02-07-2025, 11:00 AM
(30-06-2025, 12:57 AM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் கண்ணன் தன் மனதில் உள்ள கடிதம் எழுதி ராதா கொடுத்து பின்னர் கோவில் சென்று பூ போட்டு அதிலும் ராதா மூலமாக அந்த பூவை எடுத்து சாமி சன்னதியில் தன் நினைத்ததை நிறைவேறும் என்று சொல்லியது கதையில் உயிரோட்டம் நிரம்பி நன்றாக உள்ளது. பின்னர் ராதா அந்த கடிதத்தில் என்ன இருப்பதை அறிய ஆவலுடன் இருந்து கண்ணன் நல்ல நேரம் பார்த்து பூஜை ரூமில் வைத்து படிக்க வைத்து தன் வெளியே காத்திருப்பது சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது
நண்பா, நீங்கள் பாராட்டிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது... இத்தகைய பாராட்டுக்கள் என்னை மேலும் வேகமா எழுத தூண்டுக்கிறது.. எனவே கூடிய விரைவில் அடுத்த பகுதியை பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்.
