30-12-2025, 04:52 PM
நான் உண்மையாகவே கோபமாகச் சென்றது என் சித்தப்பனைப்பார்த்துதான்...கூட அந்த அவனை எனக்கு யாரென்றே தெரியாது.. ஆனால் சித்தியோ நான் அவரைக்கூட்டிவந்தவனை திட்டத்தான் போகிறேன் என்று பதறியபடி பின்னாலேயே ஓடிவந்தாள்.. என் அருகில் சித்தி வருவதைப்பார்த்த அந்த ஆள் சித்தியைப் பார்த்தும் அதே கேவலமான சிரிப்பை்சிரித்தபடி..
அக்கா... வாக்கா.. நல்லாருக்கியா..? மீனாப்புள்ளெ என்ன பன்னுது..?
சித்தியை அவன் உறவு சொல்லி அழைத்ததும் மீனாவை அவன் உரிமையுடன் விசாரித்ததும் எனக்கு எரிச்சலைத்தரவே.. அவனை சற்று கடுப்புடன் முறைத்துக்கொண்டே..
ணே.. நீ யாரு மொத..? என் சித்திய அக்கான்ற.. வீட்ல இருக்க வயசுப்புள்ளய அது இதுன்ற.. யாரு நீ..?
நான் அப்படிக் கே்பேன் என்பதை எதிர்பார்க்காத அவன் என்னை மேலும் கிழும் பார்த்துவிட்டு எனக்கு பதில் சொல்லாமல் ஒரு நக்கல் பார்வையைப் பார்த்தவாறே.. சித்தியைப் பார்த்தான். அவளும் சற்று கலவரத்துன் இருக்கவே அதையும் பொருட்படுத்தாமல்..
ஏங்க்கா.. தம்பி யாரு..? உன் தூரத்து சொந்தமா..? ரொம்ப சூடா இருக்காப்டியே...?
ஆமா மா சூடாத்தான் இருக்கேன். நீ யாருனே சொல்லலயேணே.. யாரு நீ..? அந்தாள எறக்கிவிடத்தான வந்த..? இனி நீ கௌம்பு.
மறுபடியும் எனது பேச்சால் கடுப்பானவன் இப்போது தள்ளாடியபடி சித்தபனை அப்படியே சித்தயிடம் சாத்தி ஒப்படைத்துவிட்டு கஷ்டப்பட்டு சைடு ஸ்டான்டைப் போட்டுவிட்டு தனது பாக்கெட்டில் இருந்த சிகரெட்டைப் பற்றவைத்தவாறு மெல்ல.புகையை இழுத்து ஊதியபடி நின்றான். அவனால் நேராகக்கூட நிற்கமுடியவில்லை.. அவனது உடம்பில் இருந்து வந்த முட நாற்றம் இப்போது எனக்கும் அருவறுப்பாய்த் தெரிந்தது.. அப்படியே நேராக வீட்டுக்குள் எட்டிப் பார்த்தவன் அங்கே மீனா பேசாமல் உட்காரந்துகொண்டு என்னையே பார்த்தபடி இருப்பதைக் கவனித்தான்..
ஏய்.. என்ன மீனா.. மாமன ஒருத்தன் மரியாதக் கொறவா பேசிட்ருக்கான்.. நீ சேர்ல உக்காந்துட்ருக்க.. வெளிய வாடி மொத...
அவன் பேசி முடித்த அடுத்த நொடி அவனே எதிர்பார்க்காத வண்ணம் அவன் மூக்கிலும் பின்னர் அன் கன்னத்திலும் இடியென இரண்டு குத்துக்கள் இறங்கவே..சற்று நேரத்தில் நிதானம் இழந்தவன் அப்படியே தரையில் சரிந்தன். அவனது மூக்கிலும் வாயிலும் ரத்தம் வழிந்தபடி இருந்தது... பேச்சு மூச்சில்லாமல் கிடந்தவனைப் பார்த்து திடு்க்கிட்ட என் சித்தி அப்படியே தான் தாங்கியிருந்த சித்தப்பனை கீழே போட்டுவிட்டு என்னை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.. அவளது வாய் அப்படியே பிளந்தபடி இருந்தது.. கண்களில் கண்ணீர் கசிந்து எட்டிப் பார்த்தபடி இருந்தது..
கீழே விழுந்தவனுக்கு மறுபடியும் முழிப்பு வரவே இந்தமுறை தள்ளாடி எழுந்து நின்று தனது கழன்டுவிழுந்த கைலியை எடுத்துக் கட்டியபடி மீண்டும் என்னை அடிக்கக் கை ஓங்கியவனின் வயிற்றில் இறங்கிய குத்தால் வாந்தியெடத்தபடி அப்படியே உட்கார்ந்துகொண்டான். இவ்வளவு நடந்தும் மீனா சிறிய அசைவைக்கூட காட்டவில்லை.. அப்படியே சேரில் உடனகார்ந்தபடி அவன் வலியில் துடிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது முகத்தில் ஒரு பரம திருப்தியுடன்கூடிய அமைதி நிலவியது. ஆனால் அந்த இடத்தில் அவளது அமைதி எனக்கு இன்னும் ஆத்திரத்தைத்தான் கூட்டியது.
ஐயோ தமுழு.. ஒன்ன கையெடுத்துக் கும்புட்றேன்.. வீட்டுக்குள்ள போ.. வந்ததும் வராததுமா இங்க வம்புழுத்துறாத.. என்றபடி உண்மையாக்வே கையெடுத்துக் கும்பிட்டபடி அழத்தொடங்கிவிட்டாள் சித்தி..
சித்தி என்முன்னால் அழுவதைத் தாங்கமுடியாமல் அவளையும் தர தரவென்று இழுத்துக்கொண்டு நானும் வீட்டுக்குள் நுழைந்தேன். வாசலில் சித்தப்பனும் கூட வந்தவனும் போதையில் படுத்துக் கிடந்தனர்.. வீட்டுவாசலில் நடந்த இந்த ஆரவாரத்தால் எங்கிருந்தோ இரண்டு மூன்று நாய்கள் ஒன்றுகூடி எங்கள் வீட்டுவாசல்முன் நின்று சத்தமிடவே.. சத்தம் கேட்டு 100 மீட்டர் தொலைவில் இருந்த ஒரே ஒரு வீட்டிற்குள் இருந்து ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஒருவரும் 30 வயது மதிக்கத்தக்க அவரது மனைவியும் கையில் டார்ச் லைட்டுடன் எங்கள் வீட்டை நோக்கி வரத்தொடங்கினர்.. இதைக் கவனித்த கீழே வலியில் முனகிக் கொண்டிருந்த அந்த குடிகாரன் அப்படியே எழுந்து தள்ளாடியபடி இடத்தைக் காலி செய்தான். இருட்டில் அவன் எங்கு சென்றான் என்று தெரியவில்லை..
ப்ப்ச்ச்.. சும்மா அழுதுட்ருந்தனா ஒனக்கும் ரெண்டு விழுந்துரும் பாத்துக்க.. யாரு அந்தப் புண்டமவன்..? ஒன்ன வாபோன்றான் மீனாவ வாடி போடின்றான்.. நீ அவனத் திட்டாம என்னப்பாத்து வம்பிழுக்காதன்ற..? என்னதான் நடக்குது இங்க..?
ஆதுவரை அமைதியாக இருந்த மீனாவைப் பார்த்தால் அவள் இப்போது என்னை நக்கலாக ஒரு பார்வை பார்த்தபடி சிரித்தாள்..
யப்பா ஹீரோ கொஞ்சம் அடங்கு.. இத்தன வருசம் இல்ாம இப்பத்தான இந்த வீட்டுப்பக்கம் வந்துருக்க..? இன்னும் ஒரு மாத்தைல கௌம்பி நீம்பாட்டுக்கும் போயிருவ.. அதுவரைக்கும் அடக்கி வாசிச்சுட்டு போங்க சார்.. சும்மா என்ன ஏதுனு தெரியம குதிக்காம..
மீனாவின் இந்தப் பேச்சு என்னை இன்னும் சூடாக்கியது.. ஆத்திரம் தாங்காமல் அவள் உட்கார்ந்திருந்த சேரை ஓங்கி ஒரே உதை உதைத்தேன். நான் அப்படியெல்லாம் செய்யமாட்டேன் என்கிற நினைப்பில் இருந்த மீனாவும் சேருடன் சேர்ந்து தரையில் உருண்டு கிடந்தாள். வேக வேகமாக ரூமுக்குள் சென்று என் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டியபடி காரியாப்பட்டி பஸ் ஸ்டான்ட் நோக்கி நடக்கத் தொடங்கினேன்..
சின்ன அழுகையாக அழுதுகொண்டிருந்த சித்தி இப்போது ஒப்பாரியே வைக்க ஆரம்பித்துவிட்டாள்.. என்னைப் போக விடாமல் என் பேக்கைப் பிடித்து இழுத்தபடி என் பின்னாலேயே கெஞ்சிக் கொண்டு வந்திருந்தாள்.
ஏ.. என்னவிடு.. இந்த வீட்டுக்கு நா வந்தது தப்புதான். இனியே இந்த வீட்டுக்குள்ள நா காலெடுத்து வச்சா என்ன செருப்பாலேயே அடி.. என்றுவிட்டு என் சித்தியை உதறித்தள்ளிவிட்டு மீனாவைத் திரும்பிக்கூட பார்க்காமல் நடக்கத் தொடங்கினேன்..
இவ்வளயைும் பார்த்துக்கொண்டே வந்த அந்தத் தம்பதியர் இரண்டுபேரும் என்னை மறித்து நிறுத்தினர்.. அவருக்கு பார்த்தவுடனேயே நான் யார் என்று தெரிந்ததும் அவரது மனைவியை அழுதுகொண்டிருந்த என் சித்தியை சமாதானம் செய்ய அனுப்பிவிட்டு என்னை என் விருப்பத்தையும் மீறி அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.. போகும்போது எதேச்சையாக திரும்பிப் பார்த்தேன்.. அங்கே மீனா சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தபடி தன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அவளது கண்ணீர் எனது மொத்த கோபத்தையும் ஒரு நொடியில் குழிதோண்டிப் புதைத்திருந்தது.
அக்கா... வாக்கா.. நல்லாருக்கியா..? மீனாப்புள்ளெ என்ன பன்னுது..?
சித்தியை அவன் உறவு சொல்லி அழைத்ததும் மீனாவை அவன் உரிமையுடன் விசாரித்ததும் எனக்கு எரிச்சலைத்தரவே.. அவனை சற்று கடுப்புடன் முறைத்துக்கொண்டே..
ணே.. நீ யாரு மொத..? என் சித்திய அக்கான்ற.. வீட்ல இருக்க வயசுப்புள்ளய அது இதுன்ற.. யாரு நீ..?
நான் அப்படிக் கே்பேன் என்பதை எதிர்பார்க்காத அவன் என்னை மேலும் கிழும் பார்த்துவிட்டு எனக்கு பதில் சொல்லாமல் ஒரு நக்கல் பார்வையைப் பார்த்தவாறே.. சித்தியைப் பார்த்தான். அவளும் சற்று கலவரத்துன் இருக்கவே அதையும் பொருட்படுத்தாமல்..
ஏங்க்கா.. தம்பி யாரு..? உன் தூரத்து சொந்தமா..? ரொம்ப சூடா இருக்காப்டியே...?
ஆமா மா சூடாத்தான் இருக்கேன். நீ யாருனே சொல்லலயேணே.. யாரு நீ..? அந்தாள எறக்கிவிடத்தான வந்த..? இனி நீ கௌம்பு.
மறுபடியும் எனது பேச்சால் கடுப்பானவன் இப்போது தள்ளாடியபடி சித்தபனை அப்படியே சித்தயிடம் சாத்தி ஒப்படைத்துவிட்டு கஷ்டப்பட்டு சைடு ஸ்டான்டைப் போட்டுவிட்டு தனது பாக்கெட்டில் இருந்த சிகரெட்டைப் பற்றவைத்தவாறு மெல்ல.புகையை இழுத்து ஊதியபடி நின்றான். அவனால் நேராகக்கூட நிற்கமுடியவில்லை.. அவனது உடம்பில் இருந்து வந்த முட நாற்றம் இப்போது எனக்கும் அருவறுப்பாய்த் தெரிந்தது.. அப்படியே நேராக வீட்டுக்குள் எட்டிப் பார்த்தவன் அங்கே மீனா பேசாமல் உட்காரந்துகொண்டு என்னையே பார்த்தபடி இருப்பதைக் கவனித்தான்..
ஏய்.. என்ன மீனா.. மாமன ஒருத்தன் மரியாதக் கொறவா பேசிட்ருக்கான்.. நீ சேர்ல உக்காந்துட்ருக்க.. வெளிய வாடி மொத...
அவன் பேசி முடித்த அடுத்த நொடி அவனே எதிர்பார்க்காத வண்ணம் அவன் மூக்கிலும் பின்னர் அன் கன்னத்திலும் இடியென இரண்டு குத்துக்கள் இறங்கவே..சற்று நேரத்தில் நிதானம் இழந்தவன் அப்படியே தரையில் சரிந்தன். அவனது மூக்கிலும் வாயிலும் ரத்தம் வழிந்தபடி இருந்தது... பேச்சு மூச்சில்லாமல் கிடந்தவனைப் பார்த்து திடு்க்கிட்ட என் சித்தி அப்படியே தான் தாங்கியிருந்த சித்தப்பனை கீழே போட்டுவிட்டு என்னை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.. அவளது வாய் அப்படியே பிளந்தபடி இருந்தது.. கண்களில் கண்ணீர் கசிந்து எட்டிப் பார்த்தபடி இருந்தது..
கீழே விழுந்தவனுக்கு மறுபடியும் முழிப்பு வரவே இந்தமுறை தள்ளாடி எழுந்து நின்று தனது கழன்டுவிழுந்த கைலியை எடுத்துக் கட்டியபடி மீண்டும் என்னை அடிக்கக் கை ஓங்கியவனின் வயிற்றில் இறங்கிய குத்தால் வாந்தியெடத்தபடி அப்படியே உட்கார்ந்துகொண்டான். இவ்வளவு நடந்தும் மீனா சிறிய அசைவைக்கூட காட்டவில்லை.. அப்படியே சேரில் உடனகார்ந்தபடி அவன் வலியில் துடிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது முகத்தில் ஒரு பரம திருப்தியுடன்கூடிய அமைதி நிலவியது. ஆனால் அந்த இடத்தில் அவளது அமைதி எனக்கு இன்னும் ஆத்திரத்தைத்தான் கூட்டியது.
ஐயோ தமுழு.. ஒன்ன கையெடுத்துக் கும்புட்றேன்.. வீட்டுக்குள்ள போ.. வந்ததும் வராததுமா இங்க வம்புழுத்துறாத.. என்றபடி உண்மையாக்வே கையெடுத்துக் கும்பிட்டபடி அழத்தொடங்கிவிட்டாள் சித்தி..
சித்தி என்முன்னால் அழுவதைத் தாங்கமுடியாமல் அவளையும் தர தரவென்று இழுத்துக்கொண்டு நானும் வீட்டுக்குள் நுழைந்தேன். வாசலில் சித்தப்பனும் கூட வந்தவனும் போதையில் படுத்துக் கிடந்தனர்.. வீட்டுவாசலில் நடந்த இந்த ஆரவாரத்தால் எங்கிருந்தோ இரண்டு மூன்று நாய்கள் ஒன்றுகூடி எங்கள் வீட்டுவாசல்முன் நின்று சத்தமிடவே.. சத்தம் கேட்டு 100 மீட்டர் தொலைவில் இருந்த ஒரே ஒரு வீட்டிற்குள் இருந்து ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஒருவரும் 30 வயது மதிக்கத்தக்க அவரது மனைவியும் கையில் டார்ச் லைட்டுடன் எங்கள் வீட்டை நோக்கி வரத்தொடங்கினர்.. இதைக் கவனித்த கீழே வலியில் முனகிக் கொண்டிருந்த அந்த குடிகாரன் அப்படியே எழுந்து தள்ளாடியபடி இடத்தைக் காலி செய்தான். இருட்டில் அவன் எங்கு சென்றான் என்று தெரியவில்லை..
ப்ப்ச்ச்.. சும்மா அழுதுட்ருந்தனா ஒனக்கும் ரெண்டு விழுந்துரும் பாத்துக்க.. யாரு அந்தப் புண்டமவன்..? ஒன்ன வாபோன்றான் மீனாவ வாடி போடின்றான்.. நீ அவனத் திட்டாம என்னப்பாத்து வம்பிழுக்காதன்ற..? என்னதான் நடக்குது இங்க..?
ஆதுவரை அமைதியாக இருந்த மீனாவைப் பார்த்தால் அவள் இப்போது என்னை நக்கலாக ஒரு பார்வை பார்த்தபடி சிரித்தாள்..
யப்பா ஹீரோ கொஞ்சம் அடங்கு.. இத்தன வருசம் இல்ாம இப்பத்தான இந்த வீட்டுப்பக்கம் வந்துருக்க..? இன்னும் ஒரு மாத்தைல கௌம்பி நீம்பாட்டுக்கும் போயிருவ.. அதுவரைக்கும் அடக்கி வாசிச்சுட்டு போங்க சார்.. சும்மா என்ன ஏதுனு தெரியம குதிக்காம..
மீனாவின் இந்தப் பேச்சு என்னை இன்னும் சூடாக்கியது.. ஆத்திரம் தாங்காமல் அவள் உட்கார்ந்திருந்த சேரை ஓங்கி ஒரே உதை உதைத்தேன். நான் அப்படியெல்லாம் செய்யமாட்டேன் என்கிற நினைப்பில் இருந்த மீனாவும் சேருடன் சேர்ந்து தரையில் உருண்டு கிடந்தாள். வேக வேகமாக ரூமுக்குள் சென்று என் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டியபடி காரியாப்பட்டி பஸ் ஸ்டான்ட் நோக்கி நடக்கத் தொடங்கினேன்..
சின்ன அழுகையாக அழுதுகொண்டிருந்த சித்தி இப்போது ஒப்பாரியே வைக்க ஆரம்பித்துவிட்டாள்.. என்னைப் போக விடாமல் என் பேக்கைப் பிடித்து இழுத்தபடி என் பின்னாலேயே கெஞ்சிக் கொண்டு வந்திருந்தாள்.
ஏ.. என்னவிடு.. இந்த வீட்டுக்கு நா வந்தது தப்புதான். இனியே இந்த வீட்டுக்குள்ள நா காலெடுத்து வச்சா என்ன செருப்பாலேயே அடி.. என்றுவிட்டு என் சித்தியை உதறித்தள்ளிவிட்டு மீனாவைத் திரும்பிக்கூட பார்க்காமல் நடக்கத் தொடங்கினேன்..
இவ்வளயைும் பார்த்துக்கொண்டே வந்த அந்தத் தம்பதியர் இரண்டுபேரும் என்னை மறித்து நிறுத்தினர்.. அவருக்கு பார்த்தவுடனேயே நான் யார் என்று தெரிந்ததும் அவரது மனைவியை அழுதுகொண்டிருந்த என் சித்தியை சமாதானம் செய்ய அனுப்பிவிட்டு என்னை என் விருப்பத்தையும் மீறி அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.. போகும்போது எதேச்சையாக திரும்பிப் பார்த்தேன்.. அங்கே மீனா சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தபடி தன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அவளது கண்ணீர் எனது மொத்த கோபத்தையும் ஒரு நொடியில் குழிதோண்டிப் புதைத்திருந்தது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)