Misc. Erotica சொன்னா கேளு அனிதா....(completed)
#8
பாகம் - 5

தலையில் தாக்கப்பட்டு கட்டு போட்டு அட்மிட் ஆகி இருந்த அனிதாவை பார்க்க அவளின் காதலன் சூர்யா வந்து இருந்தான்..

"என்ன அனி..!என்ன நடந்துச்சு.."என அவன் கேட்க,

"உண்மையா நடந்த கொண்டமைக்கு கிடைத்த பரிசு"என நடந்த சம்பவத்தை விவரித்தாள்.

"அனி,நீ நேர்மையாக இருப்பது தவறு இல்ல.ஆனா நீ நேர்மையாக நடந்து கொள்ளும் பொழுது அதனால் பாதிக்கப்படும் சிலரால் உனக்கு ஏற்படும் ஆபத்தை நினைச்சா தான் எனக்கு கலக்கமா இருக்கு."

"எனக்கு புரியல சூர்யா..!என்னை என்ன பண்ண சொல்றே..!"

"அதாவது அனி,குறைந்தபட்சம் இந்த மாதிரி மோசமான ஆட்களை பகைத்து கொள்ளாமல் கொஞ்சம் வளைந்து கொடுத்து போயேன்.நீ ஒரு பெண் ,என்னென்ன பாதிப்பு  வரும் என உனக்கே தெரியும்.."என யதார்த்தத்தை சூர்யா பேசினான்..

"மிஞ்சி போனால் இந்த உயிர் போகுமா சூர்யா..?போனால் போகட்டும்.ஆனா நான் உயிரோடு இருக்கும் வரை, செய்யும் வேலைக்கு உண்மையா தான் இருப்பேன்.."

"அய்யோ..!நான் உயிரை பற்றி பேசல அனி,அதுக்கும் மேல.நீயும் ரொம்ப அழகா இருக்கே..என்ன பாதிப்பு வருமென உனக்கே புரியும்"என சூரியா எச்சரித்தான்.

"சூரியா..நீ சொல்ல வருவது எனக்கு நல்லா புரியுது..நீ சினிமா பார்த்து பார்த்து ஓவரா கற்பனை பண்ற.நீ சொல்ற மாதிரி சம்பவங்கள் எல்லாம் சினிமாவில் தான் நடக்கும்.நிஜ வாழ்க்கையில் நடக்காது"என சொல்லி சிரித்தாள்

"எது..?நான் ஓவரா கற்பனை பண்றேனா..நீதான் யதார்த்த வாழ்க்கையை புரிஞ்சிக்காம கற்பனை வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு இருக்கே அனி..இந்த உலகம் ரொம்ப ரொம்ப மோசமான ஆட்களால் நிறைஞ்சு இருக்கு.உள்ளுக்குள் வஞ்சகத்தை வைத்து கொண்டு வெளியில் சிரித்து பேசும் உலகம் இது.சமயம் கிடைக்குமா என காத்து இருக்கும் ஓநாய்கள் இங்கே பல இருக்கு.."

"சூர்யா..போதும் போர் அடிக்குது.இந்த டாபிக்கை விடு.எனக்கு ஒரு உதவி மட்டும் செய்"

"என்ன உதவி சொல்லு அனி..!"

"எனக்கு இந்த சித்தி வீட்டில் தங்க கொஞ்சம் கூட பிடிக்கல..இங்கே எதுனா நல்ல வீடா வாடகைக்கு பார்த்து கொடேன்."

"ஏன் என்ன ஆச்சு..!"சூரியா புரியாமல் கேட்க,

"சித்தப்பா என்னை பார்க்கும் பார்வை கொஞ்சம் கூட சரி இல்ல சூர்யா..பார்வையாலேயே என்னை கற்பழிக்கிறான்.அவன் பார்வை படும் பொழுது என் உடம்பில் கம்பளி பூச்சி ஊர்வது மாதிரி இருக்கு.அதனால் தான் வேறு வீடு பார்க்க சொல்றேன்."

"சரி,நான் சீக்கிரம் பார்க்கிறேன்."என சூர்யா சாத்துக்குடி ஜுஸ் அவளுக்காக பிழிந்தான்.

"அக்கா..!என குரல் கேட்க,அங்கே சித்தி பொண்ணு மலர் நின்று கொண்டு இருந்தாள்.

"வா மலர்"

"அக்கா,உங்ககிட்ட இந்த லெட்டர் அம்மா கொடுக்க சொல்லுச்சு.."

Govt officials என்று போட்டு இருந்த லெட்டரை வாங்கி படிக்க,அனிதா முகம் மலர்ந்தது..

அதை பார்த்த சூர்யா,என்ன மேடம் லெட்டரை பார்த்த உடனே முகம் பூரிப்பா ஆயிடுச்சு.என்ன தகவல் என்று சொன்னீங்கன்னா நானும் சந்தோஷம் ஆவென்.."

"சூர்யா..என்னோட பிராக்டீஸ் நம்மளோட சொந்த ஊருக்கு அருகில் கேட்டு அப்ளை பண்ணி இருந்தேனே.அது சம்பந்தமான ஆர்டர் தான் இது..ஆனா நான் கேட்ட தூத்துக்குடி இல்ல.தூத்துக்குடி பக்கத்தில் உள்ள புதுப்பேட்டை என்ற சின்ன ஊரு."

"பரவாயில்லையே..!அரசாங்கத்தில் சில சமயம் காசு கொடுக்காமல் கூட வேலை நடக்குது.இதுக்கு மேல அம்மணியை பார்க்க இவ்வளவு தூரம் கஷ்டபட்டு வர வேணாம்.அடிக்கடி sight அடிக்க நேரா வந்து விட வேண்டியது தான்."என சூரியா சிரித்தான்.

ஜெயிலில் இருக்கும் தங்கப்பனை பார்க்க,அவனது உறவினர் வந்து இருந்தான்..

"டேய் முட்டாள் தங்கப்பா...!உன் புள்ளை தான் முட்டாள்தனமா கொலை பண்ணிட்டு உள்ளே போய் உட்கார்ந்து இருக்கான்.இப்போ போய் அந்த டாக்டரை நீ ஆளு வச்சு அடிச்சா உன் மேல தானே சந்தேகம் வரும்..இப்ப பாரு அவ புகார் கொடுக்க உன்னை அள்ளி கொண்டு வந்து ஜெயிலில் போட்டுட்டாங்க.."

"டேய் ராயா..!என் புள்ளைக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந்தவ அவ.அவளை அப்படியே சும்மா விட சொல்றியா.."என தங்கப்பன் எகிறினான்.

"அவளை நான் சும்மா விட சொல்லல தங்கப்பா.ஆனா நாம சம்பவம் பண்ணும் பொழுது நாம தான் பண்ணோம் என யாருக்கும் வெளியே தெரியக்கூடாது.அந்த மாதிரி பண்ணனும்..நான் அந்த பொண்ணு அனிதாவை போய் கண்காணிச்சேன் .நல்லா இளசா, செக்கச்செவென்று மூக்கும் முழியுமா அழகா இருக்கா.அவளுக்கு ஒரு ஆப்பு வச்சுட்டு தான் உன்னை பார்க்க வந்து இருக்கேன்.."

"என்னடா..அது..!"தங்கப்பன் ஆர்வமா கேட்க,

"அவ அவளோட சொந்த மாவட்டத்துக்கு டிரான்ஸ்ஃபர் கேட்டு இருந்தது எனக்கு தெரிஞ்சது.அதுக்கு எனக்கு தெரிந்த அரசியல்வாதி மூலமா ஏற்பாடு பண்ணிட்டு வந்து இருக்கேன்.."

"ஏண்டா அவளுக்கு ஆப்பு வைக்கிறேன் என்று சொல்லிட்டு நல்லது பண்ணிட்டு வந்து இருக்கிறே.."

"டேய் அவசரக்குடுக்கி..சொல்றத முழுசா கேளு.தமிழ்நாட்டிலேயே crimerate அதிகமா இருக்கும் ஊரு தூத்துக்குடி பக்கத்தில் இருக்கும் புதுப்பேட்டை..அதுக்கு முழுக்க முழுக்க காரணம் அங்கே இருக்கும் ARP என்னும் அரக்கன்.அங்கே நடக்கும் போதைமருந்து கடத்தல்,கொலை,கொள்ளை என எல்லாவற்றுக்கும் காரணம் அவன் ஒருத்தன் தான்.அதுவும் இல்லாம
அவன் ஒரு சரியான பொம்பள பொறுக்கி.ஒரு அழகான பொண்ணு அவன் கண்ணில் பட்டால் போதும்,அதுக்கு அப்புறம் அவன்கிட்ட இருந்து தப்பவே முடியாது..இவளோ சொல்லவே வேணாம்,பேரழகி.அவன் கண்ணில் மட்டும் இவ பட்டா போதும்,அதுக்கு அப்புறம் நாம நினைச்சது தானா நடக்கும் பாரு.."என கண்சிமிட்டினான்.

"ஆகா...இப்ப புரியுது..பஞ்சும்,நெருப்பும் பக்கத்தில் பக்கத்தில் வச்சிட்டு வந்து இருக்கே.கூடிய சீக்கிரம் பஞ்சு பற்றி கொண்டு சாம்பலாக போகுது..உண்மையிலேயே நல்ல வேலை தான் பார்த்திட்டு வந்து இருக்கே ராயா.."என தங்கப்பன் சிரித்தான்.

[Image: P-20240902-032137.jpg]
[+] 6 users Like Viswaa's post
Like Reply


Messages In This Thread
RE: சொன்னா கேள் அனிதா.... - by Viswaa - 05-09-2024, 05:24 PM



Users browsing this thread: 33 Guest(s)