Fantasy என் மனைவியின் மர்ம பிரதேசம்-நிறைவு பெற்றது.
ஒரு வாழ்க்கையை தங்களுடைய விருப்பமான விதமாக வாழ்ந்து விட்டு போக வேண்டுமென நினைக்கும் ஒவ்வொருவரும் சாகுற நேரத்துல அல்லது தங்களுடைய சுகவீன நேரத்துல மட்டும் தங்களுடைய கள்ள உறவுகளை தேடாமல் தங்களுடைய உரிமைப்பட்ட உறவு கூட்டம் தங்களுடைய பக்கத்துல இருந்து கவனிக்க வேண்டுமென ஆசைப்படுவது ஏனென்று புரிந்து கொள்ள முடியவில்லை.

நான் இவ்வளவு எழுதிய பிறகு ஒருவேளை தற்கொலை செய்து கொள்ள போகிறேனோ என்று நினைத்து நீ வருத்தப்பட வேண்டாம். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவ்வளவு தைரியமான ஆள் நான் இல்லை.

நாம் பேசிய பேச்சுக்காக தான் சுந்தர்கூட தற்கொலை செய்து கொண்டார் என்ற இன்னொரு விஷயத்திற்காக கூட நீ உன்னுடைய மனதில் கொஞ்சம் நிம்மதி இல்லாமல் ம்ம் அப்படி என்ன பெரிய சுகம் இந்த கேடுகெட்ட கள்ள உறவில் இருக்கிறது என்று என்னைப் போல உள்ள பெண்கள் தங்களுடைய கணவனுக்கும் தங்களுடைய பிள்ளைகளுக்கும் கேவலத்தை உண்டாக்கி விட்டு போகிறார்கள் என்று தெரியவில்லை.
இருக்கலாம்.

ம்ம் அந்த நாய் அப்படி யார் திட்டினாலும் திருந்த கூடிய ஜென்மம் இல்லை.அதுபோல திருந்த நினைத்திருந்தால் கோர்ட்ல அவமான பட்டதும் வெளிய வந்த உடனே தான் செஞ்ச தப்பை உணர்ந்தது உன்னோட கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு எங்கேயாவது போய் இருக்கணும் அங்கே இருந்து எதையாவது சம்பாதித்து அவனுக்கு பிறந்த குழந்தைகளுக்காவது ஏதாவது செய்ய முயற்சி செய்திருக்கணும்.

அந்த நாய் அப்படி எதுவும் செய்யவில்லையே.சொத்தை அந்த பையன் கோபி பறித்துக் கொண்டான்.கோர்ட்டில் வேறு அவருடைய வேலைக்கு உலை வைத்து விட்டார்கள்.இனிமேல் தங்குவதற்கும் தின்பதற்கும் தன்னுடைய அந்தரங்க தேவைகளை தொடர்ந்து உன்கிட்டேயோ அல்லது என்கிட்டேயோ இலவசமாக அனுபவிக்கவும் ஒட்டுண்ணி மாதிரி ஒட்டிக் கொண்டு இங்கேயும் வந்துட்டான் சண்டாளன்.

சண்டாளி நானும் அப்போ கூட அந்த சண்டாளனை புரிஞ்சிக்காம அவனுக்கு இரக்கப்பட்டு சோறு தண்ணி கொடுத்து காலப் போக்கில் என்னையும் கொடுத்து இன்னைக்கு கட்டிய புருஷன் பெத்த பிள்ளைகள் எல்லோருக்கும் பெரிய அவமானமாக வந்து நிற்கிறேன்.

ம்ம் அந்த நாயோட சேர்த்து என்னையும் திட்டிய பிறகு அந்த கேவலமான நாய் எங்கேயோ கிளம்பி போய் மூக்கு முட்ட குடிச்சிட்டு சென்னைக்கு போயிடலாம்னு யோசனையோட ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் இருக்கு.அங்கே போய் டிக்கெட் எல்லாம் எடுத்துட்டு ட்ரெயினுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்திருக்கு. ட்ரெயின் கிட்ட வரும்போது லேசாக தலைசுற்றி தண்டவாளத்தில் விழுந்து அதே ட்ரெயின் அது மேலே ஏறி அது உடம்பு ரெண்டு துண்டாகி போய்விட்டது அவ்வளவுதான்.

நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தான் நினைத்தேன்.ஆனால் நான் செய்திருக்கும் பாவத்திற்கு தற்கொலை செய்து கொண்டால் நாய் நரி கூட என் உடலை தின்னாது.

அதனால் யாருக்கும் தெரியாத கண்காணாத இடத்திற்கு சென்று என்னுடைய பாவங்களை கொஞ்சமாவது கழுவிக்கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறேன்.அதனால் தான் நான் எங்கே போகிறேன் என்ன செய்யப் போகிறேன் என்று உனக்கும் சொல்லவில்லை.

நீ கோபிக்கு நல்ல மனைவியாக இல்லைதான்.ஆனால் சுந்தருக்கு உண்மையாகத்தான் இருந்தாய்.ஆனால் அவன் அதுக்கும் தகுதி இல்லாதவனாக மாறிப் போய் விட்டான்.

நீ நல்ல மனைவியாக இல்லாவிட்டாலும் நான்கு குழந்தைகளுக்கும் உண்மையிலே உன்னை போல் ஒரு தாய் கிடைப்பது அரிது என்பது போல அருமையான தாயாகத்தான் இருக்கிறாய்.

ஒருவேளை உன்னை பற்றி பிற்காலத்தில் உன்னுடைய பிள்ளைகளுக்கு தெரிய வந்தாலும் அவர்கள் அதை சாதாரணமாக கடந்த செல்வார்கள் என்று நம்புகிறேன். ஆனால் நான் அப்படி இல்லை ஒரு நல்ல மனைவியாகவும் இல்லை நல்ல தாயாகவும் இல்லை.அதற்காக என்னை நீ மன்னித்துவிடு.

இதேபோன்ற கடிதம் உன்னுடைய அப்பாவுக்கும் அண்ணனுக்கும் எழுதி வைத்திருக்கிறேன்.அதை அவர்களிடமும் கொடுத்துவிடு.முடிந்தால் என்னை இருவரையும் மன்னித்து விடச் சொல்லி சொல்லு. 

இன்னும் பிறவி ஏதேனும் இருந்தால் நான் உனக்கு மகளாக பிறக்க வேண்டும். உன்னுடைய மடியில் தவழ்ந்து நல்ல பிள்ளையாக வளர வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன் என்று சொல்லி அந்த கடிதத்தை முடித்து இருந்தாள்.

கடிதத்தை படித்து முடித்ததும் மலர்விழிக்கு கண்கள் கலங்கி போனது.அவளுடைய கண்களில் இருந்தது கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

தானும் ஒரு காலத்தில் தன்னுடைய கணவனுக்கு துரோகி தான்.ஆனால் தற்போது திருந்தி நல்லபடியாக வாழ்கிறேன். ஆனால் தன்னுடைய அம்மா கடைசி நேரத்தில் திருந்தினாலும் அவளால் தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடியவில்லை.அவளுக்கு என்ன ஆயிற்று எங்கே போனாலோ என்ற வருத்தம் மலர்விழிக்கு இருந்தது.

மலர்விழி தன்னுடைய அம்மா தன்னுடைய அப்பாவுக்கும் தன்னுடைய அண்ணனுக்கும் எழுதிய கடிதத்தை அவர்களிடம் கொடுத்தாள்.

சுந்தரி தன்னுடைய கணவனுக்கும் தன்னுடைய மகனுக்கும் செய்த துரோகத்தை பற்றியும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டும் மலர்விழிக்கு எழுதியது போலவே தான் எங்கே போகிறேன் என்ன செய்யப் போகிறேன் என்று சொல்லாமல் தன்னை மன்னித்து விடும்படியும் எழுதியிருந்தாள்.

கடிதத்தை படித்ததும் துரைசாமிக்கும் தேவாவுக்குமே வருத்தமாக இருந்தது. என்னதான் சுந்தரி மன்னிக்க முடியாத பெரிய தவறை செய்திருந்தாலும் அவள் அவர்களோடு வாழ்ந்து இருக்கிறார்கள் ஏதோ போதாத காலம் மிகப் பெரிய தவறு நடந்து விட்டது.

அவள் ஒரு பெண்.அதுவும் அழகானவள். என்னதான் வயதாகியிருந்தாலும் அந்த வயதுக்குரிய எந்த ஒரு அறிகுறியும் அவள் உடம்பில் தெரிந்ததில்லை.இப்போது பார்த்தாலும் வயது ஆண்களையும் கட்டி இழுக்கும் பேரழகு கொண்டவள்.

பிச்சைக்காரி பைத்தியம் பிடித்த பெண்களை கூட விட்டு வைக்காத ஆபத்து நிறைந்த இந்த உலகத்தில் சுந்தரி என்ன செய்யப் போகிறாளோ என்று துக்கமாக இருந்தது 

அவர்களும் அவள் எங்கே போய் இருப்பாள் என்று போலீஸ் ஸ்டேஷனில் அவளை காணவில்லை என்று கம்ப்ளைன்ட் கொடுத்ததோடு அல்லாமல் கிட்டத்தட்ட ஒரு மாதம் அளவும் மனதில் துக்கத்தோடு தெரிந்த இடங்கள் எல்லாவற்றிலும் தேடி பார்த்தார்கள்.ஆனால் அவர்களால் சுந்தரி எங்கே போனால் என கண்டறிய முடியவில்லை.அதே துக்கத்தோடு தங்கள் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார்கள்.

சுந்தரி இல்லாமல் மலர்விழி மிகவும் திணறிப் போனாள். சுந்தரி தான் வழி தவறி போனாலும் மலர்விழி சுந்தரை விட்டு விலகிய பிறகு சுந்தரி அவளை சுந்தருடன் ஒன்றாக இருக்கச் சொல்லி வற்புறுத்தவில்லை.

அதுபோல காலையில் மலர்விழி பள்ளிக்கு கிளம்பும் முன்பாக சமையல் உட்பட வீட்டில் இருக்கும் அத்தனை வேலைகளையும் அவளே செய்து முடித்து விடுவாள்.அதே போல் சாயங்காலமும் வந்திருந்து மலர்விழிக்கு தேவையான உதவிகளையும் செய்து விட்டு தான் தன்னுடைய வீட்டிற்கு போவாள்.

அதுமட்டுமல்லாமல் இருவருடைய வீடும் கொஞ்சம் பக்கம் இருப்பதால் மலர்விழி தனியாக இருப்பதைப் போல் உணராமல் சற்று பாதுகாப்பாக உணர்ந்தாள். இப்பொழுது எல்லாம் பறிபோனது போல் சற்று கவலையாக இருந்தது.

இருந்தாலும் மனம் தளராமல் மலர்விழி தன்னுடைய அன்றாட வேலைகளோடு கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி மற்ற வேலைகளையும் தானே கவனித்துக் கொண்டாள்.

காலமும் நேரமும் யாருக்கும் காத்திராமல் நகர்ந்து சென்று கொண்டே இருந்தது.

சுந்தரி காணாமல் போய் மூன்று வருடங்கள் கடந்திருந்தது. எல்லோரும் சுந்தரியை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டி விட்டு தங்களுடைய வாழ்க்கையை பார்க்க ஆரம்பித்திருந்தனர்.இருந்தாலும் மனதின் ஓரத்தில் சுந்தரியை பற்றிய நினைவு இருக்கத்தான் செய்தது.

மலர்விழியின் மூத்த மகன் பி.இ முடித்துவிட்டு எம்.இ படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான் மலர்விழிக்கு தன்னுடைய பிள்ளைகளின் ஸ்பான்சரிடம் இதையும் கேட்க சங்கடமாக இருந்தது. அதனால் தங்களிடமிருந்த பணத்தை வைத்து அவனை நல்ல ஒரு காலேஜில் சேர்த்து படிக்க வைத்தாள்.

அடுத்த வருடமே மலர்விழியின் மகள் டாக்டருக்கு படித்து முடித்தாள். மலர்விழி தன்னுடைய மகள் ஏதாவது ஹாஸ்பிடலில் பணியில் சேர்ந்து மற்ற பிள்ளைகளுக்கு ஏதாவது உதவி செய்வாள் அதன் மூலம் தொடர்ந்து அந்த ஸ்பான்சரை தொந்தரவு செய்வதில் இருந்து விடுதலை பெற்று விடலாம் என்று என்று எதிர்பார்த்தாள்.

ஆனால் மலர்விழியின் மகள் தான் குழந்தை பேரு மருத்துவம் பயில வேண்டும் என்று உறுதியாக நின்றாள். இந்த முறையும் மலர்களே வேறு வழி இல்லாமல் அதே ஸ்பான்சரிடம் உதவி கேட்டு நிற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாள்.

அதை அவள் தலைமை ஆசிரியரிடம் கூறிய போது அவர் மலர்விழியின் மகளை அந்த ஸ்பான்சர் அமெரிக்காவில் உள்ள சிறந்த மருத்துவ கல்லூரியில் தங்கி படிக்க உதவி செய்வதாக கூறியதை கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டாள்.

மலர்வழி என் மனதில் தன்னுடைய கணவன் தான் இதற்கு பின்புறமாக இருந்து செயல்படுகிறான் என்பது உறுதியாக தோன்றியது அதுவும் அவன் அமெரிக்கவில் தான் கண்டிப்பாக இருப்பான் என்று உறுதியாக நம்பினாள்.அதனால் தன்னுடைய மகளை அங்கே அனுப்ப எந்த ஒரு சங்கடமும் படவில்லை.அவள் ஆசைப்பட்டது போலவே அவளை அமெரிக்கா அனுப்பி வைத்தாள்.

அங்கே கோபி மற்றும் நிர்மலாவின் மகள் தன்னுடைய அக்கா உயர்கல்வி கற்பதற்காக அங்கே வருவதை அறிந்து அவளும் தானம் மருத்துவம் பயில வேண்டும் என்று வீட்டில் கூறி அவளும் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ பயல வந்தாள்.

மலர்விழியின் மகளுக்கு அமெரிக்கா பொது புதியது என்பதால் அவள் யாருடனும் பழகுவதற்கு தயங்கினாள்.அந்த நேரத்தில் தான் நிர்மலாவின் மகள் தானாகவே அவளுடன் அறிமுகமாகி நட்புடன் பேசி பழக ஆரம்பித்தாள்.

புதிய இடம் புதிய முகம் என்பதால் மற்ற யாருடனும் பேசி பழக தயங்கிய மலர்விழியின் மகள் இந்திய தாய் தகப்பனுக்கு பிறந்த அழகிய சிற்பம் போன்ற முகத்துடன் இருந்த தமிழ் பேசும் நிர்மலாவின் மகளை கண்டு அவளுக்கு மிகவும் பிடித்த போனது.அது மட்டுமல்லாமல் அவளுக்கு அந்த முகத்தை இதற்கு முன்பாக எங்கேயோ பார்த்து பேசி பழகிய ஞாபகம் போல தோன்றியது.அதனாலேயே அவள் அவளுடன் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் பேசி பழக ஆரம்பித்தாள்.

தன்னுடைய அக்காவுக்காகவே கோபியின் மகளும் என்ன தான் வீடு பக்கத்து ஊரிலேயே இருந்தாலும் அவளும் தன்னுடைய அக்காவுடன் ஹாஸ்டலிலேயே தங்கி கொண்டாள். மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை தன்னுடைய வீட்டிற்கு போய் தன்னுடைய பெற்றோருடன் தங்கி இருந்துவிட்டு தன்னுடைய அக்காவுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு அதை தன்னுடைய அம்மாவிடம் சமைத்து கேட்டு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தாள்.

ஆரம்பத்தில் ஒரு நாள் மலர்விழி தன்னுடைய மகளுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோது கோபியின் மகளை பார்த்து விட்டாள்.

மலர்விழியின் மகளால் அந்தப் பெண்ணின் முகத்தில் கோபியின் சாயலும் கலந்து இருப்பதை கண்டுபிடிக்க முடியாத விஷயத்தை மலர்வழி கண்டு கொண்டாள். ஆனால் அந்தப் பெண்ணின் முகத்தில் நிர்மலாவின் சாயலும் கலந்து இருப்பதை அவளால் அவ்வளவு எளிதாக கண்டறிய முடியவில்லை என்பதைவிட அப்படி நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று அவளாகவே நினைத்துக் கொண்டாள்.

ஆனால் அடுத்து வந்த ஒரு சில மாதங்கள் கழித்து அந்தப் பெண்ணின் அண்ணனும் தம்பியும் நேரம் கிடைத்த போது அவளை ஹாஸ்டலில் வந்து பார்க்கும்போது அப்படியே மலர்விழியின் மகளையும் பார்த்து அவளை அக்கா என்று அழைப்பதை கேட்டு அவளிடம் அவர்களின் போட்டோவை எடுத்து அனுப்பும்படி கேட்டுக் கொண்டாள்.

அப்படி மலர்விழியின் மகள் அவர்களுடைய போட்டோவை எடுத்து அனுப்பும் போது மூவரமே கிட்டத்தட்ட ஒரே ஜாடையில் இருப்பதை வைத்து மலர்விழிக்கு தன்னுடைய கணவனும் தன்னுடைய அண்ணியும் திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளை பெற்றிருக்கிறார்கள் என்பது புரிந்து போனது.

மலர்கவிழிக்கு அவர்களை நினைத்து எந்த ஒரு பொறாமையும் வரவில்லை.மாறாக வாழ்க்கையில் ஏமாற்றத்தை சந்தித்த இருவர் ஒருவரை ஒருவர் சந்தித்து திருமணம் செய்து கொண்டு தங்களுக்குள்ளாக ஆறுதலாக இருந்திருக்கிறார்கள் என்று புரிந்து போனது.

தங்கள் குடும்பமே அவர்கள் இருவருக்கும் துரோகம் செய்த போதிலும் கோபியும் சரி தன்னுடைய அண்ணியும் சரி தங்களை மன்னித்து இவ்வளவு தூரம் தங்கள் பிள்ளைகளை முன்னுக்கு கொண்டுவர உதவி செய்திருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது.

மலர்விழியின் மகள் இரண்டு வருடம் அங்கே தங்கி இருந்து படித்தாள்.ஆனால் ஒருமுறை கூட கோபியும் நிர்மலாவும் அவளை நேரடியாக சந்தித்து பேசவில்லை.

அவளும் படித்து முடித்து விட்டு தாய்நாடு திரும்பி பெங்களூருவில் ஒரு பிரபலமான ஆஸ்பிட்டலில் மகப்பேறு மருத்துவராக பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்தாள்.

என்னதான் மலர்விழியின் மகள் இங்கே வந்துவிட்டாலும் அவள் கோபியின் பிள்ளைகளோடு இருந்த நட்பு இன்னும் வீடியோ கால் மூலம் தொடரத்தான் செய்தது.

மலர்விழியின் மூத்த மகனும் எம்.இ படித்து முடித்துவிட்டு ஒரு பிரபலமான கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு அமர்ந்திருந்தான்.

மற்ற சுந்தருக்கு பிறந்த இரண்டு பிள்ளைகளும் கூட இப்பொழுது கல்லூரி படித்துக் கொண்டிருந்தார்கள்.அதில் மூத்தவனுக்கு மட்டும் கோபி ஸ்பான்சர் செய்து கொண்டிருந்தான்.இன்னொரு பையனுக்கு வீட்டில் வீட்டில் இருப்பவர்கள் சம்பாதிக்கும் பணம் போதுமான அளவுக்கு இருந்ததால் ஸ்பான்சர் வேண்டாம் என்று மலர்விழி தலைமை ஆசிரியையிடம் கூறிவிட்டாள்.

நாட்களும் கடந்து சென்று கொண்டிருந்தது.

மலர்விழி தன்னுடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் நல்ல வனை பார்த்து திருமணம் செய்து முடித்து விட வேண்டும் என்று நினைத்திருந்தாள்.அவள் தன்னுடைய மூத்த மகனுக்கு தான் முதலில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள்.ஆனால் அவன் தன்னுடைய தங்கைக்கு திருமணம் முடித்த பிறகு தான் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக கூறிவிட்டான்.

மலர்விழியின் மகள் வேலைக்கு சேர்ந்து  ஆறு மாதங்களுக்கு மேலாகி இருந்தது.இந்த சூழ்நிலையில்தான் அவள் தன்னோடு சேர்ந்து டாக்டருக்கு படித்த சென்னையை சேர்ந்த ஒருவன் மீது காதலில் விழுந்தாள்.அவனும் அவளை உயருக்குயிராக காதலித்தான்.இந்த விஷயம் மலர்விழிக்கு அரசல் புரசலாக தெரியவந்தது. 

அவளும் தெரிந்தவர்கள் மூலம் அந்த பையனின் குடும்பத்தை பற்றி விசாரித்தாள்.அப்படி விசாரித்ததில் அவர்கள் குடும்பம் நல்ல பாரம்பரியமிக்க குடும்பம் என்றும் அதே நேரம் எந்த ஒரு பந்தாபம் இல்லாமல் மற்றவர்களை இயல்பாக மதிக்க கூடிய நல்ல குணம் படைத்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

மலர்விழிக்கு தங்களுடைய குடும்ப விஷயம் அவர்களுக்கு தெரிய வந்தால் அவர்கள் தங்கள் மகளை ஏற்றுக் கொள்வார்களா என்ற பயம் இருந்தது.அதேபோல ஒருவேளை அவளை மருமகளாக ஏற்றுக் கொண்டாலும் பிற்காலத்தில் தன்னுடைய பழைய நடத்தையை பற்றி அவளிடம் குத்தி காட்டி பேசினால் அவளுடைய மனதும் புண்படும் என்பதை நினைத்தும் பயமாக இருந்தது.

இரவில் தனியாக அமர்ந்து தன்னுடைய மகளின் வாழ்க்கையை நினைத்து பார்க்க ஆரம்பித்தாள். எப்படியும் மலர்விழியின் காதலன் அவளை பேன் கேட்டு வரவேண்டும் இல்லையென்றால் தாங்கள் ஆவது முன் வந்து அவர்கள் வீட்டில் சென்று இதைக் குறித்து பேச வேண்டும் இரண்டில் ஒன்று நடந்தாலும் முதலில் மலர்விழியின் அப்பா எங்கே என்ற கேள்வி தான் வரும் அதற்கு என்ன பதில் சொல்வது அவர் டைவர்ஸ் வாங்கிவிட்டு போய்விட்டார் என்று சொல்லித்தான் ஆக வேண்டும் அப்படி சொல்லும்போது என்ன காரணத்திற்காக டைவர்ஸ் வாங்கி விட்டு சென்றார் என்று கேள்வி வரும் அப்பொழுது தன்னுடைய தவறான நடத்தை குறித்து எப்படி பதில் சொல்ல முடியும் என்று நினைத்து நினைத்து உள்ளுக்குள் துடி துடித்தாள்

 தான் தன்னுடைய இளவயதில் கூதி அரிப்பெடுத்து செய்த பாவம் முதிர் வயதிலும் தன்னுடைய பிள்ளைகளை தொடர்வதை நினைத்து தினமும் கண்ணீர் வடித்தாள்.

ஆனால் எதிர்பாராத விதமாக ஒருநாள் அவள் வீட்டில் இருந்த போது பையனின் குடும்பத்தாரே மலர்விழியின் மகளை பெண் கேட்டு வந்ததை நினைத்து அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அன்றே அவர்கள் மலர்விழியின் மகளை தங்களுக்கு பிடித்திருப்பதாகவும் நல்ல நாள் பார்த்து நிச்சயம் செய்து விரைவில் திருமணத்தை முடித்துக் கொள்ளலாம் என்று கூறியதை கேட்டு அவளுக்கு தலையே சுற்றி போனது.

பையனின் அம்மா தனியாக மலர்வழியை பார்த்து பெண்ணின் அப்பா விவாகரத்து வாங்கிக் கொண்டு போய் விட்டதாக எங்களுக்கு தெரியும்.பெண்ணின் அப்பா எங்களுடன் ஒரு நாள் பேசினார். அப்பொழுதுதான் எங்களுடைய மகள் மற்றும் மருமகன் இருவரும் அமெரிக்காவில் அவருடைய கம்பெனியில் தான் வேலை பார்ப்பதே எங்களுக்கு தெரியும்.

அவர் உங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதை கூறினார். கூடவே உங்களுடைய அண்ணனுக்கும் அண்ணிக்கும் விவாகரத்து ஆனதையும் உங்களுடைய அண்ணியை தான் அவர் திருமணம் செய்து கொண்டதையும் வெளிப்படையாக எங்களிடம் கூறினார்.

ஆரம்பத்தில் அதைக் கேட்டதும் எங்களுக்கு உங்களுடைய குடும்பத்தை சுத்தமாக பிடிக்கவில்லை.ஆனால் அவர் எங்களிடம் கூறியது ஒரே ஒரு விஷயத்தை தான். அது என்னவென்றால் பையனுக்கும் பொண்ணுக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்திருக்கிறது.என்னதான் என்னுடைய பெண் தவறான ஒழுக்கத்தில் பிறந்து இருந்தாலும் அவள் இன்று வரை உங்களுடைய பையனுடன் எந்த ஒரு அந்தரங்க தொடர்பும் வைத்துக் கொண்டதில்லை. ஒழுக்கத்தில் அவள் நெருப்பு போன்றவள்.அதை உங்களுடைய மகனிடமே கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

எங்களுடைய பெண்ணை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் எங்களுடைய பெண்ணுக்கு எந்த ஒரு இழப்பும் இல்லை. உங்களுடைய பையன் தான் முதலில் எங்களுடைய பெண்ணை உருகி உருகி காதலித்தான்.அவனால் தான் அவளை மறப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும்.

 நான் என்னுடைய பெண்ணை இங்கே அழைத்து வந்து ஆறேழு மாதங்கள் என்னுடன் வைத்திருந்தால் அவள் என்னுடைய பிள்ளைகளுடன் பழகும் போது அவள் கொஞ்சம் கொஞ்சமாக  உங்களுடைய பையனை மறக்க ஆரம்பித்து விடுவாள்.பின்பு நானே நல்ல பையனை பார்த்து என்னுடைய பெண்ணுக்கு  திருமணம் செய்து வைத்து விடுவேன் என்றார்.

ஆரம்பத்தில் அவர் எங்களை லேசாக மிரட்டுவது போல் தான் எங்களுக்கு தோன்றியது.ஆனால் நாங்கள் எங்கள் மகளுடன் இது பற்றி பேசிய போது அவள் அவரைப் பற்றி நல்ல விதமாக கூறினாள்.மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்.இன்று அமெரிக்காவில் ஐடி பீல்டில் மிகவும் பெரிய அளவில் கொடிகட்டி பறக்கிறார்.ஒரு தமிழனாக அவரை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்.

என்னதான் அவள் அவருக்கு பிறக்கவில்லை என்றாலும் அவரே அவளை அவருடைய மகள் என்று சொல்லும்போது நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு அவளை தம்பிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறிவிட்டாள். 

நாங்கள் எல்லாம் வாழ்ந்த முடித்தவர்கள் இன்னும் பழைய நடந்து முடிந்த கண்டதைப் பேசிக் கொண்டிருந்தால் வாழ வேண்டியவர்கள் வாழ்க்கையை இழந்து விடுவார்கள் என்பதால் நாங்களும் பிள்ளைகளின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவுக்கு வந்து விட்டோம்.இதற்கு மேல் பேச எதுவும் இல்லை என்று கூறிவிட்டு போய்விட்டாள்.

கோபி தங்களுடைய வாழ்க்கையில் குறுக்கிடாமல் அப்படியே விட்டிருந்தால் கூட இந்த அளவுக்கு குற்ற உணர்ச்சி இருந்து இருக்காது.அந்த அளவுக்கு மலர்விழிக்கு கோபி தாங்கள் செய்ததை நினைத்து குற்ற உணர்வாக இருந்தது.

நல்லதொரு நாளில் மலர்விழியின் மகளுக்கும் அவள் விரும்பிய பையனுக்கும் திருமணம் நிச்சயதார்த்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.அன்றே திருமண நாளும் உறுதி செய்யப்பட்டது.வீடியோ காலில் கோபியின் பிள்ளைகள் தங்களுடைய அக்காவுக்கு வாழ்த்துக்கள் கூறினார்கள். 

மாப்பிள்ளையும் பெண்ணும் டாக்டர்கள் என்பதால் மலர்விழியின் வாழ்க்கையும் மலர்விழியின் மகளின் வாழ்க்கையும் அங்கே பெரிதாக விவாதிக்கப்படவில்லை.
வந்திருந்தவர்கள் எல்லோரும் வாழ்த்தி விட்டுச் சென்றார்கள் 

இதுவரை தான் தங்களுடைய அப்பா தங்களுடன் பேசவில்லை.எதோ ஒரு காரணத்திற்காகவும் இங்கே வரவில்லை. அட்லீஸ்ட் இந்த நல்ல நாளில் கூட தங்களுடைய அப்பா இங்கே வரவில்லை என்று மலர்விழியின் நான்கு பிள்ளைகளும் கோபியின் மீது கோபத்துடன் இருக்கிறார்கள் என்று மலர்விழிக்கு தெரியவில்லை.

அங்கே கோபியும் நிர்மலாவும் அவர்களுடைய பிள்ளைகளும் மலர்வழியின் மகள் திருமணத்திற்கு கண்டிப்பாக போகவேண்டும் என்று முடிவு செய்து கொண்டார்கள்.

அவர்கள் நினைத்தபடியே மலர்விழியின் மகள் திருமண நாளும் வந்தது.

காலையில் திருமணம் நடந்து கொண்டிருந்தது.திருமணத்தின்போது ஐயர் பெண்ணை தாரை பார்க்க பொண்ணோட அம்மா அப்பாவை அழைச்சிண்டு வாங்கோ என்றார்.

அதைக் கேட்டதும் மலர்விழியின் கண்கள் கலங்கி போனது. எங்களுடைய அப்பா தன்னுடைய அண்ணன் தான் என்று அவளால் சொல்ல முடியவில்லை.அதேபோல பிள்ளைகள் அப்பாவாக நினைத்து கொண்டிருக்கும் எனக்கும் கோபிக்கும் டைவர்ஸ் ஆகிவிட்டது என்றும் இதுவரை பிள்ளைகளிடம் சொல்லவில்லை என்பதால் இந்த நேரத்தில் அதை வெளிப்படையாக சொல்லவும் முடியவில்லை.

மலர்விழியின் மகள் முகம் அவமானத்தால் சிவந்து அவளுடைய தலை பூமியை நோக்கி குனிந்தது.

அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக கோபியும் நிர்மலாவும் ஒன்றாக உள்ளே நுழைந்து மலர்விழியின் மகள் கையை பிடித்து மாப்பிள்ளையின் கையில் கொடுத்தார்கள்.

ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்த சம்பவத்தை மலர்விழியின் மகளால் ஜீரணிக்க முடியவில்லை.அதைவிட மலர்விழியின் மூத்த மகனுக்கு தன்னுடைய அப்பா வேறு ஒரு திருமணம் செய்து கொண்டதையும் அதுவும் தன்னுடைய மாமாவின் மனைவியான தங்களுக்கு அன்பான அத்தையை திருமணம் செய்து கொண்டதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவள் அமெரிக்காவில் இருக்கும் போது அக்கா அக்கா என பாசமாக பேசி தன்னுடன் நெருங்கி பழகிய மூன்று முகங்களும் தனக்கு நெருக்கமான முகத்தை ஏன் பிரதிபலித்தது என்பது இப்பொழுது அவளுக்கு புரிந்தது.அந்த மூன்று குழந்தைகளும் தன்னுடைய அப்பா கோபிக்கும் தன்னுடைய அத்தை நிர்மலாவுக்கும் பிறந்த குழந்தைகள் என்பது இப்பொழுது அவளுக்கு தெளிவாக புரிந்தது.

மலர்வழியின் நான்கு குழந்தைகளும் கோபியின் மீதும் நிர்மலாவின் மீதும் ஆத்திரமடைந்தார்கள்.அவர்களின் முகத்தில் இருந்து கோபியின் மீது இருக்கும் கோபத்தை மலர்விழியால் கண்டுகொள்ள முடிந்தது.

அவள் தன்னுடைய பிள்ளைகள் நான்கு பேரையும் கண்ணால் மிரட்டி எதுவும் பேசக்கூடாது என்று சைகை செய்தாள்.அதனால் அவர்களால் தங்களுடைய அம்மாவை மீறி எதுவும் செய்ய முடியாமல் போனது. திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.


திருமணம் முடிந்து திருமணத்திற்கு வந்திருந்த உற்றார் உறவினர் எல்லோரும் கலைந்து சென்ற பிறகும் கூட கோபியும் நிர்மலாவும் அவளுடைய மூன்று பிள்ளைகளும் கூட அங்கே தான் இருந்தார்கள்.

கோபியும் நிர்மலாவும் தங்களுடைய பிள்ளைகளுடன் மண்டபத்திற்கு நுழையும் போதே வெளியே நின்று வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்த துரைசாமியும் தேவாவும் அவர்களை பார்த்து விட்டார்கள்.

முதலில் அவர்கள் ஏதாவது பிரச்சனை செய்ய வந்திருப்பார்களோ என்று நினைத்து பயந்தார்கள்.ஆனால் வந்தவர்கள் முகத்தில் அப்படி பிரச்சனை செய்வதற்கு ஏதுவான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை. மாறாக கையில் பரிசு பொருட்களுடன் சந்தோஷமாக வந்திருந்தார்கள் என்பதால் அவர்களைத் தவறாக நினைக்க தோன்றவில்லை.

துரைசாமி ஒரு நிமிடம் உறைந்து போய் நின்றார்.பின்னர் தன்னுடைய மனதை தேற்றிக்கொண்டார்.காரணம் இருவரும் தங்களுடைய குடும்பத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்.அனாதை என்ற ஒற்றை காரணத்திற்காக அவர்களை தங்கள் குடும்பத்தில் ஏற்றுக்கொண்டு அவர்கள் இருவருக்கும் தாங்கள் செய்த அநியாயம் கொஞ்சம் இல்லை.

பாதிக்கப்பட்ட இருவரும் தங்களுடைய மனக்காயங்களை ஆற்றிக்கொள்ளவே ஒன்றாக இணைந்து இருப்பார்கள்.மற்றபடி அவர்கள் இருவரும் தங்களைப் போல தங்கள் குடும்பத்தில் இருக்கும் போதே கள்ள உறவில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்பது அவருடைய மனசாட்சிக்கு நன்றாகவே புரிந்தது.

அவர் வந்த இருவரையும் மனதார வரவேற்று உள்ளே அனுப்பி வைத்தார்.

தேவாவுக்கு தான் தான் இழந்த பொக்கிஷத்தின் அருமை இப்போது புரிந்தது.

ஏற்கனவே நல்ல அழகாக இருக்கும் நிர்மலா இப்போது இன்னும் அழகில் மெருகூட்டி இருந்தாள்.ஆண் பெண் பேதமின்றி அவளை பார்க்கிற யாராக இருந்தாலும் கூடுதலாக இன்னும் நேரம் செலவழித்து அவளை நன்றாக பார்த்துவிட்டு தான் தங்கள் கண்களை அகற்றுவார்கள்.அந்த அளவுக்கு அழகில் இன்னும் செழிப்பாக இருந்தாள்.

நிகழ்வு ஒரே பார்த்த தேவாவுக்கு மனதுக்குள் மிகவும் சங்கடமாக இருந்தது.இவர்கள் தனக்கு பிறக்க வேண்டிய பிள்ளைகள்.தான் செய்த தவறால் இவள் தன்னை விட்டு பிரிந்து இன்னொருவனுக்கு மனைவியாகிய குழந்தை பெற்றுக் கொண்டு இருக்கிறாள் என்பதை நினைத்து உள்ளுக்குள் குமரி போனான் ஆனால் அவன் செய்த பாவம் அவன் கண் முன்னே வந்தது. உள்ளே நடந்து கொண்டிருப்பது தன்னுடைய பாவத்தின் உருவம் என்பது அவனுக்கு நினைவுக்கு வந்தது அவனும் தன்னுடைய மனதை தேற்றிக்கொண்டு வந்தவர்களை வரவேற்று உள்ளே அனுப்பி வைத்தான்.


இன்னும் மலர்வழியின் பிள்ளைகள் இன்னும் கோபியின் மீது கோபத்துடன் இருப்பதை கண்ட நிர்மலா மலர்விழியை  தனியாக அழைத்து பிள்ளைகள் மூவரையும் தனியாக ஒரு அறைக்கு அழைத்து வரும்படி சொன்னாள்.

இவ்வளவு செய்த பிறகும் கூட தான் தன்னுடைய பிள்ளைகளிடம் கோபியின் நல்ல மனதை எடுத்துச் சொல்லி புரிய வைக்காததை நினைத்து வருந்திய மலர்வழி நிர்மலா சொன்னது போலவே தன்னுடைய பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அங்கே சென்றாள்.

அங்கே கோபியும் அவனுடைய பிள்ளைகளும் நிர்மலாவும் இருப்பதை கண்ட மலர்விழியின் மகன் தன்னுடைய அப்பா தங்களை விட்டு பிரிந்து சென்றதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய அத்தையையும் மனமாற்றி மாமாவை விட்டு பிரித்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு அவள் மூலமாக பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டு அதனால்தான் தங்களை தவிக்க விட்டுச் சென்றதை சென்றதாக நினைத்துக் கொண்டு அவன் மீது தீராத ஆத்திரத்துடன் எங்களையெல்லாம் சின்ன வயதில் தவிக்க விட்டு விட்டு ஒரு பாவம் அறியாத எங்கள் மாமாவின் அன்பான அத்தையை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு நாட்டை விட்டு ஓடிப் போய் இருக்கிறாயே நீ எல்லாம் மனுசனா என்று சொல்லிக் கொண்டு கோபத்துடன்
கோபியை அடிக்கச் சென்றான்.

அதை கண்ட மலர்விழி தன்னுடைய மகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
[+] 7 users Like Ananthakumar's post
Like Reply


Messages In This Thread
RE: என் மனைவியின் மர்ம பிரதேசம் - by Ananthakumar - 19-01-2026, 12:06 PM



Users browsing this thread: 1 Guest(s)