13-08-2025, 11:18 AM
“அண்ணி” என்றான் சம்பத். அவன் மூக்கு உடனடியாக அந்த வாசனைக்கு அடிமையானது.
கமகம வாசனை சோப்பு. கூடவே ஷாம்ப்பு மணம். குடும்பப் பெண் குளித்து வரும்போது எழும் சுகந்த மணம்.
மனதை ஏதோ செய்தது. கிறக்கமாய் இருந்தது.
“வாங்க தம்பி” ராகினியின் புன்னகை வசீகரமாக இருந்தது.
அவள் முகம் விளக்கி வைத்த பாத்திரம் போல பளபளத்தது. அவளது கூர் மூக்கின் நுனி சிவந்த மாதிரி மினுக்கியது. தடித்துச் சிவந்த இதழ்களில் ஈரப் பதம்.
“வின்னி வந்துருக்கறதை நீங்க சொல்லவே இல்ல அண்ணி?” அண்ணியின் முகத்தை ஆவலாகப் பார்த்துக் கேட்டான் சம்பத்.
“ஆமா தம்பி.. நீங்க இங்க வந்தா நேர்லயே பாத்து பேசிக்கலாம்னுதான் போன்ல எதுவும் சொல்லல”
“தனியா வந்துருக்கா. நீங்க போயிருந்தீங்களா ஊருக்கு?”
“ஆமா தம்பி. போய்ட்டு நேத்து இவளையும் கையோட கூட்டிட்டு வந்துட்டேன்”
“மாப்பிள்ளை எப்ப வரேன்றுக்காரு அண்ணி?”
“வருவாரு தம்பி” அவள் குரலில் ஒரு சின்ன மாறுதல்.
ஒயிலாய் நின்று தலை துவட்டி கழுத்தை வளைத்து கூந்தலை உதறி துண்டால் சுற்றிக் கொண்டாள்.
கழுத்தில் ஒற்றைச் செயின் பளபளத்தது.
அவளின் அந்த அழகும் பெண்மையின் வசீகரமும் சம்பத்தை சில நொடிகள் அதிரடியாக தாக்கியது.
அவள் முகத்தை விட்டு அவனால் கண்களை எடுக்க முடியவில்லை.
“சித்தப்பாக்கு காபி குடுத்தியா?” வினிதாவைப் பார்த்துக் கேட்டாள் ராகினி.
“சித்தப்பா வேண்டாம்னு சொல்லிட்டார்மா..”
“வரும்போதுதான் டிபன் சாப்பிட்டு வந்தேன் அண்ணி. இப்ப காபி டீ எதுவும் வேண்டாம். நீங்க ஏதோ தனியா பேசணும். அதுவும் ஒடனே பேசணும் நேர்ல வானு சொன்னீங்க. அதான் என்னன்னு கேட்டுட்டு போயிரலாம்னு..”
“ஆமா தம்பி..” அவள் தயக்கமாக வினிதாவைப் பார்த்தாள்.
வினிதாவும் தன் தாயைப் பார்த்தாள். அந்தப் பார்வைகள் அழுத்தமாக எதையோ பரிமாறிக் கொண்டன.
“சொல்லுங்க அண்ணி. என்னை எதுக்கு தனியா வரச் சொன்னீங்க?” சம்பத் கேட்டான்.
ராகினி சிறிது யோசனையாக தன் மகள் வினிதாவைப் பார்த்தாள். அப்பறம் ஆழமாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு வினிதாவிடம் சொன்னாள்.
“நீ மாடிக்கு போ. கொஞ்ச நேரம் அங்க இரு. நான் உங்க சித்தப்பாகிட்ட தனியா பேசிக்கறேன்”
வினிதா தலையை ஆட்டிவிட்டு எழுந்து நடந்து மாடிக்குப் போக வெளியே போனாள்.
அவளின் நடையில் ஒரு வேகம் இருந்தது. அவளது கை கால்கள் மட்டும்தான் அசைந்தது. இடுப்போ புட்டங்களோ அசையவே இல்லை.
அவளை அதே வியப்புடன் பார்த்தான். நட்டு வைத்த நாணற்குச்சி போல வளைவுகளே இல்லாத அவள் நடையில் என்ன ஒரு நளினம். ஒழுங்கு.
அவள் கதவைத் திறந்து வெளியே சென்றதும் ராகினியைப் பார்த்தான் சம்பத்.
“இவளுக்கு ஒடம்பே தேற மாட்டேங்குதே அண்ணி.. நல்லா சாப்பிடறாளா இல்லையா?”
“நல்லாதான் சாப்பிடறா தம்பி. ஹெல்த்தியாவும் சாபபிடறா. ஆனாலும் ஒடம்பு இப்படித்தான். வேர்க்குச்சி மாதிரி இருக்கு” கவலையாக சொன்னாள் ராகினி.
“சரி.. சொல்லுங்க. என்ன ஆச்சு. என்ன பிரச்சினை?”
“பிரச்சினை எனக்கில்ல.. வினிக்குத்தான்”
“ஓ. என்ன பிரச்சினை இப்ப?”
“இவளுக்கு கல்யாணமாகி ரெண்டு வருசம் ஆச்சு..”
“ஆமா..”
“இன்னும் குழந்தை உண்டாகவே இல்ல”
“ம்ம்” அண்ணியின் முகத்தையே கூர்மையாகப் பார்த்தான் சம்பத்.
“ஒரு தடவைகூட இவ வயித்துல தங்கவே இல்ல”
“ம்ம்”
“இப்ப அதான் பிரச்சினை..”
“அதுல என்ன பிரச்சினை? ஆஸ்பத்ரி போய் பாத்தா தெரிஞ்சுருமே?”
“அது சரிதான் தம்பி..” என்ற அண்ணி வெகுவாக தயங்கினாள். அவள் கழுத்துக் குழியில் ஒரு துடிப்பு எழுந்து அடங்கியது.
“சொல்லுங்க.. ஆஸ்பத்ரி போனாங்களா,?”
“போனாங்க”
“யாருக்கு என்ன பிரச்சினையாம்?”
“இவளுக்கு ஒரு பிரச்சினையும் இல்லே”
“அப்ப மாப்பிள்ளைகிட்டத்தான் பிரச்சினை இருக்கணும்”
அண்ணி முகம் ஒரு நொடி இறுகியது.
“அப்படித்தான் இருக்கணும். ஆனா அவர் டெஸ்ட் பண்ணிக்க ஒத்துக்க மாட்டேங்குறார்”
“ஏன்..?”
“இப்ப அதுகூட பிரச்சினை இல்ல தம்பி”
“வேற என்ன பிரச்சினை அண்ணி?”
“கொழந்தைதான்.” மூக்கை சற்றே அழுத்தி நீவிக் கொண்டாள். “அதனால என்னாச்சுனா.. இப்ப இவ புருசன் இவகிட்ட டைவோர்ஸ் கேக்கறான்”


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)