01-01-2025, 12:11 AM
(This post was last modified: 01-01-2025, 12:19 AM by Manmadhan67. Edited 2 times in total. Edited 2 times in total.)
கார்த்திகை மாத அதிகாலை குளிரில் கணவனின் அருகில் போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்த புவனா, கணவன் ராஜேந்திரன் எழுந்தவுடன் அவளும் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தவள், நைட்டிக்குள் திமிறிய தன் பால் குடங்கள் இரண்டும், நைட்டியை கிழிப்பது போல நிமிர்ந்து நிற்க, கைகள் இரண்டையும் உயர்த்தி சோம்பல் முறித்து விட்டு பின் தன் அடர்ந்த நீளமான கூந்தலை கைகளால் அள்ளி எடுத்து கொண்டையிட்டாள்.
ராஜேந்திரன் தன் மனைவி புவனா சோம்பல் முறிக்கும் அழகை ரசித்து பார்த்து விட்டு, பின் அவளிடம் மணி அஞ்சு தான் ஆகுது புவி. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கனும்ன்னா படுத்து தூங்கு. நான் ரெஸ்ட் ரூமெல்லாம் போயிட்டு ஆறு மணிக்கு உன்னை எழுப்பி விடுறேன் என்றார் மனைவியின் முதுகை அன்பாக வருடி விட்டுக் கொண்டே.
இல்லைங்க, ஏகப்பட்ட வேலை இருக்கு. ஈவனிங் நாலு மணிக்கு பொண்ணு வீட்டிலே இருக்கனுமில்லே. இப்ப இருந்து எல்லாம் ரெடி பண்ண ஆரம்பிச்சா தான் சரியா இருக்கும் என்ற படி படுக்கையை விட்டு இறங்கினாள் புவனா. சொன்னா கேட்கப் போறியா? சரி நான் எதாவது ஹெல்ப் பண்ணனும்ன்னா சொல்லு. செய்றேன் என்றார் ராஜேந்திரன்.
[b]புவனா (ரமேஷின் அம்மா, ராஜேந்திரனின் மனைவி)[/b]
![[Image: 1.jpg]](https://i.ibb.co/tcQZVGR/1.jpg)
ம்... சரிங்க. முதல்லே சொல்ல வேண்டியவங்களுக்கெல்லாம் போன் பண்ணி சொல்லிட்டீங்களான்னு ஒரு டைம் செக் பண்ணிக்கங்க. யாராவது விட்டு போயிருந்தா அப்புறம் அதை ஒரு பெரிய ப்ரசனையாக்கி சண்டைக்கு வருவாங்க. பொண்ணு வீட்டுக்கு போறதுக்கு வேன் புக் பண்ணிருப்பீங்கல்லே. அவங்களுக்கு கரெக்டா ஈவனிங் மூணு மணிக்கு வண்டியை இங்கே கொண்டு வர சொல்லி போன் பண்ணி சொல்லிடுங்க. அப்புறம் ஒரு முக்கியமான விசயம். ரமேஷ் கல்யாண பேச்சு ஆரம்பிச்சதிலே இருந்து இதை உங்க கிட்டே சொல்லனும்ன்னு நினைச்சு மறந்து மறந்து போயிடுது. இரண்டாவது ப்ளோரை ஆளுங்க விட்டு க்ளீன் பண்ணி ஒரு பேமிலிக்கு வேண்டிய எல்லாமே வாங்கி போட்டிருங்க. ரமேஷீக்கு கல்யாணமாகி அவனுக்குன்னு பொண்டாட்டி வரப் போறா, இனி தனி குடும்பம்ன்னு ஆனப்புறம், அவனும் அவன் பொண்டாட்டியும் கீழே தனி பெட்ரூம்லே படுக்கிறது வசதியா இருக்காது. அவனுக்குன்னு ஒரு ப்ளோர் குடுத்திட்டா தான் சரியா இருக்கும். அவனும் பவித்ராவும் அங்கே தானே தங்க போறாங்க என்றாள் புவனா.
எல்லாவற்றிக்கும் தலையாட்டிய ராஜேந்திரன், மனைவி புவனா படுக்கையறையை விட்டு வெளியேறி கதவை சாத்தியதும் திரும்பவும் போர்வையை தலை வரை இழுத்து போர்த்திக் கொண்டு படுத்து தூங்க ஆரம்பித்து விட்டார். மீண்டும் ஒரு தூக்கம் போட்டு விட்டு ராஜேந்திரன் படுக்கையை விட்டு எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு படுக்கையறையை விட்டு வெளியில் வந்து ஹாலுக்கு வந்த போது மணி காலை எட்டை தாண்டியிருந்தது.
ஹாலை ஒட்டி அமைந்திருந்த மாடிக்கு செல்லும் படிக்கட்டில் ஃபர்ஸ்ட் ப்ளோர் வீட்டிலிருந்து போனில் பேசிக் கொண்டே இறங்கி வந்த தன் மருமகன் மாதவனை கண்டு ராஜேந்திரன் தான் அமர்ந்திருந்த சோபாவில் இருந்து எழுந்து நிற்க முயற்சி செய்தார். மாமனாரை சற்று கோபத்துடன் பார்த்த மருமகன் மாதவன் கையால் அவரை அமரும்படி சைகை செய்து கொண்டே போனை பேசி முடித்து விட்டு மாமனாரை பார்த்து நான் வரும்போது எல்லாம் இந்த மாதிரி எழுந்து நின்று மரியாதை தர வேண்டாம் என்று பலமுறை சொல்லி இருக்கிறேன் மாமா. ஏன் மாமா திரும்பத் திரும்ப இந்த மாதிரி செய்யறீங்க? நீங்க என்ன விட வயசுலே எவ்வளவு பெரியவர்? இப்படி செய்யலாமா? என்று உரிமையோடு கோபித்துக் கொண்டான்.
![[Image: 2.jpg]](https://i.ibb.co/LN2RRhV/2.jpg)
கணவன் ராஜேந்திரன், மருமகன் மாதவன் இருவருக்கும் ட்ரேயில் டீக் கோப்பைகளை வைத்து எடுத்துக் கொண்டு வந்த புவனா மருமகனை பார்த்து கிண்டலாக, உங்க மாமனாருக்கு வயசாயிடுச்சுன்னு கிண்டல் பண்றீங்களா மாப்பிள்ளை என்று கேட்டு விட்டு சிரித்தாள். அதற்கு மாதவன் தன் மாமியார் புவனாவை திரும்பி பார்த்து, ஐயோ நீங்க வேற ஏன் அத்தை? நான் அப்படியெல்லாம் சொல்லலை. மாமாக்கு என்ன குறைச்சல் இப்ப. இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கலாம்ங்கற மாதிரி யங்கா தானே இருக்காரு என்று தன் பங்குக்கு அவனும் கிண்டலாக பதில் சொன்னான். ராஜேந்திரன் அதற்கு ஐயோ மாப்ளே... இவ ஒருத்தியே போதும் மாப்பிள்ளை எனக்கு என்று மனைவியை பார்த்து அஞ்சுவது போல நடிக்க, புவனா அது... அந்த பயம் இருக்கனும். மாப்பிள்ளை எதோ கிண்டலுக்கு சொல்றதை வைச்சு அந்த மாதிரி நினைப்பெல்லாம் இருந்தா நடக்கறதே வேற என்று கணவனை பார்த்து போலி கோபத்தோடு மிரட்ட, எல்லோரும் கலகலவென்று சிரித்தனர்.
புவனா மாதவனை பார்த்து சரி என் பொண்ணு, என் சீமந்த புத்திரி, காவ்யா மஹாராணிக்கு இன்னும் விடியலையா? மணி எட்டை தாண்டிட்டு இருக்கு, மஹாராணி இன்னும் வெளியே வரலை. இன்னைக்கு ரமேஷ் நிச்சயதார்த்தம்ன்னு நினைவிருக்கு இல்லை. எவ்ளோ வேலை கிடக்கு. இன்னும் எந்திரிக்கலையா அந்த கழுதை என்று கேட்டாள். அதற்கு மாதவன், இல்லை அத்தை, ரமேஷ் வொர்க் கொஞ்சம் அதிகம்ன்னு காவ்யா கிட்டே சொல்லிருக்கான். அதான் அக்கவுண்ட்ஸ் எல்லாம் நைட் ஒரு மணி வரைக்கும் லேப்லே செக் பண்ணிட்டிருந்தா. தூங்க லேட் ஆகிடுச்சு. இன்னும் தூங்கிட்டு தான் இருக்கா. நானும் அவளை தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு விட்டுட்டேன் என்றான்.
ராஜேந்திரன் என்ன வொர்க் அதிகம். எல்லாம் என் வருங்கால மருமகள் பவித்ரா கூட போன்லே பேசுறதுதான் முக்கியமான வொர்க் அவனுக்கு இப்பெல்லாம். சரி கல்யாணம் ரமேஷுக்கு, ஐயா இன்னும் பெட்ரூமை விட்டு வெளியே வரலை. அவனை போய் எழுப்பி விடுடி என்றார். உடனே புவனா, மகனுக்கு பரிந்துக் கொண்டு, சின்ன சிறுசுங்க அப்படி தான் இருப்பாங்க. நீங்க எதுக்கு அதையெல்லாம் கண்டுக்குறீங்க என்று கணவனை கடிந்துக் கொண்டாள். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே க்ரவுண்ட் ப்ளோரில் ராஜேந்திரன் புவனாவின் படுக்கையறையை ஒட்டி அமைந்திருந்த இன்னொரு பெட்ரூமிலிருந்து வெளியில் வந்த ரமேஷ், எல்லாம் எழுந்தாச்சு. நானும் கொஞ்சம் கம்பெனி அக்கவுண்ட்ஸ் எல்லாம் செக் பண்ணிட்டு லேட்டா தான் தூங்கினேன் என்று சொல்லிக் கொண்டே ஹாலுக்கு வந்து ஒரு ஷோபாவில் சோர்வாக சரிந்தான்.
புவனா மகன் ரமேஷை பார்த்து உனக்கு டீ கொண்டு வரவாடா என்று கேட்க, அவன் ம் என்றான். மாதவன் பொதுவாக ரமேஷ் ராஜேந்திரன் இருவரையும் பார்த்து பஷீர் அங்கிள் போன் பண்ணிருந்தார் மாமா. அந்த குமரன் மேட்டரை கொஞ்சம் சீக்கிரம் செட்டில் பண்ண சொன்னாரு. அவன் பேச்சு சரியில்லைன்னு சொல்ல சொன்னாரு என்றான். குறுக்கிட்ட புவனா, அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் மாப்பிள்ளை. கல்யாண காரியம் துவங்கிருக்கும் போது கொஞ்ச நாள் பிஸினெஸ் விசயத்தையெல்லாம் ஆபிஸ் ஸ்டாஃப் கிட்டே பார்க்க சொல்லிட்டு எல்லோரும் கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருங்க. அதுவும் ரமேஷை கொஞ்சம் ப்ரீயா இருக்க விடுங்க. பிஸினெஸ் எப்பவும் தான் இருக்கும். எங்கே போக போகுது. கல்யாணம் எவ்ளோ முக்கியமான விசயம். வாழ்க்கைலே ஒரு முறை வர விசயம் என்றாள்.
ராஜேந்திரனும் மாதவனை பார்த்து, விடுங்க மாப்பிள்ளை, நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் நாம ரெண்டு பேரும் உட்கார்ந்து ஒரு நாள் அக்கவுண்ட்ஸ் எல்லாம் செக் பண்ணிட்டு பேங்க் விசயத்தையும் கொஞ்சம் கவனிச்சா எல்லாம் டேலியாகிடும். பார்த்துக்கலாம். இப்போதைக்கு பிஸினெஸ் விசயங்கள்லே இருந்து ரமேஷை ரிலீவ் பண்ணி விடுங்க என்றார். அதுக்கில்லை மாமா, வொர்க்கிங் பார்ட்னரா ரமேஷை தான் ரிஜிஸ்டர் பண்ணிருக்கோம். எந்த டாக்குமெண்ட்ஸ்னாலும் அவன் தான் சைன் பண்ணனும். அதனாலே சில முக்கியமான விசயங்களை ரமேஷ் கிட்டே அப்பப்ப சொல்லிடனும்ன்னு தான் சொன்னேன். நான் பாத்துக்கிறேன் மாமா. நீங்க கல்யாண வேலையை பாருங்க என்றான்.
ரொம்ப தேங்க்ஸ் மாப்பிள்ளை என்று மருமகனை நன்றியோடு பார்த்தாள் புவனா. ஐயோ... இப்படி எல்லாம் பேசி என்னை வேத்தாள் ஆக்கிடாதீங்க அத்தை. எந்த வேலைக்கு போனாலும் செட் ஆகாம இருந்த என்னை உங்க பிஸினெஸ்லேயே பார்ட்னரா சேர்த்துக்கிட்டு உங்க வீட்டிலேயே ஒரு போர்ஷனும் குடுத்து என்னை சப்போர்ட் பண்ணிருக்கீங்க நீங்களும் மாமாவும். இந்த உதவிக்கே நான் உங்களுக்கு காலம் பூரா நன்றி சொல்லனும் என்று சொல்லிக் கொண்டிருந்த போது, மாடிப் படிகளில் இறங்கி வந்த மாதவனின் மனைவியான ராஜேந்திரன் புவனா தம்பதியரின் முதல் வாரிசு காவ்யா, ஐயோ... அப்படியே சீரியல்லே வர மாதிரி இருக்கு. ரொம்ப நெஞ்சை நக்காதீங்க. மாமனார் மாமியாருக்கு ஐஸ் வைச்சது போதும், நான் சொன்ன மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை வர சொல்லிட்டீங்களா இல்லையா என்றாள்.
அருகில் வந்த மகள் காவ்யாவின் தலையில் நங்கென்று பலமாகவே குட்டிய புவனா, என்னடி வாய் ஓவரா நீளுது. மாப்பிள்ளை கிட்டே மரியாதையா பேச கத்துக்க என்றாள். தலையை தடவிக் கொண்டே, நீயெல்லாம் ஒரு அம்மாவா? மருமகனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு மக தலைலே இப்படி குட்டுறே என்று தன் அப்பாவின் அருகில் சென்று அமர்ந்தாள். காவ்யா மாதவனின் போட்டோ
ராஜேந்திரன் மகளின் சிணுங்கிய முகத்தை கண்டு சிரித்துக் கொண்டே, சரி அதென்ன மேக்கப் ஆர்ட்டிஸ்ட்? ரமேஷுக்கு மேக்கப் போட போறீங்களா என்ன? என்றார். அதை கேட்டு சத்தமாக சிரித்த மாதவன் மேக்கப் கல்யாண மாப்பிள்ளைக்கு இல்லை மாமா. உங்க பொண்ணுக்கு தான். கல்யாணமாகி அஞ்சு வருசம் ஆக போகுது. என்னமோ இவளுக்கு கல்யாணம் மாதிரி மேக்கப் போட தனியா ஒரு ஆர்ட்டிஸ்ட்டை வர சொல்லிருக்கா. அதுக்கு சார்ஜ் 25000. எல்லாம் கம்பெனி கணக்கு என்றான்.
சரி விடுங்க மாப்பிள்ளை, தினமுமா செய்றா. தம்பிக்கு நிச்சயதார்த்தம். நாலு பேரு வருவாங்க போவாங்க. அவங்க முன்னாடி கொஞ்சம் அழகா தெரியனும்ன்னு செலவு பண்றதிலே என்ன தப்பு என்றார் ராஜேந்திரன் மகளுக்கு ஆதரவாக. இந்த கேலி கிண்டலால் காவ்யாவின் முகம் வாடுவதை கவனித்த மாதவன் அதுக்கு சொல்லலை மாமா... காவ்யா இயற்கையாவே அழகு தானே மாமா. அவளுக்கு மேக்கப் எல்லாம் அவசியமே இல்லைன்னு சொல்ல வந்தேன் என்று சொல்ல அவனை நோக்கி பழிப்பு காட்டினாள் காவ்யா.
ராஜேந்திரன் மருமகனின் சாமர்த்தியத்தை கண்டு சரியான ஆளு மாப்பிள்ளை நீங்க. இல்லைன்னா என் ரவுடி பொண்ணு காவ்யா கூட குப்பை கொட்ட முடியுமா என்று சொல்லி விட்டு டீயை குடிக்க துவங்கினார். புவனா மருமகன் மாதவனை பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு சமையலறை வேலைகளை கவனிக்க உள்ளே சென்று விட்டாள்.
இந்த பேச்சுகள் எதிலும் கலந்துக் கொள்ளாமல், கையில் மொபைலை வைத்து நோண்டிக் கொண்டு, வேறு எதிலோ கவனமாக இருந்த ரமேஷ் தான் இந்த கதையின் கதாநாயகன். 27 வயது இளம் காளை. அப்பாவின் எலக்ட்ரிகல் ஏஜென்சியில் பார்ட்னராக இருக்கிறான். எம்.பி.ஏ முடித்தவன். இன்று அவனுக்கு தான் நிச்சயதார்த்தம்.
அப்பா ராஜேந்திரன், நகரில் மிகப் பெரிய எலக்ட்ரிகல் ஏஜென்சியின் ஓனர். இப்பொழுது 55 வயது. தன் 40 வயது முதல் லீடிங் கம்பெனிகளின் பொருட்களுக்கு பெரிய அளவில் டீலர்ஷிப் எடுத்து ரிடெய்ல் ஹோல் சேல் என்று பிஸினெஸ் நடத்தி வருகிறார். இரண்டு ஷோ ரூம்களும் உண்டு. புவனா ரமேஷின் அம்மா. அவளும் கல்லூரி வரை சென்று படித்தவள் என்றாலும் வீட்டோடு சரி. ஒரு குணமான நல்ல இல்லத்தரசியாக ராஜேந்திரன் குடும்பத்தின் ஹோம் மேக்கர். 49 வயது குடும்ப தலைவி. இவர்களுடைய ஒரே மகள், முதல் வாரிசு காவ்யா. இப்போது வயது 29. ஆனால் பார்த்தால் இருபது என்று சொல்லக் கூடிய அளவுக்கு அழகு பிசாசு. கொஞ்சம் சேட்டை பிடித்த பெண். அவளுடைய காதல் கணவன் மாதவன். வயது 31. மாமனார் ஐம்பது வயதை கடந்து விட்டதால் தான் பார்த்து வந்த வேலையை உதறி விட்டு வீட்டோடு மாப்பிள்ளையாக மாமனாரின் பிஸினெஸ்ஸில் பார்ட்னராக சேர்ந்துக் கொண்டவன்.
ரமேஷ்...
கதையின் நாயகன். கதாநாயகன். வயது 27. இவனும் எம்.பி.ஏ படித்திருக்கிறான். அப்பாவின் பிஸினெஸ்ஸுல் வொர்க்கிங் பார்ட்னர் இவன் தான். கிட்டத்தட்ட முதலாளி இவன் தான். 25 வயதில் அப்பாவின் பிஸினெஸ்ஸுல் இணைத்துக் கொண்டு, இரண்டே வருடத்தில் அபாரமான வளர்ச்சியடைந்து, ஆறு மாதங்கள் முன் தான் அவர்கள் அதுவரை இருந்த பரம்பரை சொத்தான பழைய கால வீட்டை காலி செய்து விட்டு, ரமேஷின் மேற்பார்வையில் கட்டி முடிக்கப்பட்ட மூன்று ப்ளோர் கொண்ட ஆடம்பர பங்களாவுக்கு குடி பெயர்ந்தனர்.
![[Image: 4.jpg]](https://i.ibb.co/R39cQGj/4.jpg)
காவ்யா (ரமேஷின் அக்கா)
![[Image: 3.jpg]](https://i.ibb.co/b3ysPgh/3.jpg)
ரமேஷ் பார்க்க வட இந்திய கதாநாயகன் போல மீசை இல்லாமல் மிகவும் இளமையாக கலராக இருப்பான். சாக்லெட் பாய். மிகவும் மென்மையானவன். வீடு கட்டி குடி வந்த ராசியோ என்னமோ, அவனுக்கு திருமணமும் உடனே கூடி வந்து விட்டது.
இது தான் நம் கதாநாயகன் ரமேஷின் விவரம் அவன் குடும்பத்தின் விவரம். சரி இனி நம் கதாநாயகன் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகும் பெண், நம் கதையின் கதாநாயகி யாரென்று பார்ப்போமா. வாருங்கள், பெண் வீட்டுக்கு போவோம்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.