03-12-2025, 01:24 AM
கூமாப்பட்டியா ?
ஆமாம் ஏன் மா ? உங்களுக்கு அந்த கிராமம் பத்தி தெரியுமா ?
தெரியுமாவா ? அது தாண்டா என்னோட பூர்வீக கிராமம்
(சரியான விடையை கண்டு பிடித்த தோழர் vkdon அவர்களுக்கு நன்றி)
அவள் அப்படி சொல்லும்போதே அவள் கண்கள் லேசாய் கலங்க ஆரம்பித்தது
அப்பவே நினைச்சேன் விஜிம்மாவின் முக சாயல் என் அம்மா முகம் போலவே இருந்தது
கண்டிப்பா என் அம்மாவும் விஜிம்மாவும் எதோ வகையில் தூரத்து சொந்தக்காரங்களா தான் இருக்கணும்
காரணம் கிராமங்களில் எல்லாம் பெரும்பாலானோர் பெண் எடுத்து பெண் கொடுத்து சொந்தங்களாகவே வாழ்வார்கள்
அதை நான் கேள்வி பட்டு இருக்கிறேன்
போட்டோ வேற இல்லனு சொல்ற சரி வா நம்ம நேர்லயே ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடுவோம் என்றாள் அம்மா
அம்மா சொல்லியதை கேட்டதும் எனக்கு கைகால் கொள்ளவில்லை
நான் என்ன என்ன நினைத்து கொண்டு வந்தேனோ அதெல்லாம் அம்மாவே தானாக சொல்லுகிறாள் செய்கிறாள்
எனக்கு ஆச்சரியமாக இருந்தது
சந்தோஷத்தில் அப்படியே அம்மாவை இறுக்கி கட்டி அனைத்து தூக்கி அவள் ரெண்டு கன்னத்திலும் இச்சி இச்சி என்று மாத்தி மாத்தி முத்தம் கொடுத்தேன்
ஏய் ! ஏய் !! போதும் விடுடா ! எல்லா முத்தத்தையும் எனக்கே குடுத்துடாத அவளுக்கும் கொஞ்சம் மிச்சம் வை என்றாள் சிரித்து கொண்டே
நான் அம்மாவை இறக்கி விட்டேன்
சரி சீக்கிரம் கிளம்பு என்றாள்
நானும் அம்மாவும் பைக்கிலேயே கூமாப்பட்டி கிராமத்தை நோக்கி பயணம் ஆனோம்
வழியில் போகும் போது பூ பழம் தாம்பூல தட்டு என்று சில மங்களகரமான பொருட்கள் அம்மா வாங்கி கொண்டாள்
எனக்கு அதையெல்லாம் பார்த்த போது விஜிம்மாவுக்கும் எனக்கும் பாதி கல்யாணம் ஆனது போல இருந்தது
சந்திரம்மாவுடன் சுமார் 2 மணி நேர பயணம்
கூமாப்பட்டி எல்லையை வந்து அடைந்தேன்
ஆனால் காலையில் நான் புறப்பட்டு வந்த போது இருந்த சூழ்நிலையும் இப்போது நான் அங்கே பார்த்த சூழ்நிலையும் முற்றிலும் வேறு வேறு மாதிரி இருந்தது
காலையில் மண் சாலை பார்த்த இடத்தில் இப்போது தார் ரோடு இருந்தது
வயல் வெளியாக காணப்பட்ட இடம் இப்போது ஒரு பெரிய பேக்டரி கட்டடம் போல இருந்தது
அதில் 1000 கணக்கான தொழிலாளிகள் வேலைக்கு ஷிப்ட் முறையில் போய்க்கொண்டும் ஷிட்ப் முடிந்து வெளியே வந்து கொண்டும் இருந்தார்கள்
எனக்கு ஒன்றுமே புரியவில்லை
அந்த எல்லையின் திருப்பத்தில் ஒரு பழைய போர்ட் கீழே கிடந்தது
அதை கிட்ட போய் பார்த்தேன்
ரொம்ப பழைய போர்ட்
கரையான் அரித்து போய் அதில் இருந்த எழுத்துக்கள் எல்லாம் சுத்தமாய் அழிந்து போய் மாலையிலும் வெயிலிலும் அந்த பெயர் கல்பலகை மக்கி போய் இருந்தது
"கூ" என்ற எழுத்து கால் வாசி தெரிந்தது முடிவில் "டி" என்ற வார்த்தை தேய்ந்து போய் சொரண்டப்பட்டு இருந்தது
ஒரு 24 மணி நேரத்திற்குள் ஒரு கிராமத்தை பேக்டரியாக மாத்த முடியுமா ?
நான் குழப்பத்தில் செய்வது அறியாது திகைத்து நின்றேன்
என்னடா ஆச்சி ? வழி ஏதும் மாத்தி வந்துட்டியா ? என்று அம்மா கேட்டாள்
இல்லம்மா காலைல இங்கே இருந்து தான் நான் நம்ம வீட்டுக்கு வந்தேன்
ஆனால் இப்போ பார்க்கும் போது எல்லாமே மாறி இருக்கு என்று குழப்பத்துடன் சொன்னேன்
அப்போது ஒரு 40 வயது மதிக்க தக்க பெரியவர் சைக்கிளில் டீ விற்று கொண்டு அந்த பக்கம் வந்தார்
அம்மாவும் நானும் நல்ல வெயிலில் பயணித்து வந்து இருந்தோம்
டேய் தலை வலிக்குது டீ வாங்கு என்றாள் அம்மா
நான் அவரிடம் 2 டீ வாங்கினேன்
அண்ணே இந்த பக்கம் கூமாப்பட்டி ன்னு ஏதாவது கிராமம் இருக்கா ? என்று நைசாக பேச்சு கொடுத்தேன்
கூமாபட்டியா ?
ஆமாண்ணே
ம்ம் நானும் சின்ன வயசுல கேள்வி பட்டு இருக்கேன் தம்பி
எங்க அப்பா கூட அந்த கிராமத்துல ஒரு டீ கடை வச்சி இருந்தாரு
டீ கடை என்று சொன்னதும் நான் காலையில் என் பைக்கை வைத்து இருந்த டீ கடை நினைவுக்கு வந்தது
அந்த டீ கடை எங்கே இருக்கு தெரியுமா ?
டீ கடையா ? என்ன தம்பி ஒன்னும் தெரியாம கேக்குறீங்க ?
ஒரு பெரிய வெள்ளம் வந்தப்போ அந்த கூமாப்பட்டிற கிராமமே தண்ணீ ல மூழ்கி மொத்தமா தமிழ்நாட்டு வரைபடத்துலயே இல்லாம அழிஞ்சிடுச்சி தம்பி அப்புறம் எங்கே என் அப்பாவோட டீ கடை இருக்க போகுது என்றார்
அவர் சொன்னது அப்படியே அஜித் நடித்த சிட்டிசன் திரைப்படம் "அத்திப்பட்டி" கிராமம் காணாமல் போன கதை மாதிரி இருந்தது
என்னண்ணே சொல்றீங்க என்று அவரை பார்த்து அதிர்ச்சியுடன் கேட்டேன்
ஆமா தம்பி நீங்க சொல்ற கிராமம் அழிஞ்சி பலவருசன்கள் ஆகுது என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார்
காலையில் நான் பார்த்த கிராமம் அழிந்து பலவருடங்க ஆகிறதா ?
எனக்கு மண்டையே வெடித்து விடும் போல இருந்தது
அம்மா எங்கள் அருகில் வந்து என்னடா ? என்று கேட்டாள்
நான் அந்த டீ காரர் சொன்னதை அப்படியே அம்மாவிடம் சொன்னேன்
அதை கேட்ட அம்மா அப்படியே மயக்கமாய் பொத் என்று கீழே விழ போனாள்
நல்லவேளை அம்மா என்று கத்தி கொண்டே நான் அம்மாவை தாங்கி பிடித்து கீழே மெல்ல படுக்கவைத்தேன்
தோழர்களே ! அம்மா ஏன் மயக்கம் போட்டு விழுந்தாள் ? கெஸ் பண்ணுங்க பார்க்கலாம் பிளீஸ்
தொடரும் 28
ஆமாம் ஏன் மா ? உங்களுக்கு அந்த கிராமம் பத்தி தெரியுமா ?
தெரியுமாவா ? அது தாண்டா என்னோட பூர்வீக கிராமம்
(சரியான விடையை கண்டு பிடித்த தோழர் vkdon அவர்களுக்கு நன்றி)
அவள் அப்படி சொல்லும்போதே அவள் கண்கள் லேசாய் கலங்க ஆரம்பித்தது
அப்பவே நினைச்சேன் விஜிம்மாவின் முக சாயல் என் அம்மா முகம் போலவே இருந்தது
கண்டிப்பா என் அம்மாவும் விஜிம்மாவும் எதோ வகையில் தூரத்து சொந்தக்காரங்களா தான் இருக்கணும்
காரணம் கிராமங்களில் எல்லாம் பெரும்பாலானோர் பெண் எடுத்து பெண் கொடுத்து சொந்தங்களாகவே வாழ்வார்கள்
அதை நான் கேள்வி பட்டு இருக்கிறேன்
போட்டோ வேற இல்லனு சொல்ற சரி வா நம்ம நேர்லயே ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடுவோம் என்றாள் அம்மா
அம்மா சொல்லியதை கேட்டதும் எனக்கு கைகால் கொள்ளவில்லை
நான் என்ன என்ன நினைத்து கொண்டு வந்தேனோ அதெல்லாம் அம்மாவே தானாக சொல்லுகிறாள் செய்கிறாள்
எனக்கு ஆச்சரியமாக இருந்தது
சந்தோஷத்தில் அப்படியே அம்மாவை இறுக்கி கட்டி அனைத்து தூக்கி அவள் ரெண்டு கன்னத்திலும் இச்சி இச்சி என்று மாத்தி மாத்தி முத்தம் கொடுத்தேன்
ஏய் ! ஏய் !! போதும் விடுடா ! எல்லா முத்தத்தையும் எனக்கே குடுத்துடாத அவளுக்கும் கொஞ்சம் மிச்சம் வை என்றாள் சிரித்து கொண்டே
நான் அம்மாவை இறக்கி விட்டேன்
சரி சீக்கிரம் கிளம்பு என்றாள்
நானும் அம்மாவும் பைக்கிலேயே கூமாப்பட்டி கிராமத்தை நோக்கி பயணம் ஆனோம்
வழியில் போகும் போது பூ பழம் தாம்பூல தட்டு என்று சில மங்களகரமான பொருட்கள் அம்மா வாங்கி கொண்டாள்
எனக்கு அதையெல்லாம் பார்த்த போது விஜிம்மாவுக்கும் எனக்கும் பாதி கல்யாணம் ஆனது போல இருந்தது
சந்திரம்மாவுடன் சுமார் 2 மணி நேர பயணம்
கூமாப்பட்டி எல்லையை வந்து அடைந்தேன்
ஆனால் காலையில் நான் புறப்பட்டு வந்த போது இருந்த சூழ்நிலையும் இப்போது நான் அங்கே பார்த்த சூழ்நிலையும் முற்றிலும் வேறு வேறு மாதிரி இருந்தது
காலையில் மண் சாலை பார்த்த இடத்தில் இப்போது தார் ரோடு இருந்தது
வயல் வெளியாக காணப்பட்ட இடம் இப்போது ஒரு பெரிய பேக்டரி கட்டடம் போல இருந்தது
அதில் 1000 கணக்கான தொழிலாளிகள் வேலைக்கு ஷிப்ட் முறையில் போய்க்கொண்டும் ஷிட்ப் முடிந்து வெளியே வந்து கொண்டும் இருந்தார்கள்
எனக்கு ஒன்றுமே புரியவில்லை
அந்த எல்லையின் திருப்பத்தில் ஒரு பழைய போர்ட் கீழே கிடந்தது
அதை கிட்ட போய் பார்த்தேன்
ரொம்ப பழைய போர்ட்
கரையான் அரித்து போய் அதில் இருந்த எழுத்துக்கள் எல்லாம் சுத்தமாய் அழிந்து போய் மாலையிலும் வெயிலிலும் அந்த பெயர் கல்பலகை மக்கி போய் இருந்தது
"கூ" என்ற எழுத்து கால் வாசி தெரிந்தது முடிவில் "டி" என்ற வார்த்தை தேய்ந்து போய் சொரண்டப்பட்டு இருந்தது
ஒரு 24 மணி நேரத்திற்குள் ஒரு கிராமத்தை பேக்டரியாக மாத்த முடியுமா ?
நான் குழப்பத்தில் செய்வது அறியாது திகைத்து நின்றேன்
என்னடா ஆச்சி ? வழி ஏதும் மாத்தி வந்துட்டியா ? என்று அம்மா கேட்டாள்
இல்லம்மா காலைல இங்கே இருந்து தான் நான் நம்ம வீட்டுக்கு வந்தேன்
ஆனால் இப்போ பார்க்கும் போது எல்லாமே மாறி இருக்கு என்று குழப்பத்துடன் சொன்னேன்
அப்போது ஒரு 40 வயது மதிக்க தக்க பெரியவர் சைக்கிளில் டீ விற்று கொண்டு அந்த பக்கம் வந்தார்
அம்மாவும் நானும் நல்ல வெயிலில் பயணித்து வந்து இருந்தோம்
டேய் தலை வலிக்குது டீ வாங்கு என்றாள் அம்மா
நான் அவரிடம் 2 டீ வாங்கினேன்
அண்ணே இந்த பக்கம் கூமாப்பட்டி ன்னு ஏதாவது கிராமம் இருக்கா ? என்று நைசாக பேச்சு கொடுத்தேன்
கூமாபட்டியா ?
ஆமாண்ணே
ம்ம் நானும் சின்ன வயசுல கேள்வி பட்டு இருக்கேன் தம்பி
எங்க அப்பா கூட அந்த கிராமத்துல ஒரு டீ கடை வச்சி இருந்தாரு
டீ கடை என்று சொன்னதும் நான் காலையில் என் பைக்கை வைத்து இருந்த டீ கடை நினைவுக்கு வந்தது
அந்த டீ கடை எங்கே இருக்கு தெரியுமா ?
டீ கடையா ? என்ன தம்பி ஒன்னும் தெரியாம கேக்குறீங்க ?
ஒரு பெரிய வெள்ளம் வந்தப்போ அந்த கூமாப்பட்டிற கிராமமே தண்ணீ ல மூழ்கி மொத்தமா தமிழ்நாட்டு வரைபடத்துலயே இல்லாம அழிஞ்சிடுச்சி தம்பி அப்புறம் எங்கே என் அப்பாவோட டீ கடை இருக்க போகுது என்றார்
அவர் சொன்னது அப்படியே அஜித் நடித்த சிட்டிசன் திரைப்படம் "அத்திப்பட்டி" கிராமம் காணாமல் போன கதை மாதிரி இருந்தது
என்னண்ணே சொல்றீங்க என்று அவரை பார்த்து அதிர்ச்சியுடன் கேட்டேன்
ஆமா தம்பி நீங்க சொல்ற கிராமம் அழிஞ்சி பலவருசன்கள் ஆகுது என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார்
காலையில் நான் பார்த்த கிராமம் அழிந்து பலவருடங்க ஆகிறதா ?
எனக்கு மண்டையே வெடித்து விடும் போல இருந்தது
அம்மா எங்கள் அருகில் வந்து என்னடா ? என்று கேட்டாள்
நான் அந்த டீ காரர் சொன்னதை அப்படியே அம்மாவிடம் சொன்னேன்
அதை கேட்ட அம்மா அப்படியே மயக்கமாய் பொத் என்று கீழே விழ போனாள்
நல்லவேளை அம்மா என்று கத்தி கொண்டே நான் அம்மாவை தாங்கி பிடித்து கீழே மெல்ல படுக்கவைத்தேன்
தோழர்களே ! அம்மா ஏன் மயக்கம் போட்டு விழுந்தாள் ? கெஸ் பண்ணுங்க பார்க்கலாம் பிளீஸ்
தொடரும் 28


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)