29-06-2024, 10:12 AM
நாங்கள் சந்தேகப்பட்டது போல எதுவும் நடக்கவில்லை. பரத் சாதாரணமாக வந்து, பொம்மை கார் ஒரு சில சாக்லேட் வாங்கிக் கொடுத்துவிட்டு அவனுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் அரை மணி நேரம் ஆன போது எனது மகன் கிளம்பவா என்று கேட்க, சரி கிளம்பு என சொல்லிவிட்டு பரத் சென்று விட்டான்.
எனது அம்மாவை மதி பைக்கில் 11 மணி அளவில் கொண்டு வந்து வீட்டில் டிராப் பண்ணும் போது நாங்களும் ஆட்டோவில் வீட்டிற்கு வந்தோம். என் அப்பா மீசை மாமா வீட்டிற்கு செல்ல ரெடியாக மதி மற்றும் அம்மாவிடம் நடந்த விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டேன். நான் மதிக்கு ரொம்ப தேங்க்ஸ் என சொன்னேன்.
நீ என்னடா சொன்னான்னு என் மகனிடம் கேட்டேன்.
____ நான் தாத்தா பாட்டி மூணு பேரும் ஒரு ஊருக்குப் போறோம்னு சொன்னேன் என்றான்.
எங்களுக்கு ஷாக். என் மேல் கோபம் நிறைந்து இருக்கும் பரத், நான் தனியாக இருப்பது தெரிந்து என்னை எதுவும் செய்துவிட்டால் என்ன செய்ய என என் அம்மா பயந்தாள்.
⪼ மதி ⪻
ஜீவிதா அக்கா, அவர்களது அம்மா அப்பா மூவரும் குசுகுசுவென அவர்களுக்குள் ஏதோ பேசினர். பின்னர் ஜீவிதாவின் அப்பா, ஒரு 12:30-1 மணி வரை இங்கேயே இருக்க முடியுமா என என்னிடம் கேட்டார்.
அவள் கணவன் ஊருக்கு வந்து பிரச்சனை செய்தது, இன்று தனியாக இருப்பாள் என்ற விஷயத்தை மகன் சொன்னது. கோபம் நிறைந்து இருப்பவன் பழிவாங்கும் நோக்கில் ஒருவேளை இந்த முறையும் வீட்டிற்கு வரலாம். அதனால் காவலுக்கு இருக்க முடியுமா? எதுவும் என்றால் பக்கத்து வீட்டில் இருக்கும் உறவினர்கள் உதவி செய்வார்கள் என்றார்.
ஜீவிதா அக்காவிடம் கதவை எக்காரணம் கொண்டும் திறக்க வேண்டாம் ஜன்னல் வழியே முதலில் யாரென பார்த்துக்கொள் என அறிவுரை செய்து விட்டு கிளம்பி சென்றார்கள்.
எனக்கு இந்த விஷயத்தில் பயங்கர குழப்பமாக இருக்கிறது. அவள் தன் கணவனை பற்றி எப்போதாவது பேசும்போது ரொம்ப கோபமாக பேசுவாள், திட்டுவாள். நான் அதற்கான காரணங்களை இதுவரை கேட்டு தெரிந்து கொள்ளவில்லை. கவியிடம் அக்கா சொன்ன சில விஷயங்கள் மட்டும் எனக்கு தெரியும்.
ஜீவிதா அக்கா இதுவரை எங்களிடம் சொன்னதை வைத்து பார்த்தால், அவளது கணவன் சரியான முரடன், திருடன், விளங்காதவன் என்பதைப்போல எனக்கு இருந்தது...
எனது அம்மாவை மதி பைக்கில் 11 மணி அளவில் கொண்டு வந்து வீட்டில் டிராப் பண்ணும் போது நாங்களும் ஆட்டோவில் வீட்டிற்கு வந்தோம். என் அப்பா மீசை மாமா வீட்டிற்கு செல்ல ரெடியாக மதி மற்றும் அம்மாவிடம் நடந்த விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டேன். நான் மதிக்கு ரொம்ப தேங்க்ஸ் என சொன்னேன்.
நீ என்னடா சொன்னான்னு என் மகனிடம் கேட்டேன்.
____ நான் தாத்தா பாட்டி மூணு பேரும் ஒரு ஊருக்குப் போறோம்னு சொன்னேன் என்றான்.
எங்களுக்கு ஷாக். என் மேல் கோபம் நிறைந்து இருக்கும் பரத், நான் தனியாக இருப்பது தெரிந்து என்னை எதுவும் செய்துவிட்டால் என்ன செய்ய என என் அம்மா பயந்தாள்.
⪼ மதி ⪻
ஜீவிதா அக்கா, அவர்களது அம்மா அப்பா மூவரும் குசுகுசுவென அவர்களுக்குள் ஏதோ பேசினர். பின்னர் ஜீவிதாவின் அப்பா, ஒரு 12:30-1 மணி வரை இங்கேயே இருக்க முடியுமா என என்னிடம் கேட்டார்.
அவள் கணவன் ஊருக்கு வந்து பிரச்சனை செய்தது, இன்று தனியாக இருப்பாள் என்ற விஷயத்தை மகன் சொன்னது. கோபம் நிறைந்து இருப்பவன் பழிவாங்கும் நோக்கில் ஒருவேளை இந்த முறையும் வீட்டிற்கு வரலாம். அதனால் காவலுக்கு இருக்க முடியுமா? எதுவும் என்றால் பக்கத்து வீட்டில் இருக்கும் உறவினர்கள் உதவி செய்வார்கள் என்றார்.
ஜீவிதா அக்காவிடம் கதவை எக்காரணம் கொண்டும் திறக்க வேண்டாம் ஜன்னல் வழியே முதலில் யாரென பார்த்துக்கொள் என அறிவுரை செய்து விட்டு கிளம்பி சென்றார்கள்.
எனக்கு இந்த விஷயத்தில் பயங்கர குழப்பமாக இருக்கிறது. அவள் தன் கணவனை பற்றி எப்போதாவது பேசும்போது ரொம்ப கோபமாக பேசுவாள், திட்டுவாள். நான் அதற்கான காரணங்களை இதுவரை கேட்டு தெரிந்து கொள்ளவில்லை. கவியிடம் அக்கா சொன்ன சில விஷயங்கள் மட்டும் எனக்கு தெரியும்.
ஜீவிதா அக்கா இதுவரை எங்களிடம் சொன்னதை வைத்து பார்த்தால், அவளது கணவன் சரியான முரடன், திருடன், விளங்காதவன் என்பதைப்போல எனக்கு இருந்தது...