Adultery அவள் இதயத்தின் மொழி
---------------
Part 66
---------------

நான் ஹாலுக்குள்ள மெதுவா அடி எடுத்து வெச்சேன்.

என் இதயம் "தட... தட... தட..."னு அடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

என் கை முதுகுக்குப் பின்னாடி... அந்தத் துணியை... அவனோட அந்த 'ஜட்டியை' கசங்காம, ஆனா இருக்கிப் பிடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

என் உள்ளங்கையில அந்தத் துணியோட மென்மை உறுத்துச்சு.

பிரகாஷ் என்னை பார்த்தான்.

நான் உள்ள போய் ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டேன்ல...

அவனுக்குப் புரிஞ்சு போச்சு.

"சரி... இதுக்கு மேல இங்க இருந்தா மரியாதை இல்ல... நேரம் ஆயிடுச்சு"னு அவன் முடிவு பண்ணிட்டான் போல.

அவன் சோஃபாவுக்குப் பக்கத்துல இருந்து நகர்ந்தான்.

நின்ன இடத்துல இருந்து ஒரு அடி எடுத்து வெச்சு, வாசலை நோக்கித் திரும்பினான்.

என்னை ஒரு கும்பிடு போட்டான்.

"சரி மேடம்... நான் கிளம்புறேன் மேடம்..."

அவன் குரல்ல ஒரு திருப்தி... ஒரு நிறைவு இருந்துச்சு.

"ரொம்ப நன்றி மேடம்... தண்ணிக்கும்... அந்த டீக்கும்..."

மறுபடியும் ஆரம்பிக்கிறான்.

"நிஜமாவே மேடம்... டீ ரொம்ப நல்லா இருந்துச்சு மேடம்."

அவன் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினான்.

நான் மனசுக்குள்ள கண்ணை உருட்டினேன்.

"போதும் பிரகாஷ்... சொன்னதையே சொல்லாத."

"டீ தானே... அதுக்குப்போய் பெரிய பில்டப் கொடுக்காத..."

நான் சலிச்சுக்கிட்ட மாதிரி, முகத்தை சுருக்கிச் சொன்னேன்.

"சும்மாப் புகழ்ந்தா எனக்குப் பிடிக்காது."

நான் வெளிய அப்படிச் சொன்னாலும்...

உள்ளுக்குள்ள... அந்தப் பாராட்டு எனக்கு இனிச்சுச்சு.

"பரவால்ல... நம்மள இவ்ளோ உயர்வா மதிக்கிறானே..."ங்கிற ஒரு சந்தோஷம்.

"சரி மேடம்... சாரி மேடம்..."

அவன் சிரிச்சுக்கிட்டே, மெதுவா நடந்தான்.

மெயின் டோர் கிட்ட போனான்.

கதவுத் தாழ்ப்பாளை நோக்கி அவன் கை நீண்டுச்சு.

இன்னும் ஒரு வினாடி தான்.

அவன் அந்தக் கதவைத் திறந்து... வெளிய போய்... அந்த இருட்டுல மறைஞ்சுடுவான்.

அப்புறம்?

அப்புறம் நான் மட்டும் தான்.

இந்தத் தனிமை. இந்த டி.வி சத்தம்.

எனக்குத் தவிப்பா இருந்துச்சு.

"இப்படியே அனுப்பவா?"

"இல்ல... இதை இப்பவே கொடுத்துட்டு... ஒரு வழியா அந்த ஜட்டி என்கிட்ட இருந்து போயிடும்?"

"இதை இன்னும் எத்தனை நாளைக்கு நான் ஒளிச்சு ஒளிச்சு வெக்கிறது?"

அவன் கை தாழ்ப்பாளைத் தொட்டது.

"பிரகாஷ்..."

என் குரல் தானா வெளிய வந்துச்சு.

நான் நெனச்சதை விடக் கொஞ்சம் சத்தமாவே கூப்பிட்டுட்டேன்.

அதுல ஒரு அதிகாரம் கலந்த அவசரம் இருந்துச்சு.

அவன் உடனே நின்னான்.

எதோ கரண்ட் அடிச்ச மாதிரி... "விசுக்"குனு திரும்பினான்.

எதோ ரன்னிங் ஓடப் போற மாதிரி... "சொல்லுங்க மேடம்"ங்கிற பாவனையில தயாரா நின்னான்.

அவன் உடல்மொழி முழுக்க அவ்ளோ வேகம்.

அவன் கண்கள்ல அவ்ளோ எதிர்பார்ப்பு.

"ஏன் மேடம் கூப்பிட்டாங்க? இன்னும் எதாவது பேசப் போறாங்களா?"

"இன்னும் கொஞ்ச நேரம் இருக்கச் சொல்வாங்களா?"ங்கிற ஆசை அவன் கண்ணுல அப்பட்டமாத் தெரிஞ்சுச்சு.

நான் அவனை நேராப் பார்த்தேன்.

என் முதுகுக்குப் பின்னாடி மறைச்சு வெச்சிருந்த கையை...

ரொம்ப மெதுவா... தயக்கத்தோட முன்னாடி கொண்டு வந்தேன்.

என் உள்ளங்கையில...

அந்தச் சின்னதா மடிக்கப்பட்ட... நீல நிறத் துணி.

அவன்கிட்ட நீட்டினேன்.

"இந்தா... இதை எடுத்துக்கோ."

அவன் அதைப் பார்த்தான்.

முதல்ல அவனுக்குப் புரியல.

இல்ல... புரியாத மாதிரி நடிச்சான். அவன் மூளை அதை ஏத்துக்க மறுத்துச்சு.

கண்ணைச் சுருக்கினான்.

"மேடம்... இது... என்னது மேடம்?"

அவன் முகத்துல ஒரு அப்பாவித்தனம்.

எனக்குச் சிரிப்பு வரல. ஒரு விதமான சங்கடமும், பொய்யான கோவமும் தான் வந்துச்சு.

"தெரியாத மாதிரியே நடிக்காத பிரகாஷ்."

நான் குரலை அழுத்தினேன்.

"உன்னோட இன்னர்... வாங்கிக்கோ."

"ஜட்டி"னு சொல்ல நாக்கு கூசுச்சு.

ஒரு ஆம்பள முன்னாடி நின்னுக்கிட்டு... அவன் முகத்தைப் பார்த்துக்கிட்டு... "இந்தா உன் ஜட்டி"னு சொல்றது எவ்ளோ கஷ்டம்னு எனக்குத்தான் தெரியும்.

அதான் "இன்னர்"னு நாகரீகமாச் சொன்னேன்.

அவன் முகம் "பளீர்"னு மாறுச்சு.

இப்போ அவனுக்கு ஞாபகம் வந்திருக்கும்.

இல்ல... அவனுக்கு நல்லாவே ஞாபகம் இருக்கும். மேடம் கையில அது இருக்கான்னு நம்ப முடியாம நடிச்சான்.

"அய்யோ..."

அவன் பதறினான்.

கையப் பிசைஞ்சான்.

"மேடம்... அது... அய்யய்யோ..."

"ஒண்ணும் பேசாத. அன்னைக்கு அந்தப் பிரிண்டர் பாக்ஸ் கொண்டு வந்து வெக்கும்போது... அந்தப் பாக்ஸ் மேலேயே வெச்சுட்டு போயிட்டில்ல..."

"நான் அப்புறம் தான் பார்த்தேன்."

"அதான்... எடுத்துட்டுப் போ."

நான் விளக்கமாச் சொன்னேன்.

எதோ இது சாதாரண விஷயம் மாதிரி... எதோ கீழே கிடந்த ஒரு கர்சீஃப்பை எடுத்துக் கொடுக்கிற மாதிரி காட்டிக்கிட்டேன்.

ஆனா சொல்லும்போதே... என் மனசுக்குள்ள ஒரு பொறி தட்டிச்சு.

'அன்னைக்கு அவன் இதை விட்டுட்டுப் போனான்...'

'அப்போ...'

'அவன் வீட்டுக்குப் போகும்போது... ஜட்டி போடாமத் தான போனான்?'

'அந்தப் பேன்ட்டுக்குள்ள... வெறும் அது மட்டும்தான் இருந்திருக்குமா...'

அந்த நினைப்பு வந்ததும்... என் காது மடல்லாம் சூடாச்சு.

வெட்கம் பிச்சிக்கிட்டு வந்துச்சு.

அவனும் அதைத்தான் யோசிக்கிறான்னு அவன் கண்ணைப் பார்த்தாலே தெரிஞ்சுது.

'மேடம்க்குத் தெரிஞ்சு போச்சு... நாம அன்னைக்கு ஜட்டி போடாம போனோம்னு...'

அந்த எண்ணம் எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு கள்ளத்தனமான மௌனத்தை உண்டாக்கிச்சு.

அவன் அவசரமா கையை நீட்டினான்.

"சாரி மேடம்... அய்யய்யோ... சாரி மேடம்..."

"நான் சுத்தமா மறந்துட்டேன்... எவ்ளோ பெரிய தப்பு... அசிங்கம் மேடம்..."

அவன் அதை என் கையில இருந்து வாங்கினான்.

வாங்கும் போது... அவன் விரல் கூட என் மேல படல.

அவ்ளோ பவ்யமா... எதோ கோயில்ல சாமி பிரசாதத்தை வாங்குற மாதிரி... ரெண்டு கையை ஏந்தி வாங்கினான்.

வாங்கினதும்...

அவன் கையில் அந்தத் துணி பட்டதும்...

அவன் முகம் மாறுச்சு.

அது ஈரம் இல்லாம... காஞ்சு... மடிப்புல கலையாம இருக்குறத அவன் உணர்ந்தான்.

அதுவும்... அதுல இருந்து வந்த வாசம்.

என்னோட சோப்புத் தூள் வாசம்.

"கம்"முனு அந்த துணி மணக்குறத அவன் மூக்கு உணர்ந்திருக்கும்.

அவன் கண்ணு விரிஞ்சுச்சு.

என்னை நிமிர்ந்து பார்த்தான்.

"மேடம்..."

குரல் கரகரப்பா, உடைஞ்சு போய் வந்துச்சு.

"நீங்க... நீங்க இதைத் துவைச்சீங்களா?"

அவன் இதை எதிர்பார்க்கல.

கனவுல கூட நெனச்சிருக்க மாட்டான்.

"மேடம்... இதைப் போயி நீங்க..."

அவன் கண்கள்ல தண்ணி திரண்டுச்சு.

ஒரு சாதாரண செக்யூரிட்டியோட அழுக்கு ஜட்டியை...

தேவதை மாதிரி இருக்கிற ஒரு பொண்ணு...

தன் கையால துவைச்சு... காயப்போட்டு... மடிச்சு பத்திரமா வெச்சிருக்காங்கங்கிறது...

அவனுக்குப் பெரிய அதிர்ச்சியா இருந்திருக்கும்.

நான் பதில் சொல்லல.

வார்த்தையாச் சொன்னா... அதுல வேற அர்த்தம் வந்துடும்.

"ஆமா... உன் மேல இருக்கிற ஆசையில துவைச்சேன்"னு அர்த்தம் வந்துடுமோன்னு பயம்.

சும்மா தலையை மட்டும் ஆட்டினேன்.

"ம்ம்..."

ஒரே ஒரு அசைவு.

அவன் அப்படியே உருகிப் போயிட்டான்.

கையக் கூப்பினான்.

"ரொம்ப நன்றி மேடம்... நீங்க... நீங்க நிஜமாவே தேவதை மேடம்..."

"என் துணியை நீங்க தொடலாமா... எனக்குக் கஷ்டமா இருக்கு... எனக்குத் தகுதி இல்ல மேடம்..."

அவன் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினான்.

அவன் குரல்ல இருந்த அந்த நன்றி... அந்த விசுவாசம்... அந்தத் தாழ்வு மனப்பான்மை...

எல்லாமே என் மனசை உலுக்கிச்சு.

"பரவால்ல... விடு."

நான் அவன் பேச்சைத் தடுத்தேன்.

"துவைக்குறப்போ... கூட இருந்துச்சு... போட்டுட்டேன். அவ்ளோதான்."

பொய் சொன்னேன். கையில தான் துவைச்சேன்.

"இதைப் போய் பெருசாப் பேசாத."

"போதும்... கிளம்பு இப்போ."

நான் கண்டிப்பாச் சொன்னேன்.

"போய் உன் வேலையைப் பாரு. டூட்டிக்கு டைம் ஆச்சு."

இதுக்கு மேல இங்க நிக்க விட்டா... அவன் அழுதுடுவான் போல. இல்ல உணர்ச்சிவசப்பட்டு என் கால்ல விழுந்துடுவான் போல.

அது ஆபத்து.

"சரிங்க மேடம்..."

அவன் அந்தத் துணியை... ஒரு பொக்கிஷம் மாதிரி பத்திரமா தன் சட்டைப் பைக்குள்ள வெச்சுக்கிட்டான்.

அது அவனோட நெஞ்சுக்கு நேரா போய் உக்காந்துக்கிச்சு.

இனிமே அது அவனுக்கு ஜட்டி இல்ல. அது நான் கொடுத்த பரிசு.

அவன் திரும்பினான்.

கதவைத் திறந்தான்.

வெளிய இருட்டு. காரிடார் லைட் வெளிச்சம் உள்ள விழுந்துச்சு.

வெளிய கால் வைக்கப் போனவன்...

திடீர்னு நின்னான்.

திரும்பினான்.

கடைசியா ஒரு முறை என்னைப் பார்த்தான்.

இந்தத் தடவை... அவன் பார்வையில அவ்ளோ ஆசை இல்ல.

என் மார்பையோ... என் இடுப்புக்கு கீழேயோ... அவன் பார்க்கல.

நேரா என் கண்ணைப் பார்த்தான்.

ஒரு ஆழமான, அமைதியான பார்வை.

"ஏன் மேடம் என் மேல இவ்ளோ அக்கறை?"

"ஏன் எனக்காக இப்டி எல்லாம் பண்றீங்க? நான் யாரு மேடம்?"

அப்படின்னு கேட்குற மாதிரி ஒரு ஊடுருவற பார்வை.

அந்தப் பார்வைக்கு முன்னாடி நான் கூசிப் போனேன்.

நான் என் புருவத்தை லேசா உயர்த்தினேன்.

"என்ன?"

கண்ணாலயே கேட்டேன்.

"ஒண்ணுமில்லையா? கிளம்பு..."

அவன் லேசாத் தலையை ஆட்டினான்.

"ஒண்ணுமில்ல மேடம்..."

ஒரு சின்னச் சிரிப்பு. ரொம்ப மென்மையான சிரிப்பு.

அப்புறம் திரும்பிக்கிட்டு... படியிறங்கத் தொடங்கினான்.

அவன் உருவம் மறையுற வரைக்கும் பார்த்துட்டு...

நான் கதவை மூடினேன்.

"டமார்..."

தாழ்ப்பாளைப் போட்டேன்.

"க்ளிக்..."

கதவு மூடுனதும்... நான் அங்கேயே நின்னேன்.

கதவுல சாய்ஞ்சுக்கிட்டு... ஒரு பெருமூச்சு விட்டேன்.

"ஹ்ப்பா..."

எதோ பெரிய மலையைச் சுமந்து இறக்கின மாதிரி இருந்துச்சு.

சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தேன்.

மணி 7:35.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு.

"என்னது? ஏழரை ஆயிடுச்சா?"

"அடிப்பாவி..."

அவன் உள்ள வந்தது எப்போ? ஆறே முக்கால் இருக்கும்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்...

ஐம்பது நிமிஷம்...

நானும் அவனும் மட்டும்... இந்த வீட்டுக்குள்ள... தனிமையில...

"கடவுளே..."

நான் என் நெத்தியில மெதுவா அடிச்சுக்கிட்டேன்.

"என்ன பவித்ரா நடக்குது இங்க?"

"நேரம் போனதே தெரியலையே..."

"அவன் கூடப் பேசிக்கிட்டு இருந்தா... நிமிஷம் கூட நொடியா ஓடுதே..."

என் புருஷன் இந்நேரம் கால் பண்ணியிருக்கலாம். இல்ல சீக்கிரம் வந்திருக்கலாம்.

நல்லவேளை தப்பிச்சேன்.

நான் மெதுவா நடந்து வந்தேன்.

சோஃபாக்கிட்ட வந்தேன்.

அவன் உக்காந்திருந்த அதே இடம்.

அந்த குஷன் இன்னும் லேசா அமுங்கி இருந்துச்சு.

அவன் உக்காந்து டீ குடிச்ச இடம்.

அவன் பேன்ட் வீங்கிப் போய்... துடிச்சுக்கிட்டு இருந்த இடம்.

நான் அப்படியே அந்தச் சோஃபாவுல உக்காந்தேன்.

கால் சோர்ந்து போயிருந்துச்சு.

மனசு முழுக்க... எதோ ஒரு பாரம்.

கூடவே... ஒரு விசித்திரமான சந்தோஷம்.

"அவன் ஜட்டியை வாங்கிக்கிட்டான்..."

"அவன் சந்தோஷப்பட்டான்..."

"அவன் என்னைப் பார்த்த விதம்..."

எல்லாம் ஞாபகத்துக்கு வந்துச்சு.

என் உடம்பு சூடாச்சு.

குற்ற உணர்ச்சி ஒரு பக்கம் குத்துச்சு.

"நீ பண்றது தப்பு... ரொம்ப தப்பு..."

இன்னொரு பக்கம்... மனசு துள்ளுச்சு.

"பரவால்ல... இதுல என்ன இருக்கு? யாருக்கும் தெரியாதுல்ல..."

"அவன் பாவம்... ஏங்கிப் போய் கிடக்கான்... நானும் தான்..."

நான் சோஃபாவுல சாய்ஞ்சேன்.

கண்ணை மூடினேன்.

என் வீட்டு ஹால்ல... அவனோட வேர்வை வாசம் இன்னும் லேசா வீசுற மாதிரி இருந்துச்சு.

இனிமே ராத்திரி முழுக்க... இந்த ஞாபகம் தான் என்னை வருத்தப்போகுது.

எனக்குத் தெரியும்.

இன்னைக்கு ராத்திரி எனக்குத் தூக்கம் வராது.

என் கை... தானா என் மார்பு மேல போச்சு.

அவன் பார்த்த இடத்தைத் தொட்டுப் பார்த்துக்கிட்டேன்.

இதயம் "தட தட"னு அடிச்சுக்கிட்டே இருந்துச்சு.


---------------
Part 67
---------------

"டமார்..."

கதவு மூடுன சத்தம்.

அவன் போனான்.

அவன் போனதும்... அந்த ஹால்ல அவ்ளோ நேரம் இருந்த அந்த 'கரண்ட்' போன மாதிரி... வீடு அப்படியே "சப்"புனு ஆகிடுச்சு.

"விர்ர்ர்ர்..."னு ஃபேன் சுத்துற சத்தம் மட்டும்தான் கேட்குது.

அந்த அமைதி... எனக்குள்ள ஒரு விதமான தனிமையை உருவாக்குச்சு.

சுவர்க்கடிகாரத்தோட "டிக்... டிக்..." சத்தம் கூட இப்போ பெருசா கேட்டுச்சு.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும்... இந்த ஹால்ல எவ்ளோ அனல் இருந்துச்சு?

அவன் பார்வை...

அவன் பேச்சு...

என் பதட்டம்...

அந்த ஜட்டி கைமாறின நிமிஷம்...

எல்லாமே இப்போ காத்துல கரைஞ்சு போன மாதிரி... மறுபடியும் பழைய பவித்ரா வாழ்க்கை.

நான் சோஃபாவுல இருந்து மெதுவா எழுந்தேன்.

உடம்பு முழுக்க ஒரு சோர்வு. மனசு முழுக்க ஒரு பாரம்.

எதோ பெரிய வேலையை முடிச்சக்களைப்பு... கை கால் எல்லாம் வலிச்சுச்சு.

கிச்சனுக்குப் போனேன்.

மதியம் வெச்ச சாப்பாடு மீதி இருந்துச்சு.

எதையும் சூடு பண்ணக் கூட தோணல. பசிக்கவே இல்ல.

ஆனா சாப்பிடணுமே... இல்லனா ராத்திரி பசிக்கும்.

அதனால தட்டுல போட்டுக்கிட்டேன்.

சாப்பிட்டேன்... இல்ல, முழுங்கினேன்.

வாயில ருசியே தெரியல. எதோ மரக்கட்டையை மென்னு முழுங்குற மாதிரி இருந்துச்சு.

சாப்பிட்டு முடிச்சுட்டு, கையைத் துடைச்சுக்கிட்டு ஹாலுக்கு வந்தேன்.

மணி எட்டதைத் தாண்டிடுச்சு.

"அப்பாவுக்குப் போன் பண்ணணும்..."

திடீர்னு என் பையன் ஞாபகம் வந்துச்சு.

அவன் அங்க என்ன பண்றானோ?

போனை எடுத்தேன். அப்பா நம்பரை டயல் பண்ணேன்.

"ட்ரிங்... ட்ரிங்..."

"ஹலோ பவிம்மா..." அப்பாவோட குரல்.

"அப்பா... போய்ச் சேர்ந்துட்டீங்களா? தம்பி என்ன பண்றான்?"

"நாங்க எப்பவோ வந்துட்டோம்மா... இவன் பாரு, கசின்ஸ் கூட ஒரே ஆட்டம்... போனைக் கூட எடுக்க மாட்றான்..."

பின்னாடி அவன் கத்துற சத்தம்... சிரிக்கிற சத்தம் கேட்டுச்சு.

"பாட்டி... நான் ஜெயிக்கப் போறேன்... பால் போடு..." அவன் குரல் மெலிசா காதுல விழுந்துச்சு.

அந்தக் குரலைக் கேட்டதும்... என் நெஞ்சில இருந்த பாரம் கொஞ்சம் இறங்குன மாதிரி இருந்துச்சு.

"பரவால்ல... அவன் சந்தோஷமா இருக்கான்."

"நான் இல்லனாலும் அவன் ஜாலியாத்தான் இருக்கான்."

"சரிப்பா... அவன் நல்லா விளையாடட்டும். சாப்பிட்டுத் தூங்க வைங்க."

"சரிம்மா... நீ சாப்பிட்டியா? கார்த்திக் வந்தாரா?"

"நான் சாப்பிட்டேன்பா. அவர் இன்னும் வரல... லேட் ஆகும்."

"சரிம்மா, பார்த்து இரு. தனியா இருக்க... கதவைப் பூட்டிக்கோ."

"சரிப்பா."

போனை வெச்சேன்.

அவன் சந்தோஷமா இருக்கான்.

எனக்குத்தான் இங்க மனசு கிடந்து அடிச்சுக்குது.

நான் சோஃபாவுல உக்காந்தேன்.

என் உடம்புல இருந்த அந்த மஞ்சள் சுடிதார்...

இன்னைக்குச் சாயங்காலம் முழுக்க நான் போட்டுக்கிட்டு இருந்த டிரஸ்.

கோயில்ல ஆரம்பிச்சு... லிஃப்ட்... படிக்கட்டு... கிச்சன்... சோஃபான்னு...

எல்லா இடத்துலயும் என் கூடவே இருந்த சாட்சி.

முக்கியமா... பிரகாஷ் கண்ணு.

அவன் கண்ணு இந்த டிரஸ்ஸோட ஒவ்வொரு அங்குலத்தையும் மேஞ்சிருக்கு.

என் மார்பு... என் இடுப்பு... என் கழுத்து...

எல்லாத்தையும் அவன் ரசிச்சப்போ... என் மேல ஒட்டிக்கிட்டு இருந்தது இந்த டிரஸ் தான்.

அது இப்போ எனக்கு ரொம்பக் கனமா... கசகசன்னு இருக்கிற மாதிரி தோணுச்சு.

எதோ அவன் பார்வை என் மேலேயே ஒட்டிக்கிட்டு இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்.

"இதை மாத்தணும்... முதல்ல இதை கழட்டிப் போடணும்."

பெட்ரூமுக்கு போனேன்.

கண்ணாடி முன்னாடி நின்னேன்.

என்னை நானே ஒரு தடவை பார்த்தேன்.

என் முகம் களைப்பா இருந்தாலும்... கண்ணுல ஒரு புது ஒளி தெரிஞ்சுச்சு.

"இந்த அழகுக்காகத்தானே அவன் அவ்ளோ ஏங்குனான்?"

"இந்த உடம்பைத் தானே அவன் வெறிக்க வெறிக்கப் பார்த்தான்?"

எனக்கு லேசா வெட்கம் வந்துச்சு.

அப்புறம் சுதாரிச்சுக்கிட்டேன்.

துப்பட்டா இல்லாத அந்த டாப்ஸைக் கழட்டினேன்.

அந்த இறுக்கமான பேன்ட்டைக் கழட்டினேன்.

அது என் இடுப்பை விட்டு இறங்கும்போது... ஒரு விடுதலை உணர்வு.

அப்பாடா...

உடம்புல காத்து பட்டதும் தான் உயிரே வந்துச்சு.

என்னோட வழக்கமான நைட்டியை எடுத்தேன்.

தளர்வான காட்டன் நைட்டி.

அதைப் போட்டுக்கிட்டதும்... என் உடம்பு "ஹாய்"னு ரிலாக்ஸ் ஆச்சு.

முகம் கழுவினேன்.

கூந்தலை அள்ளி கொண்டை போட்டுக்கிட்டேன்.

திரும்ப ஹாலுக்கு வந்தேன்.

மணி ஒன்பதைத் தொடுது.

கார்த்திக் இன்னும் வரல. போன் கூட பண்ணல.

வழக்கம் தான். வேலை, மீட்டிங், டிராஃபிக்.

எனக்குத் தூக்கம் வரல.

ஆனா பெட்ரூம்ல போய் தனியா படுக்கவும் தோணல. அங்க போனா பைத்தியம் பிடிச்சிரும்.

டிவியைப் போட்டேன்.

எதோ ஒரு சேனல்ல... எதோ ஒரு பழைய படம் ஓடிக்கிட்டு இருந்துச்சு.

சவுண்டைக் குறைச்சு வெச்சேன்.

சோஃபாவுல சாய்ஞ்சேன். கால் நீட்டி உக்காந்தேன்.

கண்ணு டிவி மேல இருந்துச்சு.

ஆனா மனசு?

அது பாட்டுக்கு 'ரீவைண்ட்' பட்டனை அமுக்கிடுச்சு.

சாயங்காலம் நடந்த ஒவ்வொரு விஷயமும்... கண்ணுக்கு முன்னாடி படமா ஓட ஆரம்பிச்சுச்சு.

முதல்ல கோயில்ல பார்த்தது...

அப்புறம் லிஃப்ட் நின்னது... அந்த இருட்டு...

அவன் என்னைத் தூக்கினது...

அவன் தோள்ல நான் சாய்ஞ்சது...

அந்த வியர்வை வாசனை... அவனோட மூச்சுக்காத்து...

என் இடுப்பை அவன் கை பிடிச்சிருந்த அந்த அழுத்தம்...

அப்புறம் டீ குடிக்கும் போது...

"உங்ககிட்ட மட்டும் தான்... எனக்கு அந்தக் கட்டுப்பாடு போகுது மேடம்..."

அந்த வார்த்தை... காதுக்குள்ள ரீங்காரம் மாதிரி ஓடிக்கிட்டே இருந்துச்சு.

"ஹ்ப்பா..."

நான் என் தலையணைக்குள்ள முகத்தைப் புதைச்சேன்.

"நான் ஏன் அப்படி நடந்துகிட்டேன்?"

"நான் ஏன் அவனுக்கு டீ போட்டுக் கொடுத்தேன்? தண்ணி மட்டும் கொடுத்துட்டு, வெளிய போடான்னு சொல்லியிருக்கலாம்ல?"

"அவனை உள்ள விட்டு... உக்கார வெச்சு..."

"குனிஞ்சு டீல சுகர் கலக்குறப்போ... அவன் பார்க்குறான்னு தெரிஞ்சும்..."

"ஏன் என் முடியை ஒதுக்கினேன்?"

"ஏன் அவனுக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தேன்?"

மனசாட்சி கேள்வி மேல கேள்வி கேட்டுச்சு.

"தப்பு பவித்ரா... நீ பண்ணது தப்பு."

"நீ ஒரு குடும்பப் பொண்ணு. ஒருத்தனுக்கு மனைவி. ஒரு அம்மா."

"இப்படி ஒரு வாட்ச்மேன் கூட... ஒரு செக்யூரிட்டி கூட..."

குற்ற உணர்ச்சி ஊசி மாதிரி குத்துச்சு.

ஆனா...

இன்னொரு பக்கம்... மனசு நியாயம் பேசுச்சு.

"இதுல என்ன தப்பு இருக்கு?"

"என் புருஷன் என்கிட்ட வந்து எவ்ளோ நாள் ஆச்சு?"

"என்னை எப்பவாது இப்படி ரசிச்சுப் பார்த்திருக்காரா?"

"எப்பவும் வேலை... லேப்டாப்... போன்... டயர்ட்..."

"நான் இங்க தனிமையில காஞ்சு போய் கிடக்கேன்..."

"இன்னிக்கு ஒருத்தன் என்னைத் தேவதைன்னான்... மகாலட்சுமின்னான்..."

"என்னைத் தொடக்கூடத் தயங்கினான்..."

"என் மேல அவ்ளோ ஆசை வெச்சிருக்கான்..."

"அவன் ஜட்டியைத் துவைச்சுக் கொடுத்தா... அதைக் கண்ணுல ஒத்திக்கிட்டு சட்டைப் பையில வெச்சுக்குறான்..."

"அந்த ஆசை எனக்குத் தேவைப்பட்டுச்சு... அவ்ளோதான்."

"இது துரோகம் இல்ல... இது ஆறுதல்."

"என் மனசுக்குக் கிடைச்ச ஒரு மருந்து."

எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டேன்.

டிவியில பாட்டு ஓடுச்சு. ஹீரோயின் ஹீரோவைப் பார்த்து உருகுறா.

எனக்கு அந்தப் பாட்டு கேட்கல.

என் காதுல பிரகாஷ் குரல் தான் கேட்டுச்சு.

"உங்களைப் போலவே ஒரு பொண்ணு கிடைச்சாத்தான் கல்யாணம் பண்ணுவேன்..."

அந்த வார்த்தைகள்... என் அடிவயித்துல பட்டாம்பூச்சி பறக்க வெச்சுச்சு.

நேரம் போனதே தெரியல.

பத்து மணி...

பத்தரை...

பதினொன்னு...

என் கண்ணு சொக்குச்சு.

யோசிச்சு யோசிச்சு... மனசு டயர்ட் ஆயிடுச்சு.

நான் அந்த சோஃபாவுலேயே...

ஒருக்களிச்சுப் படுத்தேன்.

டிவி வெளிச்சம் என் முகத்துல மின்னி மின்னி மறைஞ்சுச்சு.

மெதுவா...

தூக்கம் என்னை ஆட்கொண்டுச்சு.

அன்னைக்கு நடந்த அந்தச் சம்பவங்கள் எல்லாம்... கனவா வந்து என்னைத் தாலாட்டுச்சு.

திடீர்னு...

எனக்கு முழிப்பு தட்டுச்சு.

எவ்ளோ நேரம் தூங்கினேன்னு தெரியல.

சிறுநீர் கழிக்கணும் போல ஒரு உணர்வு.

நான் கண்ணைத் திறந்தேன்.

இருட்டு.

"விர்ர்ர்..."னு ஏசி சத்தம்.

"ஏசியா?"

ஹால்ல ஏசி கிடையாதே... ஃபேன் தானே ஓடுச்சு? டிவி வெளிச்சம் எங்கே?

நான் அதிர்ச்சியில கண்ணைக் கசக்கிக்கிட்டுப் பார்த்தேன்.

நான் ஹால் சோஃபாவுல இல்ல.

என் பெட்ரூம்ல... என் மெத்தையில படுத்திருக்கேன்.

எனக்குப் பக்கத்துல...

கார்த்திக்.

அவர் ஆழ்ந்து தூங்கிக்கிட்டு இருக்காரு.

எனக்கு ஒண்ணுமே புரியல.

நான் எப்படி இங்க வந்தேன்?

நடந்து வந்தேனா?

இல்ல...

கார்த்திக் வந்திருப்பாரு.

நான் சோஃபாவுல தூங்குறதப் பார்த்திருப்பாரு.

என்னை எழுப்ப மனசு வராம...

என்னைத் தூக்கியோ... இல்ல தாங்கலா கூட்டிட்டு வந்தோ... இங்க படுக்க வெச்சிருக்காரு.

பெட்ஷீட் என் மேல போர்த்தியிருந்துச்சு.

நான் எழுந்து உட்கார்ந்தேன்.

மணி பார்த்தேன்.

விடியற்காலை 3:45.

கார்த்திக் முகத்தைப் பார்த்தேன்.

களைப்பாத் தெரிஞ்சாரு.

ஆபிஸ் டென்ஷன்... வேலை பளு...

ஆனாலும்... என்னை பத்திரமா கொண்டு வந்து படுக்க வெச்சிருக்காரு.

என் மேல அவருக்குப் பாசம் இல்லாம இல்ல.

நேரம் தான் இல்ல.

நான் மெதுவா எழுந்து, பாத்ரூமுக்குப் போனேன்.

லைட்டைப் போட்டேன்.

கண்ணாடி முன்னாடி என் முகம் தெரிஞ்சுச்சு.

தூக்கக் கலக்கம். கலைஞ்ச தலைமுடி.

ஆனா உள்ளுக்குள்ள ஒரு தெளிவு வந்துச்சு.

"இதுதான் உன் வாழ்க்கை பவித்ரா."

"இந்த வீடு... இந்த பெட்ரூம்... அந்தத் தூங்குற மனுஷன்..."

"இதுதான் நிஜம்."

"சாயங்காலம் நடந்தது... அது ஒரு மாயை."

"அது ஒரு கனவு மாதிரி கலைஞ்சு போக வேண்டிய விஷயம்."

நான் முகம் கழுவிட்டு, லைட்டை ஆஃப் பண்ணேன்.

திரும்ப வந்து மெத்தையில உக்காந்தேன்.

கார்த்திக் பக்கத்துல படுத்தேன்.

அவர் மேல இருந்து வந்த அந்தப் பரிச்சயமான வாசனை.

அது எனக்குப் பாதுகாப்பா இருந்துச்சு.

நான் மெதுவா நகர்ந்து... அவர் முதுகுக்குப் பின்னால போனேன்.

அவரை இறுக்கிக் கட்டிக்கிட்டேன்.

என் மார்பு அவர் முதுகுல பதியுற மாதிரி... ஒட்டிப் படுத்தேன்.

என் கையை அவர் இடுப்பு மேல போட்டேன்.

அவர் லேசா அசைஞ்சாரு. தூக்கத்துலயே என் கையைப் பிடிச்சுக்கிட்டாரு.

அந்த ஸ்பரிசம்...

"நான் இருக்கேன் பவித்ரா... நான் உன் புருஷன்"னு சொல்ற மாதிரி இருந்துச்சு.

நான் அவர் முதுகுல என் முகத்தைப் புதைச்சேன்.

ஒரு சின்ன முத்தம் கொடுத்தேன்.

மனசுக்குள்ள ஒரு நிம்மதி.

"நான் இங்கதான் இருக்கேன்... நான் இவருக்குத்தான் சொந்தம்."

ஆனா...

கண்ணை மூடும்போது...

என் மனசுக்குள்ள ஒரு சின்னக் குரல்... மெலிசா ஒலிச்சுச்சு.

"நீ இங்க இருந்தாலும்... உன் மனசுல ஒரு மாற்றம் வந்திருக்கு பவித்ரா."

"இனிமே நீ பழைய பவித்ரா இல்ல."

"உனக்குள்ள ஒரு புது ஆசை துளிர்த்திருக்கு..."

"ஒரு அந்நியனோட பார்வைக்காக... ஒரு அந்நியனோட ரசனைக்காக... நீ ஏங்குற..."

"அது தப்புதான்... ஆனா அது அழியாது."

அந்த உண்மையை என்னால மறுக்க முடியல.

நான் கார்த்திக்கை இன்னும் இறுக்கிப் பிடிச்சுக்கிட்டேன்.

எதோ நான் தப்பு பண்ணிடக் கூடாதுன்னு... எனக்கு நானே போட்டுக்கிட்ட விலங்கு மாதிரி...

நான் அவரைப் பிடிச்சுக்கிட்டுத் தூங்க முயற்சி பண்ணேன்.

ஆனா என் ஆழ்மனசுல...

பிரகாஷோட முகம்...

அவன் கும்பிட்ட கை...

அவன் சட்டைப்பைக்குள்ள... அவன் இதயத்துக்கு மேல வெச்ச அந்த ஜட்டி...

எல்லாம் ஒரு நிழல் மாதிரி சுத்திச் சுத்தி வந்துச்சு.
[+] 9 users Like yazhiniram's post
Like Reply


Messages In This Thread
RE: அவள் இதயத்தின் மொழி - by yazhiniram - 22-12-2025, 06:34 PM



Users browsing this thread: Bala, 5 Guest(s)