Romance எப்போது என்னை புரிந்து கொளவாளோ
#1
வணக்கம் நண்பர்களே இது ஒரு காதல் கதை 

பகுதி 1
ரம்யா : டேய் சீக்கிரம் கிளம்புடா பொண்ணு பாக்க போகணும் 

முரளி : மா எவ்ளோ சொல்லியும் உங்களுக்கு புரியாதா திரும்ப திரும்ப ஏன் என்னை கஷ்ட படுத்துறீங்க எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் சொன்னா கேளுங்க மா 

ஜெயராம் : டேய் அம்மா சொல்றாளா போய் கிளம்புடா 

முரளி : என்னப்பா நீங்களும் புரிஞ்சிக்கல. எனக்குன்னு ஒரு ட்ரீம் இருக்கு 

ஜெயராம் : உன்னை கிளம்புனு சொன்னேன் 

கிளம்பி பெண் பார்க்க சென்றனர் 

செண்பகம் : என்னங்க மாப்பிளை வீட்ல இருந்து வந்துட்டாங்க 

வாசு : அவங்களை உள்ள கூப்பிடு டி நா ஒரு நிமிசத்துல வந்துடுறேன் 

முரளி : பாத்திங்களா நம்ம மட்டும் தான் வெளியே நிக்கிறோம். அவுங்க வீட்ல இருந்து யாரும் நம்மளை வரவேறக்க ஆள் வரல.உங்களுக்கு மரியாதை இல்லாத பொண்ணு எடுக்கணுமா  மரியாதை தெரியாத குடும்பம் 

ஜெயராம் : பாத்தியாடி நம்ம மகனை. நமக்கு மரியாதை இல்லாத குடும்பம் இவனுக்கு வேண்டாமா. காலேஜ்ல இவன் செஞ்ச தப்புக்கு நம்மளை எப்படி அசிங்க படுத்தினாங்க அப்போ நமக்கு மரியாதை இருந்துதா பேசுறது பாரு 

செண்பகம் வாசு : உள்ள வாங்க உள்ள கொஞ்சம் வேலையா இருந்துட்டோம் 

ரம்யா : ஐயோ பிறவால்ல விடுங்க 

அனைவரும் உள்ளே சென்றனர் 

செண்பகம் : ராதா வந்தவங்களுக்கு காபி  எடுத்திட்டு வா மா 

ரம்யா : பொண்ணு பேர் ராதா வா 

செண்பகம் : ஆமா சம்மந்தி பேசி கொண்டு இருக்கும் போது ராதா எல்லார்க்கும் காபி கொடுத்து செண்பகம் அருகில் உக்காந்து கொண்டால் 

ரம்யா : என்ன படிச்சிருக்க மா 

ராதா : பி காம் 

ரம்யா : இங்க பாரு மா நா உன் அம்மா மாதிரி பாத்துப்பேன். 

முரளி : லூசா மா நீ அந்த பொண்ணுக்கு நீ அம்மா மாதிரினா நா யாரு கொஞ்சம் சத்தமாகவே பேசி விட்டான் 

எல்லோரும் சிரித்து விட்டனர்.

ஜெயராம் : டேய் வாயை மூடிட்டு இருடா.

முரளி : அப்பாவை முறைத்து பார்த்தான் 

ரம்யா :சரிங்க பொண்ணை எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு  வரதட்சணை ஏதும் வேண்டாம்.

செண்பகம் : வரதட்சணை வேண்டாம் சொல்றது உங்க பெருந்தன்மை சம்மந்தி. நாங்க எங்க பொண்ணுக்கு செய்ய வேண்டியது எல்லாம் செஞ்சி அனுப்புவோம் 

முரளி : நா பொண்ணு கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் 

ஜெயராம் : டேய் சும்மா இருடா 

முரளி : பயப்படாதீங்க கல்யாணத்தை நிப்பாட்ட மாட்டேன் சொல்லி 

இருவரும் மாடிக்கு சென்றனர்.

ராதா : உங்க name 

முரளி : முரளி கிருஷ்ணா. ஆமா உங்க name 

ராதா : ராதா அப்போதே என் பெயரை சொன்னாங்க நீங்க கவனிக்கலையா. உங்க பெயர் அப்போ சொல்லல அதான் கேட்டேன் 

முரளி : நேரா விஷயத்துக்கு வரேன் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல. என் parents வற்புறுத்தி தான் என்னை இங்க கூட்டிட்டு வந்து இருக்காங்க. எனக்குன்னு ஒரு ட்ரீம் இருக்கு 

ராதா : என்ன ட்ரீம் தெரிஞ்சிக்கிடலாமா 

முரளி : சொந்தமா ஒரு கம்பெனி வச்சி அதுல ஒரு 50 பேராவது வேலை பாக்கணும். அதான் ட்ரீம். இங்க வந்த உடனே உங்களை புடிக்கல. சொல்லி போக பார்த்தேன் 

ராதா : அப்போ என்னை புடிச்சிருக்கா 

முரளி : ஹ்ம்ம். நீங்க அமைதியா இருக்கிங்க. அப்பறம் 

ராதா : சொல்லுங்க என்ன அப்பறம் 

முரளி : என் அம்மா மாதிரி அழகா இருக்குறீங்க. 

ராதா : அழகாய் சிரித்தால் ஹ்ம்ம் 

முரளி : இங்க பாருங்க உங்களை கல்யாண செஞ்சிக்க எனக்கு சம்மதம். ஆனால் one கண்டிஷன் 

ராதா : சொல்லுங்க என்ன கண்டிஷன் 

முரளி : தனியா போகுற எண்ணம் இருக்க கூடாது. என் அம்மா அப்போ சொன்னது போல உங்களை மகள் மாதிரி பாத்துப்பாங்க 

ராதா : இதான் கண்டிஷன் உங்க கண்டிஷன் எனக்கு ஓகே. பட் எனக்கும் கண்டிஷன் இருக்கு.

முரளி : உங்களுக்கு கண்டிஷனா ஏங்க மாப்பிளை தான் கண்டிஷன் போடணும் 

ராதா : ஏன் நாங்க கண்டிஷன் போட்டா குடியா மூழ்கி போகும் 

முரளி : ஆத்தாடி என்ன இவ்ளோ வாயாடியா இருக்கு. இங்க பாருங்க நீங்க வாய் ரொம்ப பேசுறீங்க. எனக்கு நீங்க வேண்டாம் 

ராதா : ஹலோ என்ன நினைச்சிட்டு இருக்கிங்க. வருவீங்க. பொண்ணு பாப்பிங்க. மாடிக்கு கூட்டிட்டு வந்து பேசுவீங்க. நா வேண்டாம்னா ஏன் மாடிக்கு கூட்டிட்டு வந்து பேசுனீங்க. அப்பறம் என்னை யாரு கல்யாணம் செஞ்சிப்பா 

முரளி : யம்மா இருங்க மா விட்டா ஓவரா பேசுறீங்க. ஏங்க பொண்ணுன்னு இருந்தா ஒரு மூணு இல்ல நாலு பேரு பொண்ணு பாக்க வருவாங்க. போவாங்க. பாத்த உடனே உங்களை புடிச்சிருக்கு கல்யாணம் செஞ்சிக்கலாமா கேப்பாங்க. முதல பார்த்து. பேசி. அப்பறம் தனியா பேசி இரண்டு பேரு மனசு புரிஞ்சி அப்பறம் தான் கல்யாணமே 

ராதா : ஒரு மணி நேரத்தில என் மனச புரிஞ்சிருவீங்களா. அது இல்லமா நீங்க என்னை தனியா கூட்டிட்டு வந்து 

முரளி : யம்மா இருங்க எனக்கு நெஞ்சி எல்லாம் பதறுது உங்களை கூட்டிட்டு வந்து என்னமா செஞ்சிட்டேன் 

ராதா : பாருங்க கோவம் வருது. தனியா கூட்டிட்டு வந்து. கோவ பட்டா அப்பறம் யாரு கல்யாணம் செஞ்சிக்கவாi

முரளி : ஐயோ விடுங்க நானே கல்யாணம் பண்ணிடுறேன் என்னை ஆள விடுங்க சொல்லி கீழே ஓடி விட்டான் 

ராதா : ஹா ஹா சிரித்து விட்டு போன் எடுத்து முரளி அம்மா க்கு போன் போட்டு மாடிக்கு வாங்க சொல்லி போனை வைத்தால் ஐந்து நிமிடம் ரம்யா மேலே வந்தால் 
ரம்யா : என்னமா என் மருமகளே என் மகன் ஓடி வந்த மாதிரி தெரிஞ்சிது 

ராதா : நா யாரு உங்க பிரென்ட் பொண்ணு ஆச்சே 
(ரம்யா செண்பகம் சிறு வயது தோழிகள் உன் மகள் என் மகனுக்கு என்று பேசி வைத்தவர்கள் முரளிக்கு ராதாவை சிறு வயதில் தெரியும்  இப்போ அவள் வெளியூர் தங்கி படித்தவள். அதிகமா இங்க இருந்ததில்லை.. ராதாக்கு முரளி தெரியும் .. முரளிக்கு ராதாவை சிறு வயது தோழினு இப்போ தெரியாது.)
ரம்யா : சூப்பர் டி 

ராதா : ஆமா அத்தை ஏன் உன் மகன் ( ராதா ரம்யாவை வா போ னு கூப்பிடுவாள் ) இப்படி இருக்கார் கம்பெனி ஆரம்பிக்கணுமா 50 பேருக்கு வேலை கொடுக்கணுமா. நல்ல ட்ரீம் தான் அத்தை. ஆனால் அது வரைக்கும். வாழ்க்கை ஆரம்பிக்காம எப்படி இருக்குறது. 

ரம்யா : அடி கள்ளி சரி கீழே வா. இங்க பாரு நீ என்னை தெரியாத மாதிரி காட்டிக்கோ. 

ராதா : ஆனா ஒன்னு. உன் பையன் இப்பவும் லூசு தான்.

ரம்யா : ஹேய் வாலு வாடி  கீழே 

கீழே சென்றனர் 

திருமணம் முடிந்தது 

மணமக்கள் வீட்டுக்குள் வந்து சம்பிருதாயம் முடித்து 
முதல் இரவு அரை 

பால் சொம்பு கொண்டு உள்ளே சென்று முரளியிடம் கொடுத்தால் 

முரளி : உக்காரு ( நிச்சயம் முடிவில் இருந்து கல்யாணம் வரை போன் பேசி மனசுகளை புரிந்து கொண்டனர் )

ராதா : சொல்லுங்க 

முரளி : என் ட்ரீம் பத்தி என்னை நினைக்கிற 

ராதா : நல்ல விஷயம் அதுக்கு 

முரளி : அதுவரைக்கும் 

ராதா : ஹ்ம்ம் 

முரளி : நமக்குள்ள ஒண்ணுமே வேண்டாமே 

ராதா : என்ன வேண்டாம் எனக்கு புரியல 

முரளி : இந்த மாதிரி முதல் இரவு எல்லாம் வேண்டாமே 

ராதா : சூப்பர் சரி உங்க இதுக்கே வாரேன், இப்போ என்ன போஸ்ட்ல இருக்கிறீங்க 

முரளி : மேனஜர் 

ராதா : சேவிங் எவ்ளோ இருக்கும் 

முரளி : பணத்தை அம்மா கிட்ட கொடுத்துருவேன். அவுங்க save பண்ணிருப்பாங்க 

ராதா : எவ்ளோ இருக்கும் தெரியுமா 

முரளி : தெரியாது ஆனா ஒரு கம்பெனி ஆரம்பிக்கிற அளவுக்கு இருக்கும்.

ராதா : என்ன கம்பெனி 

முரளி : IT கம்பெனி 

ராதா : IT கம்பெனியை நடத்துறதுனா சும்மா இல்ல. Full ஆன்லைன் ஒர்க்.
வெளிநாடு இருந்து ஆன்லைன் ஒர்க் அதிக பணம் வேணும். அவசரம் வேண்டாம் பொறுமையா பண்ணுவோம் 

முரளி :: ஓஹோ இது எல்லாம் தெரியாம தான் நா சொல்வனா. எல்லாம் எனக்கும் தெரியும் அது வரைக்கும் ஏதும் வேண்டாம். சொல்லி படுத்து பெட்ஷிட் மூடி கொண்டான் 

ராதா : இவன் என்ன லூசா. இவனை யாரு கம்பெனி ஆரம்பிக்க வேண்டாம் சொல்றா இப்படி கோவப்படுறான் என் கோவத்தை பத்தி எனக்கு தெரியாது. என் அம்மா என்னை அடிச்சிட்டாங்க சொல்லி ஏழு வருஷம் பேசாம இருதேன்..நாளைக்கு பேசி பாப்போம் 




இந்த கதை காமம் அதிகமாக இருக்காது. இது முழுக்க காதல் கதை
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
எப்போது என்னை புரிந்து கொளவாளோ - by Murugansiva - 03-06-2024, 10:12 PM



Users browsing this thread: 1 Guest(s)