31-01-2025, 12:32 PM
(31-01-2025, 11:47 AM)antibull007 Wrote: திரு Jeevanantham அவர்களுக்கு, தாங்கள் எனக்கு தனிப்பட்ட செய்தி அனுப்பினீர், தங்களுக்கு 6 வருடங்களுக்கு முன்னதாக விபத்து ஏற்பட்ட காரணத்தால், அதன் பின் தாம்பத்தியம் வைத்துக்கொள்ள முடியவில்லை என்று. மன்னிக்கவும்! நான் மீண்டும் சொல்கிறேன். தாங்கள் கூறிய விஷயங்கள் அனைத்தும் காமக்கதைகளுக்கென்றே அளவெடுத்து செய்யப்பட்டதைப் போல் உள்ளது. தாங்கள் சொன்ன விஷயங்களில் வரிக்கு வரி பிழை உள்ளது.
நண்பர்கள் பலர், முகம் தெரியாத தங்களுடைய நலனுக்காக தங்களால் முடிந்த ஆலோசனைகளை வழங்குகின்றனர். தயவு செய்து கற்பனை கதைகளை சொல்லி அவர்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தங்களுக்கு 44 வயதும் ஆகவில்லை, தாங்கள் கூறியதை போல் ஒரு மனைவியும், மகனும் தங்களுக்கு இல்லை என்று நான் அடித்து கூறுவேன்.
இதை கற்பனை என்று சொல்லி, இது போன்ற நிலையில் மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்று கேட்டாலே, ஆர்வமுள்ள பலர் பதில் கூறுவர் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
என்னுடைய view படி 100℅ உண்மை தான் ஆனால் தன் மீது தவறு வர கூடாது என கவனித்து எழுதி உள்ளார். இதைப்பற்றி வெளியே கூற முடியாமல் இதற்கு தீர்வு காண முடியாமல் உள்ள மனவோட்டம்எழுத்தில் இது அவருடைய வாழ்க்கை அல்லது அவரது நெருங்கிய நண்பர் வாழ்க்கை இருக்கலாம். அவர் வாழ்க்கை எனில் தன்னுடைய தவறை முழுவதும் மறைத்து மனைவி மகன் மீது சுமத்துகிறார். அல்லது நெருங்கிய நண்பர் வாழ்க்கை எனில் அந்த நண்பரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அறியாமல் எழுதி இருக்கலாம்