Fantasy பொன்னியின் செல்வனில் புதிரானவன்
#9
பொன்னியின் செல்வனின் தீவிர வாசகன் நான்.அதனால் இந்த கதையை நான் வாசிக்க போவது இல்ல நண்பா.ஆனா உங்க வருத்தத்தை பதிவு செய்து இருந்தீங்க.அதாவது பாண்டிய வம்சத்தை கல்கி தவறாக காட்டினார்கள் என்று.இப்போ என்னோட ஊரில் இருக்கும் நபர்கள் எல்லோரும் உத்தமர்கள் என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமோ அதே போல தான் பாண்டிய வம்சத்தில் வந்த அனைவரும் உத்தமர்கள் என்று சொல்வது.அந்த நேரத்தில் இருந்த மன்னன் அது போல இருக்கலாம்.அதே போல கிருஷ்ண தேவராயர் காலத்தில் சோழர்கள் வலிமை குன்றி இருந்த போதும் அன்று இருந்த மன்னன் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடினான்.கடைசியில் அதுவே அவன் அழிவுக்கு வித்திட்டது.பொன்னியின் செல்வன் காலத்தில் பாண்டியர்கள் தங்கள் மணிமுடியை இலங்கை மன்னனிடம் கொடுத்து வைத்து இருந்தார்கள்.ஒரு தமிழ் மன்னரின் மணிமுடி எப்படி ஒரு அயலானிடம் இருக்கலாம் என்று தொடங்கிய போர் கடைசியில் ராஜேந்திர சோழன் காலத்தில் தான் இலங்கை மன்னனிடம் இருந்து மணிமுடி கைப்பற்றப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.சிங்களவன் அந்த நேரத்தில் ஒரு தமிழ் மன்னன் மணிமுடியை வைத்து மிகவும் நம்மை சிறுமைபடுத்தி கொண்டு இருந்தான்.இதை எல்லாம் உணர்வது நலம். சோழ தேசத்து மங்கையர்கரசியர் தான் பாண்டிய சபையில் அரசியாக இருந்தார்.அவரோட வாரிசுகள் பின்பு பாண்டிய நாட்டை ஆண்டது.அதற்கு பின்பு தான் ராஜ ராஜ சோழனின் காலமே வருது.அப்போ மங்கையர்கரசியார் வாரிசு சோழ வம்சமா அல்லது பாண்டிய வம்சமா?பாண்டியர்,சோழர் என்பதை புறந்தள்ளி நல்லவன் கெட்டவன் என்ற முறையில் அணுகினால் நலம். பிரிவினை உண்டாகாது.
[+] 2 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: பொன்னியின் செல்வனில் புதிரானவன் - by Geneliarasigan - 01-10-2025, 12:18 AM



Users browsing this thread: 1 Guest(s)