07-07-2025, 06:08 PM
கல்யாண வேலைகள் மும்முறமாக நடந்து கொண்டு இருந்தது..
வாசு : ஸ்ரேயா சகானா விடம் சென்று.. அக்கா உங்க ரெண்டு பேர் கிட்டயும் கொஞ்சம் பேசணும்
ஸ்ரேயா : டேய் நாங்க உன் அக்கா எங்க கிட்ட போய் பெர்மிஷன் எல்லாம் கேக்குற.. சொல்லுடா என்ன விஷயம்
வாசு : அக்கா நான் சொல்றேன்னு என் மேல கோபப்படாதீங்க.. நீங்க அப்பாவுக்கு ஒரு பொண்ணு கூட்டிட்டு வந்து இருக்கீங்க அது பெரிய பொம்பள அக்கா.. ஆன்ட்டி மாதிரி இருக்குறாங்க.. நீங்க பேசாம அப்பாவுக்கு அம்மாவே சேர்த்து வச்சுடுங்க அக்கா..
சஹானா : டேய் என்னடா நெனச்சுக்கிட்டு இருக்கிற.. அவ்ளோ ஈசியா நாங்க பட்ட வேதனைகள் எல்லாம் மறந்திடுமோ.. நீ கூட தாய்ப்பால் குடிச்சி இருப்ப டா.. ஆனா நான் தாய்ப்பால் குடிச்சிகிட்டு இருக்கும்போது அந்த நேரத்துல என்னை விட்டுட்டு போனாங்களே அது எந்த விதத்தில் நியாயம்
ஸ்ரேயா : ஏய் அவன் சின்ன பையன் டி அவன் கிட்ட போய் கோவப்படுற.. என்ன பேசினாலும் பொறுமையா பேசு
வாசு : சகானா அக்கா கோவப்படுறது நியாயம் தான்.. அம்மா அந்த மாதிரி எல்லாம் செஞ்சி இருக்காங்க
ஸ்ரேயா : டேய் நாங்களும் இப்ப கவனிச்சுக்கிட்டு தான் இருக்கோம்.. அம்மா நடவடிக்கைகளை நிறைய நல்ல மாற்றங்கள் இருக்கு.. ஆனால் அந்த மாற்றங்கள் முன்னாடியே இருந்திருக்கணும் இப்ப மாற்றம் வந்து லேட்... சரிடா கல்யாண வேலை மும்முரமா நடந்துகிட்டு இருக்கு.. இப்போ எங்களால எதுவுமே செய்ய முடியாது.. சரியா போய் தூங்குடா
இப்படியே இரண்டு வாரங்கள் கடந்தது.. திருமண நாளும் வந்தது..
ஸ்வாதி : ஏங்க நீங்க அந்த பொண்ணு தான் கல்யாணம் செய்யப் போறீங்களா..
ராம் : என் பொண்ணுங்க முடிவு தான் என் முடிவு.. அவங்க எந்த முடிவு எடுத்தாலும் நாம் முழு மனசோட சம்மதிக்கிறேன்.. நீ வருத்தப்பட்டு ஒரு பிரயோஜனமும் கிடையாது..
ஸ்வாதி : என் கூட இருந்த வாழ்க்கை தான் உங்களுக்கு நல்லா இல்லாம போயிடுச்சு.. இப்ப வரப்போற புது வாழ்க்கை உங்களுக்கு நல்லா இருக்கட்டும்.. என்று கண்ணில் கண்ணீரோடு அந்த ரூமை விட்டு வெளியே சென்றார்..
ஐயர் : நேரம் ஆயிடுச்சு பொண்ணு மாப்பிள்ளை சீக்கிரம் கூட்டிட்டு வாங்க..
ராம் ஸ்ரேயா சஹானா விக்ரம் பாபு.. அனைவரும் கல்யாண கோலத்தில் வந்து கொண்டு இருந்தார்கள்..
மண்டபமே அவர்களை பார்த்துக் கொண்டு இருந்தது..
விக்ரம் ஸ்ரேயா. சஹானா பாபு இருவரும் ஜோடியாக மணமேடையில் உட்கார்ந்தார்கள்..
ராம் மட்டும் தனியாக மனமேடையில் உட்கார்ந்தான்..
காயத்ரி நடராஜ் வாசு மூவரும் சுவாதியை அலங்காரம் செய்து கூப்பிட்டு வந்தார்கள்..
ராமிற்கு சந்தோசம் இருந்தாலும்.. வெளிக்காட்டிக் கொள்ளாமல்.. மகள்களிடம் ஏன் என்ன சுவாதி வாரா.. நீங்க எனக்கு பார்த்துட்டு இருக்குற பொண்ணு எங்க
ஸ்ரேயா : அப்பா அந்த பொண்ணு வேற யாரும் இல்ல.. வாசு ஒரு பொண்ண காதலிக்கிறான் அவங்களோட அம்மா தான் இது.. நம்ம கம்பெனில வேலை பார்க்கிறார்களே விஜி அந்தப் பொண்ணோட அம்மாவை இவங்க.... இவங்க கிட்ட ஏற்கனவே எல்லாமே சொல்லிட்டோம்.. கொஞ்ச நாளைக்கு நீங்கதான் எங்க அப்பாவுக்கு பார்த்து இருக்கிற பொண்ணு மாதிரி நடிக்கணும்.. கல்யாணத்துக்கு அன்னைக்கு எங்க அப்பாவுக்கு தெரிஞ்சா போதும்.. அதான் நாங்க ஏற்பாடு செஞ்சோம்..
வாசு : சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை.. அக்கா நான் காதலிக்கிறது
சஹானா : டேய் நாங்க ரெண்டு பேரும் உன் வயசு தாண்டி தாண்டா வந்திருக்கோம்.. இப்போதைக்கு உனக்கு நிச்சயதார்த்தம் செஞ்சி விடுவோம்.. கம்பெனி வேலைய நல்ல கத்துக்கோ அதுக்கப்புறம் உனக்கு கல்யாணம் தான்.. ஓகேவா
வாசு : ஆனந்தக் கண்ணீருடன் அக்காக்கள் இருவரையும் கட்டிப்பிடித்தான்.. தேங்க்ஸ் அக்கா ரொம்ப தேங்க்ஸ் அக்கா.. என் காதலுக்கு நீங்க சம்மதிப்பீங்க அது எனக்கு ஏற்கனவே தெரியும்.. ஆனா அப்பாவுக்கு அம்மாவை சேர்த்து வைக்கிறது எவ்வளவு பெரிய விஷயம் அக்கா
ஸ்வாதி : ஸ்ரேயா சஹானா இரண்டு பேரும் என்னை மன்னிச்சிட்டீங்களாமா.. நான் செஞ்ச தப்புக்கு இன்னமும் தண்டனை கொடுப்பீங்க நினைச்சேன்.. ஆனா இதை நான் எதிர்பார்க்கவே இல்லையே அம்மா
ஸ்ரேயா : உங்க மேல கோவத்துல இருந்தோம்.. ஆனா உங்கள வெறுக்கல.. ஆனா சமீப காலத்துல உங்களுடைய நடவடிக்கைகள் எல்லாமே.. நல்ல விதமா இருந்துச்சு.. அப்பா உங்கள விட்டுப் போகப் போறாரே அப்படின்னு தெரிஞ்ச உடனே.. நீங்க பட்ட வேதனைகளை எங்களால் புரிந்துகொள்ள முடிஞ்சது..
சஹானா : அக்கா சொன்னது கரெக்ட் தான்.. அக்காவை விட எனக்கு உங்க மேல ரொம்பவே கோபம் இருந்தது.. நீங்க செஞ்ச தப்புக்கு உங்க முகத்துல கூட முழிக்க கூடாதுன்னு தான் இருந்தேன்.. நீங்க செத்தாலும் உங்களுடைய மரணத்துக்கு கூட நான் வரக்கூடாதுன்னு இருந்தேன்.. என்ன இருந்தாலும் எங்க ரெண்டு பேரையும் பெத்தவங்க நீங்க.. ஏதோ புத்தி கெட்டு போய் தப்பு செஞ்சிட்டீங்க... சாய்பாபா காலமா உங்களுடைய நல்ல நடவடிக்கைகள் வைத்து தான் இந்த முடிவு எடுத்தோம்.. அப்பாவை பார்த்து அழுகிறது.. எப்பவுமே யோசிச்சுகிட்டே இருக்கிறது.. ஒழுங்கா சாப்பிடாம இருக்கிறது.. எப்பவுமே எங்கள பத்தி நெனச்சுக்கிட்டு இருக்கீங்க.. உங்க மனசுல அப்பா தான் இருக்காருன்னு நாங்க புரிஞ்சுகிட்டோம்.. அதான் இந்த ஏற்பாடு..
ராம் : நீங்க ரெண்டு பேரும் மனப்பூர்வமா சம்மதிக்கிறீங்களா இல்ல எனக்காக சம்மதிக்கிறீர்களா
ஸ்ரேயா சஹானா : மனப்பூர்வமா சம்மதிக்கிறோம் அப்பா.. உங்களுடைய சந்தோசமும் எங்களுக்கு முக்கியம்.. எங்களுக்காக இத்தனை வருஷம் வாழ்ந்தீங்க.. உங்க மனசுல என்ன இருக்குதுன்னு புரியாமலே நாங்க இருக்கோம்.. எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்.. முதல்ல அம்மாவுக்கு தாலி கட்டி கல்யாணம் பண்ணிக்கோங்க..
ஐயர் மந்திரம் ஓத.. மூன்று ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது..
பாசுவுக்கும் விஜிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது..
ஸ்ரேயா சஹானா விக்ரம் பாபு தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தைகள் பிறந்தது..
வாசு கம்பெனியை நன்றாக கற்றுக் கொண்டான்..
இரண்டு வருடங்கள் கழித்து வாசுவுக்கும் விஜிக்கும் திருமணம் நடந்தது.. அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்..
சுபம்
வாசு : ஸ்ரேயா சகானா விடம் சென்று.. அக்கா உங்க ரெண்டு பேர் கிட்டயும் கொஞ்சம் பேசணும்
ஸ்ரேயா : டேய் நாங்க உன் அக்கா எங்க கிட்ட போய் பெர்மிஷன் எல்லாம் கேக்குற.. சொல்லுடா என்ன விஷயம்
வாசு : அக்கா நான் சொல்றேன்னு என் மேல கோபப்படாதீங்க.. நீங்க அப்பாவுக்கு ஒரு பொண்ணு கூட்டிட்டு வந்து இருக்கீங்க அது பெரிய பொம்பள அக்கா.. ஆன்ட்டி மாதிரி இருக்குறாங்க.. நீங்க பேசாம அப்பாவுக்கு அம்மாவே சேர்த்து வச்சுடுங்க அக்கா..
சஹானா : டேய் என்னடா நெனச்சுக்கிட்டு இருக்கிற.. அவ்ளோ ஈசியா நாங்க பட்ட வேதனைகள் எல்லாம் மறந்திடுமோ.. நீ கூட தாய்ப்பால் குடிச்சி இருப்ப டா.. ஆனா நான் தாய்ப்பால் குடிச்சிகிட்டு இருக்கும்போது அந்த நேரத்துல என்னை விட்டுட்டு போனாங்களே அது எந்த விதத்தில் நியாயம்
ஸ்ரேயா : ஏய் அவன் சின்ன பையன் டி அவன் கிட்ட போய் கோவப்படுற.. என்ன பேசினாலும் பொறுமையா பேசு
வாசு : சகானா அக்கா கோவப்படுறது நியாயம் தான்.. அம்மா அந்த மாதிரி எல்லாம் செஞ்சி இருக்காங்க
ஸ்ரேயா : டேய் நாங்களும் இப்ப கவனிச்சுக்கிட்டு தான் இருக்கோம்.. அம்மா நடவடிக்கைகளை நிறைய நல்ல மாற்றங்கள் இருக்கு.. ஆனால் அந்த மாற்றங்கள் முன்னாடியே இருந்திருக்கணும் இப்ப மாற்றம் வந்து லேட்... சரிடா கல்யாண வேலை மும்முரமா நடந்துகிட்டு இருக்கு.. இப்போ எங்களால எதுவுமே செய்ய முடியாது.. சரியா போய் தூங்குடா
இப்படியே இரண்டு வாரங்கள் கடந்தது.. திருமண நாளும் வந்தது..
ஸ்வாதி : ஏங்க நீங்க அந்த பொண்ணு தான் கல்யாணம் செய்யப் போறீங்களா..
ராம் : என் பொண்ணுங்க முடிவு தான் என் முடிவு.. அவங்க எந்த முடிவு எடுத்தாலும் நாம் முழு மனசோட சம்மதிக்கிறேன்.. நீ வருத்தப்பட்டு ஒரு பிரயோஜனமும் கிடையாது..
ஸ்வாதி : என் கூட இருந்த வாழ்க்கை தான் உங்களுக்கு நல்லா இல்லாம போயிடுச்சு.. இப்ப வரப்போற புது வாழ்க்கை உங்களுக்கு நல்லா இருக்கட்டும்.. என்று கண்ணில் கண்ணீரோடு அந்த ரூமை விட்டு வெளியே சென்றார்..
ஐயர் : நேரம் ஆயிடுச்சு பொண்ணு மாப்பிள்ளை சீக்கிரம் கூட்டிட்டு வாங்க..
ராம் ஸ்ரேயா சஹானா விக்ரம் பாபு.. அனைவரும் கல்யாண கோலத்தில் வந்து கொண்டு இருந்தார்கள்..
மண்டபமே அவர்களை பார்த்துக் கொண்டு இருந்தது..
விக்ரம் ஸ்ரேயா. சஹானா பாபு இருவரும் ஜோடியாக மணமேடையில் உட்கார்ந்தார்கள்..
ராம் மட்டும் தனியாக மனமேடையில் உட்கார்ந்தான்..
காயத்ரி நடராஜ் வாசு மூவரும் சுவாதியை அலங்காரம் செய்து கூப்பிட்டு வந்தார்கள்..
ராமிற்கு சந்தோசம் இருந்தாலும்.. வெளிக்காட்டிக் கொள்ளாமல்.. மகள்களிடம் ஏன் என்ன சுவாதி வாரா.. நீங்க எனக்கு பார்த்துட்டு இருக்குற பொண்ணு எங்க
ஸ்ரேயா : அப்பா அந்த பொண்ணு வேற யாரும் இல்ல.. வாசு ஒரு பொண்ண காதலிக்கிறான் அவங்களோட அம்மா தான் இது.. நம்ம கம்பெனில வேலை பார்க்கிறார்களே விஜி அந்தப் பொண்ணோட அம்மாவை இவங்க.... இவங்க கிட்ட ஏற்கனவே எல்லாமே சொல்லிட்டோம்.. கொஞ்ச நாளைக்கு நீங்கதான் எங்க அப்பாவுக்கு பார்த்து இருக்கிற பொண்ணு மாதிரி நடிக்கணும்.. கல்யாணத்துக்கு அன்னைக்கு எங்க அப்பாவுக்கு தெரிஞ்சா போதும்.. அதான் நாங்க ஏற்பாடு செஞ்சோம்..
வாசு : சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை.. அக்கா நான் காதலிக்கிறது
சஹானா : டேய் நாங்க ரெண்டு பேரும் உன் வயசு தாண்டி தாண்டா வந்திருக்கோம்.. இப்போதைக்கு உனக்கு நிச்சயதார்த்தம் செஞ்சி விடுவோம்.. கம்பெனி வேலைய நல்ல கத்துக்கோ அதுக்கப்புறம் உனக்கு கல்யாணம் தான்.. ஓகேவா
வாசு : ஆனந்தக் கண்ணீருடன் அக்காக்கள் இருவரையும் கட்டிப்பிடித்தான்.. தேங்க்ஸ் அக்கா ரொம்ப தேங்க்ஸ் அக்கா.. என் காதலுக்கு நீங்க சம்மதிப்பீங்க அது எனக்கு ஏற்கனவே தெரியும்.. ஆனா அப்பாவுக்கு அம்மாவை சேர்த்து வைக்கிறது எவ்வளவு பெரிய விஷயம் அக்கா
ஸ்வாதி : ஸ்ரேயா சஹானா இரண்டு பேரும் என்னை மன்னிச்சிட்டீங்களாமா.. நான் செஞ்ச தப்புக்கு இன்னமும் தண்டனை கொடுப்பீங்க நினைச்சேன்.. ஆனா இதை நான் எதிர்பார்க்கவே இல்லையே அம்மா
ஸ்ரேயா : உங்க மேல கோவத்துல இருந்தோம்.. ஆனா உங்கள வெறுக்கல.. ஆனா சமீப காலத்துல உங்களுடைய நடவடிக்கைகள் எல்லாமே.. நல்ல விதமா இருந்துச்சு.. அப்பா உங்கள விட்டுப் போகப் போறாரே அப்படின்னு தெரிஞ்ச உடனே.. நீங்க பட்ட வேதனைகளை எங்களால் புரிந்துகொள்ள முடிஞ்சது..
சஹானா : அக்கா சொன்னது கரெக்ட் தான்.. அக்காவை விட எனக்கு உங்க மேல ரொம்பவே கோபம் இருந்தது.. நீங்க செஞ்ச தப்புக்கு உங்க முகத்துல கூட முழிக்க கூடாதுன்னு தான் இருந்தேன்.. நீங்க செத்தாலும் உங்களுடைய மரணத்துக்கு கூட நான் வரக்கூடாதுன்னு இருந்தேன்.. என்ன இருந்தாலும் எங்க ரெண்டு பேரையும் பெத்தவங்க நீங்க.. ஏதோ புத்தி கெட்டு போய் தப்பு செஞ்சிட்டீங்க... சாய்பாபா காலமா உங்களுடைய நல்ல நடவடிக்கைகள் வைத்து தான் இந்த முடிவு எடுத்தோம்.. அப்பாவை பார்த்து அழுகிறது.. எப்பவுமே யோசிச்சுகிட்டே இருக்கிறது.. ஒழுங்கா சாப்பிடாம இருக்கிறது.. எப்பவுமே எங்கள பத்தி நெனச்சுக்கிட்டு இருக்கீங்க.. உங்க மனசுல அப்பா தான் இருக்காருன்னு நாங்க புரிஞ்சுகிட்டோம்.. அதான் இந்த ஏற்பாடு..
ராம் : நீங்க ரெண்டு பேரும் மனப்பூர்வமா சம்மதிக்கிறீங்களா இல்ல எனக்காக சம்மதிக்கிறீர்களா
ஸ்ரேயா சஹானா : மனப்பூர்வமா சம்மதிக்கிறோம் அப்பா.. உங்களுடைய சந்தோசமும் எங்களுக்கு முக்கியம்.. எங்களுக்காக இத்தனை வருஷம் வாழ்ந்தீங்க.. உங்க மனசுல என்ன இருக்குதுன்னு புரியாமலே நாங்க இருக்கோம்.. எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்.. முதல்ல அம்மாவுக்கு தாலி கட்டி கல்யாணம் பண்ணிக்கோங்க..
ஐயர் மந்திரம் ஓத.. மூன்று ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது..
பாசுவுக்கும் விஜிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது..
ஸ்ரேயா சஹானா விக்ரம் பாபு தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தைகள் பிறந்தது..
வாசு கம்பெனியை நன்றாக கற்றுக் கொண்டான்..
இரண்டு வருடங்கள் கழித்து வாசுவுக்கும் விஜிக்கும் திருமணம் நடந்தது.. அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்..
சுபம்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)