09-02-2025, 09:26 PM
(09-02-2025, 03:55 PM)antibull007 Wrote: கதாசிரியர் இந்த கதையை நீக்க எந்த அவசியமும் இல்லை. ஏனென்றால் அவர் தலைப்பிலேயே கதை நிறுத்தப்பட்டது என்று போட்டு விட்டார். நிறுத்தப்பட்ட கதையை படித்து, அதற்கு பிறகு வாசகர்கள் அப்டேட் கேட்பதற்கு கதாசிரியர் பதிலளிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.
திரு Genliarasigan அவர்களே, தாங்கள் தங்களுடைய பதிவு வரும் தினங்களிலுமே 100-200 பார்வைகள் மட்டுமே வருவதாக சொல்லி ஆதங்கப்பட்டீர்கள். ஆனால் நான் இந்த கருத்தை பதிவிடும் போது, 100 பேருக்கும் மேல் இந்த திரியில் உள்ளனர். அவர்கள் எந்த காரணத்திற்க்காக உள்ளனர் என்று நான் அறியேன். ஆனால் முதல் முறை இந்த தளத்தில் ஒரு திரியில் 100 பேருக்கும் மேல் இருப்பது இப்போது தான் பார்க்கிறேன்.
அவர்களில் பலரும் தங்கள் கதையில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கலாம். தாங்கள் இப்போது இந்த கதையை தொடரவில்லை என்றாலும், தங்களுக்கு உள்ள பிரச்சனைகள் தீர்ந்த பிறகு, அது எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம், சில வருடங்கள் கழித்தும் இருக்கலாம், அப்போது வந்து தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த தளத்திலோ அல்லது வேறு ஏதாவது தளத்திலோ தொடர முயற்சி செய்யுங்கள்.
ஒரு கதை எழுதுபவனாக ஆசையாக நாம் தொடங்கிய கதையை வரவேற்பு இல்லாத ஒரே காரணத்தால் நிறுத்தும் வலி எனக்கு புரிகிறது.
எனவே தாங்கள் இந்த கதையை நீக்க வேண்டாம். தற்போதைக்கு நிறுத்தப்பட்ட கதை நிறுத்தப்பட்டதாகவே இருக்கட்டும். பிற்காலத்தில் ஒரு வேலை கதையை எழுத தோன்றும் பட்சத்தில், அப்போது தாங்கள் தொடருங்கள்.
நன்றி!!
இங்கு அவ்வப்பொழுது வேறு எழுத்தாளர் எழுதும் கதைகளில் ஒரே நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே நேரத்தில் படிப்பதை நான் பார்த்து இருக்கிறேன் நண்பா.அது spam. server problem. ரக்ஷனோவோடு ஒரு நாள் என்ற கதையில் ஒரே நேரத்தில் 400 ககும் மேற்பட்ட நபர்கள் இருப்பது போல காட்டியது.அது technical issue .வேடிக்கையாக அது என் கதையில் நடந்து உள்ளது.அவ்வளவு தான்.
மேலும் xossipy தளத்தை தவிர வேறு எங்கும் கதை எழுதும் எண்ணமில்லை.இங்கு வந்து தான் கதை எழுதவே கற்று கொண்டேன்.மேலும் இந்த site user friendly ஆக இருக்கு.
நான் என்றும் கதையை நீக்க சொல்ல போவது இல்லை.