Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
யமுனாவும், விஷ்ணுவும் பஸ்ஸில் வெளியே கிளம்பினார்கள், யமுனா மலேசியாவை ரசித்து பார்த்தாள் , மக்கள், கட்டிடங்கள், வீதிகள் அனைத்தையும் அவள் ரசித்து, அந்த சோக உணர்வில் இருந்து வெளி வந்து சந்தோஷமாய் ஆனாள். கொஞ்சம் நார்மலாய் ஆனாள். கோயில் போயிட்டு, அப்புறம் சினிமா பார்த்துவிட்டு, டின்னர் முடிச்சிட்டு, வீடிக்ற்க்கு காலியான ஒரு மெட்ரோ ரயிலில் திரும்பி வந்துகொண்டிருதார்கள்.

யமுனா, ரொம்ப நார்மலாய் சிரித்தபடி நிறைய சந்தேகங்களை விஷ்ணுவிடம் கேட்டுக்கொண்டே வந்தால், விஷ்ணுவும் அவளுக்கு எல்லாம் புரிய வைத்துக்கொண்டு வந்தான்.

விஷ்ணு: யமுனா, இப்போ உன்னை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போ தான் பழைய படி இருக்கே, சிரிப்பா கலகலப்பா பார்க்கிறதுக்கு நல்லா இருக்கு, இப்படியே இரு மாறிடாதே.

யமுனா: நீங்க கூட ணா, ஜாலியா, அரைட்டை அடித்து, ஜாலியா பேசுற அந்த விஷ்ணு அண்ணா தான், எனக்கும் பிடிக்கும், சோகமா, சொந்த கதை எல்லாம் பேசி மனச கஷ்டப்பட்டு பேசற அண்ணா வேணாம், ஜாலியா எப்பவும் போல இருங்க.

விஷ்ணு: யமுனா, ஒரு கேள்வி கேட்கடா ?
[+] 4 users Like lifeisbeautiful.varun's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by lifeisbeautiful.varun - 07-03-2024, 12:14 AM



Users browsing this thread: 1 Guest(s)