08-03-2025, 11:07 PM
(This post was last modified: 09-03-2025, 05:54 PM by antibull007. Edited 2 times in total. Edited 2 times in total.)
பாகம் - 5
ஏன் காலையில் நன்றாக பேசிவிட்டு சென்ற தன் மகன், இப்படி நடந்து கொள்கிறான் என்று புரியாமல் வியப்புற்றாள் மீனா.
ஒருவேளை IVயில் உடன் இருந்த கல்லூரி தோழர்களுடன் ஏதேனும் பிரச்சனை ஆகிருக்குமோ என்று எண்ணி, அவன் கோபம் தனியட்டும், காலை பேசிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து, இரவு உணவு வீணாகி விடக்கூடாதென்று குளிர்சாதன பெட்டிக்குள் வைத்து விட்டு, உறங்க சென்றாள்.
மறுநாள் காலை வழக்கம் போல கதிரவன் எழுவதற்கு முன்னரே எழுந்து, குளித்து முடித்து, உடைகளை மாற்றிக்கொண்டு, வேலைகளை முடித்துவிட்டு, வீட்டில் பூஜை செய்து முடித்துவிட்டு, கோவிலுக்கு செல்லும் முன் தன் மகனை எழுப்பி கிளப்புவதற்காக அவன் அறையின் கதவை தட்டியபடி,
மீனா: டேய், கைலாஷ்! எந்திரிடா. நாழியாயிடுத்து.
என்று சொல்ல,
கதவை திறந்தான் கைலாஷ்.
கதவை திறந்தவுடன் கைலாஷை பார்த்த மீனா ஆச்சர்யம் கொண்டாள்.
கைலாஷ் ஏற்கனவே எழுந்து குளித்து முடித்து உடைகளை மாட்டிக்கொண்டு தயாராகி, தன் பையை தோளில் மாட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தான்.
மீனா அவனை பார்த்து ஆச்சர்யம் கொண்டவளாய்,
மீனா: என்னடா இவ்வளவு சீக்கிரம் கெளம்பிட்ட? இன்னைக்கும் காலேஜ்ல எல்லாம் சேர்ந்து எங்கயாவது வெளிய போறேளா?
கைலாஷ்: இல்ல, நேக்கு exam இருக்கு. study materials அங்க விட்டுட்டேன். சீக்கிரம் போய் படிக்கணும்.
என்று தன் தாயின் முகத்தை பார்க்காமலே சொல்ல,
மீனா: ஓஹ்! சரி, சாப்ட்டுட்டு போ!
கைலாஷ்: நேக்கு நாழியாயிடுத்து.
என்று மீண்டும் அவள் முகத்தை பார்க்காமலே சொல்ல,
மீனா: 2 மினிட்ஸ் பொறுடா. lunchஓட சேர்த்து tiffenயும் கட்டி கொடுக்கறேன்.
கைலாஷ்: வேணாம். நேக்கு நாழியாயிடுத்து.
என்று தன் தலையை நிமிர்த்தாமலே சொல்லிவிட்டு, அங்கிருந்து விறுவிறுவென நடந்து சென்றான். அவனுடைய நடவடிக்கையை பார்த்து சற்றே கவலை கொண்டாள் மீனா. கல்லூரி மாணவர்களுடன் ஏதோ பிரச்சனை ஆகிருக்க கூடுமோ என்று மீண்டும் சந்தேகித்து, காதல் தோல்வி ஏதேனும் ஆகியிருக்குமோ என்றும் எண்ணினாள்.
ஏதேனும் தவறுதலாக செய்து விடபோறானோ என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், வயது பையனேயாயிற்றே, அவன் போக்கிலே விடுவோம் என்றெண்ணி, அதை பற்றி அவனாக சொல்லும்வரை எதையும் கேட்கவேண்டாம் என்று எண்ணினாள்.
அன்றிரவும் கைலாஷ் தாமதமாகவே வீட்டுக்கு வந்தான். மீனாவும் முந்தைய தினம் போல அவனுடைய வருகைக்காக இரவு உணவை டைனிங் டேபிள் மீது வைத்தபடி, அவனுக்காக காத்திருந்தாள்.
கைலாஷ் முந்தைய தினம் போலவே உள்ளே வந்து வீட்டின் கதவை சாத்திவிட்டு திரும்ப, மீனா அவனை திட்ட வேண்டாம் என்று முடிவு பண்ணி, சாந்தமாகவே,
மீனா: சாப்ட்டுட்டு போடா!
என்று சொல்ல,
அவனும் தலையை நிமிர்ந்து தன் தாயை பார்க்காமலே,
கைலாஷ்: நான் அப்புறம் சாப்ட்டுக்கறேன்.
என்று சொல்லிவிட்டு, அறைக்குள் சென்று கதவை தாழிட்டான்.
கைலாஷ் மீதான மீனாவின் கவலை அதிகரிக்க, அவனிடம் கேட்கலாம் என்று முடிவு பண்ணி எந்திரித்து அவன் அறையின் கதைவிடம் வந்து, கதவை தட்டலாம் என கை ஓங்கி, மீண்டும் மனமாற்றம் கொண்டு, வேண்டாம் என முடிவெடுத்து, உணவை அங்கேயே வைத்துவிட்டு, படுக்க சென்றாள்.
காலை எழுந்து பார்த்தாள். அவள் செய்து வைத்திருந்த சப்பாத்தியில் 3 சப்பாத்தி குறைந்திருந்தது. கொஞ்சம் நிம்மதி கொண்டாள்.
எங்கே அவன் இன்றும் சீக்கிரம் கிளம்பி சென்று விடுவானோ என்ற அச்சத்தில், வழக்கமாக எழுவதற்கு முன்பே எழுந்து விரைவாக காலை உணவையும், மதிய உணவையும் தயார் செய்து, மதிய உணவை lunch boxல் கட்டி, அவனுடைய lunch bagல் போட்டு, அதை டைனிங் டேபிளின் மீது வைத்துவிட்டு, காலையில் செய்த இட்லியையும், சாம்பாரையும் டைனிங் டேபிளின் மீது வைத்துவிட்டு, அவன் சாப்பிடுவதற்கு ஒரு தட்டையும் வைத்து, அவன் அறையை திறப்பதற்கு முன் அனைத்தையும் தயாராக வைத்திருந்தாள்.
வைத்து விட்டு, தான் இருந்தால் ஏதேனும் கேள்வி கேட்டு தொந்தரவு செய்வோமோ என்று அவன் சங்கோஜப்படுகிறானோ என்று நினைத்துக்கொண்டு, கோவிலுக்கு கிளம்பி சென்றாள்.
கோவிலிலிருந்து வந்து பார்த்தாள். hot boxல் உள்ள இட்லியின் எண்ணிக்கை குறைந்திருந்தது. lunch bagம் காணவில்லை. சற்றே நிம்மதி கொண்டாள்.
போக போக சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கை கொண்டு, அவள் நாட்களை நகர்த்தினாள். வார இறுதி வந்தது.
வழக்கமாக 8 மணிக்கெல்லாம் கிரிக்கெட் விளையாட கிளம்பிவிடும் கைலாஷ், 9 மணி ஆகியும் தன் அறையை விட்டு வெளியே வரவில்லை.
மதியம் எங்கோ சென்றான். ஆனால் பேட்டை கொண்டு செல்லவில்லை. இரவு தான் வந்தான்.
அவள் கலக்கம் அதிகமானது. என்னதான் ஆகிற்று தன் மகனுக்கு என வருந்தினாள்.
இனியும் இப்படியே விட்டால் சரியாக இருக்காது என்று முடிவு செய்தாள். ஏதேனும் ஒரு காரணம் கொண்டு அவனிடம் பேச முற்படலாம் என்று எண்ணினாள்.
அடுத்த நாளும் கைலாஷ் தன் அறையை விட்டு வெளிவரவில்லை. சாப்பாட்டையும் தட்டில் போட்டுக்கொண்டு தன் அறைக்குள் சென்றே சாப்பிட்டான்.
என்ன காரணம் கொண்டு அவனிடம் பேசுவது என்று யோசித்துக்கொண்டு, இரவு 8 மணி போல் sofaவில் அமர்ந்தபடி தொலைக்காட்சியின் channelகளை மாற்றிக்கொண்டிருந்தாள்.
ஒரு sports channelல் இந்தியாவிற்கும் இங்கிலாந்துற்கும் இடையிலான t20 போட்டி ஓடிக்கொண்டிருந்தது.
இதையே சாக்காக வைத்து பேசலாம் என்று முயன்று அவன் அறையின் கதவை தட்டினாள்.
சிறிது நேரம் கழித்து கைலாஷ் கதவை திறந்தான்.
மீனா: மேட்ச் போயிண்டு இருக்கேடா. வந்து பாக்கல?
கைலாஷ்: நேக்கு வேல இருக்கு.
என்று அவள் முகத்தை பார்க்காமலே சொல்ல,
மீனா: என்னடா ஆச்சு நோக்கு? ஏன்டா இப்படி ஆகிட்ட? கூட படிக்கறவா கூட ஏதாவது பிரச்னையா? ஏதாவது லவ் failureஆ? எதுவா இருந்தாலும் மம்மி கிட்ட சொல்லுடா கண்ணா!
என,
கைலாஷ்: அதெல்லாம் ஒன்னும் இல்ல. நேக்கு internshipக்கு prepare பண்ணனும் அதான்.
என்று சொல்லிவிட்டு, கதவை மூடினான்.
ஒரு வேளை அவன் எதிர் காலம் பற்றி கவலை கொண்டு தான் இப்படி நடந்து கொள்கிறானோ? என்று எண்ணி, அவனை மேற்கொண்டு வறுபுறுத்த வேண்டாம் என முடிவு செய்தாள்.
இன்னும் 1 வாரம் போனது. கைலாஷின் நடவடிக்கையில் மாற்றம் இல்லை.
அடுத்த வாரம் ஞாயிறு தினம் மாலை வேளையில், மீனா மீண்டும் அவன் அறையின் கதவை தட்டினாள். கைலாஷ் கதவை திறக்க, மீனா தன் கையில் இருந்த கைப்பேசியை அவன் காதில் வைத்துவிட்டு,
மீனா: பேசு!
என்று சொல்ல,
கைப்பேசியின் மறுபக்கத்தில் இருந்து கைலாஷின் தந்தை சிவராமன் பேசினார்.
சிவராமன்: டேய், கைலாஷ்!
கைலாஷ்: சொல்லுங்க daddy.
சிவராமன்: மம்மி சொல்லுறதெல்லாம் உண்மையாடா?
கைலாஷ்: என்ன ஆச்சு daddy? மம்மி என்ன சொன்னா?
சிவராமன்: வீட்டுக்கும் சரியா வராம, மம்மி கிட்டயும் சரியா பேசாம, ரூம்குள்ளேயே அடஞ்சு கெடக்குறியாமே. என்னடா ஆச்சு நோக்கு?
கைலாஷ்: அச்சோ daddy. நீங்க வேற daddy. மம்மி பத்தி தெரியாதா? அவ என்னத்தையாவது சொல்லிண்டிருப்பா. அதெல்லாம் பெருசு பண்ணிண்டுருக்கேளே ! நான் internship விஷயமா பல companiesku apply பண்ணிண்டு interviewக்கு prepare பண்ணிண்டு இருக்கேன். பத்தா குறைக்கு semester வேற வரப்போகறது. அதனால கொஞ்சம் sincereஆ prepare பண்ணிண்டு இருக்கேன். அத பாத்து மம்மி ஏதேதோ சொல்லி வச்சிருக்கா!
சிவராமன்: அவ்வளவு தானா? நானும் என்னமோ ஏதோனு பயந்துட்டேன்டா. சரி, ரொம்ப போட்டு வருத்திக்காத. எல்லாம் நன்ன படியா நடக்கும். சரியா?
கைலாஷ்: சரி daddy.
சிவராமன்: அப்போப்போ கொஞ்சம் relax பண்ணிக்கணும்டா. அப்போ தான் mind refresh ஆகும். புரியறதாடா?
கைலாஷ்: புரியறது daddy.
சிவராமன்: சரி, மம்மி கிட்ட போன் குடு.
கைலாஷ் மீனாவிடம் கைப்பேசியை கொடுக்க, மீனாவும் அதை வாங்கி காதில் வைத்து,
மீனா: சொல்லுங்கோண்ணா..
சிவராமன்: ஏன்டி அவன சும்மா இம்ச பண்ணிண்டிருக்க? அவன் வயசு பையன், கொஞ்சம் அப்டி இப்டி தான் இருப்பான். பல கவல இருக்கும் அவனுக்கு. நீ அதெல்லாம் நெனச்சு மனச போட்டு கொழம்பிண்டு, அவனையும் படுத்தாதே! புரியறதா?
மீனா கைலாஷை முறைத்தபடி,
மீனா: ஹ்ம்ம்.
என,
பிறகு மீனா அங்கிருந்து சென்று தன் கணவருடன் பேசிக்கொண்டிருக்க, கைலாஷ் கதவை சாத்தினான்.
இன்னும் ஒரு வாரம் போனது. மீனா தன் பொறுமையை இழக்க துவங்கினாள்.
அடுத்த வாரம் சனிக்கிழமை அவனிடம் பேசலாம் என்று முயன்றாள். ஆனால் கைலாஷ் பிடிகொடுக்கமால் காலையிலேயே வீட்டை விட்டு சென்று, இரவு தான் வந்தான்.
மீனா பொறுமையின் எல்லைக்கே சென்று விட்டாள். மறுநாள் என்ன ஆனாலும் தன் மகனிடம் பேசி அவனுடைய நடவடிக்கையை பற்றி அவனுக்கு புரிய வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
கோவிலுக்கும் செல்லாமல், காலைலியிருந்து, அவன் எப்போது கதவை திறப்பான் என்று, sofaவில் அமர்ந்த படி பார்த்தபடியானாள்.
அவன் காலை டிஃபனை தன் தட்டில் போடும்போது பேச வாயை திறக்கலாம் என முயன்றாள். முயற்சி தோல்வியானது.
மதியமும் உணவை அவன் தட்டில் போடும்போது பேச முயன்று வாயை திறந்தாள். வார்த்தை ஒரு வழியாக வெளியே வந்தது.
மீனா: கைலாஷ்!
கைலாஷ் அவள் பேச்சை காதில் வாங்காமல் உள்ளே சென்று கதவை சாத்தினான்.
இரவு வரை கோபத்துடன் அமர்ந்திருந்தாள் மீனா.
8 மணி அளவில், அவள் கோபம் எல்லை மீற, எழுந்து சென்று அவன் அறையின் கதவை படபடவென ஓங்கி தட்டினாள்.
கைலாஷ் அலட்டிக்கொள்ளாமல் வெளியே வந்து, அவள் முகத்தை பார்க்காமல்,
கைலாஷ்: என்ன வேணும்?
என்று கேட்க,
அது வரை பொறுமை காத்த மீனா, பொங்கி எழுந்தாள். தன் மகனின் கையை பிடித்து அவன் அறையை விட்டு வெளியே இழுத்து,
மீனா: ஏன்டா?! இங்க ஒரு ஆள் இருக்கேனோன்னோ!? சத்த கூட மதிக்கவே மாட்டேன்ற. நீ பாட்டுக்கு வர, போற. எதனா கேட்டா, முகத்த நிமிந்து கூட பாக்க மாட்டேன்ற?
என்று சொல்ல, கைலாஷ் மீனாவின் முகத்தை பார்க்காமல், கீழே குனிந்து கொண்டிருந்தான்.
மீனா: சொல்லிண்டே இருக்கேன்! மறுபடியும் முகத்த பாக்காம கீழ பாத்துண்டுருக்க!
என்று சொல்லி, தன் வலது கையால் அவன் தாடையை பிடித்து நிமிர்த்த முயன்றாள். ஆனால் கைலாஷ் தன் தாடையை கீழே அழுத்தி, மீனாவின் வலது கையின் விசையை ஈடுகட்டி, கீழே குனிந்தபடி இருந்தான்.
கோபம் கொண்ட மீனா தன் இடது கையையும் சேர்த்து இரு கைகளாலும், அவன் தாடையை நிமிர்த்தி அவளை பார்க்க வைத்தாள்.
மீனா: என்னடா! என் முகத்த பாத்து பேச மாட்டியா? அப்டி என்னடா பண்ணிட்டேன் உன்ன?
கைலாஷ்: ஒன்னும் பண்ணல.
மீனா: ஏன்டா கைலாஷ் இப்படி பண்ற? என்ன தான்டா ஆச்சு நோக்கு?
கைலாஷ்: ஒன்னும் ஆகல.
மீனா: நான் கேட்டுண்டே இருக்கேன். பட்டும் படாம பேசிண்டிருக்க? என்ன தான்டா நெனைச்சிண்டுருக்க? தோப்பனார் இல்லாதவே, தட்டி கேக்க ஆள் இல்லனு உன் இஷ்டம் போல ஆடிண்டுருக்க?
என்று அவனை அரைய,
கோபத்தில் கைலாஷின் மூச்சு நெருப்பை கக்க, சில நொடிகள் மீண்டும் கீழே குனிந்தபடி இருந்தான். சில நொடிகள் கழித்து தலையை நிமிர்த்தி,
கைலாஷ்: யாரு கேக்க ஆள் இல்லாம இஷ்டம் போல ஆடிண்டுருக்கா? நானா நீயா?
என்று பொங்கி எழ, மீனா கைலாஷின் பேச்சை கேட்டு உறைந்து போனாள். கைலாஷ் தொடர்ந்தான்.
கைலாஷ்: என்ன அவாளோட போய் கிரிக்கெட் விளையாடக்கூடாதுன்னு சொல்லிட்டு, நீ அவாளோட ஆத்துல என்ன பண்ணிண்டுருக்க?
*********************************************************************************************************
Guest users can share their thoughts here,
https://www.secretmessage.link/secret/67cd8847efbdb/
*********************************************************************************************************