12-02-2025, 02:39 AM
(This post was last modified: 12-02-2025, 11:40 AM by antibull007. Edited 2 times in total. Edited 2 times in total.)
பாகம் - 1
ஒரு வெள்ளிக்கிழமை, காலை 7 மணி, எல்லியட்ஸ் பீச், பெசன்ட் நகர், சென்னை
இரவு முழுவதும் உறங்கிக்கொண்டிருந்த கடலெனும் மெத்தையில் இருந்து எந்திரிக்க மனமில்லாமல், அரைத்தூக்கத்தில் லேசாக எந்திரிக்க ஆரம்பித்தான் கதிரவன். அடிவானத்தில் இன்னும் தாழ்வாக இருக்கும் சூரியன், தண்ணீரின் மீது மென்மையான தங்க நிற கதிர்களை வீச, ஆயிரக்கணக்கான மின்னும் சிறிய வைரங்களால் அலங்கரிக்கப்பட்டதை போல் கடல் மின்னுகிறது. காற்று குளிர்ச்சியாக இருக்கிறது. காதலன் காதலியை முத்தமிடுவதை போல் கடற்காற்று மென்மையாக அங்கிருப்பவர்களை வருடி செல்கிறது.
கடற்கரை மிகவும் அமைதியாக உள்ளது. பகல் நேரத்தின் பரபரப்பு இன்னும் ஆரம்பிக்கததால், அலைகள் கரையை முத்தமிடும் சத்தம் மட்டுமே, அந்த இடத்தில் இருக்கும் ஒரே சத்தமாகும். கடல் அலைகள் எழுப்பும் மென்மையான இசைக்கு கடற்கரை ஓரம் இருக்கும் பனைமரங்கள், அந்த இசைக்கு ஏற்றார் போல் தலையை ஆட்டி ரசித்துக்கொண்டிருந்தன.
அதிகாலையில் எழுந்த சிலர், பெரும்பாலும் ஓடுபவர்கள் மற்றும் நடப்பவர்கள் தண்ணீரின் விளிம்பில் தங்கள் பாத அச்சுகளை விட்டு செல்கின்றனர். சிலர் ஹெட்ஃபோன்களுடன் தங்கள் சொந்த உலகில் தொலைந்து போகிறார்கள். மற்றவர்கள் கடலின் எழிலை ரசித்துக்கொண்டே, கடல் அலையின் மெட்டிற்கேற்ப அடி எடுத்து வைக்கின்றனர்.
அதே நேரத்தில், கடற்கரையிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு தனி வீட்டில், ஒரு பாவை ஜன்னல் திரைகளை விலக்க, காலை கதிரவனின் பொன்னிற கதிர்கள் அவள் முகத்தில் அடிக்க, அவள் முகமோ தங்கத்தை போல மின்னியது. கதிரவனின் கதிர்களால் அவள் கண்கள் கூச, அவள் தன் இடது கையால் அவள் முகத்திற்கு திரையிட்டாலும் , அவள் முகம் இப்போதும் தங்கம் போன்றே மின்னியது. கதிரவனின் பொன்னிற கதிர்களால் தான் அவளுடைய முகம் தங்கம் போல மின்னியது என்று நினைத்தால், அந்த கதிர்களை தடுப்பு போட்டும் அவள் முகம் மின்னும் அளவுக்கு அழகுடையவள் தான் நம் கதையின் நாயகி மீனா என்றழைக்கப்படுகிற மீனாட்சி.
![[Image: meena-homely.jpg]](https://i.ibb.co/ghLvJwJ/meena-homely.jpg)
42 வயதான மீனா, உயர்த்தில் 5 அடி 6 அங்குலம். எடையில் 60 கிலோ உடையவள். குண்டு கன்னம், கொழு கொழுவென உள்ள பால் போன்ற தேகம் என்று இளசுகளை சூடேற்றும் உருவ அமைப்புகளை கொண்டவள். ஆனால் மீனாவோ மிகவும் கூச்ச சுபாவம் உடையவள். ஆண்களை கண்டாளே பத்தடி தள்ளி நிற்பாள்.
அடர்த்தியான கூந்தலை கொண்டவளான மீனா, எப்போதும் நடுவகுடு துடுத்து தலையை சீவி பின்னல் போட்டு வைத்திருப்பாள்.
பார்ப்பவர்களுக்கு அவள் கண்கள் மீனா?!! என்று சந்தேகம் வரவழைக்கும் அளவுக்கு, மீன் போல கண்களை உடையவள். முட்டைக்கண்களுடன் பார்ப்பவர்களை வசீகரிக்கும் பார்வையை கொண்ட மீனாவின் நீண்ட இமைகள், அவள் ஒவ்வொரு முறை கண் சிமிட்டும்போதும், பார்ப்பவர்களை அவளை நோக்கி அழைப்பது போல இருக்கும்.
இயற்கையே பரிசளித்த கூரிய அரிவாளைப் போல் உள்ள புருவங்களைக் கொண்டு அவள் பார்வையினால் பார்ப்பவர்களின் இதயத்தை துண்டுதுண்டாக்குவாள்.
அவளுடைய தூக்கிய கண்ண எலும்புகள், அவள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும்.
தடித்த, மென்மையான உதடுகளை கொண்ட மீனாவின் உதடுகளுக்கு செயற்கை சாயங்கள் உபயோகப்படுத்த தேவையில்லாத அளவுக்கு இயற்கையே, அவள் உதடுகளுக்கு இளஞ்சிவப்பு சாயத்தை தந்துள்ளது. பொதுவாக உதட்டை மூடி சிரிக்கும் பழக்கம் கொண்ட மீனாவின் சிரிப்பு ஒரே நேரத்தில் அவளுடைய வெகுளித்தனத்தையும், கனிவான குணத்தையும், குழந்தை தன்மையையும், அதே சமயம் அவளுடைய அழகையும் பிரதிபலிக்கும் வண்ணம் இருக்கும்.
பிசிறில்லாத சருமம் கொண்ட மீனாவிற்கு பெரிதும் ஒப்பனை செய்ய தேவைப்படவில்லை. வகுட்டுப்பிளவிலும் நெற்றியிலும் குங்குமமிட்டு, கண்களுக்கு மையிட்டிருப்பாள்.
காதுக்கு கம்மல், மூக்கிற்கு மூக்குத்தி, கழுத்திற்கு தாலியுடன் சேர்த்து அலங்கார மாலை, கையிற்கு வளையல்கள் அணிந்து, அந்த பொருட்களுக்கு மேற்கொண்டு அழகு சேர்த்திருப்பாள்.
ஆடம்பரமாக உடையணிய விருப்பமில்லாத மீனா, பெரும்பாலும் எளிமையான பருத்தி புடவைகளையே அணிவாள். அன்றைய தினம், அடர்பச்சை நிற ஜாக்கெட்டுடன், சிவப்பு நிற புடவையை அணிந்திருந்தாள்.
மிகுந்த கடவுள் பக்தி கொண்டவள். தினமும் இரு முறை கோவிலுக்கு செல்வாள்.
வழக்கம் போலவே அன்றும், கதிரவன் எழுவதற்கு முன்னரே எழுந்து, தலைக்கு குளித்து விட்டு, உடைகளை அணிந்து கொண்டு, தலையில் ஈரம் காய்வதற்காக டவலை முடியுடன் சேர்த்து கொண்டை போட்டுக்கொண்டு, வீட்டில் உள்ள பூஜை அறையில் பூஜையை முடித்து விட்டு கோவிலுக்கு செல்வதற்காக தயாராகிக்கொண்டிருந்தாள்.
மீனாவின் கணவர் சிவராமன், வயது 44, வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் வந்து செல்வார்.
மீனாவின் மகன் கைலாஷ், வயது 20. உயரம் 5 அடி 10 அங்குலம். எடை 80 கிலோ. கொழு கொழு வென்று பார்ப்பதற்கு அமுல் பேபியை போல் இருப்பான். இன்னும் சரியாக மீசை தாடி கூட முளைக்கவில்லை. கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறான். நன்றாக படிப்பான். வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவன். பெரியவர்களிடம் அன்பாகவும், மரியாதையாகவும் நடந்துகொள்வான். கிரிக்கெட் ரசிகன். ரசிகன் என்பதை விட வெறியன் என்றே சொல்லலாம். அன்று கூட மீனாவுக்கு முன்னரே காலை 5 மணிக்கே எழுந்து, பல் கூட தேய்க்காமல், சோபாவில் அமர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தான்.
மீனா ஜன்னல் திரையை விலக்கி விட்டு, திரும்பி சோபாவில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சியில் இந்தியா- ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான டெஸ்ட் மேட்ச்சை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருக்கும் தன் மகன் கைலாஷைப் பார்த்து,
மீனா: காலங்காத்தாலயே போட்டுண்டியாடா? சதா கிரிக்கெட்ட பத்தியே நெனைச்சிண்டு இருந்தா படிப்பு என்னடா ஆகும்?
கைலாஷ்: நோக்கு நன்னா தெரியும் நான் தான் என் க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் மார்க்ன்னு. அப்புறம் ஏன் மம்மி சும்மா கத்திண்டிருக்க?
மீனா: அது போன செமெஸ்டர்லடா. இப்படி சதா கிரிக்கெட்டையே பாத்துண்டும், விளையாடிண்டும் இருந்தா அடுத்த செமெஸ்டர்ல மார்க் கம்மி ஆக போகறது?
கைலாஷ்: அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் மம்மி!
மீனா: மார்க் கம்மி ஆகட்டும். அப்புறம் நோக்கு இருக்கு!
கைலாஷ்: பாக்கலாம்!
மீனா தொலைக்காட்சியில் ஸ்கோரை பார்க்க, இந்தியா 140 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்திருந்ததது. டார்கெட் 340 இருந்தது. அதைப்பார்த்த மீனா,
மீனா: அடப்பாவி! நீ ஆர்வமா பாத்துண்டிருக்கிறத பாத்து, இவா ஜெயிக்கிற மாதிரி ஆடின்றுக்கான்னு நெனச்சேன். முடிஞ்சு போன மேட்சையாடா இப்படி பாத்துண்டிருக்க?
கைலாஷ்: எங்க மம்மி முடிஞ்சுது? இன்னும் 3 விக்கெட் இருக்கு. ஆகாஷ் தீப்பும், சிராஜும் செஞ்சுரி அடிச்சா ஈஸியா ஜெயிச்சிடலாம்.
தன் மகனின் கிரிக்கெட் ஆர்வத்தை கண்டு சிரிப்பதா இல்லை கோபம் கொள்வதா என்று புரியாமல் தவித்தாள் மீனா.
மீனா: சரிடா! அதுக்காக எந்திரிச்சு அப்படியே உக்காந்துண்டிருப்பியா? பல்ல கூட விளக்கிட்டு வந்து உக்கார மாட்டியா? பல்ல விளக்கிட்டு வா. காஃபி போடுறேன்.
கைலாஷ்: நீ போடு மம்மி. இன்னும் 5 மினிட்ஸ்ல லஞ்ச் விட்டுடுவா. நான் அப்போ போய் பல் விளக்கிண்டு வரேன்.
மீனா: 5 மினிட்ஸ் கூட விட மாட்டியா? பித்து பிடிச்சு அலையுரடா கிரிக்கெட் மேல!
என்று தன் மகனை நொந்து கொண்டு, சமயலறைக்குள் சென்று குளிர் சாதனப்பெட்டியின் உள்ளே இருந்து பால் பாக்கெட்டை எடுத்து, ஃபில்டர் காஃபியை போட்டு கொண்டு வந்து சோபாவின் முன்னே உள்ள மேசையில் வைத்து விட்டு, உள்ளே பாத்ரூமிற்குள் பல் விளக்கி கொண்டிருந்த கைலாஷை சத்தம் போட்டு கூப்பிட்டு,
மீனா: கைலாஷ்! சோபா டேபிள்ல காபி வச்சிருக்கேண்டா. நீ குடிச்சி முடிச்சிட்டு, காலேஜ்க்கு கெளம்பிட்டு இரு. மம்மி கோவிலுக்கு போயிட்டு வந்துடறேன்.
என்று சொல்லிவிட்டு, தன்னுடைய பூஜை கூடையில், தேவையான பூஜை பொருட்களை எடுத்துக்கொண்டு, தெருமுனையில் உள்ள கோவிலுக்கு சென்றாள்.
கைலாஷ் பல் விளக்கி விட்டு, முகத்தை லேசாக கழுவிக்கொண்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்து, வெந்நீர் போட்டுவிட்டு, நீர் சூடாகும் வரை, மீனா வைத்திருந்த காபியை குடித்துகொண்டிருந்தான். பிறகு பாத்ரூம் சென்று மற்ற வேலைகளையும் முடித்துவிட்டு, குளித்துவிட்டு, உடைகளை மாட்டிக்கொண்டு மீண்டும் சோபாவில் அமர்ந்து உணவு இடைவேளைக்கு பிறகு தொடர்ந்த கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தான்.
மீனாவும் கோவிலிலிருந்து வந்து, கைலாஷிர்க்கு காலை உணவை தட்டில் கொண்டு வந்து வைத்து விட்டு,
மீனா: 9 விக்கெட் போச்சா? ஏன்டா காலங்காத்தால இத பாத்து கவல பட்டுண்டிருக்க? நோக்கே தெரியும், இந்த மேட்ச் ஜெயிக்க மாட்டான்னு. அப்புறம் ஏன்? அடுத்த மேட்ச் ஜெயிப்பா. அத பாத்துக்கலாம் விடு!
என்று அவனை சமாதான படுத்த கைலாஷும் வேண்டா வெறுப்பாக வேறு சேனலை மாற்றிவிட்டு, உணவு அருந்திவிட்டு கல்லூரிக்கு கிளம்பினான். கல்லூரியிலும் பாடங்கள் முடிந்தவுடன் வழக்கம் போல நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி விட்டு வீடு திரும்பினான்!!
அடுத்த நாள் காலை 8 மணிக்கு கைலாஷ் எதையோ பதற்றத்துடன் தேடிக்கொண்டிருந்தான். அதை கவனித்தாலும் மீனா, ஒன்றும் கேட்டுக்கொள்ளாமல் தன் வேலைகளை செய்துகொண்டிருந்தாள். வீட்டையே அலசி ஆராய்ந்து விட்டு, கைலாஷ் மீனாவிடம் வந்து,
கைலாஷ்: மம்மி! என் பேட் எங்க மம்மி?
மீனா: நேக்கு தெரியலடா. நீ எங்க வச்சியோ அங்க தான் இருக்கும். நன்னா தேடி பாரு.
கைலாஷ்: மம்மி. நேக்கு நன்னா தெரியும். நீ தான் எங்கயோ எடுத்து வச்சிருக்க?
என்று அவன் மீனாவை சந்தேகப்பட,
மீனா: நான் திரும்பவும் சொல்றேன். நேக்கொண்ணும் தெரியாது.
கைலாஷ்: மம்மி! ப்ளீஸ் மம்மி! கண்டிப்பா நீ தான் எங்கயோ எடுத்து வச்சிருக்க! குடு மம்மி! நேரம் ஆயிடுத்து! மேட்ச் இந்நேரம் ஸ்டார்ட் ஆகிருக்கும்!
மீனா: அதான் தெனம் காலேஜ்ல விளையாடிட்டு வரியே! அது பத்தாதா நோக்கு?
கைலாஷ்: நீ கூட தான் மம்மி தெனம் கோவிலுக்கு போயிண்டுருக்க! இன்னைக்கு ஒரு நாள் போவாதன்னா கேப்பியா?
மீனா: அதுவும் இதுவும் ஒன்னாடா?
கைலாஷ்: நான் கிரிக்கெட் விளையாட போறதுல நோக்கென்ன மம்மி பிரச்சன?
மீனா: நேக்கு பிரச்சன நீ கிரிக்கெட் விளையாட போறது இல்ல. எங்க விளையாட போற, யார் கூட விளையாட போறேன்றது தான்!!
************************************************************************************************************************
Guest users can share their thoughts here,
https://www.secretmessage.link/secret/67ac3b39d31d3/
************************************************************************************************************************
If you like the story please like / comment / rate. That will motivate me to write more.
If you really enjoyed my writing, you can also tip me using amazon gift vouchers, to my mail antibull007[at]gmail[dot]com. That will help me find all the time I spent writing stories somewhat rewarding.
If you really enjoyed my writing, you can also tip me using amazon gift vouchers, to my mail antibull007[at]gmail[dot]com. That will help me find all the time I spent writing stories somewhat rewarding.