Incest உன் மடியில் நான்
(04-02-2025, 09:24 PM)kamakathalan Wrote: Namaskar
75000.... த்தை..கடந்த.....நண்பர்களின் அரவணைப்பு.அதுவும் புது எழுத்தாளனுக்கு ,வெறும் 86..நாட்களில்...மலைப்பாக இருக்கிறது..இந்த..  THREAD..க்கு நான் புதிது என்பதால் பின் விளைவுகள் தெரியாமல் ..சில தவறுகளை செய்து சகோதரர்களிடம்..திட்டும்...வாங்கியிருக்கேன்..
உண்மையில் என் ஆத்ம திருப்திக்காக தான்  ..  எழுத வந்தேன்......
அதனால் தான் எனக்கு பிடித்தமான காதலை மய்ய படுத்தி எழுதி வருகிறேன்.ஆகவே....அன்பு நன்பர்களுக்கும்.வாசகர்களுக்கும்,தொடர்ந்து எனக்கு வாழ்த்தும்,ஆலோசனைகளும் வழங்கிய அணைத்து உள்ளங்களுக்கும் ,என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
நான் பின் விளைவுகளை அறியாமல் செய்த..சிறு தவறை, தவறாக நினைத்து கண்டபடி திட்டிய .அந்த சகோதரருக்கும் என்..நன்றிய..தெரிவித்து கொள்கிறேன்.   

நன்றியுடன்
காமகாதலன்

next episode..within 2 days..

75000 பார்வைகளுக்கு வாழ்த்துக்கள்!! தாங்கள் பெரிய கதாசிரியராக என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்!

ஒரு வேளை தாங்கள் குறிப்பிட்ட அந்த சிறிய தவறு நான் நினைக்கும் தவறாக இருந்து, தங்களை வசைபாடிய அந்த நண்பர் நானாக இருக்கும் பட்சத்தில்,

நண்பா! தாங்கள் செய்த அந்த சிறிய தவறை தாங்கள் மட்டும் தெரியாமல் செய்திருந்தால், நான் அதை பெரிது படுத்தாமல் கடந்திருப்பேன். ஆனால், தாங்கள் தெரியாமல் செய்த அந்த தவறை இங்கு சிலர் தெரிந்தே வாடிக்கையாக செய்வது வழக்கம். ஆதரவு தருகிறேன் என்ற பெயரில், கதையின் ஒரு வரியையும் படிக்காமல், 10-20 கதைகளுக்கு மேல் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் உபயோகமில்லாத பொத்தான் பொதுவாக ஒரு கருத்தை பதிவிட்டு கதை அட்டவணையில் தேவை இல்லாமல் மாற்றம் செய்யும் நபர்கள் சிலர் இந்த தளத்தில் உண்டு.

என் கதைகளில் அது போன்ற கருத்துக்களை பார்த்தால், எனக்கு வரும் கோவத்தை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது. கீழே இருக்கும் கதை திடீரென்று மேலே வந்திருக்கும். யாரேனும் புதிதாக கதையை படித்து, அது அவர்களுக்கு பிடித்து, தங்கள் கருத்துக்களை பதிவிட்டனரா என்று பார்க்கும்போது, அது ஒன்றுக்கும் உதவாத அந்த குப்பை கருத்துக்களாக இருக்கும் பட்சத்தில், எனக்கு வரும் விரக்தியை நான் எவ்வாறு விவரிப்பது என்று தெரியவில்லை.

ஏனென்றால், என்னை பொறுத்தமட்டில், என் கதைகளுக்கு எத்தனை பார்வைகள், எத்தனை கருத்துக்கள் வந்துள்ளன என்பதை விட, எத்தனை பேர் விரும்பி கதையை படித்துள்ளனர் என்பது தான் முக்கியம். அதற்காகவே பார்வைகளின் எண்ணிக்கையும் கருத்துக்களின் எண்ணிக்கையும் ஒரு கதாசிரியராக நான் எதிர் பார்க்கிறேன். ஆனால் இவர்கள் செய்யும் செயலால், உண்மை நிலையை அறிய முடியாமல் போகிறது.

குறிப்பாக இரண்டாம் பக்கத்தில் இருக்கும் என் கதையை எத்தனை பேர் படிக்கின்றனர் என்பது, அவர்கள் அந்த கதையை உண்மையில் ஆர்வமுடன் படிக்கின்றனர் என்பதை எனக்கு தெரியப்படுத்தும். அப்படி இரண்டாம் பக்கத்தில் இருக்கும் கதையை நான் கூறிய அந்த சிலர் தேவை இல்லாமல் ஒரு குப்பை கருத்தை போட்டு, முதல் பக்கத்துக்கு கொண்டு வந்து விடுவதால், என்னால் உண்மையில் எத்தனை பேர் என் கதையை ஆர்வமெடுத்து தேடி படிக்கின்றனர் என்று அறிய முடியாமல் போகிறது.

அதே சமயம் சில நேரம் முதல் பக்கத்தில் கதை அட்டவணையில் மேலே இருக்கும் ஒரு கதையை இவர்கள் மற்ற கதைகளுக்கு போடும் அந்த குப்பை கருத்துக்களாலால் கீழே வந்து விடுகிறது. அதனால் புதிதாக யாரேனும் என் கதையை படிப்பதற்கான வாய்ப்பு குறைகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக என்னுடைய கதை ஆட்டோ பயணத்தால் ஆட்டம் கண்ட குடும்பம் முதல் பக்கத்திலேயே உள்ளது. அதற்கு காரணம் பலர் அந்த கதையை படித்து, கருத்துக்களும் பதிவிட்டு முதல் பக்கத்திலேயே வைத்திருக்கின்றனர் என்பது அல்ல. மாறாக நான் சிரத்தை எடுத்து, 1-2 தினங்களிலேயே கதையின் புதிய பாகங்களை பதிவிட்டு கொண்டிருக்கிறேன்.  ஒரு வேளை, இந்த கதை இந்த தளத்தில் கதை படிப்பவர்களின் பார்வையில் மீண்டும் மீண்டும் வந்தால், யாரேனும் வேண்டா வெறுப்பாகவாவது கதையை திறந்து படிப்பார்கள் என்று. 

அன்றைய தினமும் அது போல் தான், கதை அட்டவணையில் முதல் பக்கத்தில் மேலிருந்து இரண்டாவதாக இருந்த என் கதை, தாங்கள் செய்த சிறு தவறால் பல படிகள் கீழே வந்தது. அதுவும் ஞாயிறு தினம் இரவு 7 மணி போல் அதை செய்தீர்கள். விடுமுறை என்பதால் பலரும் இந்த தளத்திற்கு வருவர், கதையை பார்க்க நேரிடும். பார்க்க நேர்ந்த பலரில் சிலர் கதையை படிக்கவும் நேரிடும் என்று இருந்தேன். ஆனால் அன்று அது நடக்கவில்லை. அது ஏன் என்று தாங்களே யோசித்துக்கொள்ளுங்கள்.

Suspense thriller கதை என்பதால் எழுதவும் நேரம் எடுக்கிறது. ஒவ்வொரு பகுதி எழுதும் போதும், கடந்த 10 பகுதிகளுக்கு முன் என்ன நடந்தது, அடுத்த 10 பகுதிகளுக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை யோசித்து, அவை இரண்டையும் இணைக்கும் வண்ணம் எழுதவேண்டி இருக்கிறது. தாங்கள் செய்த செயல் என் உழைப்பை உதாசீனப்படுத்துவதை போல் இருந்தது. 

தாங்கள் அந்த சிறு இடைவெளியில் 36 கதைகளுக்கு அந்த கருத்தை பதிவிட்டீர்கள். நான் தங்களுக்கு தனிப்பட்ட செய்தியும் அனுப்பினேன், என் திரிகளிலும் பதிவிட்டேன். ஆனால் தாங்கள் என் வேண்டுகோளிற்கு செவி சாய்க்கவில்லை. அதுவும் குறிப்பாக ஒரு கதாசிரியராக இருந்துகொண்டு, மற்ற கதாசிரியர்களின் வலி புரியாமல் நடந்து கொண்டது வருத்தம் அளித்தது. அதனாலேயே கோபம் கொண்டேன். 

இருந்தாலும் தாங்கள் அதற்கு முன் அவ்வாறு செய்ததில்லை. இனியும் அது போல் செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அன்று ஒரு தினம் ஏதோ ஒரு காரணத்தால் தாங்கள் அவ்வாறு செய்தீர்கள். அது என்ன காரணம் என்பது தங்களுக்கு மட்டுமே வெளிச்சம்.      

காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்!!
Like Reply


Messages In This Thread
RE: உன் மடியில் நான் - by antibull007 - 05-02-2025, 06:02 PM



Users browsing this thread: 8 Guest(s)