Romance எப்போது என்னை புரிந்து கொளவாளோ
#2
மறுநாள் 
ராதா : முதலில் எழுந்து குளித்து முடித்து கிட்சேன் சென்று அத்தை காபி 

ரம்யா : ஏனடி நீ மருமகளா இல்ல நானா 

ராதா : ஏன் அத்தை நா இந்த வீட்டு செல்ல மருமகள் நா லேட்டா தான் எந்திரிப்பேன் 

ரம்யா : ஏன் சொல்ல மாட்ட நானும் உனக்கு செல்லம் கொடுத்துடேன் 

ராதா : நீ என்ன அத்தை எனக்கு செல்லம் கொடுத்த 

ரம்யா : அடி கழுதை நீ சின்ன வயசுல எவ்ளோ சேட்டை பண்ணுவ தெரியுமா.அதுக்கு செண்பகம் உன்னை அடிக்க வருவா. நா தான் தடுப்பேன் ஏன்னா நீ எனக்கு அவ்ளோ செல்லம் 

ராதா :  நீ இருக்கும் போது அம்மா அடிக்க மாட்டா. ஆனா நீ போன பிறகு அடிப்பா. அதுக்கு கோவப்பட்டு ஏழு வருஷம் பேசாம இருந்தேன் 

ரம்யா : ஆமா உனக்கு ரொம்ப கோவம் வருமா. உங்க அம்மா தான் சொன்னா 

ராதா : எஸ் எனக்கு ஒன்னு புடிக்கும்னா உசுரே கொடுப்பேன். அதுவே எனக்கு புடிக்கலான அவுங்க கூட சாகுற வரைக்கும் முகத்துல கூட முழிக்க மாட்டேன் 

ரம்யா : ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ பெண்கள் ரொம்ப கோவ பட கூடாது மா. அது நல்லதுக்கு இல்ல.

ராதா : அத்தை தப்பு செஞ்சா தண்டனை உண்டு 

ரம்யா : சரி ஒரு பேச்சிக்கு சொல்றேன் ஒரு வேலை நீ கோவப்படுற மாதிரி முரளி நடந்தா 

ராதா : டைவஸ் 

ரம்யா : என்ன பேச்சு பேசுற அடிச்சி பல்ல உடைச்சிருவேன் ராஸ்கல் நேத்து தான் கல்யாணம் முடிஞ்சி இருக்கு. பேச்சை பாரு 

ராதா : கொஞ்சம் பயத்துடன் அத்தை ஏன் இப்படி கோவம் படுற எனக்கு கோவம் வந்தா தான். எனக்கு வராது. ஏன்னா நீ இருக்கல்ல அத்தை அப்பறம் என்ன 

ரம்யா : ஒரு வேலை நீ கோவப்பட்டா என்கிட்ட சொல்லு. அவனை கண்டிப்பேன் சரியா. இந்தா காபி கொண்டு முரளிக்கு கொடு போ 

ராதா : ஹ்ம்ம் சரி அத்தை காபி கொண்டு முரளிக்கு கொண்டு சென்றால் அவன் தூங்கி கொண்டு இருந்தான் எப்படி தூங்குது பாரு இவனை எதாவது செய்யணுமே நினைத்து ஹ்ம்ம் இப்படி செய்வோம் நினைத்து கையில் உள்ள காபி கிளாஸ் அப்படியே அவன் கன்னத்தில் வைத்து உடனே எடுத்தால் 

முரளி : லேசா சுட்டு விட்டது ஸ்ஸ்ஸ்ஸ் சவுண்ட் விட்டு கண் முழித்து ராதாவை பார்த்தான் ஹ்ம் உன் முகத்துலையா முழிக்கணும் ச்சினு சொல்லி திரும்ப பெட்ஷிட் மூடினான் 

ராதா : என்னா கொழுப்பு இருக்கும் என் முகத்துல முழிச்சா இவனுக்கு பேதியா எடுக்கும். மவனே உன்னை காபி கொண்டு பெட்ஷிட் மேலே ஊற்றினால் அது பெட்ஷிட் வழியாக அவன் முகத்தில் பட்டது.

முரளி : சுட்டு விட்டது ஆஆஆஆ அம்மா கத்திட்டே எழுந்து ராதாவை தூரத்தினான் 

ராதா : ஐயோ ஓடு ராதா சொல்லிட்டே ஓடி ரம்யாக்கு பின்னாடி ஒழிந்து கொண்டால் 

ரம்யா : என்ன டி ஆச்சு இப்படி ஓடி வர 

ராதா : ஹ்ம்ம் உன் மகன் என்னை அடிக்க துரத்திட்டு வாரான் 

ரம்யா : வாரனா என்ன டி மரியாதையா பேசு அவன் உன் புருசன் 

முரளி : மா இந்த குரங்கு காபியை என் முகத்துல ஊத்திட்டு ஓடி வந்துட்டா 

ராதா : குரங்கா ஆமா குரங்கு அப்படித்தான் ஊத்தும் 

ரம்யா : ஹேய் சும்மா இரு டி. காபி அவன் முகத்துல ஊத்தினியா 

ராதா : நீ காபியை கொண்டு போய் இவருக்கு கொடுக்க சொன்னல்ல, நானும் போனேன் நா எழுப்பி காபி கொடுக்க நின்னேன் அவரு என் முகத்தை பாத்துட்டு. உன் முகத்துலயா முழிக்கணும் சொல்லி திரும்ப பெட்ஷிட் மூடிட்டார். அதான் அப்படி செஞ்சேன் 

ரம்யா : டேய் இவா வீட்டுக்கு வந்த மகாலக்ஷ்மி டா. இவள் முகத்துல தான் முழிச்ச நல்லதே நடக்கும் டா போய் பிரஷ் பண்ணிட்டு வா போ சொல்லி அனுப்பி வைத்தால் 
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: எப்போது என்னை புரிந்து கொளவாளோ - by Murugansiva - 04-06-2024, 11:48 AM



Users browsing this thread: 3 Guest(s)