05-01-2026, 04:00 PM
இப்படி அனைத்துச் சடங்குகளும் முடிந்த பின் பிணத்தைத் தூக்கி முகம் வீட்டைப் பார்த்தும், கால்கள் காட்டைப் பார்த்தபடியும் இறுதிச் சடங்குக்கான வண்டியில் ஸ்ட்ரெச்சர் போல இருந்த படுக்கையில் படுக்கப் போட்டு ஏற்றி வைத்தார்கள்.
என் மனைவி பயன்படுத்திய பொருட்களை அந்த வண்டியில் அவள் கூடவே வைத்து விட்டார்கள். பிணத்தைத் தூக்கிய பின் சில உறவுக்காரப் பெண்கள் அழுதுக் கொண்டே கொஞ்சம் தூரம் வரை சென்றார்கள். பிறகு பெண்கள் அனைவரும் முச்சந்தியில் அமர்ந்து அழுது விட்டு, சோகத்துடன் வீடு திரும்பினார்கள். ஆண்கள் மட்டும் வண்டியின் பின்னாலேயே மெல்ல நடந்து இடுகாட்டுக்கு சென்றோம்.
சொர்க்க வாகனம் என் மனைவியின் பூத உடலை சுமந்து கொண்டு மெதுவாக ஊர்ந்து செல்ல, அதற்க்கு முன்னால் தப்பட்டை கொட்டியும், பட்டாசு வெடித்தும் சத்தம் எழுப்பினார்கள். பண்டாரம் வெங்கல மணியை அடித்து ஒலி எழுப்பி சங்கு ஊதியவாறே முன்னே நடந்து சென்றார். சில பேர் சடலத்துக்கு போடப்பட்ட குவிந்திருந்த மாலைகளை பிய்த்து பிய்த்து போகிற வழி எங்கும் போட்டார்கள்.
நான் மற்ற உறவினர்களோடு இடுகாடு நோக்கி தீச்சட்டியை தூக்கிக் கொண்டு கனத்த இதயத்தோடும், என் மனைவியின் நினைவுகளோடும் ஒரு ஜடமாக நடந்து சென்றேன்.
பிணத்தைத் தூக்கிச் சென்ற பின், எங்கள் தெருவிலுள்ள அனைத்துப் பெண்களும் அவரவர் வீட்டு வாசல்களுக்கு சாணம் தெளித்தார்கள். சாணம் கிடைக்காத சிலர் அவரவர் வீட்டு வாசல்களுக்கு தண்ணீர் தெளித்தார்கள்.
இறப்பின் காரணமாக உண்டான கிருமிகள் நீங்கவும், இடம் தூய்மை அடைவதற்காகவும் பிணம் எடுத்த என் வீட்டைச் சாணத்தால் மொழுகித் தூய்மை செய்தார்கள்.
பிணத்தை தூக்கிச் செல்லும் வழி நெடுகப் பொரி, காசு, மலர்கள் தூவிச் சென்றார்கள்.
ஏற்கனவே, இடுகாட்டில் இடுகாட்டு வெட்டியான் மூலம் பிணத்தை எரியூட்ட தேவையான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுடுகாட்டில் எரியூட்டும் கொட்டகையை சொர்க்க வாகனம் அடைந்ததும் அது அங்கேயே நிறுத்தப்பட்டது.
சொர்க்க வாகனத்திலிருந்து என் மனைவியின் உடலை இறக்கி பச்சை மூங்கில் குச்சி மற்றும் தென்னம் மட்டையால் பின்னப்பட்ட பாடையில் வைத்து நாலு பேர் சுமந்து வந்தார்கள்.
என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் சுய நினைவில்லாமல் கண்களில் கண்ணீர் வழிய, என் அழுகையை மறைக்க துக்கம் தாங்க முடியாமல் துண்டை சுருட்டி வாய் மேல் வைத்து பொங்கி வந்த அழுகையை மறைத்தபடி நின்றிருந்தேன்.
எரி மேடைக்கு அருகே பிணத்தை பாடையில் கொண்டு போனவர்கள், எரி மேடைக்கு பக்கத்தில் படையை வைத்து விட்டு, என் மனைவியின் உடலை மட்டும் அதிலிருந்து தூக்கி எரிமேடையில் அடுக்கப்பட்டிருந்த மரக் கட்டைகளின் மேல் வைத்தார்கள்.
“இப்பல்லாம் மின் மயானம் வந்திருச்சு. இதே மாதிரி ஸ்ட்ரெச்சர்ல பாடிய வச்சு அனுப்பினா, கால் மணி நேரத்துல ஒரு சட்டியில சாம்பலா கொடுத்துடுவாங்க. இவங்க என்னடான்னா இன்னும் கட்டையை வச்சு எரிச்சிகிட்டு இருக்காங்க.” என்று யாரோ பேசிக்கொண்டிருப்பது என் காதுக்கு கேட்டது.
கட்டைகளின் மேல் பிணத்தை வைத்து வராட்டியை அடுக்கி முகம் மட்டும் தெரியும்படி வைத்தார்கள்.
தாய்க்குத் தலைமகன் கொள்ளி வைப்பார், தந்தைக்குக் கடைசி மகன் கொள்ளி வைப்பார். ஆனால், என் மனைவிக்குதான் குழந்தையே இல்லையே? அவளுக்கு தாலி கட்டிய கணவனாகிய நான்தானே கொள்ளி வைக்க வேண்டும்.
எனக்கு மொட்டையடித்து தாடி, மீசை வழித்த பின்னால் நான் அங்கிருந்த போர் பைப்பில் தண்ணீர் அடித்து குளித்து விட்டு வர, எனக்கு திருநீரால் நெற்றி, மார்பு, கை, முதுகு போன்ற பகுதிகளில் பட்டைப் போட்டுவிட்டார்கள்.
வண்ணான் துண்டைப் பிணத்தின் அருகில் விரித்துப் போட்டு, அதன் பக்கத்தில் கொஞ்சம் அரிசியும் வைத்திருக்க, உறவுக்காரர்கள் கையில் ஒரு ரூபாயுடன், கொஞ்சம் அரிசியை அள்ளி எடுத்து, மூன்று முறை பிணத்தைச் சுற்றி வந்து , அரிசியைப் பிணத்தின் வாயில் போட்டுவிட்டு, காசை துண்டில் போட்டார்கள்.
மேடை போல அடுக்கப்பட்டிருந்த மரக் கட்டைகளின் மேல் கிடத்தப்பட்டிருந்த என் மனைவியின் சடலத்தின் அருகே நான் இடுப்பில் வெள்ளை வேஷ்டி மட்டும் கட்டியபடி நின்றிருக்க என் தோளில் நீர் நிறைந்த மண் கலையம் வைக்கப் பட்டது.
“பிணத்தை மூணு சுத்து சுத்தி வாங்க.” என்று வெட்டியான் சொல்லி, பின்னாலேயே ஒரு சிறு கொடுவாளோடு வந்தார். நான் நீர் நிறைந்த மண் கலையத்தை தோளில் வைத்து கையால் பிடித்துக்கொண்டு சுமந்தபடி பிணத்தைச் ஒரு சுற்று சுற்றி வந்த்தும், என் பின்னாலே வந்த வெட்டியான், என் தோளிலிருந்த மண் கலையத்தின் பின் பக்கத்தில் தன் கொடுவாளால் ஒரு கொத்து கொத்தி விட, பைப்பிலிருந்து நீர் கொட்டுவது போல நீர் கொட்டியது.
“ம்,… நடங்க கலயத்துல இருக்கிற தண்ணி ஒழுகி முடிக்கறதுக்குள்ள இன்னும் ரெண்டு சுத்து சுத்தணும்.” என்று வெட்டியான் எனக்கு கட்டளை இட, நான் பிணத்தைச் சுற்றி வந்து மிச்சம் இருந்த இரண்டு சுற்றையும் முடித்தேன்.
உடல் நிலை சரியில்லாமல், நோய்வாய் பட்டுக் கிடந்த என் மனைவியோடு வாழ்ந்த என் நினைவுகளுடன் எனக்கு அழுகை பீறிட்டு வர, அதை அடக்கிக்கொண்டு மூன்று முறை சுற்றி வந்தேன்.
ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு துவாரம் அந்தக் கலையத்தில் வெட்டியானால் போடப்பட்டது.
பிறகு பிணத்தின் கால் பகுதியில் நின்று நான் பின்பக்கம் திரும்பி நிற்க, “பாக்கறவங்க எல்லாம் கடைசியா ஒரு தடவை பாத்துக்கோங்க. முகத்தை மூடப் போறோம்.” என்று சுற்றி இருந்தவர்களைப் பார்த்து வெட்டியான் அறிவிப்பு செய்தார்.
ஒன்றிரண்டு பேர் அருகில் வந்து பார்த்து, கை எடுத்து கும்பிட்டு விட்டு செல்ல, வெட்டியான் ஒர் வராட்டியை எடுத்து என் மனைவியின் மஞ்சள் குங்குமத்துடன் மங்கலகரமாக இருந்த முகத்தை மூடினார்.
கொள்ளி ஏற்றப்பட்ட பந்தத்தை என் கையில் கொடுக்க, நான் என் மனைவியின் சடலத்தின் நெஞ்சுக்கு மேல் வைத்திருந்த சூடத்திற்கு கொள்ளி வைத்தேன்.
கொள்ளி வைத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் எரிமேடையை விட்டு செல்ல வேண்டும் என்று எனக்கு பெரியவர்கள் அறிவுறுத்தி இருந்ததால், நான் கொள்ளி வைத்த்தும், பீறிட்டு வந்த அழுகையோடு எரிமேடையை விட்டு தடுமாறியபடி நடந்து வெளியேறினேன்.
பிணத்திற்குத் தீ வைத்து விட்டு வந்ததும், ஒரு மரத்தடியில் நின்று துக்கம் தாங்காமல் நான் ‘ஓ’ என்று அழ, என் அருகிலேயே வந்தவர்கள் என்னைத் தாங்கிப் பிடித்தார்கள்.
“சரி,…சரி,…எல்லாம் போங்க. நாளைக்கு காலைலே வந்து அஸ்தியை வாங்கிட்டுப் போங்க.” என்று வெட்டியான் சொல்ல, இடுகாட்டுக்கு வந்திருந்த அணைவரும் இடுகாட்டை விட்டு வெளியேறினோம்.
என் அருகிலே இருந்தவர்கள் என்னை அருகில் இருந்த குளத்திற்கு கூட்டிச் சென்று குளத்தில் என்னை குளிக்க வைத்தார்கள். குளத்தின் கரையில் வேட்டியை விரித்துப் போட்டு அதில் மாமன், மைத்துனன், பங்காளி முறையோர் இழவுப் பணம் எழுதினார்கள்.
உறவுக்காரர்கள் கலந்துப் பேசி, எட்டுக் கும்பிடுதல், பால் தெளித்தல், கருமாதி போன்ற நிகழ்ச்சிக்காக குறித்த நாட்களை இடு காட்டுக்கு வந்திருந்தோர்களுக்கு தெரிவித்தார்கள்.
பிறகு குளத்தில் குளித்து விட்டு இடுகாட்டுக்கு வந்திருந்தோர் அவரவர் வீடு திரும்ப, சில பேர் அங்கிருந்தே அவரவர் ஊருக்கும் வீடுகளுக்கும் பயணப்பட, நெருங்கிய உறவினர்கள் எங்களோடு இருந்தார்கள்.
கொள்ளி வைத்து விட்டு, நெருங்கிய உறவினர்களுடன் நான் வீட்டுக்கு வந்தேன்.
வீட்டில் என் மனைவியை சடலமாக வைத்திருந்த இடத்தில் விளக்கேற்றி வைத்திருந்தார்கள். நானும் என்னுடன் வீட்டுக்கு வந்தோரும் நுழை வாயிலுக்கு முன்னே வாசலில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் கால்களைக் கழுவி விட்டு, வீட்டுக்கு உள்ளே சென்று ஜோதி மயமாகி விட்ட என் மனைவியை கை கூப்பியபடி வணங்கி, எரிந்து கொண்டிருந்த விளக்கு முகத்தில் முழித்தார்கள்.
இறந்த நாளிலிருந்து மூன்றாம் நாள் பால் தெளிக்க நெருங்கிய உறவினர்களோடு புறப்பட்டோம். இதனை காடமர்த்துதல் என்று எங்கள் பகுதியில் சொல்வார்கள்.
பால் விட்டு அரைத்த வசம்பு, இளநீர், தேங்காய், சூடம் போன்றவற்றை வீட்டிலிருந்து இடுகாட்டுக்கு எடுத்துச் சென்று என் மனைவியை எரித்த இடத்தில் பால், வசம்பு போன்றவற்றைத் தெளித்தேன்.
உறவுப் பெண்கள் வீட்டில் என் மனைவியின் சடலத்தை கிடத்தப்பட்டிருந்த இடத்தில் நிறை சொம்பில் பாலை வைத்து வணங்கி அழுது விட்டு, பிறகு அப்பாலை எடுத்துச் சென்று குளத்தில் ஊற்றினார்கள்.
இப்படியே சோகமாக, துக்கத்திலும், துயரத்திலும் சாப்பிடாமலும், தூங்காமலும் என் மனைவியின் நினைவாகவே ஒரு ஜடமாக காலத்தை ஓட்டினேன்.
துக்கம் விசாரிக்க வந்தவர்கள் எனக்கு ஆறுதல் சொன்னார்கள்.
என் மனைவி இறந்த எட்டாம் நாள் அன்று “எட்டுக் கும்பிடுதல்” என்று ஒரு சடங்கை கடைபிடித்தோம். என் மனைவி இறந்த அன்றே இச்சடங்கு பற்றி வந்திருந்தவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாமன், மச்சான் உறவுடையோர், பழங்கள், இனிப்பு வகை, பலகாரம், பூ போன்றவற்றை வாங்கி வந்திருந்தார்கள். மாமன் வீட்டு அரிசி, மைத்துனன் வீட்டு அரிசி, பங்காளி வீட்டு அரிசி ஆகிய மூன்று வீட்டு அரிசியும் போட்டு, பொங்கல் வைத்து, ஒப்பாரி வைத்து அழுதார்கள்.
அப்படி அழுதவர்களின் மீது சிலர் தண்ணீர் தெளித்து ஒப்பாரியை நிறுத்த்தினார்கள். நான் பொங்கலைப் புறங்கையால் மூன்று முறை எடுத்து இலையில் போட்டு வணங்கினேன்
கருமாதி செய்யும் முதல் நாள் கல் நிறுத்தப்படும் சடங்கு கடை பிடிக்கப்பட்டது. இதற்குப் பத்திரிக்கை அடித்து அனைவருக்கும் தெரிவித்தோம்.
பதினைந்தாம் நாள் இரவு எட்டு மணி வாக்கில் வள்ளுவர் கல் நிறுத்துதல் என்னும் சடங்கினைச் செய்ய தொடங்கினோம்.
என் மனைவி பயன்படுத்திய பொருட்களை அந்த வண்டியில் அவள் கூடவே வைத்து விட்டார்கள். பிணத்தைத் தூக்கிய பின் சில உறவுக்காரப் பெண்கள் அழுதுக் கொண்டே கொஞ்சம் தூரம் வரை சென்றார்கள். பிறகு பெண்கள் அனைவரும் முச்சந்தியில் அமர்ந்து அழுது விட்டு, சோகத்துடன் வீடு திரும்பினார்கள். ஆண்கள் மட்டும் வண்டியின் பின்னாலேயே மெல்ல நடந்து இடுகாட்டுக்கு சென்றோம்.
சொர்க்க வாகனம் என் மனைவியின் பூத உடலை சுமந்து கொண்டு மெதுவாக ஊர்ந்து செல்ல, அதற்க்கு முன்னால் தப்பட்டை கொட்டியும், பட்டாசு வெடித்தும் சத்தம் எழுப்பினார்கள். பண்டாரம் வெங்கல மணியை அடித்து ஒலி எழுப்பி சங்கு ஊதியவாறே முன்னே நடந்து சென்றார். சில பேர் சடலத்துக்கு போடப்பட்ட குவிந்திருந்த மாலைகளை பிய்த்து பிய்த்து போகிற வழி எங்கும் போட்டார்கள்.
நான் மற்ற உறவினர்களோடு இடுகாடு நோக்கி தீச்சட்டியை தூக்கிக் கொண்டு கனத்த இதயத்தோடும், என் மனைவியின் நினைவுகளோடும் ஒரு ஜடமாக நடந்து சென்றேன்.
பிணத்தைத் தூக்கிச் சென்ற பின், எங்கள் தெருவிலுள்ள அனைத்துப் பெண்களும் அவரவர் வீட்டு வாசல்களுக்கு சாணம் தெளித்தார்கள். சாணம் கிடைக்காத சிலர் அவரவர் வீட்டு வாசல்களுக்கு தண்ணீர் தெளித்தார்கள்.
இறப்பின் காரணமாக உண்டான கிருமிகள் நீங்கவும், இடம் தூய்மை அடைவதற்காகவும் பிணம் எடுத்த என் வீட்டைச் சாணத்தால் மொழுகித் தூய்மை செய்தார்கள்.
பிணத்தை தூக்கிச் செல்லும் வழி நெடுகப் பொரி, காசு, மலர்கள் தூவிச் சென்றார்கள்.
ஏற்கனவே, இடுகாட்டில் இடுகாட்டு வெட்டியான் மூலம் பிணத்தை எரியூட்ட தேவையான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுடுகாட்டில் எரியூட்டும் கொட்டகையை சொர்க்க வாகனம் அடைந்ததும் அது அங்கேயே நிறுத்தப்பட்டது.
சொர்க்க வாகனத்திலிருந்து என் மனைவியின் உடலை இறக்கி பச்சை மூங்கில் குச்சி மற்றும் தென்னம் மட்டையால் பின்னப்பட்ட பாடையில் வைத்து நாலு பேர் சுமந்து வந்தார்கள்.
என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் சுய நினைவில்லாமல் கண்களில் கண்ணீர் வழிய, என் அழுகையை மறைக்க துக்கம் தாங்க முடியாமல் துண்டை சுருட்டி வாய் மேல் வைத்து பொங்கி வந்த அழுகையை மறைத்தபடி நின்றிருந்தேன்.
எரி மேடைக்கு அருகே பிணத்தை பாடையில் கொண்டு போனவர்கள், எரி மேடைக்கு பக்கத்தில் படையை வைத்து விட்டு, என் மனைவியின் உடலை மட்டும் அதிலிருந்து தூக்கி எரிமேடையில் அடுக்கப்பட்டிருந்த மரக் கட்டைகளின் மேல் வைத்தார்கள்.
“இப்பல்லாம் மின் மயானம் வந்திருச்சு. இதே மாதிரி ஸ்ட்ரெச்சர்ல பாடிய வச்சு அனுப்பினா, கால் மணி நேரத்துல ஒரு சட்டியில சாம்பலா கொடுத்துடுவாங்க. இவங்க என்னடான்னா இன்னும் கட்டையை வச்சு எரிச்சிகிட்டு இருக்காங்க.” என்று யாரோ பேசிக்கொண்டிருப்பது என் காதுக்கு கேட்டது.
கட்டைகளின் மேல் பிணத்தை வைத்து வராட்டியை அடுக்கி முகம் மட்டும் தெரியும்படி வைத்தார்கள்.
தாய்க்குத் தலைமகன் கொள்ளி வைப்பார், தந்தைக்குக் கடைசி மகன் கொள்ளி வைப்பார். ஆனால், என் மனைவிக்குதான் குழந்தையே இல்லையே? அவளுக்கு தாலி கட்டிய கணவனாகிய நான்தானே கொள்ளி வைக்க வேண்டும்.
எனக்கு மொட்டையடித்து தாடி, மீசை வழித்த பின்னால் நான் அங்கிருந்த போர் பைப்பில் தண்ணீர் அடித்து குளித்து விட்டு வர, எனக்கு திருநீரால் நெற்றி, மார்பு, கை, முதுகு போன்ற பகுதிகளில் பட்டைப் போட்டுவிட்டார்கள்.
வண்ணான் துண்டைப் பிணத்தின் அருகில் விரித்துப் போட்டு, அதன் பக்கத்தில் கொஞ்சம் அரிசியும் வைத்திருக்க, உறவுக்காரர்கள் கையில் ஒரு ரூபாயுடன், கொஞ்சம் அரிசியை அள்ளி எடுத்து, மூன்று முறை பிணத்தைச் சுற்றி வந்து , அரிசியைப் பிணத்தின் வாயில் போட்டுவிட்டு, காசை துண்டில் போட்டார்கள்.
மேடை போல அடுக்கப்பட்டிருந்த மரக் கட்டைகளின் மேல் கிடத்தப்பட்டிருந்த என் மனைவியின் சடலத்தின் அருகே நான் இடுப்பில் வெள்ளை வேஷ்டி மட்டும் கட்டியபடி நின்றிருக்க என் தோளில் நீர் நிறைந்த மண் கலையம் வைக்கப் பட்டது.
“பிணத்தை மூணு சுத்து சுத்தி வாங்க.” என்று வெட்டியான் சொல்லி, பின்னாலேயே ஒரு சிறு கொடுவாளோடு வந்தார். நான் நீர் நிறைந்த மண் கலையத்தை தோளில் வைத்து கையால் பிடித்துக்கொண்டு சுமந்தபடி பிணத்தைச் ஒரு சுற்று சுற்றி வந்த்தும், என் பின்னாலே வந்த வெட்டியான், என் தோளிலிருந்த மண் கலையத்தின் பின் பக்கத்தில் தன் கொடுவாளால் ஒரு கொத்து கொத்தி விட, பைப்பிலிருந்து நீர் கொட்டுவது போல நீர் கொட்டியது.
“ம்,… நடங்க கலயத்துல இருக்கிற தண்ணி ஒழுகி முடிக்கறதுக்குள்ள இன்னும் ரெண்டு சுத்து சுத்தணும்.” என்று வெட்டியான் எனக்கு கட்டளை இட, நான் பிணத்தைச் சுற்றி வந்து மிச்சம் இருந்த இரண்டு சுற்றையும் முடித்தேன்.
உடல் நிலை சரியில்லாமல், நோய்வாய் பட்டுக் கிடந்த என் மனைவியோடு வாழ்ந்த என் நினைவுகளுடன் எனக்கு அழுகை பீறிட்டு வர, அதை அடக்கிக்கொண்டு மூன்று முறை சுற்றி வந்தேன்.
ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு துவாரம் அந்தக் கலையத்தில் வெட்டியானால் போடப்பட்டது.
பிறகு பிணத்தின் கால் பகுதியில் நின்று நான் பின்பக்கம் திரும்பி நிற்க, “பாக்கறவங்க எல்லாம் கடைசியா ஒரு தடவை பாத்துக்கோங்க. முகத்தை மூடப் போறோம்.” என்று சுற்றி இருந்தவர்களைப் பார்த்து வெட்டியான் அறிவிப்பு செய்தார்.
ஒன்றிரண்டு பேர் அருகில் வந்து பார்த்து, கை எடுத்து கும்பிட்டு விட்டு செல்ல, வெட்டியான் ஒர் வராட்டியை எடுத்து என் மனைவியின் மஞ்சள் குங்குமத்துடன் மங்கலகரமாக இருந்த முகத்தை மூடினார்.
கொள்ளி ஏற்றப்பட்ட பந்தத்தை என் கையில் கொடுக்க, நான் என் மனைவியின் சடலத்தின் நெஞ்சுக்கு மேல் வைத்திருந்த சூடத்திற்கு கொள்ளி வைத்தேன்.
கொள்ளி வைத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் எரிமேடையை விட்டு செல்ல வேண்டும் என்று எனக்கு பெரியவர்கள் அறிவுறுத்தி இருந்ததால், நான் கொள்ளி வைத்த்தும், பீறிட்டு வந்த அழுகையோடு எரிமேடையை விட்டு தடுமாறியபடி நடந்து வெளியேறினேன்.
பிணத்திற்குத் தீ வைத்து விட்டு வந்ததும், ஒரு மரத்தடியில் நின்று துக்கம் தாங்காமல் நான் ‘ஓ’ என்று அழ, என் அருகிலேயே வந்தவர்கள் என்னைத் தாங்கிப் பிடித்தார்கள்.
“சரி,…சரி,…எல்லாம் போங்க. நாளைக்கு காலைலே வந்து அஸ்தியை வாங்கிட்டுப் போங்க.” என்று வெட்டியான் சொல்ல, இடுகாட்டுக்கு வந்திருந்த அணைவரும் இடுகாட்டை விட்டு வெளியேறினோம்.
என் அருகிலே இருந்தவர்கள் என்னை அருகில் இருந்த குளத்திற்கு கூட்டிச் சென்று குளத்தில் என்னை குளிக்க வைத்தார்கள். குளத்தின் கரையில் வேட்டியை விரித்துப் போட்டு அதில் மாமன், மைத்துனன், பங்காளி முறையோர் இழவுப் பணம் எழுதினார்கள்.
உறவுக்காரர்கள் கலந்துப் பேசி, எட்டுக் கும்பிடுதல், பால் தெளித்தல், கருமாதி போன்ற நிகழ்ச்சிக்காக குறித்த நாட்களை இடு காட்டுக்கு வந்திருந்தோர்களுக்கு தெரிவித்தார்கள்.
பிறகு குளத்தில் குளித்து விட்டு இடுகாட்டுக்கு வந்திருந்தோர் அவரவர் வீடு திரும்ப, சில பேர் அங்கிருந்தே அவரவர் ஊருக்கும் வீடுகளுக்கும் பயணப்பட, நெருங்கிய உறவினர்கள் எங்களோடு இருந்தார்கள்.
கொள்ளி வைத்து விட்டு, நெருங்கிய உறவினர்களுடன் நான் வீட்டுக்கு வந்தேன்.
வீட்டில் என் மனைவியை சடலமாக வைத்திருந்த இடத்தில் விளக்கேற்றி வைத்திருந்தார்கள். நானும் என்னுடன் வீட்டுக்கு வந்தோரும் நுழை வாயிலுக்கு முன்னே வாசலில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் கால்களைக் கழுவி விட்டு, வீட்டுக்கு உள்ளே சென்று ஜோதி மயமாகி விட்ட என் மனைவியை கை கூப்பியபடி வணங்கி, எரிந்து கொண்டிருந்த விளக்கு முகத்தில் முழித்தார்கள்.
இறந்த நாளிலிருந்து மூன்றாம் நாள் பால் தெளிக்க நெருங்கிய உறவினர்களோடு புறப்பட்டோம். இதனை காடமர்த்துதல் என்று எங்கள் பகுதியில் சொல்வார்கள்.
பால் விட்டு அரைத்த வசம்பு, இளநீர், தேங்காய், சூடம் போன்றவற்றை வீட்டிலிருந்து இடுகாட்டுக்கு எடுத்துச் சென்று என் மனைவியை எரித்த இடத்தில் பால், வசம்பு போன்றவற்றைத் தெளித்தேன்.
உறவுப் பெண்கள் வீட்டில் என் மனைவியின் சடலத்தை கிடத்தப்பட்டிருந்த இடத்தில் நிறை சொம்பில் பாலை வைத்து வணங்கி அழுது விட்டு, பிறகு அப்பாலை எடுத்துச் சென்று குளத்தில் ஊற்றினார்கள்.
இப்படியே சோகமாக, துக்கத்திலும், துயரத்திலும் சாப்பிடாமலும், தூங்காமலும் என் மனைவியின் நினைவாகவே ஒரு ஜடமாக காலத்தை ஓட்டினேன்.
துக்கம் விசாரிக்க வந்தவர்கள் எனக்கு ஆறுதல் சொன்னார்கள்.
என் மனைவி இறந்த எட்டாம் நாள் அன்று “எட்டுக் கும்பிடுதல்” என்று ஒரு சடங்கை கடைபிடித்தோம். என் மனைவி இறந்த அன்றே இச்சடங்கு பற்றி வந்திருந்தவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாமன், மச்சான் உறவுடையோர், பழங்கள், இனிப்பு வகை, பலகாரம், பூ போன்றவற்றை வாங்கி வந்திருந்தார்கள். மாமன் வீட்டு அரிசி, மைத்துனன் வீட்டு அரிசி, பங்காளி வீட்டு அரிசி ஆகிய மூன்று வீட்டு அரிசியும் போட்டு, பொங்கல் வைத்து, ஒப்பாரி வைத்து அழுதார்கள்.
அப்படி அழுதவர்களின் மீது சிலர் தண்ணீர் தெளித்து ஒப்பாரியை நிறுத்த்தினார்கள். நான் பொங்கலைப் புறங்கையால் மூன்று முறை எடுத்து இலையில் போட்டு வணங்கினேன்
கருமாதி செய்யும் முதல் நாள் கல் நிறுத்தப்படும் சடங்கு கடை பிடிக்கப்பட்டது. இதற்குப் பத்திரிக்கை அடித்து அனைவருக்கும் தெரிவித்தோம்.
பதினைந்தாம் நாள் இரவு எட்டு மணி வாக்கில் வள்ளுவர் கல் நிறுத்துதல் என்னும் சடங்கினைச் செய்ய தொடங்கினோம்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)