Fantasy பொன்னியின் செல்வனில் புதிரானவன்
#18
(02-10-2025, 12:11 AM)Indran ajith Wrote: முதலில் வரலாற்று புதினங்களில் உள்ளது தான் வரலாறு என்ற எண்ணத்தை நிறுத்துங்கள். கிருஷ்ணதேவராயர் காலத்தில் சோழ வம்சமே ஒழிந்து பாண்டியர் ஆட்சி நடைபெற்ற காலம். மணிமுடி இலங்கை போனது எல்லாம் உண்மை இல்லை அது எல்லாம் கற்பனை கதைகள் தயவு செய்து இதனை எல்லாம் வரலாரோடு தொடர்பு படுத்தி உண்மை என்று நம்ப வேண்டாம்.

கிருஷ்ண தேவராயர் காலத்தில் காலத்தின் கோலத்தால் சோழ,பாண்டிய அரசுகள் சிற்றரசர்களாக மாறி கப்பம் கட்டி கொண்டு இருந்தனர்.இதனால் தான் நாயக்கர் வம்சமே உருவானது.இது வரலாற்று புதினங்களில் இருந்து சொல்லப்படவில்லை.இவை பொன்னியின் செல்வனிலும் சொல்லப்படவில்லை.வரலாறில் இருக்கு.அதே போல தான் மங்கையர்கரசியார் வரலாறும்.நான் இங்கே கதையை மாற்ற சொல்லவும் இல்ல.விமர்சிக்கவும் இல்ல.இந்த கதையில் என் கடைசி பதிவு என பதிவு செய்த பிறகும் நொட்டம் சொல்றவன் இருப்பான் என்ற உன் பதிவே இந்த எதிர்வினையை சொல்ல தூண்டியது.நானும் இதே தளத்தில் 5 கதையை எழுதியவன் தான்.எனக்கும் கதை எழுதுபவரின் வலி தெரியும்.சந்தர்ப்ப சூழ்நிலைகளால் 2 கதை மட்டும் முழுதாக முடிக்க முடியவில்லை.உன்னை போன்ற நபர்கள் என்ன சொல்ல வருகிறோம் என்பதே புரியாமல் அடுத்தவனை இகழ்வது மேலும் விட்டு போன கதைகளை தொடர்வது வீண் என புரிந்து கொண்டேன்.இந்த கருத்துக்கு நீ எந்த பதில் பதிவு போட்டாலும் என் தரப்பில் இருந்து இதற்கு மேல் எந்த பதிலும் வராது.
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: பொன்னியின் செல்வனில் புதிரானவன் - by Geneliarasigan - 02-10-2025, 12:55 AM



Users browsing this thread: 1 Guest(s)