Adultery அனல்மேல் பனித்துளி
#81
வஞ்சனாவுக்காக கம்பெனி வேனைத் தவிர்த்து விட்டான் தாமு. பஸ்ஸிலேயே போகத்தொடங்கினான். அவள் ரெகுலராக ஒரே பஸ்ஸில்தான் காலேஜ் போகிறாள். அதேபோல் மாலையும் ஒரே பஸ்தான்..!!
அவளது நேரத்தைப் பின்பற்றி… அவளோடு பிரயாணம் செய்து வந்தான் தாமு..! தினமும் அவளோடு பேசுகிறான்… ஆனால் காதலை மட்டும்.. அவனால் அவளிடம் சொல்ல முடியவில்லை..!!ஏமாற்றத்துடன்.. கீர்த்தனாவிடம் கேட்டான் தாமு.
”வஞ்சனா..வல்ல…?”

”ம்கூம்… வரல..?” என்றாள் கீர்த்தனா.

”ஏன்.. என்னாச்சு..?”

”தெரியல…”

தாமு கவலையானான். திரும்பித் திரும்பிப் பார்த்தான்.!

அவன் பக்கத்தில் நெருங்கி நின்று கேட்டாள் கீர்த்தனா.
”சொல்லிட்டியா… அவகிட்ட..?”

”ம்..! நேத்துதான்.. சொன்னேன்..”

சிரித்தாள் ”ஓ..! அதான் வரல..! என்ன சொன்னா.. அவ..?”

”ஒன்னுமே சொல்லல.. பேசாம போய்ட்டா…” என்றான் கவலையோடு…!

வேன் வந்து விட்டது.
”சரி.. நா போறேன்…” என்றுவிட்டு… கீர்த்தனா வேனில் ஏறிப் போனாள்..!
அவள் போன பின்னும் காத்து நின்றான் தாமு. வஞ்சனா வரவே இல்லை.
மனசு வலித்தது.. அவனுக்கு..!

அன்று மட்டுமல்ல.. அதேபோல் தொடர்ந்து இரண்டு நாட்களாக.. அவளைப் பார்க்க முடியவில்லை.!

மூன்றாவது நாள்.. மாலை வேலைமுடிந்து..கம்பெனியை விட்டு வெளியேறும்போது… கீர்த்தனாவிடம் கேட்டான் தாமு.
”வஞ்சனாக்கு.. என்னாச்சு..?”

அவள் வெளியே நின்றிருந்த வேனுக்கு நடந்து கொண்டே.. ”ஒன்னும் ஆகலையே..” என்றாள்.

”இல்ல.. இந்த ரெண்டு மூனு நாளா… அவ வரவே இல்ல..?”

”எனக்கு தெரியலப்பா..! நானும் அவள பாக்கவே இல்ல…!”என்று அலட்சியமாகச் சொன்னாள்.

” நீ.. நெனச்சா.. எனக்கு கைஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்..”

”என்ன…?”

”வஞ்சனாவ பாத்து… என்னாச்சுனு..? எனக்காக.. ப்ளீஸ்…?”

”ஏன்.. நீயே போறதுதானே..?”

”ரெண்டு நாளா.. போனேன். ஆனா அவளப்பத்தி.. ஒன்னுமே தெரிஞ்சுக்க முடியல..! ப்ளீஸ்.. கீர்த்தி..” அவன் கெஞ்ச…. கொஞ்சமாக மனமிறங்கினாள்.

” ம்..சரி…!””இல்ல… பரவால்ல…” என்றான்.

சைலஜா ”நீங்க ஒன்னும் கடன் வாங்க வல்லியே..?” என்று கேட்டாள்.

”இல்ல.. உங்கக்காவ பாக்க வந்தேன்..”

”அப்றம் என்ன… தாராளமா.. உக்காரலாம்..! சிட்..ப்ளீஸ்..!!” சைலஜா சிரித்துக் கொண்டே சொல்ல…
மறுக்காமல் உட்கார்ந்தான்.

கீர்த்தனா பக்கத்துச் சேரில் உட்கார்ந்து ”நான்.. ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே தாமு..?” என்றாள்.

அவளைப் பார்த்தான் ”என்ன..கீர்த்தி..?”

”அவள்ளாம்.. உனக்கு ஒத்து வரமாட்டா..! அவள நீ.. மறந்துடறது..பெட்டர்..!!”

அவனது முகம் இருண்டது.! ”ஏதாவது சொல்லுச்சா..?”

”இல்ல..! அவள்ளாம் எதுமே சொல்லல..! நீ என் பிரெண்டுங்கறதுனால… நானா உன்கிட்ட சொல்றேன்..!!”என்றாள்.

சைலஜா.. அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவன் முகம் விழுந்து விட்டது.
‘ஏதாவது சொல்லியிருப்பாளோ..?’

சட்டென ஒரு பெருமூச்சு விட்டான்.
” மூனு நாள் பாக்காம இருக்கறதே…எனக்கு எத்தனை கஷ்டமா இருக்கு தெரியுமா..?” என்றான் வேதணை கலந்த குரலில்.!

சைலஜா…தன் அக்காளிடம் மெல்லக் கேட்டாள்.!
”யாரைடீ…?”

”இது… உனக்கு தேவையில்லாதது.! நீ எழுது..!!” என்றாள் கீர்த்தனா.

”நீ ஒன்னும் எழுதி தரப்போறதில்லே..! நான்தான் எழுதப்போறேன்..!”என்றவள் தாமுவைப் பார்த்து.. நேரடியாகக் கேட்டாள் ”அண்ணா யார லவ் பண்றீங்க..?”

கஷ்டமாகப் புன்னகைத்தான்..!

கீர்த்தனா ”நீ தெரிஞ்சு என்னடி பண்ணப்போறே..?” என்று கேட்டாள்.

”நா.. உன்ன கேக்கல..” என தாமுவையே பார்த்தாள்.

தாமு மெல்லிய குரலில்..”வஞ்சனா..”என்றான்.

”ஆ…!!” என வாயைப் பிளந்தாள் சைலஜா.!

” அவள மறந்துரு..தாமு..! என்னால இது மட்டும்தான் சொல்ல முடியும்…” தாமுவைப் பார்த்துச் சொன்னாள் கீர்த்தனா.
அவனுள் ஒரு வலி பரவியது..!
‘ச்ச… இவள் வேஸ்ட்..’
சட்டென எழுந்து நின்றான்.

அவன் கையைப் பிடித்தாள் கீர்த்தனா.
”என்மேல கோபமா..?”

”உன்மேல என்ன கோபம்..?” பொய்யாகச் சிரித்தான் ”நா…போறேன்..”

அவன் கையை விட்டாள் ”ம்..”

இருண்ட முகத்துடன் அவன் நகர…

”அண்ணா…” என்றாள் சைலஜாஅவளைப் பார்த்தான்.

” நா.. என்ன நெனைக்கறேன்னா…. இவ சொல்றதுதான் சரி…. அந்தக்கா ரேஞ்சே வேற…!! பேசாம.. அந்தக்காவ மறந்துட்டு… வேற யாராவத…ட்ரை பண்ணுங்க..!!” என்று.. சிரித்த முகத்துடன் சொன்னாள் சைலஜா….!!!!
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: அனல்மேல் பனித்துளி - by Mirchinaveen - 09-11-2025, 11:53 AM



Users browsing this thread: