Romance மை விழி திறந்த கண்ணம்மா
#7
4

" ரெஜிஸ்டர் போஸ்ட்" என்று தபால்காரர் கடிதத்தை ஜீவாவிடம் கொடுக்க அவன் போஸ்ட் ரெஜிஸ்டரில் கையெழுத்து இட்டு கவரை வாங்கியவன் ஆச்சரியமானான். தான் எந்த ஒரு வேலைக்கும் அப்ளை செய்யாதிருக்க, வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்திருந்ததுதான் அந்த ஆச்சரியத்துக்கு காரணம். நேராக தன் தங்கையின் அறைக்கு சென்றவன் " ஆனந்தி இந்த போஸ்ட்டுக்கு நீயா அப்ளை பண்ண" என்று கேட்க அவள், " ஆமான்னா நாந்தான் பண்ணேன்" என்றால்.  

அவனின் முகத்தை ஆராயந்தவள் அதில் கலவையான உணர்ச்சிகளை கண்டால். " ஏண்ணா உனக்கு இந்த PT டீச்சர் வேலை பிடிக்கல்லயா?"  என்று கேட்டால். " பிடிக்காம எல்லாம் இல்ல. எனிவே தாங்க்ஸ்" என்றவன் தன் அறைக்கு உடனே சென்றுவிட்டான். அறைக்குள் வந்தவனால எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை தடை செய்ய முடியவில்லை. தன் தாய் இறந்த பிறகு அவன் தாய்க்கு தாயாக, தோழியாக நினைத்து எல்லாம் ஆனந்தியைத்தான். அதுவும் அவன் செய்த ஒரு தவறால் அவளிடம் நெருங்கி பழக முடியாமல் கடந்த சில வருடமாக தனிமையிலேயே இருக்கின்றான். சித்திக்கு அவன் மேல் மட்டும் என்ன கோபம் என்பது தெரியவில்லை. அவன் செய்த தவறுதான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள அவன் மனது மறுத்தது. மாற்றான் தாரத்துக்கு பிள்ளைகள் என்பதனால் என்றால் அவர் ஆனந்தியையும் சங்கவியையும் ஒரு நாளும் பிரித்துப்பார்த்தது கிடையாது. என்மேல் மட்டும் ஏன் இந்த வெறுப்பு?அவனிடம் பதில் இல்லை,. அதை கேட்கும் தைரியமும் அவனிடம் இல்லை.

' ஹாலி ஏஞ்சல்ஸ்' பாடசாலை கோவையில் இருந்தது. ஜீவாவின் ஊருக்கும் அந்த பாடசாலைக்கும் தோராயமாக ஒரு எட்டு மணி நேர ரயில் பயணம். நாளை மறுதினம்தான் அவனுக்கு நேர்முகத்தேர்வு. ஆனால் அவன் இன்றே பயணம் செய்ய தீர்மானித்தான். அவன் கையில் கொஞ்சம் பணம் இருந்தது.  அவன் தந்தை அவனது செலவுக்கு கொடுக்கும் பணத்தில் அவன் சேமித்து வைத்திருந்ததுதான் அந்த பணம். வீட்டில் அவனுக்கு பணக் கஷ்டம் என்றுமே இருந்ததில்லை.

பகல் உணவு உண்ண எல்லோரும் மேசையில் அமர்ந்திருந்தனர். அன்று விடுமுறை நாள் என்பதால் முருகனும் வீட்டிலேயே இருந்தார். ஜீவாவுக்கு அப்பாவிடம் இந்த விடயத்தை எப்படி ஆரம்பிப்பது என்றுதான் புரியவில்லை. இந்த வேலைக்கு அவனின் தந்தை சம்மதிக்கவும் வாய்ப்பு உண்டு. சம்மதிக்காமல் விடவும் வாய்ப்பு உண்டு. அவன் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான். " அப்பா எனக்கு கோயம்புத்தூர்ல இருக்குற ஒரு ஸ்கூல்ல இருந்து டீச்சர் வேலைக்கு இண்டர்வியூ கால் செஞ்சிருக்காங்க. நான் போகட்டுமாப்பா" என்று கேட்க அவர் நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தார். பின்பு ஏதோ யோசனை செய்தவர் போல " கோயம்புத்தூர் ரொம்ப தூரமாச்சே. பக்கத்துலன்னா டெய்லி போயிட்டு வரலாம். இப்படி ரொம்ப தூரம்னா போயிட்டு வர்றதுக்கு ரொம்ப கஷ்ட்மா இருக்குமே" என்று கூறுவதை வள்ளி கேட்டுக்கொண்டிருந்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை 
 உடனே வள்ளி, " என்னங்க பேசுறீங்க. அவனவன் பாரீனுக்கு போய் வேலை பண்றானுங்க. இது இங்க பக்கத்துல இருக்குற கோயம்புத்தூர்தானே. ஜீவா போயிட்டு வரட்டும். அவனுக்கும் வந்திருக்குற முதல் இண்டர்வியூ இது. அதை நம்ம ஸ்பாயில் பண்ண வேண்டாம். அவன் முடிஞ்சா மாசத்துக்கு ஒரு தடவையாச்சும் வீட்டுக்கு வரட்டும். இல்ல நம்ம எல்லோரையும் திடீர்னு அவனுக்கு பார்க்கனும்னு தோனிச்சின்னா டிரெயின் ஏறி வரட்டும்" என்றார்.

" நீ சொல்ரதும் சரிதான் வள்ளி. சரி, ஜீவா அந்த இண்டர்வியூவுக்கு போகட்டும். ஆனா அவனுக்கு பிடிக்கலன்னா உடனே வந்துடட்டும்" என்று கூற ஜீவாவுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. ஆனால் இந்த சந்தோசம் எல்லாவற்றையும் விட அவனுக்கு அந்த வேலை கிடைப்பதுதான் மிகப்பெரிய சந்தோசம் என்பதும் தெரியும்.

இங்கு ' ஹாலி ஏஞ்சல்ஸ்' இல்..

" ஏய் சாரு, பைய்யன் செம்ம ஸ்மார்ட்டா இருக்கான்ல. என்ன வயசுதான் என்ன விட இரண்டு அதிகமா இருக்கு. இவன் ப்ரஷ்ஷா இருக்குற பொண்ணுதான் வேணும்னு சொல்வானா, இல்லைன்னா என்ன மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் ஆளு ஓக்கேன்னு சொல்வானா?" என்று கேட்க சாரதாவுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்தது.

" வித்யா சும்மா சும்மா என்ன கடுப்பேத்தாதா. முதல்ல நீ என்ன  சாருன்னு கூப்பிடுறத நிறுத்துன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன். அதான் என் பேரு அழகா சாரதான்னு இருக்குள்ள. எதுக்கு என் பேர மாத்தி கூப்பிடுற. அப்புறம் நம்ம டீச்சர்ஸ். காலேஜ் பொண்ணுங்க கிடையாது. இப்படி பேசிக்கிறதுக்கு. we are matured womens. சோ ப்ளீஸ் பிஹேவ் யுவர்செல்ப். நாளைக்கே நான் அந்த பையன செலக்ட் பண்ணிட்டேன்னா எந்த முகத்த வெச்சிக்கிட்டு அவன் கூட பேசுவ. யோசிக்க மாட்டியா?" என்று கோபத்தில் தொடங்கி அக்கறையாக முடித்தால்.

வித்யா சாரதாவின் கைகளுக்குள் தன் கையை வைத்து அழுத்திக்கொண்டவள் " முடியலடி. என் லைப்ல மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டங்கள். வசதிக்கு எந்த குறைச்சலும் இல்ல. ஆனா என் வாழ்க்கை எப்படி ஆயிடிச்சி பார்த்தியா. வாழ்க்கைய இழந்துட்டு நிற்கிற வயசா எனக்கு. என்ன பத்தி தெரிஞ்சவன் எவனா இருந்தாலும் ஒரு மாதிரிதான் என்ன பார்க்குறானுங்க. நம்ம ஸ்கூல் பிரின்சிபல் மட்டும்தான் கொஞ்சம் கண்ணியமா இருக்காறு. ஒரு வேலை அவருக்கு வயசானதால இருக்கலாம். மத்த எல்லோரும் என்ன பார்க்குற விதமே சரியில்ல சாரதா. உன் கூட இருக்குறப்போ மட்டும்தான் கொஞ்சம் ரிலாக்ஸ்ட்டா பீல் ஆகுது. நீயும் இப்படி பேசினா எப்படி சாரதா. நான் என்ன மெஷினா? மெஷினுக்கு கூட சில நேரங்கள்ள மெயிண்டனன்ஸ், அப்டேட் எல்லாம் பண்ண வேண்டியிருக்கும். என் வாழ்க்கையி இது எதுவுமே இல்லாம ஓடிக்கிட்டு இருக்கு. இந்த மெஷின் ஒரு நாளைக்கு உடைஞ்சி போகும். அப்போ நீங்க எல்லோரும் இந்த மெஷின நினைச்சி அழுவீங்க" என்று கூற சாரதா ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றால்.

வித்யா மனதில் இருக்கும் கவலைகள் சாரதாவுக்கு தெரியாமல் இல்லை. ஆனால அவள் மனது இந்தளவுக்கு அழுத்தத்தில் இருக்கும் என நினைக்கவில்லை. சாரதா எல்லோரிடலும் சகஜமாக பழகுவாள். ஆனால் அவளுக்கு வித்யா கொஞ்சம் அல்ல ரொம்பவே ஸ்பெஷல். இருவரும் ஒருவருக்கு ஒருவர் எப்பொழுதும் ஆதரவாக இருப்பார்கள். வித்யா கொஞ்சம் ஓப்பன் டைப். ஆனால் சாரதா அப்படி கிடையாது. 

" சரிடி ரொம்ப பீல் பண்ணாத. பிரின்சிபல் சார் என்னையே இண்டர்வியூ வெச்சி யார செலக்ட் பண்ணனும்னு ரெக்கமண்ட் பண்ண சொன்னாரு. பைனல் இண்டர்வியூ அவரு கூட இருக்கும்னு சொன்னாரு. அந்த இண்டர்வுயூ வெறும் கண்துடைப்புத்தான். வேணும்னா நான் உன் ஆள, அதான் இந்த ஜீவானந்தத்த போங்காட்டம் ஆடி செலக்ட் பண்ணிடட்டா" என்று கண்ணடித்து கேட்க வித்யா சிரித்தால். அவள் முகத்தில் ஒரு குறும்புடன் கூடிய புன்னகை தவழ்ந்தது. என்னதான் சாரதா இப்படி தன்னை சமாதானம் செய்ய கூறினாலும் இண்டர்வியூ ப்ராசஸில் அவள் கொஞ்சம் கூட ஏமாற்று வேலை செய்ய மாட்டால் என்பது வித்யாவுக்கு தெரியும். சாரதாவுக்கு எப்போதும் நேரர்மை முக்கியம்.

" நீ மட்டும் இவன செலக்ட் பண்ணு, நான் உனக்கு என் ஒரு மாச சம்பளத்துல உனக்கு டிரீட் வைக்கிறேன்" என்றால். அவள் அப்போது உணரவில்லை அவளின் ஒரு மாத சம்பளம் யாரோ ஒரு ஹோட்டலுக்கு தாரை வார்க்கப்படப் போகின்றது என்று.

" ஹேய் வாக்கு கொடுத்துட்டு அப்புறம் மீற கூடாது. அப்புறம் கம்மியான ரேட்ல எல்லாம் டிரீட் கொடுக்க முடியாது. முதல்ல உன் சாலரி என்னான்னு சொல்லு. அதுக்க ஏத்த மாதிரி இப்பவே நான் ஹோட்டல செலக்ட் செய்யனும். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல ஹோட்டல்ல ஓசி சாப்பாடு சாப்பிட சான்ஸ் கிடைச்சிருக்கு, விட்றுவேனா?" என்று கூற வித்யா " நீ மட்டும் அவன செலக்ட் பண்ணு. நான் உனக்கு என்ன என்னலாம் பண்ணுவேன்னு நீயே தெரிஞ்சிக்குவ" என்றாள். இரண்டு பாடசாலை ஆசிரியைகளும் கல்லூரி பெண்கள் போல மிக நீண்ட நாட்களுக்கு பின் சந்தோசமாக சிரித்து பேசிக்கொண்டனர். மனிதனின் சிரிப்பும் அழுகையுமே அவனுக்கு மனநிம்மதியை கொடுப்பவைதானே. கவலையில் இருக்கும் போது அளுவது மனநிம்மதியையும் சந்தோசமாக இருக்கும் போது சிரிப்பது மனநிம்மதியையும் கொடுக்கும்.
[+] 2 users Like me.you's post
Like Reply


Messages In This Thread
RE: மை விழி திறந்த கண்ணம்மா - by me.you - 09-02-2026, 02:53 PM



Users browsing this thread: