24-01-2026, 02:52 PM
(24-01-2026, 12:13 PM)Fun_Lover_007 Wrote: இந்தக் கதை ரொம்ப அருமையா போய்கிட்டு இருக்கு. காமம் மட்டும் இல்லாமல் ரசிக்க இந்தக் கதையில் நிறைய இருக்கு.
ஒரே நேரத்தில் பல கதைகளை எழுத வேண்டாம் நண்பா. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் எதற்கு? இந்த தளத்தில் ஒரே நேரத்தில் பல கதைகளை எழுதி வெற்றி பெற்றவர்கள் யாருமே இல்லை. பல கதைகளை எழுதியவர்கள் ஒரு கதையைக் கூட உருப்படியாக முடிக்காமல் பாதியில் சென்று விட்டார்கள். ஓஷன், ஐசு உட்பட வெற்றி பெற்ற பல கதாசிரியர்கள் ஒரு நேரத்தில் ஒரு கதையை மட்டுமே எழுதினார்கள். அது தான் சிறந்த உத்தியும் கூட.
என் கருத்துப்படி, நீங்கள் இந்தக் கதையை முதலில் முடித்துவிட்டு உங்களுடைய மற்ற கதைகளைத் தொடரலாம். இல்லாவிட்டால் போதுமான ஆதரவு கிடைக்காமல் போய்விடும். நீங்கள் கூட ஒரு கமெண்ட்டில் கூறியுள்ளீர்கள் போதிய ஆதரவு இல்லை என்று. அதற்கு காரணம் இது தான்.
கொஞ்சம் யோசித்துப் பார்க்கவும்.
உங்களோட கருத்தத்தான் நா பாலோ பன்றேன் நண்பா. இந்தக் கதையைத்தான் யுதலில் எழுதி முடிக்கப்போகிறேன். இதற்கு அடுத்து நான் முதலில் தொடங்கிய என் இனிய உடன்பிறப்பே. அதன்பின் ஒவ்வொரு கதையாக முடித்துவிட்டுத்தான் இனி புதிய கதைத் தொடக்கமெல்லாம். எனக்கு சிறுகதைகள் எழுதவரவில்லை. நெடுந்தொடர்தான் எனக்கு ஏற்றதுபோல் தெரிகிறது. இது நான் சிறுகதையாக எழுதி முடித்துவிடலாம் என்று தொட்டது. நிச்சயம் ஒன்றன்பின் ஒன்றாக எனது கதைகள் அனைத்தையும் எழுதி முடித்துவிடுவேன்.
அக்கறைக்கும் அறிவுரைக்கும் மிக்க நன்றி நண்பா.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)