17-03-2025, 01:11 PM
(This post was last modified: 9 hours ago by David2025. Edited 3 times in total. Edited 3 times in total.)
விவேக் எதிலிருந்து ஆரம்பிப்பது என்று தெரியாமல் திருதிருவென அவளைப் பார்க்க, அவளோ அவனைப் பார்த்ததும் சட்டென கண்களை உருட்டிச் சுற்றுமுற்றிப் பார்த்தாள். பத்து நிமிடங்கள் மௌனத்திலேயே கரைந்தன.
ரேகா: "என்ன இவன் எதுவும் பேச மாட்டேங்கிறான்? ஆர்டர் பண்ணது வர்றதுக்கு எப்படியும் குறைந்தது இருபது நிமிஷம் ஆகும்..." என மௌனத்தைக் கலைத்தாள்.
விவேக்: "ஓ! அப்படியா?" என்று மட்டும் சொல்லிவிட்டு மீண்டும் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.
ரேகாவுக்குக் கடுப்பு ஏறியது. "என்ன நொப்படியா இது! பேசணும்னு சொல்லிட்டுப் பேசாம, அங்கேயும் இங்கேயும் பார்த்துட்டே இருக்கீங்க... இன்னைக்குள்ள என்னன்னு சொல்லுவீங்களா இல்லையா?" என நக்கலாகக் கேட்டாள்.
விவேக் தடுமாறிய குரலில், "உன்னை... யாராவது இதுவரை ப்ரோபோஸ் பண்ணி இருக்காங்களா?" எனத் தத்தித் தத்தி வார்த்தைகளை உதிர்த்தான்.
![[Image: ad54f241-4b01-451c-a5d1-ddfbdb55eeae.jpg]](https://i.ibb.co/PvFb1Dkq/ad54f241-4b01-451c-a5d1-ddfbdb55eeae.jpg)
ரேகா முறைத்துக்கொண்டே, "வாட்? நோ நோப்! இதுவரை யாரும் இல்லை... ஆமா நீ ஏன் அதைக் கேட்கிற?" என்றாள். அந்தப் பார்வை விவேக்கை முறைப்பது போலத் தோன்றினாலும், அவளுக்குள் ஒரு சின்ன ஆர்வம் துளிர்விடுவதை அவன் கவனித்தான்.
விவேக் ஒரு நீண்ட மூச்சை இழுத்துவிட்டு, "எனக்கு... உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு!" எனச் சட்டெனச் சொல்லிவிட்டு முகம் முழுக்க வெட்கத்தோடு அமர்ந்திருந்தான்.
ரேகா இதை எதிர்பார்த்திருந்தாலும், அவன் இவ்வளவு வெளிப்படையாகச் சொன்னதில் ஒரு நிமிடம் அமைதியானாள். விவேக் பதட்டமாக, "ரேகா... ஏன் அமைதியா இருக்கீங்க? ஒருவேளை கோவமா இருக்கீங்களா? பொறுமையா சொல்லுங்க," என்றான்.
ரேகா கைகளைக் கட்டிக்கொண்டு, "இல்ல... உங்களுக்கு இந்த சைட் அடிக்கிறது, பின்னாடி ஃபாலோ பண்றது, ஃபேஸ்புக்ல பிரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுக்குறது, அப்புறம் நம்பர் வாங்கி மணிக்கணக்கா போன்ல பேசி ஐஸ் வைக்கிறது... இதெல்லாம் தெரியாதோ?" எனச் சிரிப்புடன் கேட்டாள்.
"அதெல்லாம் எதுக்குங்க? எனக்கு அதெல்லாம் தெரியாது," என விவேக் தன் அப்பாவித்தனத்தை அப்படியே கொட்டினான்.
"என்னமோ உங்க அம்மா சொன்னீங்க... அது என்ன?" என ரேகா கேட்க, விவேக் உற்சாகமானான். "ஆமா... உங்ககிட்ட சொல்றதுக்கு முன்னாடியே எங்க அம்மாகிட்ட சொல்லிட்டேன். அவங்களுக்கு ஓகே! என் தங்கைக்கும் ஓகே!" என ஒரே மூச்சில் சொல்லி முடித்தான்.
"ஓஹ்... அப்போ நான் தான் கடைசியா இருக்கேனா?" என ரேகா கேட்க, விவேக் மூக்கைத் தடவிக்கொண்டு, "ம்ம்... ஆமா," என்றான்.
ரேகா மெல்லத் தலைகுனிந்து சிரித்தாள். சில நொடிகள் அமைதிக்குப் பிறகு, "விவேக்... எனக்கு இந்தப் பார்த்த உடனே வர்ற காதல்ல எல்லாம் நம்பிக்கை இல்லை. நட்பு காதலா மாறும் போதுதான் புரிதல் அதிகமாக இருக்கும்னு நினைக்கிற பொண்ணு நான். இந்நேரம் நான் என்ன சொல்ல வரேன்னு கெஸ் பண்ணிருப்பீங்க... ஐ அம் சாரி விவேக், நம்ம ரெண்டு பேருக்கும் இது செட் ஆகாது!"
ரேகா 'சாரி' சொன்னதும், விவேக் முகத்தில் ஓராயிரம் உணர்ச்சிகள் மின்னல் போல மாறி மறைந்தன. அதுவரை இருந்த மகிழ்ச்சி போய், குழப்பமும் அதிர்ச்சியும் கைகோர்க்க, அப்படியே சோகத்தில் ஆழ்ந்தான்.
"என்ன ரேகா... இப்படித் திடீர்னு சொல்லிட்ட?" என விவேக் தழுதழுத்த குரலில் கேட்டான்.
![[Image: 6de5f4de-1e36-4b92-b05f-3705a34e5d14.jpg]](https://i.ibb.co/FLmDZY53/6de5f4de-1e36-4b92-b05f-3705a34e5d14.jpg)
"ஆமா விவேக். எங்க குடும்பம் ரொம்ப எதார்த்தமானது. எங்களுக்குள்ள எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. வீட்ல நானும், அப்பாவும், அம்மாவும், அப்புறம் மலேசியாவில் இருக்குற என் அண்ணா-அண்ணி எல்லாரும் ரொம்ப ஜாலியா இருப்போம். நான் தான் வீட்ல எல்லோருக்கும் செல்லம். ஆனா, உன் குடும்பம் அப்படியே வேற மாதிரி இருக்குமோன்னு எனக்குப் பயமா இருக்கு. உங்கக் குடும்பக் கலாச்சாரம் எங்கக் குடும்பத்துக்கு செட் ஆகுமான்னு தெரியல... மத்தபடி உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு," என்றாள் ரேகா.
விவேக் உற்சாகமாக, "அதுக்கு என்னங்க... நம்ம ரெண்டு குடும்பமும் ஒண்ணா பழகலாம். ரெண்டு குடும்பத்து மனசும் ஒத்துப்போச்சுன்னா நாம கல்யாணம் பண்ணிக்கலாம். உங்களுக்கு ஓகேயா?" எனக் கேட்க, ரேகா ஒரு நிமிடம் யோசித்தாள்.
"நீங்க சொல்றதும் சரிதான்!" என அவள் சொல்ல, விவேக் முகத்தில் மீண்டும் மகிழ்ச்சி வழிய ஆரம்பித்தது. 'அப்பாடா... இன்னும் சான்ஸ் இருக்கு' என அவனுக்குள் ஒரு குதூகலம் பிறந்தது.
ரேகா புன்னகையுடன், "அப்படின்னா... லெட்ஸ் பீ பிரண்ட்ஸ் ! நம்ம குடும்பங்களும் ஓகேன்னு சொல்லிட்டா, அதுக்கப்புறம் கல்யாணத்தைப் பத்திப் பார்க்கலாம்," என்றாள்.
அவள் சொல்லி முடிக்கவும், நேரம் சரியாக ஆர்டர் செய்த பிட்சா டேபிளுக்கு வரவும் சரியாக இருந்தது. அடுத்த இருபது நிமிடங்கள் அந்தப் பிட்சாவைக் காலி செய்துகொண்டே இருவரும் நிறையப் பேசினார்கள். அவன் பஸ் ஸ்டாண்டில் அவளைப் பார்த்தது, அவள் இவனை 'அமுல் பேபி' என நினைத்தது எனப் பல நினைவுகளைப் பரிமாறிக்கொண்டனர். சாப்பிட்டு முடித்ததும் பில் பே செய்துவிட்டு, ரேகாவிடம் 'பாய்' சொல்லிவிட்டுப் பெரிய வெற்றியோடு வீடு திரும்பினான் விவேக்.
அன்று இரவு, இந்த லவ் மேட்டரைப் பற்றி அம்மாவிடம் பேசி ஒரு முடிவெடுக்க விவேக் முடிவு செய்தான். "ம்மா, ரொம்ப முக்கியமான விஷயம் பேசணும்," என்று சொல்லி, வைதேகியை பத்து நிமிடம் சோபாவில் அமர வைத்தான். ஆனால் உட்கார வைத்தானே தவிர, அவனிடம் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. வெட்கத்தோடு தரையை நகத்தால் சொரண்டிக் கொண்டிருந்தான்.
வைதேகி கைகளைக் கட்டிக்கொண்டு, "அடேய்! என்னடா பொம்பள பிள்ளை மாதிரி தரையைச் சொரண்டிக்கிட்டு இருக்க? ஆம்பள பையனா இருந்தா தைரியமா அம்மாவிடம் வந்து விஷயத்தைச் சொல்லணும்டா!" என்றாள்.
[b]
[/b]
விவேக் செல்லமாகச் சிணுங்கிக்கொண்டு, "ம்மா... ஒரு சந்தோஷமான விஷயத்தைப் பத்திதான் உன்கிட்ட சொல்ல வந்தேன்," என்றான்.
வைதேகி ஒரு குறுகிய சிரிப்புடன், "என்னடா, ஒருவேளை வயசுக்கு வந்துட்டியா?" எனச் சொல்லிக் கொல்லெனச் சிரித்தாள்.
![[Image: 518b0bce-aac3-45f9-a5ff-d0182a0d5ff9.jpg]](https://i.ibb.co/gZcN6nzs/518b0bce-aac3-45f9-a5ff-d0182a0d5ff9.jpg)
விவேக் முகம் அப்படியே சுருங்கிப் போய், "பையன் ஒரு நல்ல விஷயத்தைச் சொல்லலாம்னு வந்தா நீ என்னடான்னா இப்படி நக்கல் பண்ற! சரி போ, நான் சொல்லல!" என்று முறைத்தான்.
வைதேகி கண்களை உருட்டி, "டேய்! வந்து அரை மணி நேரமாச்சு... இதுக்கு மேல என் பொறுமையைச் சோதிக்காத! வந்த விஷயத்தைச் சொல்லு," என்று அதட்டினாள்.
அம்மா இன்னும் எதையாவது சொல்லி அசிங்கப்படுத்திவிடுவாளோ என்ற பயத்தில், விவேக் மெல்ல ஆனால் உற்சாகத்துடன் சொன்னான்... "ம்மா... ரேகா... ரேகா என் லவ்வை அக்சப்ட் பண்ணிட்டா ம்மா! ஆனா ஒரு கண்டிஷன் போட்டிருக்கா. அதுக்கு நீயும் திவ்யாவும் ஓகேன்னு சொல்லணும்."
வைதேகி நக்கலாகத் தலையை ஆட்டிக்கொண்டு, "முதல்ல என்ன கண்டிஷன்ன்னு சொல்லுடா! அப்புறம் அந்தப் பொண்ணு வேணுமா வேண்டாமான்னு நான் சொல்றேன். இப்படியெல்லாம் ஒரு அம்மா யாருக்கும் கிடைக்க மாட்டாங்க, ஒழுங்கா ஓவரா சீன் போடாம கண்டிஷனைச் சொல்லு!" என்றாள்.
விவேக் அவசரமாகத் தன் தரப்பு நியாயத்தைச் சொல்லத் தொடங்கினான். "ரேகா, அவங்க குடும்பத்தோட நம்ம குடும்பமும் ஒண்ணா பேசிப் பழகணும்னு சொல்லுறா ம்மா. ரெண்டு குடும்பமும் ஒத்துப்போனா தான் கல்யாணம்னு அவ தெளிவா இருக்கா."
வைதேகி முகம் சற்றே யோசனையில் சுருங்கியது. "பரவாயில்லையே... அந்தப் பொண்ணு விவரமாத்தான் சொல்லியிருக்கா. உனக்கும் அவளை ரொம்பப் பிடிச்சுப்போச்சு, அவ சொன்னதுலயும் ஒரு நியாயம் இருக்கு. இதுல என்ன இப்போ?"
விவேக் சந்தேகத்தோடு, "அதுலதான் ம்மா ஒரு சின்ன சிக்கல் இருக்கு," என இழுத்தான்.
"என்னடா பிரச்சனை? உங்க ரெண்டு பேரையும் எங்களுக்குப் பிடிச்சிருக்கு, பழகறதுக்கும் சரின்னு சொல்லிட்டேன். இதுக்கு அப்புறம் என்ன சிக்கல்?" என வைதேகி வினவ, விவேக் மெல்ல விஷயத்தை உடைத்தான்.
"நீங்க நினைக்கிற மாதிரி சும்மா பார்த்துட்டு வர்றது இல்ல ம்மா. நம்ம குடும்பத்தோட அவங்க வீட்ல கொஞ்ச நாள் தங்கிப் பழகணும்னு சொல்லுறாங்க. முக்கியமா அப்பா , நீயும் தங்கச்சியும் அவங்க வீட்ல தங்கிப் பழகினா தான் அந்தப் பொண்ணுக்குத் திருப்தியாகும் போல," என்று அச்சத்தோடு விவேக் சொல்லி முடிக்க, வைதேகி ஒரு நிமிடம் அமைதியானாள்.
பிறகு ஒரு மெல்லிய புன்னகையோடு, "இவ்வளவுதானா? நான் வேற என்னமோன்னு பயந்துட்டேன்! நீ எப்போன்னு சொல்லுடா, உன் தங்கச்சியைக் கூட்டிட்டு நான் அவங்க வீட்டுக்குக் கிளம்பிடுறேன். உன் சந்தோஷத்தை விட எங்களுக்கு வேற என்ன வேணும்? போதுமா?" என்றாள்.
![[Image: 93a28b4c-c4f4-4e75-98f1-3b6e30c04e9c.jpg]](https://i.ibb.co/TMdC04N6/93a28b4c-c4f4-4e75-98f1-3b6e30c04e9c.jpg)
விவேக் கண்களில் கண்ணீர் மல்க, "ம்மா... ரொம்ப சந்தோஷம் ம்மா! ஒரு குடும்பத் தலைவியா இருந்தா உன்னைப் போலத்தான் இருக்கணும். எவ்வளவு பெரிய முடிவை ஒரு நிமிஷத்துல எடுத்துட்டே... அம்மான்னா அம்மாதான்!" என்று உருகினான்.
வைதேகி அவன் தலையை மெதுவாகத் தட்டி, "இதுக்கு ஏன்டா கண் கலங்குற? எனக்கு உன்னோட வாழ்க்கை தான் முக்கியம். உனக்குப் பிடிச்ச பொண்ணு நம்ம வீட்டுக்கு வரணும்னா இதைக் கூடச் செய்ய மாட்டேனா?" என்று பாசமாய் அணைத்துக்கொண்டாள்.
ரேகா: "என்ன இவன் எதுவும் பேச மாட்டேங்கிறான்? ஆர்டர் பண்ணது வர்றதுக்கு எப்படியும் குறைந்தது இருபது நிமிஷம் ஆகும்..." என மௌனத்தைக் கலைத்தாள்.
விவேக்: "ஓ! அப்படியா?" என்று மட்டும் சொல்லிவிட்டு மீண்டும் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.
ரேகாவுக்குக் கடுப்பு ஏறியது. "என்ன நொப்படியா இது! பேசணும்னு சொல்லிட்டுப் பேசாம, அங்கேயும் இங்கேயும் பார்த்துட்டே இருக்கீங்க... இன்னைக்குள்ள என்னன்னு சொல்லுவீங்களா இல்லையா?" என நக்கலாகக் கேட்டாள்.
விவேக் தடுமாறிய குரலில், "உன்னை... யாராவது இதுவரை ப்ரோபோஸ் பண்ணி இருக்காங்களா?" எனத் தத்தித் தத்தி வார்த்தைகளை உதிர்த்தான்.
![[Image: ad54f241-4b01-451c-a5d1-ddfbdb55eeae.jpg]](https://i.ibb.co/PvFb1Dkq/ad54f241-4b01-451c-a5d1-ddfbdb55eeae.jpg)
ரேகா முறைத்துக்கொண்டே, "வாட்? நோ நோப்! இதுவரை யாரும் இல்லை... ஆமா நீ ஏன் அதைக் கேட்கிற?" என்றாள். அந்தப் பார்வை விவேக்கை முறைப்பது போலத் தோன்றினாலும், அவளுக்குள் ஒரு சின்ன ஆர்வம் துளிர்விடுவதை அவன் கவனித்தான்.
விவேக் ஒரு நீண்ட மூச்சை இழுத்துவிட்டு, "எனக்கு... உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு!" எனச் சட்டெனச் சொல்லிவிட்டு முகம் முழுக்க வெட்கத்தோடு அமர்ந்திருந்தான்.
ரேகா இதை எதிர்பார்த்திருந்தாலும், அவன் இவ்வளவு வெளிப்படையாகச் சொன்னதில் ஒரு நிமிடம் அமைதியானாள். விவேக் பதட்டமாக, "ரேகா... ஏன் அமைதியா இருக்கீங்க? ஒருவேளை கோவமா இருக்கீங்களா? பொறுமையா சொல்லுங்க," என்றான்.
ரேகா கைகளைக் கட்டிக்கொண்டு, "இல்ல... உங்களுக்கு இந்த சைட் அடிக்கிறது, பின்னாடி ஃபாலோ பண்றது, ஃபேஸ்புக்ல பிரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுக்குறது, அப்புறம் நம்பர் வாங்கி மணிக்கணக்கா போன்ல பேசி ஐஸ் வைக்கிறது... இதெல்லாம் தெரியாதோ?" எனச் சிரிப்புடன் கேட்டாள்.
"அதெல்லாம் எதுக்குங்க? எனக்கு அதெல்லாம் தெரியாது," என விவேக் தன் அப்பாவித்தனத்தை அப்படியே கொட்டினான்.
"என்னமோ உங்க அம்மா சொன்னீங்க... அது என்ன?" என ரேகா கேட்க, விவேக் உற்சாகமானான். "ஆமா... உங்ககிட்ட சொல்றதுக்கு முன்னாடியே எங்க அம்மாகிட்ட சொல்லிட்டேன். அவங்களுக்கு ஓகே! என் தங்கைக்கும் ஓகே!" என ஒரே மூச்சில் சொல்லி முடித்தான்.
"ஓஹ்... அப்போ நான் தான் கடைசியா இருக்கேனா?" என ரேகா கேட்க, விவேக் மூக்கைத் தடவிக்கொண்டு, "ம்ம்... ஆமா," என்றான்.
ரேகா மெல்லத் தலைகுனிந்து சிரித்தாள். சில நொடிகள் அமைதிக்குப் பிறகு, "விவேக்... எனக்கு இந்தப் பார்த்த உடனே வர்ற காதல்ல எல்லாம் நம்பிக்கை இல்லை. நட்பு காதலா மாறும் போதுதான் புரிதல் அதிகமாக இருக்கும்னு நினைக்கிற பொண்ணு நான். இந்நேரம் நான் என்ன சொல்ல வரேன்னு கெஸ் பண்ணிருப்பீங்க... ஐ அம் சாரி விவேக், நம்ம ரெண்டு பேருக்கும் இது செட் ஆகாது!"
ரேகா 'சாரி' சொன்னதும், விவேக் முகத்தில் ஓராயிரம் உணர்ச்சிகள் மின்னல் போல மாறி மறைந்தன. அதுவரை இருந்த மகிழ்ச்சி போய், குழப்பமும் அதிர்ச்சியும் கைகோர்க்க, அப்படியே சோகத்தில் ஆழ்ந்தான்.
"என்ன ரேகா... இப்படித் திடீர்னு சொல்லிட்ட?" என விவேக் தழுதழுத்த குரலில் கேட்டான்.
![[Image: 6de5f4de-1e36-4b92-b05f-3705a34e5d14.jpg]](https://i.ibb.co/FLmDZY53/6de5f4de-1e36-4b92-b05f-3705a34e5d14.jpg)
"ஆமா விவேக். எங்க குடும்பம் ரொம்ப எதார்த்தமானது. எங்களுக்குள்ள எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. வீட்ல நானும், அப்பாவும், அம்மாவும், அப்புறம் மலேசியாவில் இருக்குற என் அண்ணா-அண்ணி எல்லாரும் ரொம்ப ஜாலியா இருப்போம். நான் தான் வீட்ல எல்லோருக்கும் செல்லம். ஆனா, உன் குடும்பம் அப்படியே வேற மாதிரி இருக்குமோன்னு எனக்குப் பயமா இருக்கு. உங்கக் குடும்பக் கலாச்சாரம் எங்கக் குடும்பத்துக்கு செட் ஆகுமான்னு தெரியல... மத்தபடி உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு," என்றாள் ரேகா.
விவேக் உற்சாகமாக, "அதுக்கு என்னங்க... நம்ம ரெண்டு குடும்பமும் ஒண்ணா பழகலாம். ரெண்டு குடும்பத்து மனசும் ஒத்துப்போச்சுன்னா நாம கல்யாணம் பண்ணிக்கலாம். உங்களுக்கு ஓகேயா?" எனக் கேட்க, ரேகா ஒரு நிமிடம் யோசித்தாள்.
"நீங்க சொல்றதும் சரிதான்!" என அவள் சொல்ல, விவேக் முகத்தில் மீண்டும் மகிழ்ச்சி வழிய ஆரம்பித்தது. 'அப்பாடா... இன்னும் சான்ஸ் இருக்கு' என அவனுக்குள் ஒரு குதூகலம் பிறந்தது.
ரேகா புன்னகையுடன், "அப்படின்னா... லெட்ஸ் பீ பிரண்ட்ஸ் ! நம்ம குடும்பங்களும் ஓகேன்னு சொல்லிட்டா, அதுக்கப்புறம் கல்யாணத்தைப் பத்திப் பார்க்கலாம்," என்றாள்.
அவள் சொல்லி முடிக்கவும், நேரம் சரியாக ஆர்டர் செய்த பிட்சா டேபிளுக்கு வரவும் சரியாக இருந்தது. அடுத்த இருபது நிமிடங்கள் அந்தப் பிட்சாவைக் காலி செய்துகொண்டே இருவரும் நிறையப் பேசினார்கள். அவன் பஸ் ஸ்டாண்டில் அவளைப் பார்த்தது, அவள் இவனை 'அமுல் பேபி' என நினைத்தது எனப் பல நினைவுகளைப் பரிமாறிக்கொண்டனர். சாப்பிட்டு முடித்ததும் பில் பே செய்துவிட்டு, ரேகாவிடம் 'பாய்' சொல்லிவிட்டுப் பெரிய வெற்றியோடு வீடு திரும்பினான் விவேக்.
அன்று இரவு, இந்த லவ் மேட்டரைப் பற்றி அம்மாவிடம் பேசி ஒரு முடிவெடுக்க விவேக் முடிவு செய்தான். "ம்மா, ரொம்ப முக்கியமான விஷயம் பேசணும்," என்று சொல்லி, வைதேகியை பத்து நிமிடம் சோபாவில் அமர வைத்தான். ஆனால் உட்கார வைத்தானே தவிர, அவனிடம் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. வெட்கத்தோடு தரையை நகத்தால் சொரண்டிக் கொண்டிருந்தான்.
வைதேகி கைகளைக் கட்டிக்கொண்டு, "அடேய்! என்னடா பொம்பள பிள்ளை மாதிரி தரையைச் சொரண்டிக்கிட்டு இருக்க? ஆம்பள பையனா இருந்தா தைரியமா அம்மாவிடம் வந்து விஷயத்தைச் சொல்லணும்டா!" என்றாள்.
[b]
[/b]விவேக் செல்லமாகச் சிணுங்கிக்கொண்டு, "ம்மா... ஒரு சந்தோஷமான விஷயத்தைப் பத்திதான் உன்கிட்ட சொல்ல வந்தேன்," என்றான்.
வைதேகி ஒரு குறுகிய சிரிப்புடன், "என்னடா, ஒருவேளை வயசுக்கு வந்துட்டியா?" எனச் சொல்லிக் கொல்லெனச் சிரித்தாள்.
![[Image: 518b0bce-aac3-45f9-a5ff-d0182a0d5ff9.jpg]](https://i.ibb.co/gZcN6nzs/518b0bce-aac3-45f9-a5ff-d0182a0d5ff9.jpg)
விவேக் முகம் அப்படியே சுருங்கிப் போய், "பையன் ஒரு நல்ல விஷயத்தைச் சொல்லலாம்னு வந்தா நீ என்னடான்னா இப்படி நக்கல் பண்ற! சரி போ, நான் சொல்லல!" என்று முறைத்தான்.
வைதேகி கண்களை உருட்டி, "டேய்! வந்து அரை மணி நேரமாச்சு... இதுக்கு மேல என் பொறுமையைச் சோதிக்காத! வந்த விஷயத்தைச் சொல்லு," என்று அதட்டினாள்.
அம்மா இன்னும் எதையாவது சொல்லி அசிங்கப்படுத்திவிடுவாளோ என்ற பயத்தில், விவேக் மெல்ல ஆனால் உற்சாகத்துடன் சொன்னான்... "ம்மா... ரேகா... ரேகா என் லவ்வை அக்சப்ட் பண்ணிட்டா ம்மா! ஆனா ஒரு கண்டிஷன் போட்டிருக்கா. அதுக்கு நீயும் திவ்யாவும் ஓகேன்னு சொல்லணும்."
வைதேகி நக்கலாகத் தலையை ஆட்டிக்கொண்டு, "முதல்ல என்ன கண்டிஷன்ன்னு சொல்லுடா! அப்புறம் அந்தப் பொண்ணு வேணுமா வேண்டாமான்னு நான் சொல்றேன். இப்படியெல்லாம் ஒரு அம்மா யாருக்கும் கிடைக்க மாட்டாங்க, ஒழுங்கா ஓவரா சீன் போடாம கண்டிஷனைச் சொல்லு!" என்றாள்.
விவேக் அவசரமாகத் தன் தரப்பு நியாயத்தைச் சொல்லத் தொடங்கினான். "ரேகா, அவங்க குடும்பத்தோட நம்ம குடும்பமும் ஒண்ணா பேசிப் பழகணும்னு சொல்லுறா ம்மா. ரெண்டு குடும்பமும் ஒத்துப்போனா தான் கல்யாணம்னு அவ தெளிவா இருக்கா."
வைதேகி முகம் சற்றே யோசனையில் சுருங்கியது. "பரவாயில்லையே... அந்தப் பொண்ணு விவரமாத்தான் சொல்லியிருக்கா. உனக்கும் அவளை ரொம்பப் பிடிச்சுப்போச்சு, அவ சொன்னதுலயும் ஒரு நியாயம் இருக்கு. இதுல என்ன இப்போ?"
விவேக் சந்தேகத்தோடு, "அதுலதான் ம்மா ஒரு சின்ன சிக்கல் இருக்கு," என இழுத்தான்.
"என்னடா பிரச்சனை? உங்க ரெண்டு பேரையும் எங்களுக்குப் பிடிச்சிருக்கு, பழகறதுக்கும் சரின்னு சொல்லிட்டேன். இதுக்கு அப்புறம் என்ன சிக்கல்?" என வைதேகி வினவ, விவேக் மெல்ல விஷயத்தை உடைத்தான்.
"நீங்க நினைக்கிற மாதிரி சும்மா பார்த்துட்டு வர்றது இல்ல ம்மா. நம்ம குடும்பத்தோட அவங்க வீட்ல கொஞ்ச நாள் தங்கிப் பழகணும்னு சொல்லுறாங்க. முக்கியமா அப்பா , நீயும் தங்கச்சியும் அவங்க வீட்ல தங்கிப் பழகினா தான் அந்தப் பொண்ணுக்குத் திருப்தியாகும் போல," என்று அச்சத்தோடு விவேக் சொல்லி முடிக்க, வைதேகி ஒரு நிமிடம் அமைதியானாள்.
பிறகு ஒரு மெல்லிய புன்னகையோடு, "இவ்வளவுதானா? நான் வேற என்னமோன்னு பயந்துட்டேன்! நீ எப்போன்னு சொல்லுடா, உன் தங்கச்சியைக் கூட்டிட்டு நான் அவங்க வீட்டுக்குக் கிளம்பிடுறேன். உன் சந்தோஷத்தை விட எங்களுக்கு வேற என்ன வேணும்? போதுமா?" என்றாள்.
![[Image: 93a28b4c-c4f4-4e75-98f1-3b6e30c04e9c.jpg]](https://i.ibb.co/TMdC04N6/93a28b4c-c4f4-4e75-98f1-3b6e30c04e9c.jpg)
விவேக் கண்களில் கண்ணீர் மல்க, "ம்மா... ரொம்ப சந்தோஷம் ம்மா! ஒரு குடும்பத் தலைவியா இருந்தா உன்னைப் போலத்தான் இருக்கணும். எவ்வளவு பெரிய முடிவை ஒரு நிமிஷத்துல எடுத்துட்டே... அம்மான்னா அம்மாதான்!" என்று உருகினான்.
வைதேகி அவன் தலையை மெதுவாகத் தட்டி, "இதுக்கு ஏன்டா கண் கலங்குற? எனக்கு உன்னோட வாழ்க்கை தான் முக்கியம். உனக்குப் பிடிச்ச பொண்ணு நம்ம வீட்டுக்கு வரணும்னா இதைக் கூடச் செய்ய மாட்டேனா?" என்று பாசமாய் அணைத்துக்கொண்டாள்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)