Romance மை விழி திறந்த கண்ணம்மா
#6
3

" விடாத, விடாத ஜனனி. gurad அ கீழ இறக்காத. எப்போமே டிபன்சிவ்ல இரு. இன்னும் முப்பது செக்கண்ட்தான்" என்று கோச் கிக்பாக்சிங்க் ரிங்கில் ஆக்ரோசமாக எதிராளியை பதம்பார்த்துக்கொண்டிருக்கும் ஜனனியை நோக்கி கத்திக்கொண்டிருந்தார். ஜனனிக்கும் எதிராளியான சனாவிற்கும் இரண்டு புள்ளி மட்டுமே வித்தியாசத்தில் இருந்தது. கடைசி ஐந்து வினாடிகளில் சனா ஜனனியின் முகத்தில் குத்து  விட போட்டி டிராவில் முடிந்தது. நடுவர் இருவரின் கைகளையும் பிடித்து போட்டி சமநிலையில் முடிவுற்றதாக கூற இருவருமே ஏமாற்றம் அடைந்த முகத்தோடு ரிங்கை விட்டு வெளியில் வந்தனர்.

ஜனனி கீழே வந்ததும் கோச் அவளை பார்த்து காச் மூச் என கத்தினார். " நீ என்ன பெரிய மேரி கோம் ஆ. உங்கிட்ட எத்தனை வாட்டி சொல்லிருக்கேன் உன்னோடா guard அ நீ கீழ இறக்காம ஆடனும்னு. ரொம்ப சுலபமா வெல்ல வேண்டிய போட்டிய நீ தோற்பது இதோடா சேர்த்தா  நாலு" என்று கூற ஜனனி அமைதியாக கோச்சை பார்த்தவள் " கோச் இந்த மேட்ச்ல நான் தோற்கல்ல. மேட்ச் டிரால முடிஞ்சிருக்கு" என்று பதில் கூற அவருக்கு கோபம் தலைக்கேறியது. " இது மட்டும் நல்ல வக்கனையா பேசு" என்றவர் அங்கிருந்த அவர்களின் உடமைகளை தங்களது பைகளில் எடுத்து வைக்க தொடங்கினர்.

இருவரும் ஹோட்டல் வந்ததும் ஜனனியை கைகளை பிடித்த கோச் " இங்க பாரு ஜனனி, இந்த வருசம் நீ எப்படியும் சாம்பியன்சிப் வாங்கிடனும். நான் உங்கம்மாகிட்ட சாலஞ்ச் பண்ணியிருக்கேன். நீ இப்படி பொறுப்பில்லாம ஆடினா எப்படிமா. உனக்கு நல்ல திறமை இருக்கு. உனக்கு ஒரு நல்ல ஸ்பான்சர் கிடைச்சா நீ இண்டர்நேஷனர் மேட்ச்ல விளையாட முடியும். அதுக்காக நான் எவ்வளவு கஷ்டப்படுறேன்னு தெரியுதா. நீ ஏம்மா இப்படி இருக்க. ப்ளீஸ்டா. உன்ன என் பொண்ணு மாதிரிதானே பார்த்துக்கிறேன். நீ என்னடான்னா இப்படி இருக்க" என்று கூற ஜனனிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

" கோச் என்ன எப்படி வேணா திட்டுங்க. ஆனா நான் உங்க பொண்ணு மாதிரி . நீங்க எனக்கு அப்பா மாதிரி அப்படின்னுலாம் பேசினீங்க எனக்கு செம்ம கோபம் வரும். நீங்க எனக்கு கோச் அது மட்டும்தான். எங்கம்மா உங்கள ரொம்ப நம்புறாங்க. அதுக்காக நான் உங்களுக்கு பொண்ணுன்னு ஆகிட முடியாது" என்று கண்கள் சிவக்க கூறினால்.

" சாரி ஜனனி, சும்மா ஒரு பேச்சுக்குத்தான் அப்படி கூறினேன். இனி அப்படி சொல்லல. சரி நீ உன் ரூமுக்கு போ. அப்புறம் அடுத்த மேட்ச்ல நீ ஜெயிக்கலன்னா நான் இங்கேயிருந்து போயிடுவேன். அப்புறமா நீ கோச் இல்லாம தனியாதான் ஆடனும். உனக்கே தெரியும், கோச் இல்லாம உன்ன ரிங்க்ல விடமாட்டாங்க. அப்புறம் நீ எக்சாமுக்கு படிக்க வேண்டி இருக்கும்" என்று கூற ஜனனி புன்னகைத்தால்.

" ஐய்யய்யோ எக்சாமா? நான் எப்படி சரி அடுத்த மேட்ச்ல வின் பண்ணிடுறேன். மதர் ப்ராமிஸ்" என்ற பதினான்கு வயது மங்கையான ஜனனியை பார்த்து புன்னகைத்தார். " சரிடா நீ உன் ரூமுக்கு போ. மார்னிங்க் ப்ராக்டிஸ்ல மீட் பண்ண்லாம்" என்றார்.

அறைக்குள் வந்த ஜனனி தனது மொபைலை எடுத்து ஆன் செய்ய வாட்ஸப்பில் இருந்து பல மெசேஜ்கள் வந்த வண்ணம் இருந்தது. அதை எல்லாம் ஒரு புறம் ஒதுக்கிவிட்டது தனது தாய்க்கு அழைப்பு எடுத்தால்.

" எப்படி இருக்க ஜனனி. இன்னைக்கு மேட்ச் என்னாச்சு" என்று ஆவலாக கேட்கும் தன் தாயை எண்ணி வியந்தாள். தான் படிப்பில் கவனம் செலுத்தாமல் இப்படி கிக் பாக்சிங்க், மியூசிக் என்று அலைவது தன் தாய்க்கு பிடிக்காது என்பது தெரியும். ஆனால் அவர் விரும்பியது போல ஜனனியால் பாடங்களில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் ஜனனி ஒன்றும் மக்கு கிடையாது. ஆவ்ரேஜ் ஆக பாஸ் செய்யும் ஒரு சாதரண மாணவி. " இன்னைக்கு மேட்ச் டிரால முடிஞ்சிடிச்சிமா. கடைசில செக்கன்ல டிரா பண்ணிட்டா" என்று கூற எதிர்முனையில் அவளின் தாய் அமைதியாக இருந்தால். 

" ஆப்பொனண்ட் யாரு சனாவா?" 

" ஆமாமா"

" இங்க பாரு ஜனனி, உனக்கும் அவளுக்கும் அடிக்கடி ஏதாச்சும் ஒரு வகையில மோதல் வந்துகிட்டே இருக்கு. இது எங்க போய் முடியும்னு தெரியல. பார்த்து கவனமா நடந்துக்க.நாளைக்கு உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதும் ப்ராப்ளம் வந்திச்சின்னா நீ ரொம்ப உடைஞ்சி போயிடுவ" என்று கூற மறுமுனையில் ஜனனி சிரித்தால்.

" நீ எங்க உடைஞ்சி போக போற. சனாதான் பாவம், அவதான் எங்கிட்ட வந்து அழுதுகிட்டு இருக்க போறா. சரிடா. ரொம்ப ஸ்ட்றைன் பண்ணிக்காத ரெஸ்ட் எடு. வரும் போது ஜெயிச்சிட்டு வா. உன்னால முடியலன்னா சனாவ ஜெயிக்க வெச்சிட்டு வா" என்றுகூறனார்.

" சரிமா பாய், நாளைக்கு பேசுறேன்" என்று காலை கட் செய்தால்.

சனாவின் குடும்பம் மிகவும் வச்தியானவர்கள். வரக்கூடிய ஐந்து தலைமுறைக்கு எந்த வேலையும் செய்யாமல் செலவு செய்ய போதுமான பணம் அவர்களிடம் இருந்தது. சனாவுக்கு மிகவும் பிடித்த இடம் பாடசாலைதான். ஏனென்றால் வீட்டிற்கு சென்றால் அவள் தனி மரமாகி விடுவாள். அவளது பெற்றோர் பிசினஸ், பிசினஸ் என்று அதன் பின்னாலேயே ஓடிக்கொண்டிருப்பார்கள். அதனால் அவள் ஆறுதல் தேடும் ஒரே இடம் பாடசாலை. சனா பாடசாலையில் விளையாட்டு, அறிவு சார்ந்த போட்டிகளில் கலந்து கொள்வது மட்டுமல்லாது படிப்பிலும் புலி. அவர்களின் வகுப்பில் அவள்தான் முதல் மாணவி. அதனாலேயே அவளுக்கு அங்கு எல்லா ஆசிரியர்கள் மத்தியிலும் செல்ல பிள்ளை போல வலம் வருவாள். சனாவும், ஜனனியும் இந்த வருடத்துக்கான பதினைந்து வயதுக்கு உட்பட்ட கிக்பாக்சிங் சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ள வந்துள்ளனர். ஜனனிக்கு அவர்கள் பாடசாலை PT மாஸ்டர்தான் கோச். ஆனால் சனாவின் வசதிக்கு அவர்கள் வெளியில் இருந்து ஒரு கோச்சை ஏற்பாடு செய்திருந்தனர். ஜனனியையும் தன்னுடன் சேர்ந்து பயிற்சி பெற சனா எவ்வளவு முயன்றும் அது கைகூடவில்லை. 

காராணம் ஜனனிக்கு சனா மீது பொறாமை. தாயின் பாசம் முழுவதும் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என நினைக்கும் சாதாரண ஒரு மகள் அவள். சனா எது செய்தாலும் அவளுடன் ஜனனியை அவள் தாய் ஒப்பிடமாட்டார். ஆனால் சனாவின் வெற்றிகளை அவர் மிகைப்படுத்தி கூறுவது அவளுக்கு எரிச்சலைக் கொடுக்கும். சில நேரங்களில் கிக் பாக்சிங்கில் ஜனனி சனாவை தோற்கடிப்பால். ஆனால் அதன் பிறகு வரும் பரீட்சைகளில் அவள் செய்யும் சாகசங்கள் ஜனனியின் வெற்றியை மழுங்கடிக்கச் செய்துவிடும். ஆனால் மியூசிக் என்று வந்துவிட்டால் அதில் ஜனனியை வெற்றி கொள்ள அவர்கள் பாடசாலையிலேயே ஆள் கிடையாது. இவை எல்லாம் இப்படி இருக்க சனாவும், ஜனனியும் உயிர்த்தோழிகள். அவர்கள் இருவருக்கும் இடையில் நெருங்கிய ஒரு அன்னியோன்னியம் இருக்கும். தங்களுக்குள் மூன்றாவது நபர் வருவதை எப்போதும் அவர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் என்ன, அவர்களுக்குள் எப்போதும் புகைச்சல் வர காரணம் ஜனனியின் தாய் தான்.

" ஏய் ஜனனி, என்ன பண்ணி வெச்சிருக்க நீ. ஆமா உன் கோச் உனக்கு ஒழுங்க சொல்லிக்கொடுக்காரா இல்லையா? உன்ன யாரு லாஸ்ட் செக்கண்ட்ல உன் கார்ட்ட கீழ இறக்க சொன்னது. ஒரு ஐந்து செக்கண்ட் நீ டிபன்சிவ்வா ஆடி இருந்தேன்னா இன்னைக்கு நீதாண்டி வின்னர்" என்று தனக்கு கால் செய்து திட்டும் தன் தோழி சனாவை நினைத்து அவளுக்கு சிரிப்பு வராமல் இல்லை. இன்று ஜனனி வென்றிருந்தால் சனா தோற்றிருப்பால். ஆனால் அதை எல்லாம் மனதில் நினைக்காமல் சனா இப்படி பேசுவது அவள் தோழி மீதான அன்பை அதிகரிக்கச் செய்தது.

" இன்னும் ஒரு இரண்டு பாயிண்ட் அதிகமா எடுக்கலாம்னு நினைச்சுதான் டிபன்சிவ்ல இருந்து ஒஃபன்சிவ்வா அட்டாக் செய்யலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள நீ ஸ்கோர்ர லெவல் பண்ணிட்ட. பரவாயில்லை விடு, இது ப்ராக்டீஸ்தானே. ஆனா டோர்னமண்ட்ல இப்படி அசால்டா இருப்பேன்னு நினைச்சிடாத. எதுக்கும் உங்கப்பாட்ட சொல்லி உன் முகத்துக்கு ஒரு இன்சூரன்ஸ் பாலிசி போட்டிரு, ஷேன் வார்ன் அவரு விரலுக்கு இன்சூரன்ஸ் போட்டது போல" என்று கூற மறுமுனையில் சனா கெக்கே பிக்கேன்னு சிரித்தால். 

" அம்மா கால் பண்ணாங்களா? நான் கால் பண்ணேன் கால எடுக்கவே இல்லை" என்று கூற ஜனனிக்கு பெருமையாக இருந்தது. " அம்மா கூட பேசினேன் சனா. மேட்ச்ச பத்தி கேட்டாங்க. ஜெயிச்சிட்டு வான்னு சொன்னாங்க" என்று கூற சனா, " உங்கம்மா என்ன பத்தி ஏதும் கேட்கல்லயா" என்று கவலையாக கேட்டால். இந்த ஒரு விடயத்தில் தன் தோழி கவலைப்பட்டால் கூட பரவாயில்லை என நினைத்தவள் " இல்லடி உன்ன பத்தி எதுவுமே கேட்கல, கேட்டா சொல்ரேன்" என்று கூற மறுமினையில் காலை கட் செய்தால்.
[+] 1 user Likes me.you's post
Like Reply


Messages In This Thread
RE: மை விழி திறந்த கண்ணம்மா - by me.you - 08-02-2026, 04:12 PM



Users browsing this thread: 1 Guest(s)