தனும்னு இல்ல. உன் சம்பாத்தியம் உனக்குத்தான். அதனால உன் வாழ்க்கைய இனிமே ரசிச்சி வாழு" என்று அவனுக்கு அறிவுரை கூறினால்.

தன் மீது ஆனந்திக்கு பாசம் இருப்பது அவனுக்கு தெரியும். ஆனால அவள் அவன் மீது இவ்வளவு பாசம் வைப்பாள் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணின் பாசம், பரிவு என்பது மிகவும் முக்கியமானது. அது தாயாக, சகோகதரியாக, காதலியாக, மனைவியாக, மகள்களாக இருந்தால் அது அந்தந்த நபர்களின் கடமையாக பார்க்கப்படும். ஆனால் ஒரு சகோதரி தாயாக மாறுவதும், மனைவி தோழியாகுவதும், மகள் தாயாவாதும்; அவரவர் கதாபாத்திரத்த்தை விட்டு மற்ற பாத்திரமாக மாறுவது என்பது ஒரு வித்தியாசமான உணர்வு. ஜீவா கடந்த சில நாட்களாக ஆனந்தியிடம் தான் தவறவிட்ட தாயின் பாசத்தை உணர்ந்தான்.

ஆனந்தியை நெருங்கியவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான். ஆனந்திக்கு இது பெரும் ஆச்சரியமாக இருந்தது. ஜீவா அவளை என்றுமே நெருங்கி தொட்டதில்லை. இன்று அவனின் இந்த ஒற்றை முத்தம் அவளுக்கு தந்தையிடம் கிடைக்க வேண்டிய பாதுகாப்பையும் பரிவையும் காட்டியது. அவன் அவளை முத்தமிட்டு நிமிர வாசல் அருகில் வள்ளியும் சங்கவியும் நின்று கொண்டிருந்தனர். " சாப்பாடு ரெடியா இருக்கு. சாப்பிட வாங்க" என்று கூறி அவர் சென்றுவிட்டார். வழமையான நாட்களாக இருந்திருந்தால் வள்ளி அவனின் இந்த செயலுக்கு வார்த்தைகளால் குத்தி கிழித்திருப்பார். ஆனால் இன்று அவர் எதுவுமே கூறாதது இவர்கள் இருவருக்குமே பெரும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இவர்கள் இருவரையும் சங்கவி முறைத்துக்கொண்டு நின்றால்.

" ஓஹ் உங்க தங்கச்சிக்கு மட்டும்தான் முத்தம் கொடுப்பீங்களோ? நானும் உங்க தங்கச்சிதான். என்னைக்காச்சும் ஒரு நாள் என்கிட்ட அன்பா பாசமா பேசியிருக்கியா" என்று அவள் கோபமாக கேட்க ஜீவா அமைதியாக நின்றான். அவள் கையில் இருந்த பார்சலை அவனிடம் கொடுத்து " இது உனக்காக நான் வாங்கினது. முதல் நாள் வேலைக்கு போகும் போது இதை போட்டு போண்ணா. நானும் உன் தங்கச்சிதான்னு தோனிச்சின்னா எப்பவாச்சும் எனக்கும் கால் பண்ணு. இல்லைன்னா ஆனந்தி அக்காகிட்ட பேசும் போதாச்சும் என்கிட்ட பேசு" என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டால்.

ஜீவா வீட்டில் ஆனந்தியிடமோ அல்லது சங்கவியிடமோ பெரிதாக ஒட்டுதலுடன் இருக்கமாட்டான். அவனுடன் கூடப்படித்தவர்கள் எல்லாம் அவர்கள் வீட்டில் தாய், தங்கை, அக்காக்களுடன் எப்படி எல்லாம் மல்லுக்கு நிப்பார்கள் என்றும், அவர்களுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை கேட்கும் போது அவனுக்கு பொறாமையுடன் கூடிய கவலை ஏற்படும். ஆனால் என்ன செய்ய. அவனுக்கு அந்த கொடுப்பினை இல்லாமல் போனது பற்றி அவன் கவலைப்படுவதில்லை. இருந்தாலும் ஒரு வெறுமை அவன் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.

தங்கை என்பவள் ஒரு வித்தியாசமான உணர்வு. அவள் திடீரென்று தாயாகவும், அக்காவாகவும், தோழியாகவும், ஏன் சில நேரங்களில் செல்ல எதிரியாகவும் மாறிப்போகக்கூடிய ஒரு படைப்பு. எல்லா உறவுகளை விடவும் அண்ணன் தங்கை உறவென்பது விசித்திரமானதும் கூட. ஆனால் ஜீவாவுக்கு ஒன்றுக்கு இரண்டு தங்கைகள் இருந்தும் அவனால் அவர்களுடன் சகஜமாக பேசி பழக முடியவில்லை. இதனால் அவன் வாழ்க்கையில் அவன் இழந்தது என்ன என்பது அவனுக்கு தெரியவில்லை.

நாட்கள் நகர, முதல் வேலை நாள் வந்தது." ஹாலி ஏஞ்சல்ஸ்" பாடசாலையில் காலடி எடுத்து வைத்தவனுக்கு இந்த பாடசாலை அவன் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட போகின்றது என்பதை அப்போது அவன் உணரவில்லை. பல நாட்களாக கவனிப்பாரற்று இருந்த அவனது தாடியை  க்ளீன் ஷேவ் செய்து சங்கவி அவனுக்கு பரிசாக கொடுத்த காக்கி நிற சர்ட்டை அணிந்து இருந்தான். பாடசாலை வந்தவன் சாரதாவை தேடிக்கண்டுபிடித்து தனது சக வேலையாட்களுடன் தனது அறிமுகத்தை மேற்கொண்டான். 

" வித்யா, ஜீவா சாருக்கு அவரோட ரூம்ம காட்டு. அப்புறம் PT சாருக்கு அவரோட வேலைய செய்ய என்னென்ன தேவை என்பத கொஞ்சம் கேட்டு சொல்லு. நம்ம ஸ்கூல் எந்தெந்த ஸ்போர்ட்ஸ்ல இப்போ இன்வால்வ் ஆகி இருக்காங்க என்றும் சொல்லிடு. இப்பவே ஒரு அறிமுகத்த கொடுத்திட்ட்டா ஈசியா இருக்கும்" என்று சாரதா கூறினால். 

" இல்லை சாரதா, இன்னைக்கு எனக்கு முக்கியமா ரெண்டு கிளாஸ் எடுக்க வேண்டியிருக்கு. வேணும்னா நீயே அவருக்கு எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்திடு" என்றவள் சாரதாவின் பதிலுக்கு கூட காத்திராமல் சென்றுவிட்டால்.

நேர்முகத்தில் கலகலப்பாக பேசிய வித்யா அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாதது ஜீவாவை சற்று வருத்தத்துக்குள் ஆக்கியது. இருந்தாலும் அவன் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. " இவ ஒருத்தி, தேவையான நேரத்துல உதவி செய்ய மாட்டா. சரி சார் நீங்க வாங்க . நானே உங்களுக்கு எல்லாதையும் காட்டுறேன்" என்று அவனை அழைத்துச் சென்றால்.

[+] 2 users Like me.you's post
Like Reply


Messages In This Thread
RE: மை விழி திறந்த கண்ணம்மா - by me.you - 15-02-2026, 04:22 PM



Users browsing this thread: 1 Guest(s)