29-06-2019, 06:09 PM
இங்கிலாந்துடன் போட்டி: இந்தியாவுக்கு ஆதரவு தரும் பாகிஸ்தான் ரசிகர்கள்
இந்தியா, பாக் போட்டியின் போது ரசிகர்கள் : படம் உதவி ட்விட்டர்
இங்கிலாந்து அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு ஆதரவு அளிப்போம் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகக் கோப்பைப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டிஇருக்கிறது. அரையிறுதிக்குள் செல்லும் 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்திய அணி 5 வெற்றிகளுடன் 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து அணி 7 போட்டிகளில் விளையாடி 3 தோல்விகள், 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் இருக்கிறது. அரையிறுதிக்கு தகுதிபெற்ற இந்தியா, நியூஸிலாந்து அணிகளுடனான ஆட்டத்தில் வெற்றி அவசியமாகும்.
நாசர் ஹூசைன் : படம் உதவி ஐசிசி
பரிமிங்ஹாமில் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் இங்கிலாந்து தோற்றால், அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துவிடும். அதேசமயம், 7 புள்ளிகளுடன் இருக்கும் பாகிஸ்தான் தான் அடுத்து மோத இருக்கும் வங்கேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால், அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
இந்த சூழலில் இங்கிலாந்து, இந்தியா இடையிலான போட்டியில் பர்மிங்ஹாமில் உள்ள பாகிஸ்தான் ரசிகர்கள் யாருக்கு ஆதரவு தருவார்கள் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.
நாசர் ஹூசைன் இந்தியாவில் பிறந்தாலும், இங்கிலாந்தில் செட்டில் ஆகிவிட்டதால், இங்கிலாந்துக்கே ஆதரவு தெரிவிப்பேன் என்று தெரிவித்தார்.
![[Image: fanPNG]](https://tamil.thehindu.com/incoming/article28197338.ece/alternates/FREE_630/fanPNG)
ஆனால், ட்விட்டரில் நாசர் ஹூசைன் கேட்ட கேள்விக்கு இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவிப்போம் என பாகிஸ்தான் ரசிகர்கள் தெரிவிப்பார்கள் என எதிர்பார்த்தார். ஆனால், பதில் அளித்த பாகிஸ்தான் ரசிகர்கள் எங்களின் அண்டைநாடு இந்தியாதான் வெற்றி பெற வேண்டும். இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.
![[Image: ind-pakPNG]](https://tamil.thehindu.com/incoming/article28197337.ece/alternates/FREE_300/ind-pakPNG)
ட்விட்டரில் ஒருவர் " நாங்கள் எங்கள் அண்டைநாட்டுக்கே ஆதரவு தெரிவிப்போம். இறைவன் இந்தியாவை வெல்ல ஆசிர்வதிக்கட்டும் " எனத் தெரிவித்துள்ளார்.
![[Image: fnsPNG]](https://tamil.thehindu.com/incoming/article28197339.ece/alternates/FREE_630/fnsPNG)
மற்றொருவர " ஞாயிற்றுக்கிழமை நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிப்பது மட்டுமின்றி இந்திய ஆடையை அணிந்து ஆதரவு தெரிவிப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.
நாசர் ஹூசனை ட்விட்டுக்கு அளித்த பதலில் சிலர் " இந்தியா எங்கள் அண்டை நாடு அவர்களுக்குத்தான் ஆதரவு. கிரிக்கெட் மீது தீரா ஆர்வம் கொண்ட அவர்களுக்குத்தான் ஆதரவு" எனத் தெரிவித்தனர்.
இங்கிலாந்து அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு ஆதரவு அளிப்போம் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகக் கோப்பைப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டிஇருக்கிறது. அரையிறுதிக்குள் செல்லும் 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்திய அணி 5 வெற்றிகளுடன் 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து அணி 7 போட்டிகளில் விளையாடி 3 தோல்விகள், 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் இருக்கிறது. அரையிறுதிக்கு தகுதிபெற்ற இந்தியா, நியூஸிலாந்து அணிகளுடனான ஆட்டத்தில் வெற்றி அவசியமாகும்.
பரிமிங்ஹாமில் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் இங்கிலாந்து தோற்றால், அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துவிடும். அதேசமயம், 7 புள்ளிகளுடன் இருக்கும் பாகிஸ்தான் தான் அடுத்து மோத இருக்கும் வங்கேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால், அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
இந்த சூழலில் இங்கிலாந்து, இந்தியா இடையிலான போட்டியில் பர்மிங்ஹாமில் உள்ள பாகிஸ்தான் ரசிகர்கள் யாருக்கு ஆதரவு தருவார்கள் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.
நாசர் ஹூசைன் இந்தியாவில் பிறந்தாலும், இங்கிலாந்தில் செட்டில் ஆகிவிட்டதால், இங்கிலாந்துக்கே ஆதரவு தெரிவிப்பேன் என்று தெரிவித்தார்.
ஆனால், ட்விட்டரில் நாசர் ஹூசைன் கேட்ட கேள்விக்கு இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவிப்போம் என பாகிஸ்தான் ரசிகர்கள் தெரிவிப்பார்கள் என எதிர்பார்த்தார். ஆனால், பதில் அளித்த பாகிஸ்தான் ரசிகர்கள் எங்களின் அண்டைநாடு இந்தியாதான் வெற்றி பெற வேண்டும். இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டரில் ஒருவர் " நாங்கள் எங்கள் அண்டைநாட்டுக்கே ஆதரவு தெரிவிப்போம். இறைவன் இந்தியாவை வெல்ல ஆசிர்வதிக்கட்டும் " எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர " ஞாயிற்றுக்கிழமை நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிப்பது மட்டுமின்றி இந்திய ஆடையை அணிந்து ஆதரவு தெரிவிப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.
நாசர் ஹூசனை ட்விட்டுக்கு அளித்த பதலில் சிலர் " இந்தியா எங்கள் அண்டை நாடு அவர்களுக்குத்தான் ஆதரவு. கிரிக்கெட் மீது தீரா ஆர்வம் கொண்ட அவர்களுக்குத்தான் ஆதரவு" எனத் தெரிவித்தனர்.
first 5 lakhs viewed thread tamil