24-12-2025, 09:53 PM
பிரபுவிடம் அவன் படிப்பு சமந்தமான விவரங்களை பெற்றவன், அவன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு அனுப்ப, பிரபுவிற்கு துபாயில் இப்போதிருக்கும் வேலைக்கான அழைப்பு வந்தது.
முதலில் அம்மாவை பிரிந்து இருக்க போவதை நினைத்து வருந்தியவன், வேலைக்கான சம்பளத்தை கேட்டவுடன், துபாய் வருவதற்கு சம்மதித்தான். அவன் எண்ணம் எல்லாம், வேலை நிரந்தரம் ஆனவுடன் தன் தாயை தன்னுடன் துபாய் அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்திருந்தான்.
இப்போது வேலை செய்யும் இடத்தில், என்னதான் அவன் வேலையில் சிறப்பாக செயல்பட்டாலும், இங்கும் அவனின் நிறத்தை வைத்து அவன் முதுகுக்கு பின்னால் புறம் பேச, இரண்டு மூன்று பேர் இருக்க தான் செய்தார்கள்.
நிறுவனத்திலும் அவன் யாரிடமும் பேசாமல் ஒதுங்கி கொண்டான். ஏன் வீட்டிலுமே, அவன் நித்யா அண்ணி, தன்னிடம் சகஜமாக பேசாததற்க்கு தன் நிறம் தான் காரணம் என்று எண்ணி கொண்டு, அவளிடம் இருந்து விலகியே இருந்தான்.
வீட்டில் வேலைகள் முடித்து, மதிய ஓய்விற்கு சென்ற நித்யா, பிரபுவிடம் எங்கிருந்து தொடங்குவது, என்று யோசிக்க, அவளுக்கு எந்த ஒரு உருப்படியான யோசனையும் வரவில்லை.
அன்று மாலையே, பிரபு ஆபீஸ் கிளம்பும் அவசரத்தில், வேகமாக சாப்பிட்டவன், வழக்கம் போல் கையையும், தட்டையும், கழுவி வைத்து விட்டு கிளம்பினான்.
அப்போது தான் நித்யாவின் பிள்ளைகள் இருவரும் பள்ளியில் இருந்து திரும்பி இருந்தனர். அவர்களை பள்ளி வேனில் இருந்து நித்யா அழைத்து வரும் போது பிரபு எதிர்பட……. நித்யா தன்னையும் அறியாமல் அவனை நோக்கி ஒரு ஸ்நேகமான புன்னகை ஒன்றை சிந்தினாள்.
அவளின் புன்னகையை பார்த்த பிரபுவிற்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. அண்ணி தன்னை பார்த்து தான் சிரித்தாரா, இல்லை தனக்கு பின்னால் அவருக்கு தெரிந்தவர் யாரையும் பார்த்து சிரித்தாரா? என்று எண்ணியபடி பதில் புன்னகை கூட கொடுக்காமல் ஆபீஸ் சென்றுவிட்டான்.
அவன் ஆபீஸ் போகும் வழியெல்லாம் நித்யாவின் புன்னகையே அவன் மனதில் ஓடி கொண்டிருந்தது. அண்ணி உண்மையிலேயே தன்னை பார்த்து தான் சிரித்தாரா? என்ற கேள்வியே அவனை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.
“ச்சே……. அண்ணி நம்மை பார்த்து தான் சிரித்திருந்தார் என்றால், நாமும் மரியாதைக்காகவாது பதிலுக்கு ஒரு புன்னகையை கொடுத்திருக்கலாம், அதை கண்டும் காணாதது போல் வந்தது எவ்வளவு தவறு” என்று அவனுக்குள் குமைந்து கொண்டிருந்தான்.
இந்த பக்கம், நித்யாவோ……. என்ன இவன் இவ்ளோ முசுடா இருக்கான், ஒரு சின்ன சிரிப்புக்கு, பதில் சிரிப்பு கூட சிரிக்காம போறானே……. ஒருவேளை நா அவன பார்த்து சிரிச்சத தப்பா நெனச்சிருப்பானோ? இப்படி இருக்கறவன, எப்படி வழிக்கு கொண்டு வரது…….. மொதல்ல இவன் நம்ம இழுப்புக்கு வருவானா…….? என்று இரவெல்லாம் தூங்காமல் புரண்டு கொண்டிருந்தாள்.
முதலில் அம்மாவை பிரிந்து இருக்க போவதை நினைத்து வருந்தியவன், வேலைக்கான சம்பளத்தை கேட்டவுடன், துபாய் வருவதற்கு சம்மதித்தான். அவன் எண்ணம் எல்லாம், வேலை நிரந்தரம் ஆனவுடன் தன் தாயை தன்னுடன் துபாய் அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்திருந்தான்.
இப்போது வேலை செய்யும் இடத்தில், என்னதான் அவன் வேலையில் சிறப்பாக செயல்பட்டாலும், இங்கும் அவனின் நிறத்தை வைத்து அவன் முதுகுக்கு பின்னால் புறம் பேச, இரண்டு மூன்று பேர் இருக்க தான் செய்தார்கள்.
நிறுவனத்திலும் அவன் யாரிடமும் பேசாமல் ஒதுங்கி கொண்டான். ஏன் வீட்டிலுமே, அவன் நித்யா அண்ணி, தன்னிடம் சகஜமாக பேசாததற்க்கு தன் நிறம் தான் காரணம் என்று எண்ணி கொண்டு, அவளிடம் இருந்து விலகியே இருந்தான்.
வீட்டில் வேலைகள் முடித்து, மதிய ஓய்விற்கு சென்ற நித்யா, பிரபுவிடம் எங்கிருந்து தொடங்குவது, என்று யோசிக்க, அவளுக்கு எந்த ஒரு உருப்படியான யோசனையும் வரவில்லை.
அன்று மாலையே, பிரபு ஆபீஸ் கிளம்பும் அவசரத்தில், வேகமாக சாப்பிட்டவன், வழக்கம் போல் கையையும், தட்டையும், கழுவி வைத்து விட்டு கிளம்பினான்.
அப்போது தான் நித்யாவின் பிள்ளைகள் இருவரும் பள்ளியில் இருந்து திரும்பி இருந்தனர். அவர்களை பள்ளி வேனில் இருந்து நித்யா அழைத்து வரும் போது பிரபு எதிர்பட……. நித்யா தன்னையும் அறியாமல் அவனை நோக்கி ஒரு ஸ்நேகமான புன்னகை ஒன்றை சிந்தினாள்.
அவளின் புன்னகையை பார்த்த பிரபுவிற்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. அண்ணி தன்னை பார்த்து தான் சிரித்தாரா, இல்லை தனக்கு பின்னால் அவருக்கு தெரிந்தவர் யாரையும் பார்த்து சிரித்தாரா? என்று எண்ணியபடி பதில் புன்னகை கூட கொடுக்காமல் ஆபீஸ் சென்றுவிட்டான்.
அவன் ஆபீஸ் போகும் வழியெல்லாம் நித்யாவின் புன்னகையே அவன் மனதில் ஓடி கொண்டிருந்தது. அண்ணி உண்மையிலேயே தன்னை பார்த்து தான் சிரித்தாரா? என்ற கேள்வியே அவனை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.
“ச்சே……. அண்ணி நம்மை பார்த்து தான் சிரித்திருந்தார் என்றால், நாமும் மரியாதைக்காகவாது பதிலுக்கு ஒரு புன்னகையை கொடுத்திருக்கலாம், அதை கண்டும் காணாதது போல் வந்தது எவ்வளவு தவறு” என்று அவனுக்குள் குமைந்து கொண்டிருந்தான்.
இந்த பக்கம், நித்யாவோ……. என்ன இவன் இவ்ளோ முசுடா இருக்கான், ஒரு சின்ன சிரிப்புக்கு, பதில் சிரிப்பு கூட சிரிக்காம போறானே……. ஒருவேளை நா அவன பார்த்து சிரிச்சத தப்பா நெனச்சிருப்பானோ? இப்படி இருக்கறவன, எப்படி வழிக்கு கொண்டு வரது…….. மொதல்ல இவன் நம்ம இழுப்புக்கு வருவானா…….? என்று இரவெல்லாம் தூங்காமல் புரண்டு கொண்டிருந்தாள்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)