01-11-2025, 09:46 AM
புனிதமான வேறு இடம்னு பார்த்தா …. இறந்து போன ஆத்மாங்க சிலப்போ ஒரு குறிப்பிட்ட இடத்துலயே சுத்திகிட்டு இருக்கும். அதோட நிராசையாகி போன விஷயம் நினச்சி விசனமா சுத்தும். அந்த காரியம் முடியும் வரைக்கும் அது அடங்காது. அது வீடாக இருக்கலாம் … இல்லை மரம் மாதிரியான இடமா இருக்கலாம்,”
ஜில்லு என்பவன் ஃபர்லாங்க் தூரத்து வீட்டில் இருக்கும் +2 முடிக்க உள்ள பையன். பெற்றோர்கள் எங்களை போல மிடில் கிளாஸ். அவன் அப்பா ப்ளெயின்ஸ் டவுனில் வேலையில் இருக்கிறார். இங்கே அம்மா-மகன் மட்டும்தான்.
அவர் இப்படி சொன்னதும் என்ன இது ஆவி, பேய், பிசாசு என்று பேசுகிறார் என்று எனக்கு வித்தியாசமாக பட்டது. என் மனைவி என் கையை பற்றியபடி அச்சத்துடன், “ஆவி, அது, இதுன்றார் …. பயமா இருக்குங்க …” என்றாள்.
அதை கேட்டு அவர், “பயப்படாதீங்க, உங்க விஷயத்துல சொத்து, சுகத்திற்கு குறைவிருக்காது. இன்னும் நிறைய சேரும். உங்களுக்கு வாழ்க்கையில் எந்த வகையிலும் அப கீர்த்தி வராது. சீக்கிரம் …. சீக்கிரம் என்ன ரொம்ப சீக்கிரமே பரிகாரம் கிடைக்கும்,” என்றார்.
தொடர்ந்து, “நீங்கள் செய்த தப்பு, தவறு அடுத்தவங்களுக்கு தெரிந்திருந்தால் அது அவர்களுக்கு மறந்துவிடும். பேப்பரில், ஃபோட்டோவில் இருந்தாலும் மேஜிக் மாதிரி மறைந்துவிடும். ஆனால் உங்களுக்கு கொஞ்ச காலம் நினைவில் இருக்கும், அப்புறம் மறந்துவிடும், மறைந்துவிடும், நினைவில் இருக்கும் காலத்தில் உங்களுக்குள் பிரச்சனை எதுவும் இருக்காது,” என்றதும் என் மனைவி கொஞ்சம் ஆசுவாசம் ஆனாள்.
எங்கள் இருவருக்குமே இப்போது விஷயம் புரிந்துவிட நிம்மதி ஆனோம். இந்த மனுஷன் ஒரு பக்கா ஜென்டில்மேன்தான். விஷயத்தை கிளறாமல் பூடகமாக சொல்லி நம்பிக்கை தருகிறாரே என நினைத்தேன்.
அவர் தொடர்ந்து, “தப்பை இனியும் செய்ய வேண்டியிருக்கும். அது பிரச்சனையை முடிவிற்கு கொண்டுவருவதாக இருக்கும். பிரச்சனை முடியும்போது பிரச்சனை முடிந்துவிட்டதுன்னு உங்களுக்கே புரியும். அப்போது நூறு, இருநூறு செலவில ஒரு சின்ன பரிகாரம் செய்யுங்க போதும். அதை பரிகாரம்னு சொல்லக்கூடாது, நன்றின்னுதான் சொல்லணும்,” என்றார்.
அந்த பரிகாரம் பற்றி என் மனைவி விளக்கம் கேட்டதற்கு, “ஒன்னுமில்லை, தவறு செஞ்ச இடம்னு நீங்க அடையாளம் கண்டுட்டீங்கன்னா அங்க பத்து பெரிய மண் அகல் விளக்கு, சூடம் ஏத்துங்க. அது கிறிஸ்தியன் இடமா இருந்தா 10,20 கேண்டில் ஏத்துங்க. இஸ்லாமியர் இடமா இருந்தா கால்-அரை மணிக்கு சாம்பிராணி கொளுத்துங்க. தாங்க்ஸ் சொல்லி நல்லா வேண்டிக்கோங்க.” என்றார்.
என் மனைவி இப்போது சன்னமாக கேட்டாள். “கோயில், சமாதி, இப்ப தங்கியிருக்கிற வீடு, இது மாதிரி இடத்திலெல்லாம் நாங்க தவறு செய்த மாதிரி தோணலை. வேற எங்க நடந்திருக்கும் சுவாமி?”
“கோயில், சமாதி, வீடு இதெல்லாம் அடையாளம் தெரிந்த இடங்கள். அங்கே நீங்கள் தவறு செய்யவில்லை என்பதை நம்புகிறேன். அப்படியானால் தவறு நடந்த இடம் நிராசைபட்ட ஆத்மா இருக்கற இடமாதான் இருக்கணும். ஆத்மாவோ, ஆவியோ சுத்தற இடம்னு இந்த ஊர்ல யாராவது சொல்லியிருக்காங்களா? தெரிஞ்சும் அங்க நீங்க போனீங்களா?”
“அப்படி எதுவும் இல்லைங்களே! ஆவி இருக்குன்னு நம்பிக்கை இருக்கறவங்க தெரிஞ்சும் யாராவது போவாங்களா? நாங்கள்ளாம் பயந்துக்குவோம்,” என்றாள் மனைவி.
“ஆவிங்க மரத்துமேல, பாழடைஞ்ச கிணத்துல, இடிஞ்சி போன வீட்டுலதான் இருக்கும்னு ஜனங்களுக்கு நம்பிக்கை. ஆவி இருக்கற இடம் மரம்னா கிராமத்து பக்கம் அடையாளத்துக்கு ஆணி அடிச்சி வைப்பாங்க. நீங்க அப்படிப்பட்ட இடம் எதுக்காவது போன இடத்துல….”
நான் குறுக்கிட்டேன், “எங்களுக்கு தெரிந்து நிச்சயமா இல்லைங்க!”
அவர், “பரவாயில்ல விடுங்க. விஷயம் என்னன்னு சீக்கிரம் உங்களுக்கு தெரிஞ்சிடும். பீடை விட்டுச்சின்னு நிம்மதியா போங்க,” என்றார்.
கொஞ்ச நேரம் பேசிவிட்டு வணக்கம் சொல்லி விடை பெற்றோம். திரும்பும் வழியில் என்ன யோசித்தாலும், எப்படி யோசித்தாலும் இருவருக்குமே ஒன்றும் புலப்படவில்லை. சரி, நடப்பது நடக்கட்டும், புதிர் தானாக அவிழட்டும் என்று முடிவு செய்தோம்.
வேலைக்கு நான் போய்விட்டதும் மதியம் மனைவி ஃபோன் செய்தாள். “டவுனுக்கு நானும் ஜில்லும் போறோம்க. நாளைக்கு அவனுக்கு பர்த் டே. கேக் வாங்க போறோம். உங்களுக்கு எதாவது வாங்கணுமா?”
நான் ஏதோ ரகசியம் பேசுகிறவன் மாதிரி, “டாஸ்மாக் எலைட்ல டீச்சர்ஸ் ரெண்டு ஃபுல் வாங்கிட்டு வந்துடேன், புண்ணியமா போகட்டும்!” என்றேன்.
அவள், “நான் எலைட்டுக்கு போய் வாங்கினா நீங்க வர்றதுக்குள்ள நானே ஹால்ஃப் அடிச்சி மட்டையாயிடுவேன், பரவாயில்லையா? …. அது சரி, அதென்ன ட்ரிங்க்ஸ்லயும் டீச்சர்ஸ் ப்ராண்டுதான் வேணுமாக்கும்! அமலா டீச்சர் கனவு இதுலயும் துரத்துதாக்கும்! …. கனவுல அமலா வந்தா கக்கிட்டு கம்முன்னு கிடக்கணும், என்ன?” என்றதும் சிரித்தபடி ஃபோன் வைத்தேன்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)