03-02-2025, 11:45 AM
(This post was last modified: 03-02-2025, 12:00 PM by antibull007. Edited 1 time in total. Edited 1 time in total.)
பாகம் - 20
ஹேமா வண்டியை விட்டு இறங்க முயற்சிக்க,
சதிஷ்: இறங்காத இரு!
என்று சொல்லிவிட்டு, பைக்கை நகர்த்த, ஹேமா குழப்பம் கொண்டாள்.
ஹேமா: எங்கடா போற ? நான் தான் இந்த ஹோட்டல் ஓகே சொல்லிட்டேன்ல?
சதிஷ்: இங்க தான் வரப்போறோம்! பைக் மட்டும் பக்கத்துல எங்கயாவது பார்க் பண்ணிட்டு வருவோம்!
ஹேமா: ஏன்டா?
சதிஷ்: சொல்றேன் இரு!
என்று சொல்லிவிட்டு, பைக்கை நிறுத்த இடம் தேடிய படி பொறுமையாக ஒட்டிக்கொண்டிருந்தான். பக்கத்தில் நிறைய மரங்கள் இருக்கும் ஒரு சந்து தென்படவே, அதனுள் தன் பைக்கை திருப்பினான். அங்கே சில கார்களும், பைக்குகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அங்கே ஒரு காரின் பக்கத்தில், வீட்டின் சுவற்றை ஒட்டியபடி மறைமுகமாக ஒரு, மரத்தடியின் கீழ் பைக்கை நிறுத்தினான்.
சதிஷ்: சரி இறங்கு!
ஹேமா பைக்கை விட்டு இறங்கினாள். சதீஷும் பைக்கை ஸ்டாண்ட் போட்டு விட்டு இறங்கி, இருவரும் ஹோட்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
ஹேமா: எதுக்குடா இங்க கொண்டு வந்து நிறுத்தின?
சதிஷ்: காரணமா தான்
ஹேமா: அதான் என்ன காரணம்?
சதிஷ்: யாராவது பைக் ஹோட்டல் பார்க்கிங்கில நிக்குறத பாத்துட்டா, என்னனு சொல்லி எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுறது? இங்க நின்னுட்டிருந்தா, ஃபிரெண்ட் வீட்டுக்கு வந்திருந்தேன்னு சொல்லி சமாளிச்சிக்கலாம்.
ஹேமா: இவ்ளோ தூரம் தள்ளி வந்து யார்க்கு உன்ன தெரிய போகுது?
சதிஷ்: வேற யாரு? என் அப்பா தான்!
ஹேமா: அவரு ஏன் இங்க வராரு?
சதிஷ்: சொல்லிருக்கேன்ல அவரு மார்கெட்டிங்க்ல இருக்காருன்னு. அதனால அவரு அப்போப்போ ரௌண்ட்ஸ்ல இருப்பாரு.
ஹேமா: இருக்கட்டும். அப்டி பாத்தா கூட, பைக் ரோட்டுல நிக்குறது தான் டேஞ்சர். ஹொட்டலுக்குள்ள நின்னா சேஃப் தான?
சதிஷ்: என் அப்பா அவரு வேலைய பத்தி என் கிட்ட நெறய பேசிருக்காரு. எல்லா வேலையையும் நேராவே பண்ணிட முடியாதாம். சில வேல ஆகணும்னா, சில பேர கவனிக்க வேண்டி இருக்குமாம். அதாவது ஒரு எக்ஸ்சாம்பில்க்கு சொல்லனும்னா, அவரு கம்பெனி ஏதாவது புதுசா ப்ராடக்ட் லான்ச் பண்ணா, அதுக்காக நெறய கேம்பெய்ன் பண்ணுவாங்க. லைக் ஆட்ஸ், ஈவென்ட் ஸ்பான்சர் பண்றது, சோசியல் மீடியா மார்க்கெட்டிங் அது இதுனு.
ஹேமா: ஹ்ம்ம்
சதிஷ்: ஆனா சில சமயம் அது மட்டும் பத்தாது. சில சமயம் காம்பிட்டிடரும் ஒரே டைம்ல அவங்க ப்ராடக்ட் லான்ச் பண்றாங்கனு வச்சிக்கோ, அப்போ இவங்க பண்ற கேம்பெயினிங்க்லாம் பாதி வேஸ்ட் ஆகும். அதனால என்ன பண்ணுவாங்கனா, ஆப்போனேன்ட் கம்பெனிய பத்தி தப்பா ஏதாவது நியூஸ் பரப்பி விடுறது, அந்த கம்பெனி எம்ப்லாயீச வச்சு முடிஞ்ச அளவுக்கு அவங்க ப்ராடக்ட்ல டிஃபெக்ட் ஏதாச்சு உண்டாக்குறது, இவங்க ப்ராடக்ட்ட பத்தி நல்லா பேசி, ஆப்போனேன்ட் ப்ராடக்ட்டா பத்தி தப்பா பேசணும்னு பெரிய இன்ஃப்பிலுயென்சர்ஸ் கிட்ட டீல் பேசுறது, மாதிரி விஷயம்லாம் பண்ண வேண்டி இருக்கும்.
ஹேமா: சரி!
சதிஷ்: அதெல்லாம் நல்ல கான்ஃபிடென்ஷியலா நடக்கும். பிரைவசி அதிகமா இருக்க பெரிய ஹோட்டல்ஸ்ல தான் நடக்கும். இந்த ஹோட்டல பாத்தா, கண்டிப்பா அந்த மாதிரி டீலிங்ஸ்லாம் நடக்குற ஹோட்டல் மாதிரி தான் இருக்கு. அதான் கொஞ்சம் உஷார் ஆகிட்டேன்.
ஹேமா: யார் கண்டா? உள்ள உன் அப்பா யார் கிட்டயாவது டீல் பேசிட்டு இருந்தாலும் இருக்கலாம்.
சதிஷ் பதறி அடித்து,
சதிஷ்: ஏன்டி வாய வைக்கிற? நாம வேற ஹோட்டல் பாத்துக்கலாம்.
ஹேமா: சும்மா சொன்னேன்டா. யோசிச்சு பாரேன். ஊருல இந்த மாதிரி பல பெரிய ஹோட்டல் இருக்கப்போ, அவரு ஏன் சரியா இந்த ஹோட்டலுக்கு, நாம போற நேரத்துக்கு வரணும்?
சதிஷ்: அதுவும் சரி தான்! அவரு ஏன் சரியா இந்த ஹோட்டலுக்கு அதுவும் நம்ம போற நேரத்துக்கு வரணும்? இருந்தாலும் ஒரு சேஃப்டிக்கு தான்.
பேசிக்கொண்டே அவர்கள் 11:45 மணி அளவில் ஹோட்டலுக்குள் நுழைய, சுகுமாரனின் கார் அந்த ஹோட்டல் இருக்கும் ரோட்டினுள் நுழைந்தது.
ஹேமா அங்கு இருந்த சோஃபாவில் பேப்பரை படிக்கும் சாக்கில், அந்த பேப்பரை கொண்டு தன் முகத்தை மூடிய படி அமர்ந்திருக்க, சதிஷ் சென்று, தேவையான ஃபார்மாலிட்டீஸ் அனைத்தையும் முடித்து விட்டு, 11:55 மணி அளவில் அறையின் சாவியை வாங்கிக்கொண்டு வந்தான்.
ஹேமா: ரூம் நம்பர் என்னடா?
சதிஷ்: 306!
ஹேமா: நல்லாருக்கு ரூம் நம்பர்.
சதிஷ்: சரி வா போவோம்!
என்று சொல்லிவிட்டு இருவரும் லிஃப்ட்டின் முன்னே லிஃப்ட்டின் வருகைக்காக காத்திருக்க, சுகுமாரனின் கார் ஹோட்டல் வாசலில் வந்து நின்றது. கீதா இறங்க, சுகுமாரன் வேலேவிடம் காரை ஒப்படைத்து விட்டு, சுகுமாரனும் கீதாவும் ஹோட்டலின் வாசல் கதவை நோக்கி நடந்து வந்தனர்.
லிஃப்ட் திறந்து ஹேமாவும் சதீஷும் உள்ளே சென்று நிற்க, சுகுமாரனும் கீதாவும் ஹோட்டலின் வாசலின் முன்னே இருக்கும் முதல் படியில் காலெடுத்து வைத்தனர். அவர்கள் இருவரும் படியில் ஏறி வந்து கதவு திறக்க, லிஃப்ட்டின் கதவு மூடியது. சுகுமாரன் அங்கு ரெகுலர் வாடிக்கையாளர் என்பதால், ரிசப்ஷனில் உள்ள அனைவரையும் தெரிந்து வைத்திருந்தார். கீதா சென்று சோஃபாவில் அமர, சுகுமாரன் சென்று ரூம் புக் செய்ய சென்றார்.
மறுபுறம், சதீஷும் ஹேமாவும் மூன்றாவது மாடியில் லிஃப்டில் இருந்து வெளியே வந்து தங்களுடைய அறையை நோக்கி சென்றனர். அறையை அடைந்தவுடன், சதிஷ் சாவியைக் கொண்டு அறையின் கதவைத் திறந்து அறைக்குள் செல்லும் நேரத்தில்,
"சார், ப்ளீஸ் வெயிட்!!!" என்ற சத்தம் கேட்க ஹேமாவும் சதீஷும் திரும்பிப் பார்த்தனர். ஹோட்டல் பணியாளர் ஒருவர் படி அருகே மூச்சிரைக்க நின்றுகொண்டிருந்தார். சதிஷ் கதவைத் திறப்பதை நிறுத்தியவுடன் அந்த நபர் அவர்கள் இருவரிடம் வந்தார்.
சதிஷ்: யா??
பணியாளர்: சார், வி ரிக்ரெட் டு இன்ஃபோர்ம் தட் தேர் ஹேஸ் பீன் அ மிஸ்டேக் ஃபிரம் அவர் சைட்.
சதிஷ்: வாட் ஹேப்பண்ட்?
பணியாளர்: வி மிஸ்டேக்கன்லி கேவ் யு தி ராங் கீஸ். திஸ் ரூம் வாஸ் அல்ரெடி புக்ட் பை அனதர் கிளைண்ட். சோ வி ரெக்வஸ்ட் யு டு ப்ளீஸ் ஹேன்ட் ஓவர் தி கீஸ், அண்ட் அக்ஸப்ட் தி அதர் ரூம்.
ஹேமா அவரிடம் வாதிட போக, சதிஷ் அவளை நிறுத்தி,
சதிஷ்: ஆல்ரைட்.
என்று தயக்கமாக சம்மதித்து, கதவை மீண்டும் தாழிட்டு, அந்த சாவியை வந்திருப்பவரிடம் கொடுத்தான். வந்திருப்பவர், வேறொரு அறையின் சாவியை சதீஷிடம் கொடுத்தார்.
ஹேமா: எந்த ரூம்?
சதிஷ்: அவளிடம் சாவியை உள்ள அறை எண்ணைக் காட்ட,
ஹேமா: 307! பக்கத்து ரூம் தான். பிரச்சன இல்ல.
சதிஷ் வந்திருப்பவரை பார்த்து,
சதிஷ்: ஓகே பிரதர்! வி வில் டேக் கேர்.
என்று சொல்ல,
பணியாளர்: சார், வி வில் கிவ் யு 20% டிஸ்கவுண்ட் ஃபார் தி இன்கண்வீனியன்ஸ் காஸ்ட்.
சதிஷ்: ஓஹ், கூல்!
பணியாளர்: தேங்க் யு!
என்று சொல்லிவிட்டு அவர் நடந்து சென்று லிஃப்டை பார்க்க, லிஃப்ட் சரியாக 4ஆவது ஃப்ளோரில் இருந்து கீழே வந்து கொண்டிருக்க, அவர் கீழே போகும் பட்டனை அழுத்தினார். சதீஷும் ஹேமாவும் பக்கத்து அறைக்கு சென்று சதிஷ் மீண்டும் அந்த சாவியைப் போட்டு அறையைத் திறக்க முயன்றான். திறக்க முடியவில்லை. சிறிது நேரம் முயற்சி செய்தான். முடியவில்லை என்றதும் அந்த நபரைப் பார்த்தான். அவர் அங்கு இல்லை. லிஃப்டில் ஏறி கீழே சென்று விட்டார்.
அவர் கீழே சென்று, மேனேஜரிடம் சாவியை கொடுக்க, மேனேஜர் அவரைப் பார்த்து "கிரேட் ஜாப்!!" என்று பாராட்டி விட்டு, சுகுமாரனிடம் வந்து, சிரித்தபடியே,
ஹோட்டல் மேனேஜர்: சுகுமாரன் சார், இந்தாங்க நீங்க கேட்ட அந்த ரூமோட சாவி! என்ஜாய்!
சுகுமாரன்: தேங்க்ஸ் திவாகர்! யு ஆர் த மேன்!
என்று பாராட்டிவிட்டு, அவரிடம் இருந்து சாவியைப் பெற்றுக்கொண்டு, ரிஸப்ஷனிஸ்ட்டைப் பார்த்து, "தேங்க் யூ டூ ஷ்வேதா" என்று சிரித்தபடி சொல்லிவிட்டு, கீதாவை கூட்டிக்கொண்டு, லிஃப்டை நோக்கி சென்றார்.
மேலே அறை எண் 307ன் முன்,
ஹேமா: என்னடா ஆச்சு?
சதிஷ்: தொறக்க முடியலடி!
ஹேமா: இதையே தொறக்க முடியலையே! நீ எப்படி..
சதிஷ் ஹேமாவின் தலையில் தட்டி,
சதிஷ்: காலைல இருந்து அசிங்கமாவே பேசிட்டு இருக்க. சும்மாரு கொஞ்ச நேரம்!
என்று சொல்லிவிட்டு,
சதிஷ்: இவரு வேற கீழ போய்ட்டாரு..
என்று சொல்லிக்கொண்டே திறக்க முயற்சிக்க,
ஹேமா: டேய், அத குடு நான் தொறக்கறேன்.
என்று ஹேமா சாவியை வாங்க,
சதிஷ்: சரி, நீ தொறந்துட்டு இரு! நான் போய் அவர கூட்டிட்டு வரேன்!
என்று சொல்லிவிட்டு லிஃப்டை நோக்கி சென்று லிஃப்ட்டின் முன் நின்றான். லிஃப்ட் கிரௌண்ட் ஃப்ளோரில் நிற்க, கீழே போகும் பட்டனை அழுத்தி விட்டு லிஃப்ட் வரும் வரை காத்திருந்தான்.
கீழே கிரௌண்ட் ஃப்ளோரில், உள்ள லிஃப்டில் சுகுமாரனும் கீதாவும் ஏறினர். லிஃப்ட் மேலே சென்றது. மேலே சதீஷும் லிஃப்ட்டிற்காக காத்திருந்தான். லிஃப்ட்டின் கதவு திறந்தது. சுகுமாரனும், கீதாவும் லிஃப்ட்டிலிருந்து வெளியே வந்தனர்.
2ஆம் ஃப்ளோரில் திறந்த லிஃப்ட்டின் வெளியே ஒரு மாற்று திறனாளியுடன் அவருடைய உறவினர், இருக்கவே அந்த மாற்று திறனாளியை உள்ளே வர விடுவதற்காக, சுகுமாரனும் கீதாவும் வெளியே வந்து அவர்கள் உள்ளே சுலபமாக செல்ல வழியை உருவாக்க வெளியே வந்து நின்றனர். மாற்று திறனாளியும், அவருடைய உறவினரும் உள்ளே சென்று நின்றவுடன், சுகுமாரனும், கீதாவும் மீண்டும் லிஃப்ட்டின் உள்ளே சென்று நின்றனர். லிப்ட்டின் கதவு மூடியது. லிஃப்ட் மேலே சென்றது.
மேலே சதிஷ் லிஃப்டிற்காக காத்திருக்கும்போது, "டேய், தொறந்துடுச்சு வாடா!" என்ற ஹேமாவின் சத்தம் கேட்டது. சதிஷ் ஹேமாவிடம் ஓடி சென்றான். ஹேமா கதவை திறந்திருந்தாள். "எப்படிடி?" என்று கேட்க, ஹேமா கதவைத் திறந்து உள்ளே சென்றபடி, "அதுக்கெல்லாம் ஒரு தெறம வேணும்டா" என்று சொல்ல, சதீஷும் உள்ளே சென்று, "போய் தொல" என்று சொல்லியபடி கதவை மூட, லிஃப்ட்டின் கதவு திறக்க, சுகுமாரனும் கீதாவும் லிஃப்டை விட்டு வெளியே வந்தனர்.
இருவரும் நடந்து சென்று தங்களுடைய அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்று கதவைத் தாழிட்டனர்.
துரோகம் செய்த நண்பனை பழிவாங்கும் எண்ணத்துடன் புத்தி மழுங்கி போய் நண்பன் மீதுள்ள பழிவாங்கும் வெறியை, நண்பனின் மனைவியிடம் காம வெறியாக காட்டத் துடிக்கும் இரு ஆண்களும், காதலியின் ஸ்பரிசத்தை தீண்டத் துடிக்கும் ஒரு ஆணும் என மூன்று ஆண்களும்,
விருப்பம் இல்லாவிட்டாலும் தன் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள வேறு வழி இல்லை என்று சம்மதித்து தன்னுடைய கணவனின் நண்பனாக இருந்து இன்று தான் எதிரியானார் என்று தெரியாமல், பல வருடங்கள் முன்பே எதிரியாக மாறிவிட்டார் என்று எண்ணி, கணவரின் தற்போதைய எதிரியுடன் உறவு கொள்ளப்போகும் ஒரு பெண்,
தன் கணவனின் நண்பன் அவருக்கு எதிரி ஆகி அவரைப் பழி வாங்கும் நோக்கம் கொண்டு தான் தன்னுடன் கட்டிலில் இருக்க சம்மதித்தார் என்று தெரியாமல், தன்னுடைய காமப் பசியை தீர்க்க தான் தன்னுடன் கட்டிலில் இருக்க போகிறார் என்று, கணவரின் நண்பன் என நினைத்து கணவரின் தற்போதைய எதிரியுடன் கலவி கொள்ளப்போகும் ஒரு பெண்,
இந்த இரு பெண்களுடன், காதலனின் கரங்கள் தன்னை எப்போது தீண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு கன்னிகை என மூன்று பெண்களும்,
என இரு கள்ள ஜோடிகள் மற்றும் ஒரு நல்ல ஜோடி என அந்த மூன்று ஜோடிகளும், தங்களுடைய காமக் கூட்டாளிகளுடன் சேர்ந்து, ஒவ்வொரு ஜோடியும் ஒவ்வொரு விதம் என மூன்று விதமான காமப் பாடங்கள் தயாராகின.
அந்த மூன்று ஜோடிகளின் மூன்று விதமான காமப் பாடங்களையும் அடுத்த சில பகுதிகளில் பார்ப்போம்.
************************************************************************************************************************
Guest users can share your feedback anonymously here,
https://www.secretmessage.link/secret/679cdc4028c27/
************************************************************************************************************************