Incest கடவுள் தந்த பல மலர்கள்.
#42
ட்ரெயினில் பயணப்பட்டு கும்ப கோணம் வந்து, அங்கிருந்து பஸ் பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

வீட்டில், என் மனவியின் உடம்புக்கு ரொம்ப முடியாமல் போக, என் மனைவி படுக்கையில் படுத்தபடி ஈன ஸ்வரத்தில் முனகிக்கொண்டிருந்தாள். அம்மா ஒரு பக்கம் உடம்புக்கு முடியாமல் படுத்திருந்தாள். தங்கை இருவரையும் கவனித்து, வேண்டியதை செய்து கொடுத்து விட்டு ஸ்கூலுக்கு சென்றிருந்தாள்.

ஏற்கனவே என் மனைவிக்கு ப்ளட் கேன்சர் இருக்கிறது. இப்போது நுரையீரல் பிரச்சினையும் சேர்ந்து கொண்டது. குளிர்காலம் என்பதால் என் மனைவிக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட, அவளை உடனே ஆம்புலன்ஸ் வர வைத்து, பக்கத்தில் இருந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்த்தேன்.

இரண்டு நாட்கள் ஆஸ்பத்திரியில் தீவிரமான சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் என் மனைவி திடீரென இறந்து போனாள்.

கடுமையான நோய் பாதிப்பின் இறுதி கட்டத்தில் இருக்கும் என் மனைவி பிழைக்க மாட்டாள் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். இருந்தாலும், ஒரு கணவனாக என் கடமைகளைச் செய்தேன்.

“சாரி,… நாங்க எவ்ளவோ ட்ரை பண்ணியும் உங்க ஒய்ஃப்பை காப்பாத்த முடியல. கவுண்டர்ல பில்லை கட்டிட்டு பாடியை வாங்கிட்டு போங்க.” என்று அங்கிருந்த மருத்துவர் ஒருவர் சொல்ல, அதிர்ச்சியானேன்.

துக்கம் தொண்டையை அடைக்க, என் மனைவி இறந்து போனதை மனம் ஏற்காமல், துயரம் தாங்காமல், உறவினர்களோடு நானும் சேர்ந்து கதறி அழுது, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ஒரு நிதானத்துக்கு வந்து, கேட்ட பணத்தை கட்டிவிட்டு, மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்த பேப்பர்களில் கையெழுத்து போட்டு விட்டு, காத்திருந்தேன்.


மார்ச்சுவரியிலிருந்து வெள்ளைத் துணி உடலெங்கும் சுற்றப்பட்டு சடலமாக என் மனைவியை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிக் கொண்டு வந்தார்கள்.
உதவியாக இல்லாவிட்டாலும், என் மனைவி என்ற ஒருத்தி இல்லாமல் இனி நான் எப்படி வாழ்வேன்? கல்யாணம் ஆகி ஆறு மாத காலமே என்றாலும் நான் அவள் மேல் வைத்த பாசம் என்னை மெல்ல கொன்று கொண்டிருந்தது.

இந்த வயதில் இவளுக்கு இப்படி ஒரு நோய் வர வேண்டுமா? நோயால் அவதிப்பட்டு சாவு வர வேண்டுமா? இவளோடு கூடவே என்னையும் எடுத்துக்கொள்ளக் கூடாதா ஆண்டவா?” என்று அழுது புலம்பியபடியே, துக்கத்தை அடக்க முடியாமல் தவித்து கண்ணீர் வடித்தேன்.

மருத்துவமனை ஊழியர்கள், வந்து நின்ற ஆம்புலன்ஸில் என் மனைவியின் சடலத்தை ஏற்றினார்கள்.

என் மனைவியின் சடலம் ஏற்றப்பட்ட ஆம்புலன்ஸில் மற்ற உறவினர்களோடு நானும் ஏறி, வீட்டுக்கு வந்தோம்.

வீட்டுக்கு கொஞ்ச தூரத்திலேயே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட, என் மனைவியின் சடலத்தை என் உறவினர்களோடு சேர்ந்து தூக்கி வந்து வீட்டு ஹாலில் வைத்தோம்.

என் மனைவி இறந்த விஷயம் கேள்விப்பட்டு ஏற்கனவே வீட்டில் இருந்த உறவினர்கள் சிலர் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாட்டை செய்து வைத்திருந்தார்கள்.

என் மனைவி இறந்த செய்தி சொந்தக்காரர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கம் உள்ளவர்கள் என்ரு எல்லோருக்கும் ஆள் மூலமாகவும், போன் மூலமாகவும் தெரியப்படுத்தப்பட்டது.

குளிர் சவப்பெட்டி உடனே வர வைக்கப்பட்டது.

தப்பு அடிக்க ஆட்கள் வரவழைக்கப்பட்டார்கள்.

வீட்டிற்க்கு வெளியே சாமியானா பந்தல் போடப்பட்டு, பிளாஸ்டிக் சேர்கள் வரவழைத்து, இறுதிச் சடங்குக்கு வருவோர் உட்கார போடப்பட்டது.
வெளியே தப்பு அடிக்கும் சத்தம் என் இதயத்தை அடிப்பது போல கேட்டுக்கொண்டிருக்க, நான் அழுதுகொண்டே என் மனைவியின் சடலத்தை பார்த்தபடி சோகத்தில் உட்கார்ந்திருந்தேன்.

வீட்டின் நடு ஹாலில் கிடத்தப்பட்ட என் மனைவியின் சடலத்திற்கு எங்கள் குல வழக்கப்படி இறுதி மரியாதைகள் செய்ய குடும்ப பெரியவர்கள் தயாரானார்கள்.

இறுதிச் சடங்கு முறை பற்றி தெரிந்த பெரியவர்கள் வந்திருந்து சடங்குக்கு தேவையான ஏற்பாட்டை செய்தார்கள்.

சடலமாகக் கிடந்த என் மனைவியின் வாயில் மண்ணெண்ணெய் உப்பு இரண்டையும் கலந்து ஊற்றினார்கள். பருத்தி நூலால் ஆன கயிறுகளால் என் மனைவியின் இரண்டு கை பெருவிரல்களையும் இணைத்து கைக்கட்டு கட்டினார்கள். காலிலுள்ள பெருவிரல்களையும் இணைத்து கால்கட்டு கட்டினார்கள். வாயில் வெற்றிலை சீவல் கசக்கி வைத்து துணியால் வாயை மூடி வாய்க்கட்டு கட்டினார்கள். தளர்ந்து வரும் தாடையை வாயுடன் ஒருங்கிணைத்து நாடிக்கட்டு கட்டினார்கள். தொப்புள் வழியாகக் காற்று புகுந்து வயிறு புடைத்துவிடாமல் இருக்க தொப்புள் கட்டு கட்டினார்கள். நாடிக்கட்டையும் வாய்க்கட்டையும் இணைத்து, அவை வெளியில் தெரியாமல் மூடி, தலை முடியையும் மறைத்து, முகம் மட்டும் தெரியும்படியாக தலைக்கட்டு கட்டினார்கள். முழங்கால் இரண்டையும் இணைத்து உடல் நேர்க்கோட்டில் அமையும்படி முழங்கால் கட்டு கட்டினார்கள். பிறப்புறுப்பை மறைத்துக் கட்டப்படும் கோவனக் கட்டு கட்டினார்கள். இத்தனை கட்டுகளையும் கட்டி பாயில் படுக்க வைத்தார்கள்.

“ஏம்ப்பா,…அதான் ஃப்ரீசர்லதானே பாடியை வைக்கப் போறோம். அப்புறம் எதுக்குப்பா அந்தக் காலம் மாதிரி இந்த கட்டெல்லாம். ஃப்ரீசர்ல வைக்காதப்பதான் நேரம் ஆக ஆக, உடம்பு தசைகள் விரைச்சுப் போய், சடலம் முறுக்கிகிட்டு மரக்கட்டை மாதிரி ஆய்டும். நம்மலாள ஒரு பொஷிசன்ல பாடியை வைக்க முடியாதுன்றதுனால அவ்வளவு கட்டு கட்டினாங்க. இப்ப அது தேவையா?” என்றார் ஒரு பெரியவர்.

“என்னைக்குன்னாலும், சடங்கு சம்பிரதாயப்படி சடங்குகளை செஞ்சுடணும். ஆத்மா சாந்தி அடையுதோ இல்லையோ,… பங்காளிகள், மாமன், மச்சான்களால பின்னால பிரச்சினை வரக்கூடாது. அதனால எப்படி செய்யணுமோ அப்படி செஞ்சுடுங்கப்பா” என்றார் இன்னொரு பெரியவர்.

இப்படி ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்ல, ஒரு வழியாக பழைய முறையையும், புதிய முறையையும் கலந்து சடங்குகளை செஞ்சிடலாம் என்று உறவினர்கள் கூடிப் பேசி முடிவெடுத்து, என் மனைவியின் சடலத்தின் முகம் தெற்குப் பக்கம் பார்க்கும்படி வைக்கப்பட்டது. அவள் நெற்றியின் மத்தியில் ஒரு ரூபாய் காசு ஒட்டி வைக்கப்பட்டது.


ஆஸ்பத்திரி ஊழியர்களால் உடலுக்கு சுற்றப்பட்டிருந்த வெள்ளைத் துணி உறவினர் பெண்களால் அகற்றப்பட்டு, சடலத்தை குளிப்பாட்டி, பச்சை பட்டுப்புடவை உடுத்தி, முகத்திற்கு சுமங்கலிகளால் மஞ்சள் பூசி, நெற்றியின் மத்தியில் குங்கும் வக்கப்பட்டது. தலை நிறைய பூ வைக்கப்பட்டது.

கழுத்துக்கு மலர் மாலை அணிவித்து நடு ஹாலில் கிடத்தி அவள் தலைக்கு மேலே அகல் விளக்கு ஏற்றி , தேங்காய் உடைக்கப்பட்டு வைக்கப்பட்டது.

சடலத்தின் அருகில் ஒருபடியில் நெல்லை நிரப்பி அதன் மேல் நல்லெண்ணை விளக்கு வைத்து, சொம்பு நிறையும்படி நீர் வைத்தார்கள். பின் மாலை, தேங்காய், சூடம், பத்தி, வெற்றிலை, சீவல் போன்றவற்றை என் மனைவியின் சடலத்தின் தலைக்கு மேலே வைத்தார்கள். இரண்டு விராட்டியை வாசலில் வைத்து அதன் மேல் சூடத்தை ஏற்றி வைத்து, சாம்பிராணி போட்டு, தேங்காய் உடைத்தார்கள்.

“ஏம்ப்பா சொந்த பந்தங்களுக்கு, உற்றார் உறவினர்களுக்கு, சம்பந்திங்களுக்கு, மாமன் மச்சான்களுக்கு, பங்காளிங்களுக்கெல்லாம் துக்க விஷயம் சொல்லியாச்சாப்பா. நாளைக்கு எனக்கு சொல்லல, உனக்கு சொல்லலேன்னு இருக்கப் படாது.” என்று ஒரு பெரியவர் சொல்ல, என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த, எனக்கு அண்ணன் முறை உள்ள ஒருவர், “எல்லாத்துக்கும் சொல்லியாச்சு மாமா.” என்றார்.

உறவினர்கள் ஒரு பக்கம் அழுது கொண்டிருக்க, என் மனைவியின் உடல் முன்னே சில பேர் உட்கார்ந்து ஒப்பாரி பாட ஆரம்பித்திருந்தார்கள்.

கூட்டத்தில் இருந்த வாலிபன் ஒருவன், “ஒப்பாரி வச்சு அழறதெல்லாம் அந்தக் காலம். இப்ப யார் ஒப்பாரி வைக்கறாங்க. பேருக்கு, கடமைக்கு அழுதுட்டு போய்டறாங்க.” என்றான்.

அதற்கு பதிலளிப்பது போல இன்னொரு வாலிபன், “ஆமாப்பா. இப்பல்லாம் ஒப்பாரி வச்சு அழறதுக்குன்னே டீம் இருக்கு. காசை கொடுத்து சில விவரங்களைக் கொடுத்துட்டா போதும், அதை வச்சு ஒப்புக்கு மாரடிச்சு, சிறப்பா ஒப்பாரி வச்சிடுவாங்க.” என்றான்.

இவர்கள் பேசிக்கொண்டதை கேட்ட பெரியவர் ஒருவர், “ஆமாப்பா. இப்பல்லாம் பழைய சடங்கு சம்பிரதாயத்தை நிறைய பேர் கடை பிடிக்கறதில்லே. காலத்துக்கு ஏத்த மாதிரி செய் முறையிலேயும் மாற்றம் வந்துகிட்டே இருக்கு. நாமளும் அதுக்கேத்த மாதிரி மாறிக்கிறோம். இறுதிச் சடங்கில் இடம்பெறும் பாடலை ஒப்பாரின்னு சொன்னாங்க.

ஒப்பாரின்றது பிலாக்கணம், பிணக்கானம், கையறு நிலை, புலம்பல், இறங்கற்பா, சாவுப்பாட்டு, இழவுப் பாட்டு, அழுகைப்பாட்டு, மாரகப்பாட்டு, கைலாசப்பாட்டு எனப் பலவாறா இருக்கிறதா சொல்வாங்க. ஒப்பாரி பாடுவதால் இறந்தவரின் ஆவி சாந்தி அடைவதாகவும், பாடாவிட்டால் அந்த ஆவி துன்பப்படுவதாகவும் நம்பப்படுகிறது.”

“அடப் போங்க பெரியவரே. இதெல்லாம் சும்மா சொல்லி வச்சது.”

“என்னமோப்பா எனக்கு தெரிஞ்சதைச் சொன்னேன்.”

என் மனைவியின் தாய் வீட்டிலிருந்து அரிசி, மஞ்சள், குங்குமம், வளையல், தலைக்குப் பூ, எண்ணெய், சீயக்காய், பச்சை மட்டை (கீத்து) போன்றவற்றை பொறந்த இடத்துக் கோடியா எடுத்து வந்தாங்க.

இப்படி கோடி போடுற முறையுள்ள பல பேர் கோடி போட்டதும், எங்க பங்காளிகள் ஏழு பேர் குளிச்சிட்டு, உடல் முழுவதும் திருநீரால் பட்டை, நெற்றிகளில் போட்டு நீர் நிறைந்த குடத்தை தூக்கி வந்தார்கள். அவர்கள் தலைக்கு மேல் நாலு பேர் குடை போல வேட்டியை விரித்துப் பிடித்தபடி வந்தார்கள்.

தண்ணீர் எடுத்து வந்த குடங்களை வாசலில் வரிசையாக வைத்து, என் மனைவியின் சடலத்தை வெளியில் எடுத்து வந்து வீட்டு வாசலில் பலகையில் படுக்க வைத்து, சேலையை திரைச் சீலை போல சில பெண்கள் பிடித்துக்கொண்டு மறைத்தபடி நிற்க, சில பெண்கள் கோடியில் எடுத்து வந்த பொருட்களை குளிப்பாட்ட பயன்படுத்தி சடலத்தை குளிப்பாட்டினார்கள்.

குளிப்பாட்டிய பின் சடங்குப் படி சடலத்துக்கு வாய்க்கரிசி போட்டார்கள். உறவுக்காரர்கள் பாடையைச் சுற்றி மூன்று முறை அழுதுக் கொண்டே வந்து, கண்ணீரோடு வாயை துணியால் பொத்தியபடி நின்று கொள்ள, கூட்ட்த்திலிருந்த யாரோ ஒருவர், “எடுக்கலாமாப்பா. டைம் ஆய்டுச்சு.” என்று எச்சரிக்கை கொடுத்தார்.

“ம்,…எடுக்கலாம்.” என்று யாரோ ஒரு பெரியவர் சொன்னதும், பிணத்தை வண்டியில் ஏற்ற தயாரானார்கள்.
[+] 2 users Like monor's post
Like Reply


Messages In This Thread
RE: கடவுள் தந்த பல மலர்கள். - by monor - 05-01-2026, 03:58 PM



Users browsing this thread: 4 Guest(s)