11-04-2025, 02:05 PM
(This post was last modified: 11-04-2025, 02:07 PM by Nandhinii Aaryan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(17-08-2023, 10:28 PM)Thiru93x Wrote: இந்த தளம் மிகவும் பிரபலமானது என்றும்.. எழுத்தாளர்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருக்கும் என்றும், சுதந்திரமாக கதை எழுத முடியும் என்றும் நிறைய பேர் பேசி கேள்விப்பட்டு இருக்கிறேன்.சுதந்திரம் சுத்தமாக இல்லை இந்த தளத்தில் கமெண்ட் பண்ணவே முடியவில்லை அப்படியே பண்ணினால் 1008 விமர்சனங்கள் & மெசெஜில் அவ்வளோ மோசமான வார்த்தைகள் அதனால் என்னுடைய கதையையும் பாதியில் நிறுத்தி விட்டேன்
ஆனால் கடந்த ஒருமாதமாக இங்கு கதை எழுதினாலும் அல்லது மற்றவர்களின் அப்டேட்களை பார்த்தாலும் அதில் கமேண்டு செய்பவர்கள் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவு.. அதிலும் கமேண்ட் செய்யும் பெண்களை இங்கு நான் பார்த்தே இல்லை.
திரும்ப திரும்ப சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கமேண்டும் உற்சாகமும் தருகிறார்கள். படிக்கும் மற்ற பல நபர்களிடம் இருந்து எந்தவகையான ஊக்கமும் உற்சாகமும் வருவது இல்லை.
இது நாளடைவில், இங்கு நன்கு கதை எழுதும், எழுதி வரும் எழுத்தாளர்களுக்கு ஆர்வத்தை கெடுத்து அவர்களது திறனை பாதிக்கும். இதனால் பலர் தொடர்ந்து கதை எழுதாமல் அல்லது கதையை முடிக்காமல் விலகவும் வாய்ப்பு உண்டு.
அதனால் வாசகர்கள் ஆகிய நீங்கள் உங்களால் முடிந்த அளவுக்கு கமேண்ட் செய்யுங்கள். அந்த கதையின் கதாபாத்திர வடிவமைப்பு, கதையின் போக்கு இதை எல்லாம் பற்றி பேசுங்கள். அது இன்னும் இந்த தளம் உயிர்ப்புடன் இருக்க உதவும். பல மணி நேரம் செலவிட்டு நல்ல கதை எழுதும் பல எழுத்தாளர்களுக்கு உங்களது கருத்துரைகள் மூலமாக ஊக்கத்தை தாருங்கள்.
நன்றி.. வணக்கம்.