30-05-2024, 09:01 AM
【164】
⪼ பரத் & சுனிதா ⪻
பரத் தூங்க முயற்சி செய்தான், அவனால் தூங்க முடியவில்லை. சுனிதாவுக்கு கல்லூரி முடிக்கும் வரை காதல் கீதல் எதுவும் வேண்டாம் என நல்லவன் மாதிரி அட்வைஸ் செய்துவிட்டு அவளிடமே கையும் களவுமாக மாட்டிக் கொண்டேன்.
அவள் எவ்வளவு நேரம் என் பெட்ரூம் வாசலில் நின்றாள் என்பதை விட, இனி அவள் என்னை தப்பாக நினைப்பாள் என்ற வருத்தம் என்னை தின்றது.
4 மணிக்கு மேல் நான் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தேன்.
5 மணி தாண்ட சுனிதா, லைட் போட்டு, என்னருகில் வந்து அங்கிள் என்றாள்.
என்னால் அவள் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. மீண்டும் அங்கிள் என்றாள். நான் நிமிரவில்லை. என் தாடையை பிடித்து தூக்கி இங்க பாருங்க அங்கிள்.
சாரி சுனிதா.
நானும் சாரி அங்கிள்.
ஹாஸ்டல் போறியா?
ஏன் அங்கிள்?
நான் இங்க பர்ஸ்ட் வந்தப்ப நான் உன்ன தப்பா பார்க்குறதா நினைச்சு முறைச்ச, இன்னைக்கு ரெஜினா கூட இந்த சம்பவம் உனக்கு தெரிஞ்சு போச்சு. இனி நான் நார்மலா பார்த்தாலும் தப்பா தெரியும்.
ஹம்.
சாரி.
பரவாயில்லை அங்கிள். நான் உங்களை நம்புறேன், தங்கச்சி எல்லாரயும் விட உங்களை தான் நம்புறா..
இனி நீங்க இங்க இருக்குறது சரின்னு தோணலை..
பிளீஸ் அங்கிள். அப்படி பேசாதீங்க. நாங்க உங்களை நம்புறோம்.
ஹம்.
எல்லாருக்கும் உடல் தேவை இருக்கும். எங்க அப்பா அம்மா கூட அப்படித்தான இருந்திருப்பாங்க.
உங்க அப்பா அம்மாவா இருந்தா, நீ வாசல்ல நின்னு என்ன நடக்குதுன்னு கேட்டிருக்க மாட்ட. என்ன இருந்தாலும் நான் மூணாவது மனுசன்.
சாரி அங்கிள், ஒரு ஆசையில பண்ணிட்டேன். மகள் கிட்ட தப்பா நடக்குற அப்பாவும் இருக்காங்கதான அங்கிள், நாங்க உங்களை மட்டும் தான் நம்புறோம். அம்மா அப்பாவும் உங்களை மட்டும்தான் நம்புனாங்க..
எனக்கு கண்ணீர் முட்ட, நான் முகத்தில் கை வைத்து மூடினேன்.
இதை யாருகிட்டயும் சொல்ல மாட்டேன். இத சொல்லிக் காட்ட மாட்டேன். இது சத்தியம் என்றாள்.
எனக்கு அழுகை தான் வந்தது.
Don't worry uncle. I believe in you uncle. We both believe in you. Please relax.
அப்படியெல்லாம் இல்லை. எனக்கும் சபலம்.
ரெஜினா அக்கா விருப்பப்பட்டு தான வந்தா, அவளுக்கும் சபலம். பாருங்க அவ நிம்மதியா தூங்குறா. நீங்க மட்டும் ஏன் புலம்புறீங்க.
ஹம்...
நீங்க யாரையும் நிர்பந்தம் பண்ணல என அவளுக்கு தெரிந்த அட்வைஸ் செய்தாள். நீங்கதான் எங்களுக்கு எல்லாம், பிளீஸ் அங்கிள் உங்க கூட நாங்க இருக்கோம் என அழுதாள்.
நீ நம்புற, நான் தப்பா எதுவும் நடந்துகிட்டான்னு இப்போ எனக்கு ரொம்ப பயமா இருக்கு.
அப்படி எல்லாம் பேசாதீங்க, பிளீஸ் என என் கையைப் பிடித்தாள். பிளீஸ். நீங்க அப்படிப்பட்டவர் இல்லை.
..
அவளா தான ஆசைப்பட்டு வந்தா என மீண்டும் மீண்டும் சொல்லிய சுனி அவர்கள் அறைக்கு சென்றாள்.
எனக்கு கொஞ்சம் நிம்மதி.