Misc. Erotica சொன்னா கேளு அனிதா....(completed)
#7
பாகம் - 4

சில நாட்களுக்கு பிறகு சூலூரில்,

   வழக்கமான வேலைகளை முடித்து கொண்டு அனிதா வீட்டுக்கு கிளம்ப தயார் ஆனாள்.

அங்கே வந்த காம்பவுண்டர்,"டாக்டர் இன்னிக்கு டூட்டி ஓவரா.."என கேட்டான்.

"இல்லை குப்புசாமி அண்ணே,கொஞ்சம் வேலை இருக்கு,வீட்டுக்கு போயிட்டு திரும்ப வரேன்..இன்னிக்கு இரவுக்குள் ஒரு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் போலீஸ் கேட்டு இருக்காங்க. டூட்டி டாக்டர் வேற இன்னிக்கு வரல..நான் தான் அட்டென்ட் பண்ணி ஆகனும்..வீட்டுக்கு போய்ட்டு refresh ஆகிட்டு உடனே வரேன்.

"சரிங்க டாக்டர்..நீங்க போய்ட்டு வாங்க..மற்ற பார்மலிடீஸ் நான் ரெடி பண்ணி வைக்கிறேன்."

தன் சித்தியின் வீட்டில் தான் அனிதா தங்கி இருந்தாள்.அவள் சித்தியின் பெயர் காஞ்சனாமாலா.ஆள் மிக தடிமன்..பார்ப்பதற்கு அந்த காலத்து தில்லானா மோகனாம்பாள் படத்தில் பத்மினிக்கு அம்மாவாக வரும் பெண்மணி போல இருப்பார்.உருவத்தில் மட்டுமல்ல குணத்திலும் அப்படியே.. அனிதா அங்கே தங்க அனுமதி கேட்க முதலில் காஞ்னாமாலா ஒப்புக்கொள்ளவே இல்லை.ஆனால் மாசா மாசம் வாடகை கொடுப்பது போல பணம் தரேன் என்று அனிதா சொல்ல பல் இளித்து கொண்டு ஒப்பு கொண்டாள்.இதுவரை தான் தங்கி இருந்த ஹாஸ்டல் சாப்பாடு தான் மோசமான சாப்பாடு என அனிதா எண்ணி இருந்தாள்.ஆனால் அதை விட மோசமான சாப்பாடு சித்தி செய்யும் அறுசுவை உணவு என்று இங்கே வந்த பிறகு தான் அனிதாவுக்கு தெரிந்தது.சாம்பார் செய்தால் அது சூடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்தது போல இருக்கும்..அதனால் ஓர் தயிர் பாக்கெட் வாங்கி வந்து சாதத்துடன் கலந்து அனிதா சாப்பிட்டு விடுவாள்.ஆனால் எவ்வளவு நாள் தான் தயிர் சாப்பாட்டையே சாப்பிடுவது..!அதனால் வேறு வழியின்றி தானே சமையல் செய்ய  தொடங்கி விட்டாள்.இருந்தாலும் காஞ்சனாமாலா,சமையலுக்கும் சேர்த்து அனிதாவிடம் வசூல் செய்து கொண்டு இருந்த பணத்தை குறைத்து கொள்ளவில்லை.

வழியில் கொஞ்சம் காய்கறிகளை வாங்கி கொண்டு அனிதா வீட்டுக்கு வந்து சேர, காஞ்சனாமாலா ஹாலில் வெற்றிலை வாயில் போட்டு அதப்பி கொண்டு உட்கார்ந்து இருந்தாள்.

"இந்தாம்மா அனிதா ஒரு நிமிசம் இங்கே வாயேன்.."என்று அழைக்க,அனிதா அருகில் வந்தாள்.

"நைட் சமையலுக்கு தக்காளி இல்லையென்று நினைச்சிட்டு இருந்தேன்.நல்லவேளை நீயே வாங்கிட்டு வந்துட்டே..கொஞ்சம் தக்காளி கொடு"என கேட்டு கொண்டே உரிமையாக அவளே எடுத்து கொண்டு விட்டாள்.அனிதா செல்ல முயற்சிக்க,"அட ஒருநிமிஷம் நில்லு அனிதா,ரெண்டு,மூணுமுறை உன்னை தேடி பக்கத்து கிராமத்தில் இருந்து யாரோ வந்து கேட்டுட்டு போனாங்க.. பேரு கூட ஏதோ தங்கப்பன் என்று சொன்னாங்க.."

"யாரு.?என்ன விசயம்? எதுக்கு வந்து இருந்தாங்க சித்தி."

"தெரியல அனிதா..ஆனா ஏதோ ஹாஸ்பிடல் சம்பந்தமா முக்கியமான விசயம் என்று சொன்னாங்க..உன்கிட்ட தான் பேசணும் என்று சொன்னாங்க.."

"ஹாஸ்பிடல் விவகாரம் என்றால் ஹாஸ்பிடல் வர சொல்லுங்க சித்தி..இங்கே எல்லாம் வரவேண்டாம் என்று சொல்லிடுங்க.."என கண்டிப்புடன் சொல்லி விட்டு குளிக்க சென்றாள்.

குளித்து விட்டு அனிதா உடை மாற்றி கொண்டு இருக்க,அவள் சித்தப்பா வீட்டுக்குள் உள்ளே நுழைந்தார்..அனிதா அறையில் சத்தம் கேட்க,மெதுவாக பூனை போல ஜன்னல் ஓரம் சென்று எட்டி பார்க்க,அனிதா சுடிதாரின் மேல்பாகத்தை போட்டு கொண்டு இருக்க அவளின் சிக்கென்ற இடுப்பு மட்டுமே பார்க்க முடிந்தது."ச்சே இந்த முறையும் மிஸ் பண்ணிட்டேனே..ஒரு ரெண்டு நிமிஷம் முன்னாடி வந்து இருந்தால் அவளோட மொத்த அழகை பார்த்து இருக்க முடியுமே..என்ன வாளிப்பான உடம்பு,தளதளவென இருக்கு இவ தேகம்..யாருக்கு கொடுத்து வச்சு இருக்கோ" என பெருமூச்சு விட்டு கொண்டே நகர்ந்தான்..

அனிதாவை தேடி வந்த நபர் மீண்டும் வாசலில் வந்து நிற்க,காஞ்சனாமாலா அனிதாவை அழைத்தார்.

"அனிதா..!உன்னை தேடி ஆள் வந்து இருக்காங்க.."

கண்ணாடி பார்த்து பொலிவான முகத்தில் பொட்டு வைத்து கொண்டு இருந்த அனிதா,சத்தம் கேட்டு வெளியே வந்தாள்.

வாசல் பக்கம் நிழலாடிய உருவத்தை பார்த்து,"யார் நீங்க என்ன வேணும்"என கேட்டாள்.

ஒரு கைப்பையுடன் நின்று கொண்டு இருந்த அந்த ஆள்"டாக்டர்,உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்"என்றான்.

"எதுவாக இருந்தாலும் ஹாஸ்பிடல் வாங்க..இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் அங்கே வந்து விடுவேன்.."என அனிதா திரும்பி செல்ல முயற்சிக்க,

"இன்ஸ்பெக்டர் தான் உங்களை பார்க்க அனுப்பினார் டாக்டர்..அதுக்கு தான் இங்கே வந்து இருக்கேன்"

"சரி சீக்கிரம்  சொல்லுங்க..எனக்கு நேரமாச்சு"

"நான் நேரா விஷயத்துக்கு வரேன் டாக்டர்,என் பையனை ஒருத்தன் சாதி பெயரை சொல்லி திட்டிட்டான்.அவனும் நம்ம பையன் கூட பழகுற தோஸ்து தான்.அதனால் என் பையன் கொஞ்சம் கோபப்பட்டு அவன் கழுத்தை பிடிக்க,அந்த பையனுக்கு அல்ப ஆயுசு போல..பட்டுன்னு போயிட்டான்.அப்புறம் நான் தான் என் பையனை தேற்றி,எப்படியோ தற்கொலை மாதிரி செட்டப் செய்து விட்டேன்.இன்ஸ்பெக்டரும் தற்கொலை மாதிரி வழக்கை பதிவு பண்ணிக்கிறேன் என்று சொல்லிட்டார்.நீங்க மட்டும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கொஞ்சம் எங்களுக்கு சாதகமா எழுதி தந்தால் கேசை ஈசியா முடித்து விடலாம் என்று சொன்னார்.அதுக்கு தான் வந்து இருக்கேன் "என சொல்லி முடித்தார்..

அமைதியாக கேட்டு கொண்டு இருந்த அனிதா,"இங்கே பாருங்க மிஸ்டர்,ஒரு கொலையை பண்ணிட்டு, நீங்க தப்பு பண்ணது இல்லாம என்னையும் தப்பு பண்ண சொல்றீங்க..உங்களுக்கு கொஞ்சம் கூட பயம் இல்லையா"என கேட்டாள்.

"டாக்டர்..!என் பையன் சின்ன பையன்..இப்ப தான் அவனுக்கு கல்யாணம் ஆகி இருக்கு.இப்ப தான் அவன் வாழ்க்கை வாழ ஆரம்பிச்சு  இருக்கான்.."என கெஞ்சினார்.

"அப்போ இறந்த பையனுக்கு மட்டும் வாழ்க்கை இல்லையா மிஸ்டர்..செய்த தப்புக்கு தண்டனை அனுபவிச்சா தான் இன்னொரு தடவை தப்பு செய்ய பயம் வரும். போங்க.."

ஆனால் தங்கப்பன் விடாமல்"டாக்டர்,நீங்க சும்மா ஒன்னும் எழுதி தர வேணாம்.இது என் பொண்டாட்டிக்காக ஆசையா நான் செஞ்சது..ஐந்து சவரன் வைர அட்டிகை..இதை வச்சிகிட்டு எழுதி தாங்க."என அதை வெளியில் எடுத்தான்..

அதை பார்த்த உடன் காஞ்சனாமாலாவின் கண்கள் பேராசையால் விரிந்தன..ஆனால் அவள் ஆசையில் அனிதா மண்ணள்ளி போட்டாள்.

அனிதா கோபத்தில்  சிவந்த முகத்துடன்"ஏதோ அப்பா ஸ்தனாத்தில் இருக்கீங்க என்று மரியாதை கொடுத்து பேசி கொண்டு இருந்தேன். பணத்தால் என்னை வாங்க முடியும் என்று நினைச்சிங்களா..!ஒழுங்கா இதை எடுத்திட்டு போங்க..இல்ல நானே போலீசில் புகார் கொடுக்க வேண்டி இருக்கும்" என கத்தினாள்..

தங்கப்பன் பேசாமல் எடுத்து கொண்டு செல்ல,காஞ்சனாமாலா வாயிலும்,வயிற்றிலும் அடித்து கொண்டு புலம்பினாள்.

"அய்யோ, அய்யோ..வீடு தேடி வந்த மகாலட்சுமியை இப்படி தூக்கி எறியறாளே..உனக்கு கொஞ்சமாவது புத்தி இருக்கா..!"என கத்தினாள்.

"சித்தி..என் தொழில் நீங்க தப்பு செய்ய தூண்டினால் நான் வீட்டை விட்டு உடனே காலி பண்ண வேண்டி இருக்கும் பார்த்துக்கோங்க.."என அனிதா மிரட்ட காஞ்சனாமாலா அடங்கி போனாள்.இந்த ஓட்டை உடைசல் வீட்டுக்கு யாரு மாசம் ஐயாயிரம் வாடகை தருவாங்க.அப்புறம் வருகிற வருமானமும் போய்விடும் என அடங்கி விட்டாள்.ஆனால் அவள் சித்தப்பா அருகில் வந்து,

"இங்க பாரு  அனிதா,இந்த உலகத்தில் நீ மட்டும் ஒழுங்கா இருந்தா போதாது.. உன்னை சுற்றி இருக்கும் மற்றவர்களும் ஒழுங்கா இருக்கணும்.அவன் கேட்கிற மாதிரி நீ ரிப்போர்ட் கொடுக்கவில்லை என்றால் இன்னோரு டாக்டர்கிட்ட அவன் காசை கொடுத்து காரியத்தை சாதித்து கொள்ள தான் போறான்.கடைசியில் உனக்கு தான் நஷ்டம் "என்று அவர் சொல்ல,அதற்கு எதுவும் பதில் சொல்லாமல் அனிதா முறைத்து கொண்டே அமைதியாக சென்று விட்டாள்.

"அய்யோ,பிழைக்க தெரியாத பொண்ணா இருக்கே"என அவள் சித்தப்பா தலையில் அடித்து கொண்டார்.

கழுத்தில் உள்ள நகக்கீறல்களையும்,தூக்கில் இடப்பட்டதுக்கு இருந்த ஆதாரத்தையும் குறிப்பிட்டு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் அனிதா எழுதி கொடுக்க,தங்கப்பன் மகனுக்கு கோர்ட்டில் தண்டனை உறுதி செய்யப்பட்டது..

அனிதா வேலை முடித்து வீட்டுக்கு திரும்பி வரும் பொழுது ஒரு நல்ல நாளில் சில மர்ம நபர்களால் கட்டையால் தாக்கப்பட்டு,எந்த மருத்துவமனையில் வேலை செய்தாலோ,அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள்.

[Image: happy070206-117.jpg]
[+] 6 users Like Viswaa's post
Like Reply


Messages In This Thread
RE: சொர்க்கத்தின் வாசல் அனிதா - by Viswaa - 03-09-2024, 11:21 PM



Users browsing this thread: 5 Guest(s)