Romance விழியில் விழுந்து -sequel
#45
ஷோபாவின் பார்வையில் – மதன் வந்த நாள்


மாலை 5:30.  
வீட்டு கேட் திறக்கும் சத்தம் கேட்டது.  
கமலா அக்கா வாசலுக்கு ஓடினார். “யாரு?” என்று கேட்க,  
ஒரு பரிச்சயமான ஆண் குரல்:  
“நான்  மதன்… செந்தில் இல்லையா? ஷோபாவைப் பார்க்கலாமா?”  

என் இதயம் ஒரு நொடி நின்றது.  
மதன்… இந்த வீட்டுக்குள் இனி அவன் கால் பதிக்கக் கூடாது என்று நினைத்திருந்தேன்.  
ஆனால் அவன் வந்துவிட்டான்.

நான் ஸ்டிக்கை ஊன்றி மெதுவாக ஹாலுக்கு வந்தேன்.  
பவித்ரா தன் அறையிலிருந்து வெளியே வந்தாள்.  
மதனைப் பார்த்ததும் அவள் முகம் வெளிறியது. பிறகு கோபம் வந்தது.

மதன் என்னைப் பார்த்து தயங்கினான்.  
“ஷோபா… நீ நடக்குறியா…?” என்று ஆச்சரியத்தோடு கேட்டான்.  
நான் ஒரு  பார்வை மட்டுமே கொடுத்தேன். பதில் பேசவில்லை.

அவன் பவித்ராவைப் பார்த்தான். கண்களில் ஒரு விதமான தவிப்பு.  
“பவித்ரா… நான் உன்னோட பேசணும். தனியா.”

பவித்ரா என்னை ஒருமுறை பார்த்தாள். நான் தலையசைத்தேன். “பேசு. நான் இங்கேயே இருக்கேன்.”

மதன் முனகினான்.  
“பவித்ரா… நான் ரொம்ப நாளா உன்னைப் பார்த்துக்கிட்டு இருக்கேன்.  
உன் கணவன் உன்னை சந்தேகப்படுறது, துன்பப்படுத்துறது எல்லாம் எனக்குத் தெரியும்.  
ஆர்த்தி இருந்தாலும் எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை.நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன். என் வாழ்க்கை முழுக்க உனக்கும் ஆர்த்திக்கும் நான் பொறுப்பு எடுத்துக்கிறேன்.  நாங்க பண்ண தப்புனால உன் வாழ்க்கை இப்படி ஆகிடிச்சின்னு எனக்கு தெரியும். பழையது எல்லாம் மறந்துடலாம். நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒன்னா வாழலாம். உன் வாழ்க்கையை கெடுத்ததுக்கு பிராயச்சித்தமா நான் இதை பண்றேன், என்னை ஏத்துக்கோ…”என்றான்.

வீடு முழுக்க அமைதி. என் இதயம் கனமாக அடித்தது.  
மதன்… இவனா என்னை அனுபவித்து, என் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டவன்…  
இப்போ என் தங்கையிடம் மண்டியிட்டு நிற்கிறான்.

பவித்ரா நிமிர்ந்து நின்றாள். அவள் கண்களில் கோபம் மட்டும் இல்லை… ஒரு பெரிய அருவருப்பும் இருந்தது.

அவள் மதனை நேரடியாகப் பார்த்து, ஒவ்வொரு வார்த்தையும் அவன் முகத்தில் அறைவது போலச் சொன்னாள்:

“மதன்…   நீ ஒரு காலத்தில் என் அக்காவ நல்லா அனுபவிச்ச.  அவள் கணவன் உடம்பு முடியாம இருந்தப்போ அவளோட அரிப்பைத் தீர்த்துக்கிட்டு, அவள் மனசையும் கையில வச்சிக்கிட்டே. அதே நீ இப்போ என்கிட்ட வந்து ‘உன்ன  கல்யாணம் பண்ணிக்கன்னு ’னு சொல்றியா?

எனக்கு யாரும் வேண்டாம். என்றவள் என் பக்கம் திரும்பி என் கண்களை நேருக்கு நேர் பார்த்து 
"எனக்கு கணவன் வேண்டாம்.  
எனக்கு ஒரு பாடம் கத்துக்கொடுக்குற வாய்ப்பு வேணும்."

"நான் செந்தில் மாமாவோட  இருப்பேன்.  
அவர் என்னை ஒருநாள் தொடுவாரோ இல்லையோ…  
ஆனா நான் அவர் அருகிலேயே இருப்பேன்.  
அவர் என்னை மதிப்பாரோ இல்லையோ…  
என் அக்காவுக்கு ஒரு உண்மையை உணர்த்துவேன்:
‘காதல் என்பது உடம்பு இல்ல.காதல் என்பது தியாகம்.  
காதல் என்பது துரோகத்துக்கு அப்பாற்பட்டது.  ஒரு ஆம்பிளை உன்னை உடம்பால மட்டும் நேசிச்சா அது காமம். ஆனா உன் தவறைத் தெரிஞ்சும் உன்னை விடாம அணைச்சு, உன்னை மீண்டும் நடக்க வச்சா… அதுதான் காதல்.’
[+] 4 users Like me.you's post
Like Reply


Messages In This Thread
RE: விழியில் விழுந்து -sequel - by me.you - 28-12-2025, 10:27 AM



Users browsing this thread: