Misc. Erotica சொன்னா கேளு அனிதா....(completed)
#21
பாகம் - 8

இரவு மணி 7

கட்டி போடப்பட்டு இருந்த சேதுவிடம்,"டேய் சேது,நீ இப்படி செய்வே என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கலடா.கூலி கொடுக்கிற முதலாளிகிட்ட இப்படி துரோகம் பண்றீயே உனக்கு வெக்கமா இல்ல."ARP கேட்க,

போதை தெளிந்து இருந்த சேது, தன் நிலைமையை புரிந்து கொண்டான்.இதற்கு மேல் தப்பிக்க வழி இல்லை என அவனுக்கு தெள்ளத்தெளிவாக புரிந்தது.என்ன தான் அழுது புலம்பினாலும்,மன்னிக்கும்படி மன்றாடி வேண்டினாலும் கண்டிப்பா ARP விடமாட்டான் என்று அவனுக்கு தெரியும்..அதனால் துணிந்து"டேய் ARP,நீ மட்டும் என்னடா என் பொண்டாட்டியை பலவந்தப்படுத்தி  அனுபவித்து விட்டு அவளை விபசாரத்தில் தள்ளி விட்டவன் பொறம்போக்கு தானே நீ..அதுக்கு தான்டா நான் இப்படி செய்தேன்.."என கத்தினான்..

இவனுக்கு எப்படி விசயம் தெரிந்தது என ARP ஒரு நிமிசம் யோசித்தாலும் ,"யாருடா இதை உனக்கு சொன்னது.."என கேட்டான்.

"சொன்னது யாரா இருந்தாலும்  இப்போ எதுக்குடா,நான் சொன்ன விசயம் உண்மை தானே..!என்னை ஆசையா பூனைக்குட்டி மாதிரி சுற்றி சுற்றி வந்தாளே,அவளை போய் ஊரை விட்டு ஓடிப்போய்ட்டா என்று சொல்லி கதை கட்டி விட்டுட்டீயேடா..படுபாவி..அவளை போய்.. த்தூ...அப்படி என்னடா நானும்,அவளும் உனக்கு துரோகம் பண்ணோம்.."

ARP தாடையை சொரிந்து கொண்டு,"டேய் நீங்க ரெண்டு பேரும் தப்பு தான்டா பண்ணி இருக்கீங்க..முதல் தப்பு,நீ அழகான பொண்ணை கல்யாணம் பண்ணி கொண்டது. நான் அழகான பொண்ணை மட்டும் தான் தொடுவென் என்று உனக்கே நல்லா தெரியும்..தெரிந்தும் கல்யாணம் பண்ணியது உன் தப்பு.ரெண்டாவது உன் பொண்டாட்டி என்ன தப்பு பண்ணினாள் என்று தெரிஞ்சுக்கோ..ஒழுங்கா என் கூட படுத்து அமைதியாக எழுந்து போய் இருந்தா உன் கூட வாழ்ந்து இருப்பா..அதை விட்டுட்டு உன் கிட்ட விசயத்தை சொல்வேன்,என்னை பழிவாங்குவேன் என்று சபதம் போட்டா..என்னை எதிர்ப்பது ஆம்பள என்றால் உயிரை எடுத்து விடுவேன்.ஆனா பொம்பள என்றால் சிகப்பு விளக்கு பகுதியில் விற்று விடுவேன்..அதனால் உன் பொண்டாட்டியை அங்கே விற்று விட்டேன்.இப்போ நீயும் என்னை எதிர்க்கிற..நீயும் ஆம்பளயா போயிட்டே,அடுத்து நான் என்ன பண்ண போறேன் என்று உனக்கே தெரியும்"என் ARP தன் உள்ளங்கையை சொரிய,ARP அடியாட்கள் கத்தியோடு சேதுவை வெட்ட நெருங்கினார்கள்.

மரணம் நெருங்குவதை கண்டு"வேணாம் ARP...!என்னை விட்டுடு"என சேது கத்தினான்..

"டேய் ஒரு நிமிஷம் நில்லுங்கடா.."என ARP சொன்னவுடன் அவன் பேச்சுக்கு கட்டுப்பட்டு அங்கேயே நின்றனர்.

"என்கிட்ட ரொம்ப நாளாக சேது வேலை பார்த்திட்டு இருந்திருக்கான்.அதனால் மற்றவர்களுக்கு கொடூரமாக கொடுக்கிற தண்டனை மாதிரி எல்லாம் வேண்டாம்.அவனுக்கு சாராயம் சாப்பிட கொடுங்க..நல்லா போதை ஏறிய உடனே அவனை தென்னை உரிக்கும் கடப்பாரையில் சொருகிடுங்க..போதையிலேயே சாகட்டும். சேது தண்ணி அடிச்சுட்டு மட்டை உரிக்கும் பொழுது தவறி கடப்பாரை வயிற்றில் இறங்கிடுச்சி என்று தான் வழக்கு பதிவாகனும் சரியா..!"என்று ARP சொல்ல அடியாட்கள் தலை ஆட்டினர்

"சரிங்க முதலாளி.. நீங்க வீட்டுக்கு போங்க,மற்றதை நாங்க பார்த்துக்கிறோம்."

"ஒழுங்கா வேலை முடிச்சிட்டு எனக்கு ஃபோன் பண்ணுங்க."என ARP கிளம்பினான்.

"சரிங்க முதலாளி"

வலுக்கட்டாயமாக சாராயத்தை சேதுவின் வாயில் ஊற்றினார்கள்.அவனுக்கு போதை நன்றாக ஏறிய உடன் நட்டு வைக்கப்பட்டு இருந்த கடப்பாரையில் அவனை சொருக,அவன் உடல் துள்ளி அடங்கியது.அவன் தலை தொங்கிய உடன் அடியாட்கள் அகன்றனர்.ஆனால் சேது உயிர் முற்றிலும் பிரியவில்லை.

கொஞ்ச நேரம் கழித்து தோப்பின் வழியே சென்ற இருவர்,கடப்பாரையில் சொருகி வைக்கப்பட்டு இருந்த சேதுவின் உடலை பார்த்தனர்.

உடனே அவனை அள்ளி போட்டு கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தனர்..அந்த நேரம் டூட்டியில் இருந்தது அனிதா..!அனிதா சேதுவை பரிசோதித்து பார்க்க,உடனே தேவையான முதலுதவிகளை செய்தாள்.ஆனால் இரத்தம் நிறைய வெளியேறி விட்டதை அறிந்த அனிதா அவனை காப்பாற்ற முடியாது என உணர்ந்து கொண்டாள்.உடனே போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொண்ட அனிதா,"ஹலோ இன்ஸ்பெக்டர் இருக்காங்களா..நான் GH இல் இருந்து டூட்டி டாக்டர் பேசறேன்.."

"சொல்லுங்க டாக்டர்,நான் சப் இன்ஸ்பெக்டர் தான் பேசறேன்..இன்ஸ்பெக்டர் பக்கத்து ஊரு திருவிழா பந்தோபஸ்துக்கு போய் இருக்கார்."

"சார்,இங்கே சேது என்பவரை அட்மிட் பண்ணி இருக்காங்க..பார்த்தா கொலை மாதிரி தெரியுது.நினைவு இன்னும் திரும்பல.எப்ப வேணாலும் நினைவு வரும்.நீங்க உடனே மாஜிஸ்திரேட்டை கூட்டி கொண்டு வந்தீங்கன்னா மரண வாக்குமூலம் வாங்க சரியா இருக்கும்."

"எந்த சேது மேடம்,அந்த ARP கிட்ட வேலை செய்யறானே அவனா.."என சப் இன்ஸ்பெக்டர் கேட்டான்.

அனிதா பக்கத்தில் சேதுவை அட்மிட் பண்ண உள்ளூர் ஆட்களை பார்த்து,"ஏம்பா,இந்த ஆளு ARP கிட்ட வேலை பார்ப்பவரா..!"என கேட்டாள்.

அவர்கள் "ஆமா"என தலையாட்டினார்கள்.

அனிதா உடனே சப் இன்ஸ்பெக்டரிடம்,"ஆமா சார்,நீங்க சொன்ன ஆள்கிட்ட வேலை பார்ப்பவராம்.."

"மேடம்,எப்படியாவது அவரை காப்பாற்றுங்க..நான் உடனே வரேன்.."சப் இன்ஸ்பெக்டர் சொல்ல,

"சார்,அவரை காப்பாற்றுவது கஷ்டம்.நீங்க மாஜிஸ்ட்ரேட்டை கையோடு கூட்டிட்டு வாங்க.."என்று போனை வைத்தாள்.

ARP வீட்டில் ஃபோன் அழைத்தது..

தூக்க கலக்கத்தில் எழுந்த ARP கடுப்புடன் போனை எடுத்து,"என்னடா இந்த நேரங்கெட்ட நேரத்தில் ஃபோன் பண்ணிட்டு இருக்கீங்க.."

"ஐயா நான் செல்வம் பேசறேன்,ஒரு தப்பு நடந்து போச்சு. சேது இன்னும் சாகல."

"என்னடா சொல்றீங்க.இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி தானேடா செத்துட்டான் என்று சொன்னீங்க.."

"ஆமா அய்யா..!தலை தொங்கிய உடனே அவன் செத்துட்டான் என்று நினைச்சோம்.ஆனா உயிர் கொஞ்சூண்டு ஒட்டி இருந்து இருக்கு..அவனை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி இருக்காங்க..ஆனா நீங்க கவலைப்பட வேண்டாம் அய்யா..அவனை ஹாஸ்பிடலில் காப்பாற்ற முடியாது என்று சொல்லி இருக்காங்க.."

"அடப்போடா முட்டாள்,அவன் வாயை திறந்து வாக்குமூலம் கொடுத்தா நான் ஜெயிலுக்கு தான் போகனும்..நீ என்ன பண்ணுவீயோ தெரியாது.சேது வாயை திறக்க கூடாது..அவனை முடிச்சிட்டு எனக்கு ஃபோன் பண்ணு."

"சரிங்கய்யா" என போனை வைத்தான்.

ARP உடனே இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் செய்தான்.ஆனால் திருவிழாவில் ஏற்பட்டு இருந்த கலவரத்தில் இன்ஸ்பெக்டர் தடியடி நடத்தி கொண்டு இருக்க,ARP போனை அவனால் எடுக்க முடியவில்லை.முதன்முறையாக ARP என்ன செய்வதென்று தவித்தான்.

சப் இன்ஸ்பெக்டர் உடனே,ஹாஸ்பிடலில் வந்து சேர்ந்தான்.ARP அடியாள் சேது என்பதால் பலத்த காவல் போடப்பட்டது.

செல்வம் மருத்துவமனைக்கு வர,அங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ந்தான்.பாதுகாப்பை மீறி செல்வத்தினால் உள்ளே நுழைய கூட முடியவில்லை..

சப் இன்ஸ்பெக்டர் உடனே,ஹாஸ்பிடலில் வந்து சேர்ந்தான்.

"டாக்டர், சேது எப்படி இருக்கான்.."என கேட்டார்.

அனிதா அவரை பார்த்து,"மாஜிஸ்திரேட் வரவில்லையா"என கேட்டாள்.

"தகவல் கொடுத்து விட்டேன் டாக்டர்..அவரும் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்."

அந்த நேரத்தில் நர்ஸ் ஓடிவந்து,"சேதுவுக்கு நினைவு வந்துவிட்டது டாக்டர்"என கூறினாள்..

எல்லோரும் அவசர சிகிச்சை பிரிவில் நுழைய, சேது கண்விழித்து இருந்தான்.

சப் இன்ஸ்பெக்டர் வாக்குமூலம் வாங்க முற்பட,அனிதா தடுத்தாள்.

"சார்,சட்டப்படி நீங்க வாக்குமூலம் வாங்க கூடாது.."

"டாக்டர்,மாஜிஸ்திரேட் வரும் முன்பு அவன் இறந்து விடுவான்.பரவாயில்லை நான் வாங்கறேன்."

"அப்ப ஒன்னு பண்ணுங்க சப் இன்ஸ்பெக்டர்,நீங்க கொஞ்சம் வெளியே இருங்க,"என்று சொல்லிவிட்டு கதவை தாளிட்டாள்.

உதவி டாக்டர் ரகு,மற்றும் நர்ஸ் விமலாவை துணைக்கு வைத்து கொண்டு வாக்குமூலம் வாங்க ஆரம்பித்தாள்.

தன்னை கொலை செய்தது ARP தான் அட்சரம் பிசகமால் ஒப்பித்து விட்டு சேது கண்ணை மூடினான்.

வாக்குமூலத்தை வாங்கிய பிறகு விமலா மற்றும் ரகுவிடம் சாட்சி கையேழுத்து வாங்கி கொண்டு தானும் கையெழுத்து போட்ட அனிதா முத்திரை இட்டு சீல் செய்து மூடினாள். அனிதா வெளியே வரவும்,நீதிபதி என்று அடையாளம் போடப்பட்டு இருந்த கார் மருத்துவமனை வளாகத்தில் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது...

நேராக மாஜிஸ்திரேட் அருகில் வந்த அனிதா,அவரிடம் வாக்குமூலம் வாங்கிய விவரத்தை சொல்ல,"பொறுப்பா செயல்பட்டு இருக்கீங்க.."என பாராட்டிவிட்டு வாக்குமூலத்தை வாங்கி சென்றார்.

சேது கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் தி கிரேட் ARP வாழ்வில் முதன்முறையாக கைது செய்யப்பட்டான்.

[Image: 1725677680817.jpg]
[+] 4 users Like Viswaa's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: சொன்னா கேளு அனிதா.... - by Viswaa - 08-09-2024, 04:07 PM



Users browsing this thread: 28 Guest(s)