26-06-2025, 07:20 PM
(This post was last modified: 26-06-2025, 07:22 PM by Latharaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஸோபாவில் என்னை இடித்துக்கொண்டு ரேணுகா உட்கார்ந்தாள்.
“என்னடா, அதுக்குள்ள கிளம்புறேன்னு சொல்ற..... இருந்துட்டு காலையில போகலாம்ல. நைட் உனக்கு ஸ்பெஷலா உனக்கு விருந்து வைக்கிறேன்”
ஏதோ பொடிவைத்து பேசியது மாதிரி இருந்தது..
“என்னது விருந்தா?”
“ஆமாடா நீ பண்ணுற ஹெல்ப்புக்கு, நைட்ல சிக்கன் மட்டன் செய்றேன். அதை சாப்பிட்டுட்டு கிளம்பலாம்” சொல்ல எனக்கோ இருப்பு கொள்ளவில்லை.
என் மனம் முழுவது பார்வதியின் ஞாபகம் தான்.
“இல்ல அக்கா, நிறையா படிக்கணும். நாளைக்கு எக்ஸாம் வேற இருக்கு. இன்னொரு நாளைக்கு வர்றேன்” தப்பித்துக்கொள்ள ஏதோவொன்னு சொன்னேன்.
அவளின் முகத்தில் ஏமாற்றம் அதிமுகமாவே தெரிந்தது.
“சரிடா, கொஞ்ச நேரம் உட்காரு. டீ வச்சு தர்றேன். அதுக்கப்புறம் கிளம்பலாம்” சொல்ல நான் சோபாவிலில் அப்படியே உட்கார்ந்தேன்.
ரேணுகாக்கவும் உள்ளே சென்றுவிட்டாள்.
அப்போது யாரோ ஒரு பெண் என்னை கடந்து, நான் உட்கார்ந்து இருப்பதை கூட லட்சியம் செய்யாமல் விறுவிறுவென ஒரு ரூமுக்குள் சென்று கதவை தாழிட்டாள்.
எனக்கோ திகைப்பு.
“என்ன வீட்டுல மாமியாரும், ரேணுகாக்காவும் ரெண்டு பேரு மட்டும் தான் இருக்கிறதா நினைச்சோம். இப்ப யாரோ ஒரு பொண்ணு திறந்த வீட்டுக்குள்ள ஏதோன்னு நுழைஞ்ச மாதிரி உள்ள போய் கதவை பூட்டிக்கிட்டாள். .....யாரா இருக்கும்..... சரி அக்காகிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்குவோம்னு” அப்படியே விட்டேன்.
ரேணுகா டீ கொண்டு வந்து கொடுத்தாள்.
அந்நேரம் சரியாக ரூமுக்குள் போன பெண் கையில் குளிப்பதற்கு டவலை எடுத்து கதவை திறந்து வெளியே வ,ர என் கண்களும் அவளின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்தன. ஒரு கணம் தான்...... எனக்கு மின்னல் வெட்டியது போல் ஆனது. ஏதோ அவளுக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம பந்தம்போல் மனதில் உணர்ந்தேன். ஆனால் அவளோ என்னைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக பார்வை பார்த்துவிட்டு பாத்ரூமுக்குள் போனாள். அவளை பற்றி அறிய மனம் துடித்தது.
“அக்கா இது யாருக்கா?.... நான் இங்க உட்கார்ந்து இருக்கேன் கண்டுக்காம, என்னனு கூட விசாரிக்காம ரூமுக்குள்ள போய்ட்டா?”
“அவளை விடுடா... வேற என்ன சொல்லு?”
“அக்கா, முதல்ல யாருன்னு சொல்லுக்கா?”
“ம்ம் அது என் வீட்டுக்காரரோட தங்கச்சி. என்னோட நாத்தனார்”
“என்னடா, அதுக்குள்ள கிளம்புறேன்னு சொல்ற..... இருந்துட்டு காலையில போகலாம்ல. நைட் உனக்கு ஸ்பெஷலா உனக்கு விருந்து வைக்கிறேன்”
ஏதோ பொடிவைத்து பேசியது மாதிரி இருந்தது..
“என்னது விருந்தா?”
“ஆமாடா நீ பண்ணுற ஹெல்ப்புக்கு, நைட்ல சிக்கன் மட்டன் செய்றேன். அதை சாப்பிட்டுட்டு கிளம்பலாம்” சொல்ல எனக்கோ இருப்பு கொள்ளவில்லை.
என் மனம் முழுவது பார்வதியின் ஞாபகம் தான்.
“இல்ல அக்கா, நிறையா படிக்கணும். நாளைக்கு எக்ஸாம் வேற இருக்கு. இன்னொரு நாளைக்கு வர்றேன்” தப்பித்துக்கொள்ள ஏதோவொன்னு சொன்னேன்.
அவளின் முகத்தில் ஏமாற்றம் அதிமுகமாவே தெரிந்தது.
“சரிடா, கொஞ்ச நேரம் உட்காரு. டீ வச்சு தர்றேன். அதுக்கப்புறம் கிளம்பலாம்” சொல்ல நான் சோபாவிலில் அப்படியே உட்கார்ந்தேன்.
ரேணுகாக்கவும் உள்ளே சென்றுவிட்டாள்.
அப்போது யாரோ ஒரு பெண் என்னை கடந்து, நான் உட்கார்ந்து இருப்பதை கூட லட்சியம் செய்யாமல் விறுவிறுவென ஒரு ரூமுக்குள் சென்று கதவை தாழிட்டாள்.
எனக்கோ திகைப்பு.
“என்ன வீட்டுல மாமியாரும், ரேணுகாக்காவும் ரெண்டு பேரு மட்டும் தான் இருக்கிறதா நினைச்சோம். இப்ப யாரோ ஒரு பொண்ணு திறந்த வீட்டுக்குள்ள ஏதோன்னு நுழைஞ்ச மாதிரி உள்ள போய் கதவை பூட்டிக்கிட்டாள். .....யாரா இருக்கும்..... சரி அக்காகிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்குவோம்னு” அப்படியே விட்டேன்.
ரேணுகா டீ கொண்டு வந்து கொடுத்தாள்.
அந்நேரம் சரியாக ரூமுக்குள் போன பெண் கையில் குளிப்பதற்கு டவலை எடுத்து கதவை திறந்து வெளியே வ,ர என் கண்களும் அவளின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்தன. ஒரு கணம் தான்...... எனக்கு மின்னல் வெட்டியது போல் ஆனது. ஏதோ அவளுக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம பந்தம்போல் மனதில் உணர்ந்தேன். ஆனால் அவளோ என்னைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக பார்வை பார்த்துவிட்டு பாத்ரூமுக்குள் போனாள். அவளை பற்றி அறிய மனம் துடித்தது.
“அக்கா இது யாருக்கா?.... நான் இங்க உட்கார்ந்து இருக்கேன் கண்டுக்காம, என்னனு கூட விசாரிக்காம ரூமுக்குள்ள போய்ட்டா?”
“அவளை விடுடா... வேற என்ன சொல்லு?”
“அக்கா, முதல்ல யாருன்னு சொல்லுக்கா?”
“ம்ம் அது என் வீட்டுக்காரரோட தங்கச்சி. என்னோட நாத்தனார்”
![[Image: FB-IMG-1750172829378.jpg]](https://i.ibb.co/cSXMXCmn/FB-IMG-1750172829378.jpg)